கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி - முதல் பரிசு ரூ.50000

 


கடிதம் எழுதும் போட்டிக்கு கட்டுரைகளை அனுப்பலாம் 


இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி - முதல் பரிசு ரூ.50000


போட்டியில் பங்குபெறுவோர் பெயர் மற்றும் பள்ளியின் முகவரி தவறாமல் குறிப்பிட வேண்டும்.


தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.25 ஆயிரமும், 3-வது பரிசு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.


இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.


 அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.


 'எழுதுவதின் மகிழ்ச்சி: நவீன யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த போட்டியில் அனைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம்.


தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி இவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதி முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை-600002 என்ற முகவரிக்கு வருகிற டிசம்பர் மாதம் 14ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


உள்நாட்டு கடிதப்பிரிவில் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் எழுதுவோர் 1,000 வார்த்தைகளுக்கு மிகாமலும் கைப்பட எழுதி தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். 18 வயது நிறைவு பெற்றவர், பெறாதவர் என்ற வயதிற்கான சான்று கடிதத்தில் குறிப்பிட வேண்டும். போட்டியில் பங்குபெறுவோர் பெயர் மற்றும் பள்ளியின் முகவரி தவறாமல் குறிப்பிட வேண்டும்.


போட்டியில் தமிழ்நாடு வட்ட அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.10 ஆயிரமும், 3-வது பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரமும்,2-வது பரிசு ரூ.25 ஆயிரமும், 3-வது பரிசு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...