பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-02-2025 - School Morning Prayer Activities
திருக்குறள்:
பால்: பொருட்பால்
அதிகாரம் :மானம்
குறள் எண் :961
பொருள்:இன்றியமையாதச் சிறப்பைத் தருவதாயினும் குடிப் பெருமைக்குக் குறைவானவற்றை செய்தலாகாது.
அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்.
இரண்டொழுக்க பண்புகள் :
* எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.
* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.
பொன்மொழி :
செய்யும் காரியம் தவறாகும் போது, நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது, அவசியமானால் ஓய்வெடுத்து கொள். ஆனால் ஒருபோது மனம் தளராதே..
---டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ----
பொது அறிவு :
1. எந்த மாதத்தில் பிறப்பு விகிதம் அதிகம்?
விடை : ஆகஸ்ட்.
2. அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறை முதன்முறை எங்கு செயல்பட்டது?
விடை : சீனா
English words & meanings :
Land. - நிலம்
Lighthouse. - கலங்கரை விளக்கம்
வேளாண்மையும் வாழ்வும் :
உலகம் முழுவதும், நீர் ஆதாரங்கள் மனித செயல்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன,
பிப்ரவரி 03
யோகான்னசு கூட்டன்பர்கு அவர்களின் நினைவுநாள்
யோகான்னசு கூட்டன்பர்கு (Johannes Gensfleisch zur Laden zum Gutenberg;1398 – பிப்ரவரி 3, 1468) ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானியக்) கொல்லர், பொற்கொல்லர், அச்சுப்பதிவாளர் மற்றும் பதிப்பாளர் ஆவார். ஐரோப்பாவில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தவர். இவருடைய இயங்கும் அச்சு இயந்திரமானது நவீன அச்சுக்கலையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டது.
ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை அவர்களின் நினைவுநாள்
கிறித்துவக் கம்பர் ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (எச். ஏ. கிருஷ்ணபிள்ளை, ஏப்ரல் 23, 1827 - பெப்ரவரி 3, 1900) என்பவர் ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ.ஆகும். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை.
ஒரு நாள் வேடன் ஒருவன் வேட்டையாடச் சென்றிருந்தான்.
நீதி : உதவி செய்தவரிடம் நன்றியுடனும் விசுவாசத்தடனும் இருப்பது தான் பண்புள்ள செயல்.
இன்றைய செய்திகள்
03.02.2025
* தமிழக ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்வு: இந்தியாவிலேயே மிக அதிகம் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.
* விடுமுறை நாளில் பணிபுரிய எதிர்ப்பு தெரிவித்து பத்திரப்பதிவுத் துறை பணியாளர்கள் பணிக்கு செல்லாததால் ஞாயிற்றுக்கிழமையான இன்று பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படவில்லை.
* மாலத்தீவுகளுக்கு நிதியுதவியாக ரூ.600 கோடியை இந்தியா வரும் நிதியாண்டில் வழங்கவுள்ளது.
* முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியா செல்ல இருப்பதாக ரஷ்ய நாடாளுமன்ற கீழ் சபையான ஸ்டேட் டுமாவின் தலைவரான வியாசெஸ்லாவ் வோலோடின் தெரிவித்துள்ளார்
* ஹாக்கி இந்தியா லீக்: ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணி சாம்பியன்.
Today's Headlines
* The number of Ramsar sites in Tamil Nadu has increased to 20: Chief Minister Stalin is proud that it is the highest in India.
* The registration offices were not functional today, the Sunday, as the land registry department employees did not go to work in protest against working on a holiday.
* India will provide Rs. 600 crore as financial assistance to the Maldives in the coming financial year.
* Vyacheslav Volodin, the chairman of the State Duma, the lower house of the Russian parliament, has said that he will go to India for important negotiations.
* Hockey India League: Sarachi RAR Bengal Tigers team is the champion.
Covai women ICT_போதிமரம்