கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-03-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-03-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் எண்:997

அரம்போலும் கூர்மை ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.

பொருள்:
அரம் போன்ற கூறிய அறிவுடையவராக இருந்தாலும் மனிதத் தன்மை இல்லாதவர் மரத்திற்கு ஒப்பாவார்.


பழமொழி :
சுழலும் உலகம் அனைத்தையும் சுழற்றுகிறது.

The spinning world makes every thing rotate.


இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன்.

2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.


பொன்மொழி :

கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு  மனிதரும்  அவரது இலட்சியத்தை அடைய முடியாது. -- காமராஜர்


பொது அறிவு :

1. மண்பானையில் உள்ள நீரை குடித்தால் எவ்வகை நோய் குணமாகும்?

விடை :  இரத்த அழுத்தம்.         

2. உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை எங்கு உள்ளது?

விடை : சீனா


English words & meanings :

Blood pressure      -   இரத்த அழுத்தம

Blood test     -    இரத்த பரிசோதனை


வேளாண்மையும் வாழ்வும் :

* மறக்காமல் குடிநீர்க் குழாயை பயன்படுத்தியதும்  நிறுத்துங்கள்.


மார்ச் 25

வில்லியம் கோல்கேட் அவர்களின் நினைவுநாள்

வில்லியம் கோல்கேட் (William Damian "Will" Colgate: ஜனவரி 25, 1783 – மார்ச்சு 25, 1857) இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த தொழிலதிபர்; அமெரிக்காவைச் சேர்ந்த கோல்கேட் என்ற (தற்போது இது புராக்டர் அன்ட் கேம்பல்) பற்பசைத் தயாரிப்பு நிறுவனத்தை 1806-ல் தொடங்கியவர்.


நீதிக்கதை

வானத்தில் வீடு

அக்பர் ஒருநாள் பீர்பாலிடம், "என்னோட பண்ணையில் ஒரு வீடு கட்டணும் ,ஆனா அந்த வீடு தரையில் கட்ட கூடாது உன்னால் முடியுமா?"என்று கேட்டார்.

பீர்பால்,அதற்கு நிறைய பணமும் ,மூன்று மாதம் அவகாசமும் வேண்டும், என்றார்.

,உடனே அக்பர் அவருக்கு ஆயிரம் தங்க நாணயங்களும் நேரமும் கொடுத்தார்

வீட்டிற்கு போன பீர்பால்

வேட்டைகாரர்களிடம்,"எனக்கு 100 பச்சை கிளிகள் வேண்டும் அதை பிடித்துக் கொண்டு வாங்க" என்றார்.

உடனே எல்லா வேட்டைக்காரர்களும் காட்டுக்கு சென்று அதிக பச்சை கிளிகளை பிடித்துக் கொண்டு வந்தனர்.

அவற்றை தன்னுடைய மகளிடம்  ஒப்படைத்த பீர்பால் ,இந்த கிளிகளுக்கு எல்லாம் பேச கற்றுக் கொடுக்க கூறினார்.

சிறிது நாட்கள் கழித்து,

எல்லா கிளிகளும் பேச ஆரம்பித்தது.உடனே பீர்பால் கட்டடம் கட்டணும் ,கல் எடுத்துட்டு வாங்க  என்று கட்டடம் கட்டும் போது பேசும் எல்லாம்  வார்த்தைகளையும் சொல்லிக் கொடுக்க சொன்னார்.

மூன்று மாதம் கழித்து வீடு கட்ட ஆரம்பித்தாயிற்று வந்து பாருங்க என்று அக்பரை பண்ணைக்கு அழைத்து சென்றார் பீர்பால்.

அங்கு வந்து பார்த்தால் நிறைய கிளிகள் இருந்தன.அவை கட்டடம் கட்டணும் ,மண்ணைபோடுங்க ,

தண்ணீர் ஊற்றுங்க என்று பேசிக் கொண்டே இருந்தன.

இதைப் பார்த்த அக்பருக்கு ஆச்சர்யமாக இருந்தது. "என்ன பீர்பால் இந்த கிளிகளா எனக்கு வீடு கட்டி தர போகுது?" கேட்டார்.

அதற்கு பீர்பால், "ஆமாம் அரசே! காற்றில் வீடுகட்ட ,காற்றில் பறக்கும் பறவைகளால் தான் முடியும்," என்று கூறினார்.

தன்னை பீர்பால் தோற்கடித்து விட்டார்  என்பதை புரிந்து கொண்டார் அரசர்.


இன்றைய செய்திகள்

25.03.2025

* ‘8 மாவட்டங்களில் 9 இடங்களில் ரூ.184.74 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி, 35 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 149 பாசன அமைப்புகளில் புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் உள்ளிட்ட அறிவிப்புகளை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

* வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் திடீரென்று நிகழும் உயிரிழப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

* ஒடிசாவில் தங்க படிமம் கண்டுபிடிப்பு: முதல் முறையாக படிமங்களை தோண்டி எடுக்க தங்க சுரங்கங்களுக்கு ஏலம் விடப்பட உள்ளது.

* திபெத்தில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* பார்முலா1 கார்பந்தயம்: 2-வது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கர் பியாஸ்ட்ரி முதலிடம்.

* மியாமி ஓபன் டென்னிஸ்: செர்பிய வீரர் ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* Construction of dams in 9 locations across 8 districts at a cost of ₹184.74 crore. Renovation, restoration, and reconstruction of 149 damaged irrigation systems in 35 districts announced byWater Resources Department Minister Duraimurugan

   * Government and private hospitals are instructed to investigate sudden deaths due to increased heat impact and report the details to the government.

   * Gold deposits discovered in Odisha: Gold mines will be auctioned for the first time for excavation.

   * The National Center for Seismology reported a 4.5 magnitude earthquake in Tibet.

   * Formula 1 car race: Australian driver Oscar Piastri topped the second round.

   * Miami Open Tennis: Serbian player Djokovic advanced to the 4th round.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-03-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-03-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்: குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் எண்:996

பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம்: அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.

பொருள்:
உலகம் பண்புடையார் ஒழுக்கத்தால் வாழ்கின்றது. அஃதில்லாவிடின் அழிந்து போயிருக்கும்.


பழமொழி :
அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்

Face the danger boldly than live in fear.



இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன்.

2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.



பொன்மொழி :

கட்டளையிட விரும்புவன் முதலில் பணிவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். --அரிஸ்டாட்டில்



பொது அறிவு :

1. நெடுஞ்சாலையில் அவசர அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் தொலைபேசி சாவடி எது?

விடை:  SOS (save our souls).      

2.  VIVO நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது?

விடை: சீனா



English words & meanings :

Backache.     -     முதுகுவலி

Blood.    -     இரத்தம்


வேளாண்மையும் வாழ்வும் :

உங்களுக்குத் தேவையான அளவு மட்டுமே தண்ணீரை உபயோகியுங்கள்.


மார்ச் 24

உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day)

உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டில், 8.6 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர், 1.3 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த, அல்லது நடுத்தர வருமானங் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் ஆவர்.



நீதிக்கதை

யானையும் பலமும்

ஒரு மிக பெரிய காட்டில் ஒரு பெரிய யானை வாழ்ந்து வந்தது.அந்த யானையோட உருவத்த பார்த்து அந்த காட்டில் வாழ்ந்து வந்த மிருகங்கள் எல்லாம் ரொம்ப பயந்தார்கள்.

யானை வர்ற பக்கம் கூட போகாமல் பயந்து,  அந்த மிருகங்கள் ,தங்களோட குழந்தைகளுக்கு யானை ஒரு பெரிய அரக்கன்னு கதை சொல்லி யானை இருக்குற பக்கமே போக விடாமல் செய்தன.

இத எதுவுமே கண்டுக்காத யானை தன்னோட வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்தது.

தன்னோட பழகாம தன்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் தன்னை எல்லாரும் உதாசீனப் படுத்துறது யானைக்கு வருத்தமாக இருந்தது.

ஒரு நாள் காட்டுக்குள் பெரிய மழை பெய்து திடீர் வெள்ளம் வர ஆரம்பித்தது.குட்டி குட்டி மிருகங்கள் வாழும் இடத்தை சுற்றி பெரிய ஆறு மாதிரி தண்ணீர் ஓட ஆரம்பித்தது. அதனால் தீவில்   எல்லா மிருகங்களும் உள்ளேயே மாட்டிக்கொண்டன.

வெளிய வந்து உணவு தேட முடியாத நிலை ஏற்பட்டது.

எல்லா மிருகங்களும் தங்களுடைய குட்டிகளுடன் பட்டினி கிடந்தன.

அந்த பக்கம் வந்த யானை இதை எல்லாம் பார்த்தும் ,ரொம்ப நாளாக  தன்னோட வேலையை மட்டும் பார்த்து வந்த யானை ஒன்றும்  பேசாமல் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தது.


அப்போது,ஒரு குட்டி குரங்கு "யானை மாமா எங்க குடும்பமே பசியில் கிடக்கு எங்களுக்கு உதவ கூடாதான்னு"என்று கேட்டது.

அதை பார்த்து சிரித்த யானை "நான்தான் அரக்கன் மாதிரி இருக்கிறேன் என்னை பார்த்து பயமாக இல்லையா?" என்று கேட்டது.

அந்த குட்டி குரங்கு, "எங்க அப்பா அம்மா உங்கள் உருவத்தைப் பார்த்து எங்களுக்கு எதுவும் ஆபத்து வந்திடக் கூடாதுனு அப்படி சொல்லி வளர்த்தாங்க ,ஆனா ஒருத்தரோட உருவத்தை வைத்து அவர்களுடைய குணத்தை எடை போடக் கூடாதுனும் சொல்லி இருக்காங்க ,உங்களுடைய அமைதியான வாழ்க்கை முறையை பார்த்த எனக்கு நீங்க ஆபத்தானவர்னு தோன்றவில்லை" என்று கூறியது.

முதல் முறையாக ஒரு குட்டி மிருகம் தன்னிடம் பேசுவது யானைக்கு ரொம்ப சந்தோசம். உடனே தன்னோட துதிக்கையை கொண்டு எல்லா மிருகங்களையும் காப்பாற்றியது.

அன்றிலிருந்து யானையையும் தங்களில் ஒருத்தராக நினைத்து பழக ஆரம்பித்தார்கள். அந்த குட்டி மிருகங்கள் ,தங்களோட குழந்தைகளையும் அந்த யானையுடன் விளையாட அனுமதித்தார்கள்,அதனால் ரொம்ப சந்தோசமாக வாழ ஆரம்பித்தது யானை.



இன்றைய செய்திகள்

24.03.2025

* தமிழகத்தில் 'ஹைபிரிட்' முறையில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் காற்றாலையுடன், சூரியசக்தி மின்நிலையங்களையும் சேர்த்து அமைக்க உள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் இன்று கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* லடாக் பகுதியில் சீன சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து 2 மாவட்டங்களை உருவாக்கியுள்ளதற்கு, தூதரகம் மூலம் இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது என நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

* கியூபா உட்பட 4 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேரை வெளியேற்ற அமெரிக்க அரசு முடிவு.

* தேசிய மகளிர் ஹாக்கி போட்டி: 4-வது நாள் ஆட்டத்தில் ஒடிசா, ஹரியானா, மிசோரம், மத்திய பிரதேசம் அணிகள் வெற்றி.

* மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி: 4வது சுற்றுக்கு முன்னேறினார் அமெரிக்க வீராங்கனை கோகோ காப்.


Today's Headlines

* Electricity board officials have stated that in Tamil Nadu, 'hybrid' power plants, combining wind and solar energy, will be established through public-private partnerships.

* The Chennai Meteorological Department has forecast heavy rainfall in 8 districts of Tamil Nadu today, including Coimbatore and Erode.

* India has expressed its opposition through diplomatic channels to China's illegal occupation of Ladakh and the creation of two districts, as stated by Minister of State for External Affairs Kirti Vardhan Singh in Parliament.

* The US government has decided to deport 500,000 people from four countries, including Cuba.

* National Women's Hockey Competition: Odisha, Haryana, Mizoram, and Madhya Pradesh teams won on the 4th day of the competition.

* Miami Open Tennis Tournament: American player Coco Gauff advanced to the 4th round.


Covai women ICT_போதிமரம்



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-03-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-03-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள்எண்:995

நகையுள்ளும் இன்னாத இகழ்ச்சி: பகையுள்ளும்
பண்புஉள பாடுஅறிவார் மாட்டு.

பொருள்:
விளையாட்டிற்குங்கூட ஒருவரை இகழ்தல் கூடாது. பகைவரிடத்தும் பாராட்டும் குணமே பண்பாளரிடம் காணப்படும்.


பழமொழி :
Hear more talk less

கேட்பதற்கு தீவிரமாகவும், பேசுவதற்கு மந்தமாயும் இருக்க வேண்டும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1.வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.

2.கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.


பொன்மொழி :

நான் மெதுவாக நடப்பவன் தான் ; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை. --ஆபிரகாம் லிங்கன்


பொது அறிவு :

1. Flipkart நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது?

விடை:  அமெரிக்கா.    

2. மொபைல் போன் பேட்டரி எதனால் ஆனது?

விடை :  லித்தியம் அயன்



English words & meanings :

Tailor.      -      தையல்காரர்

Teacher.   -      ஆசிரியர்



மார்ச் 22

உலக நீர் நாள் (World Water Day),

உலக நீர் நாள் (World Day for Water அல்லது World Water Day), ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993, ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் மக்களிடையே விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.



நீதிக்கதை

புத்திசாலி பூனை

ஒரு பூனை ஒரு பெரிய

மரத்துக்கு கீழே நின்றுக்

கொண்டு இருந்தது.

அப்போது  வேட்டைநாய்கள் குறைக்கும் சத்தம் தொலைவில் கேட்டது. பூனை அதை உற்றுக் கேட்டது.

அந்த மரத்தடிக்கு ஒரு நரியும் வந்தது.அந்த நரி பூனையிடம் ,

”வேட்டை நாய் சத்தம் கேட்குதே; அதெல்லாம் வந்தால் எப்படி தப்பிப்பாய்? "  என்று கேட்டது.

அதற்கு பூனை,” நான் உன்னை மாதிரி பெரிய அறிவாளியா? எனக்கு ஒரே ஒரு வழிதான் தெரியும்.இந்த மரத்தின் மீது

ஏறி உச்சிக்குப் போய் தப்பிப்பேன். அவைகள் போனதும் மறுபடியும் கீழே இறங்கி வருவேன்” என்று பதில் கூறியது.

“நீ எப்படி தப்பிப்பாய்” என்று பூனை நரியிடம் திருப்பிக் கேட்டது.

அதற்கு நரி,”எனக்கென்ன, எனக்கு ஆயிரம் வழி தெரியும்” என்று பதில் கூறியது.

அப்போது வேட்டைநாய்கள் சத்தம் அருகில் கேட்டதால் பூனை மளமளவென்று மரத்தின்மேல் ஏறியது.

வேட்டைநாய்கள் நரியை சூழ்ந்து கொண்டன.கடைசி நேரத்தில் ஒன்றும் தோன்றாமல் நரி மாட்டிக் கொண்டது

பூனை நரியைப் பார்த்து, “என்ன நரியாரே, ஆயிரம் வழியில் ஒன்று கூட நினைவுக்கு வரவில்லையா”என்று கேட்டது.

நீதி: முன்கூட்டியே திட்டமிடாதவர் வாழ்க்கை கஷ்டம்.



இன்றைய செய்திகள்

22.03.2025

* குடிநீர் கேன்களில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து தண்ணீரை நிரப்ப வேண்டும் என, குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

* தமிழகத்தில் உள்ள 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு மற்றும் நாய்க்கடிக்கு மருந்துகள் இருப்பில் உள்ளன என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

* கேமரா, எஸ்ஓஎஸ் பட்டன், நவீன தீயணைப்பு அமைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் விரைவு பேருந்துகள் ஏப்ரல் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றன என அரசு போக்குவரத்து ஆர்வலர்கள் அமைப்பின் நிறுவனர் சாந்தப்பிரியன் காமராஜ் கூறியுள்ளார்.

* ராணுவத்துக்கு ரூ.7,000 கோடி மதிப்பில் நவீன பீரங்கிகள் வாங்க பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

* அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

* சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் திரிஷா- காயத்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்.

* தேசிய மகளிர் ஹாக்கி தொடர்: 2-வது நாளில் ஒடிசா, மணிப்பூர், அரியானா, ஜார்கண்ட் அணிகள் வெற்றி.


Today's Headlines

* Food Safety Department Officer Sathishkumar has advised drinking water manufacturing companies to refill water in drinking water cans only up to 30 times.

   * Minister M. Subramanian stated in the Legislative Assembly that snake and dog bite medications are available in all 2,286 government primary health centers in Tamil Nadu.

   * Express buses with features like cameras, SOS buttons, and modern fire suppression systems are expected to be in service by the end of April, according to Santhapriyan Kamaraj, founder of the Government Transport Enthusiasts Association.

   * The Cabinet Committee on Security has approved the purchase of modern artillery worth ₹7,000 crore for the military.
  

* President Donald Trump has signed documents to dismantle the US Department of Education.


* Swiss Open Badminton Tournament: India's Trisha-Gayatri pair advanced to the quarterfinals.


* National Women's Hockey Tournament: Odisha, Manipur, Haryana, and Jharkhand teams won on the 2nd day.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-03-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-03-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் எண்:994.
நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார்
பண்புபா ராட்டம் உலகு.

பொருள்: முறையுடன் நன்மையை உலகத்திற்கும், தனக்கும் கருதுவாருடைய குணத்தை உலகம் போற்றும்.


பழமொழி :
Do what you can with what you have where you are.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.


இரண்டொழுக்க பண்புகள் :

1.வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.

2.கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.


பொன்மொழி :

விதைத்துக் கொண்டே இரு , முளைத்தால் மரம்.... இல்லையேல் உரம்.... - சே.குவேரா


பொது அறிவு :

1. கசப்புகளின் அரசன் என்று அழைக்கப்படுவது எது?

விடை: நிலவேம்பு.

2. நதிகள் இல்லாத நாடு எது?

விடை :சவுதி அரேபியா


English words & meanings :

Shop keeper    -      கடைக்காரர்

Speaker     -         பேச்சாளர்


வேளாண்மையும் வாழ்வும் :

இல்லத்தில் எவ்வாறு நீரை சேமிக்கலாம் என்று பார்ப்போம். சமையலறையிலோ, குளியலறையிலோ தண்ணீர்க் குழாயிலிருந்து நீர் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


மார்ச் 21

பன்னாட்டு வன நாள் (International Day of Forests)

பன்னாட்டு வன நாள் (International Day of Forests) எனப்படும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் சர்வதேசம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2012, நவம்பர் 28 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் நிறுவப்பட்ட இந்நாளை, பல நாடுகள் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறது.


உலகக் கவிதை நாள் (World Poetry Day)

உலகக் கவிதை நாள் (World Poetry Day) என்பது ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது, உலகம் முழுவதும் கவிதை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் மற்றும் போதனை செய்யவும், ஊக்குவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ எனும் ஐக்கிய பண்பாட்டு நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.


உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day)

உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) ஆண்டு தோறும் மார்ச் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம், பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலையாகும். இது 'கூத்து' வகையை சேர்ந்தது. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. நாட்டுப்புற மரபுரிமைகளிடையில் ஒரு தனிப்புகழை கொண்டுள்ள தொடர்பாடல் ஊடகமாகவே இப் பொம்மலாட்டத்தை அறிமுகப்படுக்கலாம். இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிற திரைப்படத்தின் மூதாதையாகவும் இந்த கலை கருதப்படுகின்றது.


இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Racial Discrimination)

இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Racial Discrimination) ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைபிடிக்கப்படுகின்றது. 1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாளில் தென்னாப்பிரிக்காவின் ஷாடெங்கிலுள்ள ஷார்ப்வில் நகர்ப்புறத்தில் நிகழ்ந்த, இனவொதுக்கலுக்கு எதிரான அமைதிப்பேரணியின்போது அந்நாட்டுக் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டனர்.

எல்லா வகை இனப்பாகுபாட்டையும் ஒழிக்க முயற்சிசெய்யுமாறு பன்னாட்டுச் சமூகத்தை வேண்டிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1966 ஆம் ஆண்டில் மார்ச் 21-ஐ இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாளாக அறிவித்தது.



நீதிக்கதை

தன்னம்பிக்கை

ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.

காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.

அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.

ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பில் ஆழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.

இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.

கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.

விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.

நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்களாக்கிக் கொள்ளவேண்டும்,  விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.

நீதி :  தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.


இன்றைய செய்திகள்

21.03.2025

* 100 நாள் வேலைத் திட்டத்தில் விவசாயம் இல்லாத 375 ஊராட்சிகள் சேர்ப்பு: பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

* ஆன்லைன் பட்டா விண்ணப்பங்களை மனுதாரரிடம் விசாரிக்காமல் நிராகரிக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.

* வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

* மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி: ரஷ்யாவின் அன்னா பிளிங்கோவா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

* சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் ரஜாவத் வெற்றி.


Today's Headlines

* Municipal Administration Minister K.N. Nehru informed the Assembly that 375 non-agricultural village panchayats have been included in the 100-day employment scheme.

   * The High Court has ordered that online Patta applications should not be rejected without inquiring with the applicant.

   * The Election Commission has decided to link Voter ID cards with Aadhaar.

   * Miami Open Tennis Tournament: Russia's Anna Blinkova has advanced to the next round.

* Swiss Open Badminton Tournament: India's Rajawat won today's match.


Covai women ICT_போதிமரம்


20-03-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-03-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்:பொருட்பால்.  
                             
இயல்:குடியியல். 
           
அதிகாரம்:பண்புடைமை

குறள் எண்:993.  
                             
உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால்; வெறுத்தக்க
பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு.

பொருள்:
மனிதர்கள் ஒத்திருப்பது என்பது உறுப்பால் ஒத்திருப்பது அன்று,இனிது பேசும் பண்பினால் ஒத்திருப்பதேயாகும்.


பழமொழி :
Variety is the spice of life.

மாற்றம் என்பது மானிடத்தத்துவம்.


இரண்டொழுக்க பண்புகள் :

1.வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.

2.கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.


பொன்மொழி :

விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால், தோற்கடிக்க அல்ல, உன்னை பார்க்கவே எவரும் பயப்படுவர். - பாரதியார்


பொது அறிவு :

1. இஸ்டோரியா என்பதன் பொருள் என்ன?

விடை : விசாரிப்பதன் மூலம் கற்றல்.       

2. கிழக்கு தொடர்ச்சி மலையும் மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் எது?

விடை: நீலகிரி


English words & meanings :

Police.    -      காவலர்

Producer.    -    தயாரிப்பாளர்


வேளாண்மையும் வாழ்வும் :

"நீங்கள் இருக்கும் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்றாலும் நாளைக்கே பற்றாக்குறை வரலாம்.

வருமுன் காப்பதே சாலச் சிறந்தது. உங்களின் சிறு கவனமும் சில லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம்."


மார்ச் 20

உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.



நீதிக்கதை

குரங்குகளுக்கு  கூறிய புத்தி

ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை.

கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று. நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சி பளிச் பளிச் சென்று மின்னியவாறு பறந்து சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட ஒரு குரங்கு அதோ நெருப்பு போகிறது என்று கூறிற்று. மற்றொரு குரங்கு அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்து வந்து தரையில் போட்டது.

மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பை கூளங்களைச் சேகரித்து வந்து மின்மினிப் பூச்சிமீது போட்டன. பிறகு குரங்குகள் நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன. ஆனால் தீ எரியும் வழியைக் காணோம்.

பிறகு குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டன. மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளித்தனைத்தை கவனித்துக் கொண்டிருந்த ஒரு பறவை கலகலவென்று சிரித்தபடி மரத்தை விட்டிறங்கி கீழே வந்து அமர்ந்தது,

பிறகு குரங்குகளை நோக்கி "நண்பர்களே!மின்மினிப் பூச்சியை நெருப்பு என்று எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீண் பிரயாசை எடுக்கிறீர்கள். நீங்கள் என்னதான் வாயால் ஊதினாலும் மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது. வீண் வேலையை விட்டுவிடுங்கள்" என்று புத்திமதி கூறிற்று. "உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார்" என்று கூறிவிட்டு குரங்குகள் மறுபடியும் குப்பையை வாயால் ஊதித் தீ உண்டாக்க முயற்சியெடுத்தன.

பறவை, குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பரிதாபப்பட்டு திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருந்தது. இதனால் கோபமுற்ற குரங்குகள் பறவை மீது பாய்ந்து தாக்கின.

நீதி : முட்டாளுக்கு புத்தி சொல்வது வீண் முயற்சி  தான்.


இன்றைய செய்திகள்

20.03.2025

* சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாநகராட்சிக்கு உட்பட்ட 70 பூங்காக்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூரை அமைத்து இருக்கை வசதியுடன் கூடிய புத்தக வாசிப்பு மண்டலங்கள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என மேயர் பிரியா அறிவிப்பு.

* வெம்பக்கோட்டை அகழாய்வில் 87 செ.மீ. ஆழத்தில் பதக்கம், இரும்பு கண்டெடுப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.

* தமிழகத்தில் மார்ச் 22-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* கடந்த 10 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

* அமெரிக்காவை சேர்ந்த நிக் ஹேக், சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.

* சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் இஷாராணி பரூவா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

* ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தன.


Today's Headlines

* Chennai Corporation Budget: Mayor Priya has announced that the book reading zones with a roof facility will be set up at an estimated cost of Rs. Two crore

* In the excavation of Vembakkottai at the depth of 87 cm Iron Medal is   Discovered: Minister Thangam Thennarasu Informated.

* The Chennai Meteorological Department said that there is a chance of mild rains in Tamil Nadu till March 22.

* The central government has said that the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme is being implemented in the last 10 years.

* US -based Nick Hague, Sunita Williams, Pear Wilmore and Russia Alexander returned to Earth on a Dragon spacecraft of SpaceX.

* Swiss Open Badminton Tournament: India's Isharani Barua won and advanced to the next round.

* IPL Cricket: Tickets for Chennai - Mumbai Tickets have been sold in an hour.


Covai women ICT_போதிமரம்


19-03-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-03-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்.                 

இயல்: குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் எண்:992          

அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புஉடைமை என்னும் வழக்கு.

பொருள்:
யாரிடத்தும் அன்புடனிருத்தலும், பிறந்த உயர்குடிக்கேற்ப வாழ்தலும் இரண்டும் பண்பான நெறிகளாம்.


பழமொழி :
தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும்.

Delay is dangerous.


இரண்டொழுக்க பண்புகள் :

1.வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.

2.கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.


பொன்மொழி :

தயங்குபவர் கை தட்டுகிறார், துணிந்தவர் கைதட்டல்   பெறுகிறார். - பிடல் காஸ்ட்ரோ


பொது அறிவு :

1. ஒரு துளி ரத்தத்தின் எடை எவ்வளவு?

விடை: 0.05  மில்லிகிராம்.   

2. மனித உடலின் குளிர்ச்சியான பகுதி எது?

விடை : மூக்கு


English words & meanings :

Pilot.   -     விமானி

Politician.    -    அரசியல்வாதி



வேளாண்மையும் வாழ்வும் :

நீர் சேமிப்பு முறை என்பது ஏதோ மரம் நடு விழா என்பது போல் வருடத்திற்கு ஒரு சிலநாட்கள் செய்ய வேண்டிய செயல் அல்ல. இன்றைய பெருகிவரும் மக்கள்தொகையில் நீர் சேமிப்பு முறைகளை ஒவ்வொரு வினாடியும் கடைப்பிடிக்க வேண்டிய அவசரத்தில் அனைவரும் உள்ளோம்.



நீதிக்கதை

சிங்கமும் சிலையும்

ராமுவும், சிங்கமும் நண்பர்கள்.

ஒரு நாள் ராமு தன்னுடன் சிங்கத்தை அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி சிங்கமும் ராமுவும் பேசிக்கொண்டு சென்றனர்.

அப்போது செல்லும் வழியில், "ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல" ஒரு சிலை இருந்தது.

''அதைப் பார்த்தாயா? யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது.'' என்றான் ராமு.

''ஓ, அது மனிதன் செய்த சிலை. ஒரு சிங்கம் அந்த சிலையை செய்திருந்தால், மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது, தான் நிற்பது போலச் செய்திருக்கும்.'' என்று சொல்லியது சிங்கம்.

நீதி:  தனக்கென்றால் தனி வழக்குதான்.



இன்றைய செய்திகள்

19.03.2025

*Trek Tamilnadu: `3 மாதங்களில் ரூ.63.43 லட்சம் வருவாய்; அர்த்தமுள்ள சுற்றுலா' - முதல்வர் ஸ்டாலின்

*உலக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வரும் கோடை வாசஸ்தலமான நீலகிரியில் நடப்பு ஆண்டுக்கான கோடை விழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

*சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் 9 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி  நிலையத்திலிருந்து பூமிக்கு
மார்ச் 19 அன்று திரும்ப உள்ளனர்.

*சந்திரயான் 5 திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் சந்திரயான் 5 மிஷனை ஜப்பானின் ஜாக்ஸாவுடன் இணைந்து இஸ்ரோ செயல்படுத்த உள்ளதாகவும் நாராயணன் தெரிவித்துள்ளார்.

*ஐபிஎல் 2025 தொடர் வரும் சனிக்கிழமை (மார்ச் 22) அன்று கொல்கத்தாவில் தொடங்க இருக்கிறது. வரும் மே 25ஆம் தேதி வரை நடைபெறும்.


Today's Headlines

*Trek tamilnadu: `Rs 63.43 lakh in 3 months; Meaningful Travel ' - CM Stalin

*The summer festival for the current year in Nilgiris, which is attracted to tourists globally, is underway.

*Sunita Williams and Patch Wilmore 9 months later from the International Space Station to Earth
They are returning March 19.

*ISRO leader Narayanan has said that the central government has given permission to implement the Chandrayaan 5 project. Narayanan also said that ISRO will be implementing Chandrayaan 5 mission with Japan's Jacksa.

*The IPL 2025 series is set to begin on Saturday (March 22) in Kolkata. It will be held until May 25.


Covai women ICT_போதிமரம்


18-03-2025 - School Morning Prayer Activities

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-03-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்                                                                                      
இயல்: குடியியல்  

அதிகாரம் :பண்புடைமை

குறள் எண்:991

எண்பகத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மட்டும் பண்புஉடைமை என்னும் வழக்கு.

பொருள்:
எவரிடத்தும் எளிதாக நட்புக்கொண்டு இனிதாக கலந்துரையாடுதல், பண்புடைமை என்ற நடத்தையைத் தரும்.


பழமொழி :
The fool seeks the wealth but the wise the virtue

அஞ்ஞானி செல்வத்தை தேடுகிறான் ஞானிகளோ நற்குணங்களை அடைய நாடுகிறார்கள்.


இரண்டொழுக்க பண்புகள் :

1.வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.

2.கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.


பொன்மொழி :

வெற்றியாளர்கள் ஒருபோதும்  இழப்பதில்லை, ஒன்று வெல்கிறார்கள்  அல்லது  கற்கிறார்கள்! -- மகாத்மா காந்தி


பொது அறிவு :

1. நோபல் பரிசு எப்போதும் எந்த தினத்தில் வழங்கப்படும்?

விடை : டிசம்பர் 10

2. உலகில் மிக அதிகமாக‌ விளையும்‌ காய்கறி எது?

விடை : உருளைக்கிழங்கு


English words & meanings :

Lawyer.    -      வழக்கறிஞர்

Musician.   -    இசையமைப்பாளர்


வேளாண்மையும் வாழ்வும் :

உணவில்லாமல் ஒரு வாரம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது. ஒரு கிராம் தங்கத்தைவிட ஒரு டம்ளர் தண்ணீரின் மதிப்பு அதிகம் என்பது ஒவ்வொருவரும் உணர வேண்டும்.


மார்ச் 18

ரூடோல்ப் டீசல் அவர்களின் பிறந்த நாள்

ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (பி. மார்ச் 18, 1858 - செப்டம்பர் 29, 1913) ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரும் புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்.


நீதிக்கதை

சிலந்தியிடம் பாடம் கற்ற அரசர்

போரில், அரசர் ஒருவர் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவரின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவரால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றார்.

தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவரை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தார். அதனால் அவர் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டார்.

தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டார். மனச்சோர்வினால் துணிவு இழந்தார். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தார். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது.

அந்த சிறிய சிலந்தியின் செயல் அவரின் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச்சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினார். மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தார். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தார்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினார். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தார். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றார். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றார். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவர் என்றுமே மறக்கவில்லை.

நீதி: முயற்சிகள் எப்போதும் தோற்பதில்லை.


இன்றைய செய்திகள்

18.03.2025

* இந்திய ராணுவத்தில், அக்னிவீர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியின் அடிப்படையில் ஒரே நேரத்தில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

* குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் ஏப்ரலில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல்.

* போலி பாஸ்போர்ட், விசா மோசடிக்கு 7 ஆண்டு சிறை: மக்களவையில் புதிய குடியுரிமை மசோதா தாக்கல்.

* இந்தியா - நியூசிலாந்து இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து.

* ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி: தென்கொரிய வீராங்கனை அன்சே யங் சாம்பியன் பட்டம் வென்றார்.

* இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் பிரிட்டனின் ஜேக் டிராப்பர்.


Today's Headlines

* In the Indian Army, applications are invited for Agniveer jobs. You can apply for any two categories simultaneously based on merit.

* Group-1, Group-4 Examination announcements will be released in April: DNBSC President SK Prabhakar Information

* Seven years in prison for fake passport, visa fraud: filed a new citizenship bill in Lok Sabha.

* A Defense Agreement is signed between India and New Zealand.

* In All India badminton tournament South Korean player  Anse-young won the championship

Indianwells Open International Tennis Tournament: Britain's Jack Dropper won the championship.


Covai women ICT_போதிமரம்


17-03-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-03-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: சான்றாண்மை

குறள் எண்:990

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்
தாங்காது மன்னோ பொறை.

பொருள்:
நிறைகுணம்
உடையவர் தன்னுடைய தன்மையில் குறைவாராயின், பூமி அவர் பாரத்தைத் தாங்காது.


பழமொழி :
அச்சத்திற்கு மருந்து இல்லை.

There is no medicine for fear.


இரண்டொழுக்க பண்புகள் :

1.வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.

2.கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.


பொன்மொழி :

நம்பிக்கை போன்ற சிறந்த மருந்து  வேறு எதுவுமில்லை .- ஒரிசன் ஸ்வெட்


பொது அறிவு :

1. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு எத்தனை மாதங்களில் கைரேகை உருவாகும்?

விடை: 6 மாதங்கள்.         

2. விமானத்தில் மொத்தம் எத்தனை என்ஜின்கள் இருக்கும்?

விடை : 4 இன்ஜின்கள்  


English words & meanings :

Gardener.    -    தோட்டக்காரர்

Judge.     -     நீதிபதி



வேளாண்மையும் வாழ்வும் :

நம் வாழ்வில் நீர் சேமிப்பு மிக முக்கியம். நீர் சேமிப்புக்கு நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் உங்கள் வாழ்நாளில் சில மணிநேரங்களை அதிகரித்துக் கொள்கிறீர்கள்.



மார்ச் 17

சாய்னா நேவால் அவர்களின் பிறந்தநாள்

சாய்னா நேவால் (Saina Nehwal, பிறப்பு: 17 மார்ச் 1990) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகத் தரவரிசையில் முதலாவதாக உள்ளார்,[3][4] உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே.[5] 2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.[6] பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலகத் தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே. சூன் 21, 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.



நீதிக்கதை

நன்றி ஓடுகளே!

ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.

ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.

"முயலே நில்!'' என்றது ஆமை.

முயல் நின்றது.

"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.

"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.

"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''

"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.

ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.

ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.

சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.

ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.

ஓநாய் முயலைப் பிடித்தது.

சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும், தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்களை எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.



இன்றைய செய்திகள்

17.03.2025

-  அரசுப் பள்ளிகளில் மே மாதத்துடன் ஒய்வு பெறவுள்ள தலைமையாசிரியர்கள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

-  விவசாயிகளுக்கு ரூ.17,000 கோடி பயிர் கடன் வழங்கப்படும்: தமிழக வேளாண் பட்ஜெட்டில் தகவல்.

-  யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன அங்கீகாரத்துக்கான உத்தேச பட்டியலில் புதிதாக 6 இந்திய வரலாற்று சின்னங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

-  செவ்வாய் கிரகத்துக்கு ஹியூமனாய்ட் ரோபோ உடன் செல்லும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்.

-  இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: ஹோல்கர் ரூனே இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

-  ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: 'பிளே-ஆப்' சுற்று 29-ந் தேதி தொடக்கம்.


Today's Headlines

- The school department has ordered the submission of the headmasters who will be retired in May .

-  Farmers will be given a loan of Rs 17,000 crore crop: Tamil Nadu Agricultural Budget

-  There are 6 new Indian historical symbols added to the proposed list of UNESCO traditional recognition.

-  Elon Musk's Space X spacecraft that goes with the Humanoid Robot to Mars.

-  Indianwells Open International Tennis Tournament

-  ISL Football Series: 'Play-App' round starting on 29th.


Covai women ICT_போதிமரம்


14-03-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-03-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: சான்றாண்மை

குறள் எண்:989

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.

பொருள் :சால்பாகிய கடலுக்கு கரையானவர், அழிவு காலம் உண்டானாலும் ஒழுக்கம் தவறார்.


பழமொழி :
Known is a drop unknown is an ocean

கற்றது கைமண் அளவு கல்லாதது கடலளவு


இரண்டொழுக்க பண்புகள் :

*  பசியுடன் இருப்பவர்களின் வேதனையை அறிவேன். எனவே உணவை வீணாக்காமல் உண்பேன்.

* பசியோடு இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற அளவு உணவு தருவேன்.


பொன்மொழி :

பெரிதாக யோசி, சிறிதாக தொடங்கு, ஒரே நாளில் உயர்ந்து விட முடியாது. ஆனால் நிச்சயம் உயரலாம்.


பொது அறிவு :

1. இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் எது?

விடை: வைரம்.

2. கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு எது?

விடை: கார்பன் டை ஆக்சைடு


English words & meanings :

Engineer    -      பொறியாளர்

Farmer       -       விவசாயி


மார்ச் 14

கார்ல் மார்க்சு அவர்களின் நினைவுநாள்

கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 5, 1818, செருமனி–மார்ச் 14, 1883, இலண்டன்) செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்சு ஆவார்.


ஐரோம் சானு சர்மிளா அவர்களின் பிறந்தநாள்

ஐரோம் சானு சர்மிளா (Irom Chanu Sharmila, பிறப்பு: மார்ச் 14, 1972) என்பவர் மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப் படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர். மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்றிலிருந்து இவர் உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவந்தார். இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும். ஆகஸ்ட் 9, 2016 அன்று தனது 16 ஆண்டுகால உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டார்



நீதிக்கதை

பேராசையால் உயிரிழந்த கொக்கு

வசந்தபுரம் என்றொரு ஊர் இருந்தது. அழகிய வனமும், நீர்நிலைகளும் இருக்கும் அந்த ஊரில் ஒரு பெரிய குளம் இருந்தது.

அதில் ஒரு கொக்கு தினசரி மீன் பிடித்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. தினசரி அதிக நேரம் காத்திருந்து மீனைப் போராடிப் பிடிப்பதால் கொக்கு சலிப்புற்றிருந்தது.

ஒரு நாள் கொக்கின் மூளையில் ஒரு யோசனை தோன்றியது. இந்த மீன்களை அவைகளின் சம்மதத்தோடே நாம் விரும்பிய இடத்தில் கொண்டு போய் தின்றால் எப்படி இருக்கும் என்று யோசித்தது. அதற்கு ஒரு வஞ்சகமான திட்டமும் தயாரித்தது.

ஒரு நாள் கொக்கு வருத்தமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது.

“என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்”? என்றது. அதற்கு கொக்கு கூறிற்று "நான் மீனைகொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரியில்லை" என்றது.

“மனசு சரியில்லையா ஏன்”? என்றது மீன்.

‘அதையேன் கேட்கிறாய்..” என்று அலட்டியது கொக்கு.

"பரவாயில்லை சொல்லுங்களேன்' என்றது மீன். சொன்னால் உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்றது கொக்கு.

மீனுக்குப் பரபரத்தது. “சொன்னால்தான் தெரியும்” என்றது.

“வற்புறுத்திக் கேட்பதால் சொல்கிறேன். இப்போது ஒரு மீனவன் இங்கே வரப்போகிறான்”, என்று இழுத்தது கொக்கு.

"வரட்டுமே" என்றது மீன்.. “என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்” என்றது கொக்கு.

இதைக் கேட்ட மீன்கள் அனைத்தும் அதிர்ச்சியடைந்தன. அவை தங்களைக் காப்பாற்றுமாறு கொக்கிடமே வேண்டின.

ஆனால் கொக்கு "நான் என்ன செய்வேன்? என்னால் மீனவனோடு சண்டை போட முடியாத கிழவன் நான், வேண்டுமானால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகிறேன். அதனால் எனக்கும் நல்ல பெயர் வரும். நீங்களும் பிழைத்திருப்பீர்கள்", என்றது மிகவும் இறக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.

கொக்குக்குக் கசக்குமா காரியம்?. நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருக்கின்ற மீன்களை எல்லாம் கௌவ்விக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது.

குளத்திலிருந்த நண்டு ஒன்று இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை ஏற்பட்டது.

அந்த நண்டு கொக்கிடம் வந்து “வயோதிகக் கொக்கே! இந்த மீன்களையெல்லாம் எங்கே கொண்டு போகிறீர்களோ அங்கேயே என்னையும் கொண்டு போங்கள், என்னையும் மீனவனிடமிருந்து காப்பாற்றுங்கள்”, என்று கெஞ்சியது.

நண்டு கெஞ்சுவதைப் பார்த்த கொக்கு அதன் மேல் இரக்கப்பட்டு நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது. பறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதை கண்டது நண்டு.

அதைப் பார்த்த நண்டுக்கு ஒரே அதிர்ச்சி.வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் சட்டென்று புரிந்துவிட்டது. தன் நிலையும் அப்படித்தானா? என்று நண்டு பயப்படத் துவங்கியது.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது.  கொக்காரே! நீங்கள் என்மேல் இறக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். ஆனால் அங்கே என் உறவினர்கள் பலர் வரப்போகும் ஆபத்து தெரியாமல் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் உங்களுடன் வரத் தயார் செய்வேன்" என்றது நண்டு.

கொக்குக்கு ஒரே சந்தோஷம். இன்னும் நிறைய நண்டுகள் கிடைக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தது.

“அப்படியா, இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”. என்று கேட்டுக் கொண்டே பழைய குளத்திற்கு மீண்டும் நண்டைக் கொண்டு போனது.

குளத்துக்கு நேராக வரும்போதும் அதுவரை அமைதியாக இருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டுக் குளத்து நீரில் வீழ்ந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

நீதி: ஒருவரை நம்பும் முன்பாக அவரது இயல்பான குணத்தை நன்கறிந்தே நம்புதல் வேண்டும்


இன்றைய செய்திகள்

14.03.2025

* தமிழக பட்ஜெட் நிகழ்வை மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு.

* தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 7 நாட்களில் 41,931 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல்.

* 3.14 கோடி கணக்குகளுடன் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் முதலிடம்: தலைமை அஞ்சல்துறை தலைவர் பெருமிதம்.

* மொரிஷியஸ் நாட்டு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

* சவுதி அரேபியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒரு மாத போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் சம்மதித்துள்ளதாகவும், இனி இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியது ரஷ்யாதான் ’’ என அமெரிக்கா கூறியுள்ளது.

* சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் ரோஹித்துக்கு 3-வது இடம்.

* தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டி: ஜார்கண்ட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.


Today's Headlines

- The Tamil Nadu budget event will be live-streamed in 936 locations across the state.

- In the last 7 days, 41,931 students have joined government schools in Tamil Nadu, according to the School Education Department.

- The Tamil Nadu Postal Circle has achieved first place with 3.14 crore accounts, says the Chief Postmaster General.

- Prime Minister Modi was honored with the highest award from Mauritius for attending the country's Independence Day celebrations as a special guest.

- Ukraine has agreed to a one-month ceasefire, and the decision is now up to Russia, according to the US.

- Rohit has secured the 3rd position in the ICC ODI rankings for batsmen after the conclusion of the Champions Trophy cricket series.

- The Jharkhand team has won the National Senior Women's Hockey Championship.


Covai women ICT_போதிமரம்


13-03-2025 - School Morning Prayer Activities

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-03-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்:பொருட்பால்.            

அதிகாரம்: சான்றாண்மை.   

குறள் எண்:988
இன்மை ஒருவற்கு இலிவுஅன்று சால்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

பொருள்:
நிறைகுணம் ஒருவனுக்கு உறுதியாகுமானால் வறுமை அவர்க்கு
இழிவாகாது.


பழமொழி :
Live with your means.

வரவுக்கேற்ற செலவு செய்.


இரண்டொழுக்க பண்புகள் :

*  பசியுடன் இருப்பவர்களின் வேதனையை அறிவேன். எனவே உணவை வீணாக்காமல் உண்பேன்.

* பசியோடு இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற அளவு உணவு தருவேன்.


பொன்மொழி :

விடாமுயற்சி என்பது 19 முறை தோற்றாலும், 100 ஆவது முறை எழுந்து நிற்பது. - ஜுலி ஆண்ட்ரரூஸ்


பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் கதர் நகரம் என அழைக்கப்படுவது எது?  

விடை: திருப்பூர்.     

2. தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவர் யார்?

விடை:   முதலமைச்சர் 



English words & meanings :

Doctor.  -   மருத்துவர்

Driver.     -    ஓட்டுநர்


வேளாண்மையும் வாழ்வும் :

இன்று, உலக மக்கள் தொகையில் 40% பேர் நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்


நீதிக்கதை

புறா சொல்லும் பாடம்

சில புறாக்கள் ஒரு கோயில் மாடத்தில் தங்கியிருந்தன.வயது முதிர்ந்த ஒரு புறாதான் தலைவர். தினமும் காலையில்  தலைவர் வழிகாட்டி அழைத்துக்கொண்டு செல்கிற இடத்துக்கு சென்று  இரை சாப்பிட்டுவிட்டு மாலையில தங்களோட இடத்துக்குத் திரும்பிவிடும்.

இதைக் கவனித்த  வேடன் ஒருநாள் இரவு கோயில் அருகிலேயே தரையில் நிறைய தானியங்களைத் தூவி , அதன் மேலே ஒரு வலையை அமைத்து நான்கு மூலையிலும் முளை குச்சி அடித்து வைத்துவிட்டு போனான்.

அதிகாலையில் எல்லா புறாவும் இரைதேடி கிளம்பும் போது கீழே கொட்டிக்கிடக்கும் அந்த தானியங்களைப் பார்த்தன. இங்கேயே நம் தேவைக்கும் அதிகமான தானியங்கள் சிதறிக் கிடக்கின்றன;அதனால்

நெடுந்தூரம் பறந்து போய் இரை தேட வேண்டாம்” என்று சில இளம் புறாக்கள் கூறின. அதற்கு தலைமைப் புறா,

” இத்தனை நாளில்லாமல் இன்றைக்கு இவ்வளவு தானியமா; எனக்கு இது சந்தேகமாக உள்ளது. மேலும்

நம் முயற்சி இல்லாமல் தானே எதுவும் கிடைத்தால் அதில் ஆபத்து இருக்கலாம்; நான் போய் இரைக்கான இடத்தை தேர்வு செய்து வருகிறேன் ” என்றது.

அதற்குள் இளம் வயது புறாக்கள் ஒன்றுகூடி, “சுலபமாக கிடைப்பதை தலைவர் தடுக்கப் பார்க்கிறார்; வாருங்கள் இந்த தானியங்களை சாப்பிடுவோம் ” என்று கூறி எல்லா புறாக்களையும் தானியங்கள் மீது இறங்கச் செய்தன.

அவ்வளவுதான், அடுத்த நொடி புறாக்களின் கால்கள் வலையில் சிக்கிக் கொண்டன. ஆபத்தை உணர்ந்த புறாக்கள் பொறுமையிழந்து சிறகுகளை அடித்தபடி ” ஆபத்து, காப்பாற்றுங்கள்”  கதறத் தொடங்கின.

அப்போது தலைமை புறா எல்லோரையும் அமைதிப்படுத்தியது.

மேலும்” நான் சொல்வதை இப்போதாவது கவனமாகக் கேளுங்கள், நாம் வேடன் கையில் சிக்காமல் தப்பிக்கலாம். எல்லாரும் இறந்தது போல நடியுங்கள். வேடன் வலையின் நான்கு மூலைகளிலும் அடித்து வைத்திருக்கும் முளைக்குச்சியை எடுத்ததும் நான் வேகமாகப் பறந்துவந்து வேடன் தலையில் கொத்துவேன்;அவன் வலிதாங்காது கத்துவான். அதை உங்களுக்கான எச்சரிக்கையாக கருதிஎல்லாரும் ஒற்றுமையாக சிறகடித்து வலையுடன் வானத்தில் பறக்க வேண்டும்” என்று திட்டம் கூறியது.

       சிறிது நேரத்தில் வந்து பார்த்த வேடன் தண்ணீரில்லாமல் புறாக்கள் இறந்துவிட்டதாக எண்ணினான். ” அடடா, இவை உயிருடன் இருந்தால் நல்ல விலைக்கு விற்பதால் நிறைய பணம் கிடைத்திருக்கும். பரவாயில்லை இதாவது கிடைத்ததே என்று வலையின் நாண்கு மூலைகளின் முளைக்குச்சிகளை அகற்றினான். தாமதமில்லாமல் தலைமைப்புறா பறந்து வந்து வேடன் தலையில் கொத்தியது . வேடன் வலியில்

” ஆ..அம்மா” என்று கத்தினான். இந்த ஒலியைக்கேட்ட மற்ற புறாக்கள் படபடவென சிறகடித்து வலையுடன் வானில் பறந்தன. அதன் கீழே வேடன் சிறிது தூரம்”ஐயோ..என் வலை.” என்று கத்திக் கொண்டே ஓடினான்.

பறந்த புறாக்கள் ஒரு மலையைக் கடந்து சென்றபோது தலைமைப்புறா கீழிறங்க ஆணையிட்டது. அந்த இடத்தில் ஒரு எலி வளை இருந்தது.

தலைமைப்புறா, “எலி நண்பா,நான்தான் உன் புறா நண்பன் வந்திருக்கிறேன். ஆபத்திலிருக்கும் எங்களைக் காப்பாற்று”  என்று வேண்டியது. 

நண்பனின் வேண்டுதலை மறுக்க முடியாத எலி வலையைக்கடித்து எல்லாரையும் விடுவித்தது.

விடுதலையடைந்த புறாக்கள் எலிக்கு நன்றி கூறிவிட்டு பறந்தன.

நீதி : உழைப்பில்லாமல் வருபவை ஆபத்து உள்ளவை.


இன்றைய செய்திகள்

13.03.2025

* மின் இணைப்புகளில் பொருத்துவதற்காக ரூ.20,000 கோடி செலவில் 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழக மின்வாரியம் டெண்டர் கோரி உள்ளது.

* தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 13 முதல் மார்ச் 18 வரையிலான 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* இந்தியா - மொரிஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

* “தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புதினும் இதற்கு சம்மதிப்பார் என நம்புகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

* இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி; அமெரிக்காவின்கோகோ காப் 4-வது சுற்றுக்கு தகுதி.

* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா தகுதிபெறாததால் ரூ.38 கோடி வருவாய் இழப்பு.


Today's Headlines

1. Tamil Nadu Electricity Board tenders for 3.04 crore smart meters worth ₹20,000 crores.

2. Chennai Weather Research Centre predicts moderate rain in Tamil Nadu, Puducherry, and Karaikal from March 13 to 18.

3. India and Mauritius sign 8 Memoranda of Understanding .

4. US President Donald Trump says Ukraine is ready for a temporary ceasefire and hopes Russian President Putin will agree.

5. American tennis player Coco Gauff qualifies for the 4th round of the Indian Wells International Tennis Tournament.

6. India misses out on the World Test Championship, incurring a revenue loss of ₹38 crores.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம், தினசரி படி, கூடுதல் ஓய்வூதியம் உயர்வு - 01-04-2023 முதல் நடைமுறை

MPs monthly salary, pension, daily allowance, additional pension increased from 01-04-2023 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதிய...