பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:46 சிற்றினம் சேராமை
குறள் எண்:452
குறள்:
பொருள்:
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.
பழமொழி :
Fact is stronger than fiction.
கற்பனையை விட உண்மை விசித்திரமானது.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன்.
2. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.
பொன்மொழி :
“மாற்றம் ஒன்றே மாறாதது.”
Thought for the Day :
Time is precious; once it is lost, it never comes back. Use it wisely.
பொது அறிவு :
1. சிறைகள் இல்லாத நாடு எது?
நெதர்லாந்து.
2. இந்தியாவில் சூரிய ஒளி முதலில் தோன்றும் மாநிலம் எது?
அருணாச்சல் பிரதேசம்
English words :
**Vague** - Not clear or specific, தெளிவற்ற.
**Reluctant** - Unwilling and hesitant, தயக்கமுள்ள.
புவியியலும் சுற்றுசூழலும் :
"மாநிலங்கள் மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன.
உதாரணம்: தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள்.
மாவட்டங்கள் மேலும் தாலுகாக்கள் அல்லது வட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன."
NMMS :
MAT
"CONCEPTUALIZATION" என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு உருவாக்க முடியாத வார்த்தை எது??
(1) ACTUAL.
(2) TOTAL.
(3) PLANTATION.
(4) EXPLANATION.
விடை: (4) EXPLANATION
1998 ஆம் ஆண்டு ரோம் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜூலை 17 ஆம் தேதி சர்வதேச நீதிக்கான உலக தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) நிறுவப்பட்டது. உலகின் ஒவ்வொரு பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கிட்டத்தட்ட 80 நாடுகள் 1998 முதல் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளன. 1998 முதல் சுமார் 139 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
உலக எமோஜி தினம் (World Emoji Day)
அவற்றின் பரவலான பயன்பாடு மற்றும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, எமோஜிகளைக் கொண்டாட ஒரு பிரத்யேக நாளைக் கொண்டிருப்பது பொருத்தமானது. ஜூலை 17 ஆம் தேதி உலக எமோஜி தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது - நமது உரையாடல்களை உயிர்ப்பிக்கும் படச்சித்திரங்களை நினைவுகூரும் ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பம்.
நீதிக்கதை
"சுத்தமே செல்வம்"
ஒரு கிராமத்தில் சித்தார்த் மற்றும் பவின் என்ற இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். சித்தார்த் தினமும் வீட்டைச் சுத்தம் செய்து, பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைப்பான். ஆனால் பவின் பயன்படுத்திய பொருட்களை அப்படியே போட்டுவிடுவான். வீட்டில் ஒட்டடை , தூசி படிந்திருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படமாட்டான்.
ஒருநாள் அவர்களது தாத்தா வீட்டிற்கு வந்தார். அவர் ஒரு முக்கியமான நிலப்பத்திரத்தை எடுத்துக் காட்டச் சொன்னார். சித்தார்த் உடனே அலமாரியைத் திறந்து, சுத்தமாக அடுக்கி வைத்திருந்த கோப்பிலிருந்து பத்திரத்தை எடுத்துக் கொடுத்தான்.
அதே நேரத்தில், பவின் தனது பள்ளிச் சான்றிதழைத் தேடினான். ஆனால் தூசிபடிந்த அறையிலும், சிதறிக் கிடந்த பொருட்களிலும் தேடியும் கிடைக்கவில்லை .
இறுதியில், பழைய செய்தித்தாள்களுக்கு நடுவே அது மடிந்து கிடந்தது.
அப்போது தாத்தா, “வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது அழகுக்காக மட்டும் அல்ல; தேவையான நேரத்தில் பொருட்களை எளிதாகக் கண்டுபிடிக்கவும், ஆரோக்கியமாக வாழவும் உதவுகிறது," என்று அறிவுரை கூறினார்.
அந்த நாளிலிருந்து பவினும் தினமும் வீட்டைச் சுத்தம் செய்து, பொருட்களை ஒழுங்காக வைத்துப் பழகினான்.
நீதி:
"வீட்டைச் சுத்தமாகவும் பொருட்களை ஒழுங்காகவும் வைத்திருப்பது நல்லபழக்கம்; அது ஆரோக்கியத்தையும், ஒழுக்கத்தையும், மனநிம்மதியையும் தரும்.”
🗒️சென்னை பூங்கா ரெயில் நிலையத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் .
🗒️தமிழகத்தில் 15 மாவட்டங்களிலும் மற்றும் சமவெளி பகுதிகளிலும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
*விளையாட்டுச் செய்திகள்*
🏀ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்.
Today's Headlines
🗒️Prime Minister Narendra Modi will inaugurate the Chennai Park Railway Station today.
🗒️Tamil Nadu will conduct the Population Census from August 1 to August 30. From today until July 30, people can register their details themselves on the official website.
🗒️The Weather Department has said that heatwave conditions may occur in 15 districts of Tamil Nadu and in the plains.
Sports News
🏀Japan Open Badminton: P. V. Sindhu has advanced to the quarter-finals.
🏀FIFA World Cup: Lionel Messi created a historic record. Defending champions Argentina played brilliantly against England in the semi-final and qualified for the final.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:46 சிற்றினம் சேராமை
குறள் எண்:451
பொருள்:
தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.
பழமொழி :
Experience is the best teacher.
அனுபவமே சிறந்த ஆசான்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன்.
2. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.
பொன்மொழி :
“மக்களுக்காக வாழ்வதே உண்மையான வாழ்க்கை.”
Thought for the Day :
The future belongs to those who believe in their dreams.
பொது அறிவு :
1.சூரியன் உதிக்கும் நாடு எது?
ஜப்பான்.
2. சூரியன் மறையும் நாடு எது?
பிரிட்டன்.
English words :
Peculiar - Strange or unusual, விசித்திரமான.
Sufficient - Enough for a particular purpose, போதுமான.
புவியியலும் சுற்றுசூழலும் :
NMMS :
MAT
"PAINTER" என்ற சொல்லில் எழுத்துகளை ஆங்கில அகர வரிசைப்படி வரிசைப்படுத்தி எழுதினால் தன் இடத்தை மாற்றிக் கொள்ளாத எழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை??
(1) 1.
(2) 2.
(3) 3.
(4) 4.
விடை: (2) 2
நாகலிங்கம்பிள்ளை தன்ராஜ் பிள்ளை (பிறப்பு - சூலை 16. 1968, புனே) இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர். 1998ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் தன்ராஜ் பிள்ளை தலைமையிலான இந்திய அணி பங்கேற்றது. இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. அந்த ஆசிய போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை தன்ராஜ் பிள்ளை பெற்றார். அத்துடன் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். அதற்கு முன்பாக 1966ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் இந்திய அணி தங்கம் வென்றது. இவை தவிர 2002ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பட்டத்தையும் இவர் பெற்றார்.
நீதிக்கதை
"நேர்மையின் வெற்றி" ஒரு பள்ளியில் வெற்றி மற்றும் ஹேமந்த் என்ற இரு மாணவர்கள் படித்து வந்தனர். ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கியது. இருவரும் நன்றாகப்
படித்திருந்தாலும், கணிதப் பாடம் ஹேமந்துக்கு மிகவும் கடினமாக இருந்தது.
தேர்வு எழுதும்ப போது, ஹேமந்துக்கு சில கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை .
உடனே வெற்றியின் விடைத்தாளைப் பார்த்து காப்பி அடிக்க நினைத்தான்.
அதை கவனித்த வெற்றி, தனது விடைத்தாளை மறைத்துக்கொண்டு, "தவறான
மதிப்பெண்ணை விட நேர்மையான முயற்சிதான் உயர்ந்தது. உனக்குத் தெரிந்ததை மட்டும் எழுது," என்று மெதுவாகச் சொன்னான்.
ஹேமந்த் அந்த வார்த்தையைக் கேட்டதும் மனம் மாறினான். தனக்குத் தெரிந்த விடைகளை மட்டும் எழுதினான்.
முடிவுகள் வந்தபோது, வெற்றி அதிக மதிப்பெண் பெற்றான். ஹேமந்த்
எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் பெறவில்லை . ஆனால் ஆசிரியர்,
"மதிப்பெண்ணை விட நேர்மையே பெரிய செல்வம். இன்று நீ நேர்மையைத்
தேர்ந்தெடுத்தாய். அடுத்தத் தேர்வில் உழைப்பால் நிச்சயம் வெற்றி பெறுவாய்," என்று பாராட்டினார்.
அந்த நாளிலிருந்து ஹேமந்த் தினமும் நன்றாகப் படித்து, அடுத்தத் தேர்வில் தனது சொந்த முயற்சியால் வகுப்பின் முதல் ஐந்து இடங்களில் ஒன்றைப் பிடித்தான்.
நீதி:
"பரிட்சையில் காப்பி அடித்து பெறும் வெற்றி நிலைக்காது; நேர்மையாக உழைத்து பெறும் வெற்றியே என்றும் பெருமை தரும்.”
🗒️தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்.
🗒️புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 2 புதிய எம்.டி.எஸ் படிப்புகள் அறிமுகம். புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.
🗒️இந்திய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், விரைவில் அதிவேகமாக செல்லும் மின்சாரத்தில் இயங்கும் பஸ்களை அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
*விளையாட்டுச் செய்திகள்*
🏀ஆசிய இளையோர் கைப்பந்து போட்டி -இந்திய அணி காலிறுதிக்கு முன்னேற்றம்.
🏀உலக கால்பந்து போட்டி -ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Today's Headlines
🗒️ The Tamil Nadu government has added 150 more MBBS seats in government medical colleges, said Minister Arun Raj.
🗒️ The Puducherry Government Dental College has started two new MDS (Master of Dental Surgery) courses, announced Chief Minister Rangasamy.
🗒️ Union Minister Nitin Gadkari said that high-speed electric buses will soon be introduced in Indian cities to help reduce traffic congestion.
Sports News
🏀 In the Asian Youth Handball Championship, the Indian team has reached the quarter-finals.
🏀 In the World Football Tournament, Spain defeated France 2–0 and advanced to the final
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:450
குறள்:
பொருள்:
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.
பழமொழி :
Every ass loves his bray
காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன்.
2. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.
பொன்மொழி :
வெற்றி என்பது இறுதி அல்ல; தோல்வி என்பது முடிவும் அல்ல; தொடர்ந்து முன்னேறும் துணிவே முக்கியம்.
Thought for the Day :
"Every day is a new chance to learn and grow."
பொது அறிவு :
1 . எந்த உயிரியின் உடல் பாகங்களிலிருந்து 40 வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன?
ஆமை.
2. உலகின் விலையுயர்ந்த மரம் எது?
ஆப்பிரிக்கா கருப்பு மரம்..
English words :
Obvious - Clear and easy to see, தெளிவான.
Pardon - Forgive a mistake or offense, மன்னிப்பு வழங்கு.
புவியியலும் சுற்றுசூழலும் :
"பள்ளத்தாக்குகள் (Valleys) – மலைகளுக்கு இடையில் உள்ள தாழ்வான பகுதிகள்.
ஆறுகள் (Rivers) – உயரமான இடங்களில் தோன்றி கடல் அல்லது ஏரியில் கலக்கும் நீரோடைகள்.
ஏரிகள் (Lakes) – நிலப்பரப்பால் சூழப்பட்ட நீர்நிலைகள்.
நீர்வீழ்ச்சிகள் (Waterfalls) – உயரமான இடத்திலிருந்து கீழே விழும் ஆறுகளின் பகுதிகள்."
NMMS :
MAT
கீழ்க்கண்ட சொற்களை ஆங்கில அகராதி முறையில் வரிசைப்படுத்தும்போது கடைசியிலிருந்து இரண்டாவதாக வரும் வார்த்தை என்ன?
Scramble, script, science, school.
(1)scramble.
(2) script.
(3) science.
(4) school.
விடை : (1) Scramble
காமராசர் (காமராஜர்) (K. Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆவார். இவர் ஒன்பது ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நீதிக்கதை
"துரோகத்தின் விலை "
ஒரு ஊரில் சங்கர் மற்றும் மூர்த்தி என்ற இரு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.
இருவரும் சேர்ந்து சிறிய மளிகைக் கடை நடத்தினர். வியாபாரம் நன்றாக
நடந்ததால், ஊரில் அனைவரும் அவர்களைப் பாராட்டினர்.
ஒருநாள், ஒரு பெரிய வியாபாரி மூர்த்தியிடம், "நீ தனியாக வந்தால் அதிக லாபம் தருகிறேன். ஆனால் சங்கரிடம் இதைப் பற்றி சொல்லக்கூடாது," என்றார்.
அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில், மூர்த்தி நண்பனுக்குத் தெரியாமல்
கடையின் பணத்தையும் சில வாடிக்கையாளர்களையும் தனக்காக மாற்றிக்கொண்டான்.
சில நாட்களில் சங்கர் உண்மையை அறிந்தான். அவன் கோபப்படாமல்
அமைதியாக, "நண்பனை நம்பி சேர்ந்து உழைத்தேன். ஆனால் நீ பணத்திற்காக
நட்பையே விற்றுவிட்டாய்," என்று கூறி அந்தக் கூட்டுத் தொழிலிலிருந்து விலகிவிட்டான்.
மூர்த்தி தனியாக வியாபாரம் செய்தான். ஆனால் அவனை யாரும் நம்பவில்லை .
அவன் துரோகம் செய்ததை அறிந்த வாடிக்கை யாளர்களும் மெதுவாக விலகினர்.
இறுதியில் அவனுடைய வியாபாரம் நஷ்டமடைந்தது.
அப்போது தான் மூர்த்தி உணர்ந்தான்: பணத்தை மீண்டும் சம்பாதிக்கலாம்;
ஆனால் ஒருமுறை இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவது மிகவும் கடினம்.
நீதி:
"யாருக்கும் துரோகம் செய்யாதே ; துரோகம் தற்காலிக லாபத்தைத் தரலாம், ஆனால் நிரந்தரமாக நம்பிக்கையையும் மரியாதையையும் இழக்கச் செய்யும்.”
🗒️ஆவின் நிறுவனம் மூலம் பால் கொள்முதல் நிலையைத் துரிதமாக அதிகரிக்க வேண்டும் .முதல்வர் ஜோசப் விஜய் அறிவுறுத்தல்.
🗒 அனைவருக்கும் நீதி கிடைக்கும் வகையில் ஏழைகளுக்கு வழக்கறிஞர்கள் இலவச சட்ட உதவி வழங்க வேண்டும் என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
*விளையாட்டுச் செய்திகள்*
🏀ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் வாங் லிங் சிங் உடன் மோதி இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்
Today's Headlines
🗒️ Chief Minister Joseph Vijay has instructed that milk procurement through the Aavin dairy cooperative should be increased rapidly.
🗒️ Vice President C. P. Radhakrishnan said that free legal aid should be provided to poor people through lawyers so that everyone can receive justice.
🗒️ CBSE has released a new update. It has issued a circular stating that students of Classes 9 and 10 must pass the internal assessment of the third language.
🏀 Sports News
🏀 Norway team returned home and received an enthusiastic welcome from fans after their campaign. Norway lost 1–2 to England in the quarter-final match.
🏀 At the Japan Open Badminton Tournament, India's P. V. Sindhu defeated Wong Ling Xing of Malaysia.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:449
குறள்:
பொருள்:
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.
பழமொழி :
East or west, home is best.
எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன்.
2. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.
பொன்மொழி :
நல்ல எண்ணங்களே நல்ல வாழ்க்கையின் அடித்தளம்.
Thought for the Day :
Time is precious. Use it wisely.
பொது அறிவு :
1. மனித உடலின் மிக நீளமான எலும்பு எது?
தொடை எலும்பு (பீமர் எலும்பு)
2. மனித உடலின் மிக சிறிய எலும்பு எது?
உட்செவி எலும்பு (அங்கவடி எலும்பு).
English words :
Determine - Firmly decide or find out, தீர்மானி.
Magnificent - Extremely beautiful or impressive, பிரமாதமான.
புவியியலும் சுற்றுசூழலும் :
NMMS :
MAT
P என்பவர் Q விற்கு சகோதரர். R என்பவர் S ற்கு சகோதரி.Q என்பவர் R ற்கு மகன் எனில், R என்பவர் Pக்கு என்ன உறவு?
(1)தந்தை
(2)தாய்
(3)மருமகன்
(4) மருமகள்
விடை: (2) தாய்
மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் (M. S. Viswanathan), (24 சூன் 1928 – 14 சூலை 2015) தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை சுப்பிரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி). விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.
நீதிக்கதை
"கடன் அன்பை முறிக்கும்"
ஒரு சிறிய கிராமத்தில் அருள் மற்றும் யாசின் என்ற இரு நண்பர்கள் வாழ்ந்தனர். அவர்கள் சிறு வயதிலிருந்தே உயிர் நண்பர்கள். எந்த வேலையையும் சேர்ந்து செய்வார்கள்.
ஒருநாள் யாசின், "என் தங்கையின் படிப்புச் செலவுக்காக ₹20,000 வேண்டும். ஒரு மாதத்தில் திருப்பித் தருகிறேன்," என்று அருளிடம் கேட்டான்.
நண்பன் என்பதால் அருளும் யோசிக்காமல் பணத்தைக் கொடுத்தான்.
ஒரு மாதம் முடிந்தது. இரண்டு மாதங்களும் கடந்தன. ஆனால் யாசின் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. அருள் கேட்டபோதெல்லாம், "இன்னும் கொஞ்ச நாள் பொறு," என்று கூறிக்கொண்டே இருந்தான்.
சில நாட்களுக்குப் பிறகு, கிராமத் திருவிழாவில் இருவரும் சந்தித்தனர். அருள் மீண்டும் பணத்தைப் பற்றி கேட்டான். அதற்கு யாசின் கோபமாக, "பணம் கொடுத்ததாலே என்னை அவமானப்படுத்துகிறாயா?" என்று அனைவரின் முன்னிலும் பேசிவிட்டான்.
அதைப் பார்த்த அருளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. பணத்தை விட, பல ஆண்டுகள் இருந்த நட்பு உடைந்ததே அவனுக்கு பெரிய வேதனையாக இருந்தது.
சில மாதங்களுக்குப் பிறகு, யாசின் தனது தவறை உணர்ந்து பணத்தையும் திருப்பிக் கொடுத்து மன்னிப்பு கேட்டான். ஆனால் உடைந்த நம்பிக்கையை மீண்டும் பழையபடி உருவாக்குவது மிகவும் கடினமாக இருந்தது.
நீதி:
"கடன் வாங்குவது எளிது; அதைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தாதபோது, பணத்தை விட அன்பும் நம்பிக்கையும் முதலில் முறியும்.”
🗒️முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் வரும் 16-ந் தேதி நடக்கிறது.இக்கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.
🗒️புதிய வாக்காளர்கள் தங்கள் பெற்றோரின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்: இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம்.
விளையாட்டுச் செய்திகள்
🏀559 குழந்தைகளுக்கு கால்பந்து வீரர் ஹாலண்டின் பெயரை சூட்டிய பெற்றோர்.பெரு நாட்டில் நெகிழ வைக்கும் கால்பந்து பாசம்.
🏀உலகக் கோப்பை கால்பந்து - தங்க ஷூக்கான போட்டியில் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி.
🏀ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - 16 பதக்கங்களை குவித்தது இந்தியா, சீனா 52 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
Today's Headlines:
🗒️ A Cabinet meeting chaired by Chief Minister Vijay will be held on the 16th. Approval for the State Budget is expected to be given during the meeting.
🗒️ It has been reported that 73,000 Smart Ration Cards will be issued across Tamil Nadu by the end of July.
🗒️ New voters must submit their parents' details, clarifies the Election Commission of India.
Sports News
🏀 Parents in Peru have named 559 children after football star Haaland, reflecting the country's deep love for football.
🏀 FIFA World Cup – Intense competition is underway among players in the race for the Golden Boot award.
🏀 Asian Athletics Championships – India won 16 medals, while China topped the medal tally with 52 medals.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:448
குறள்:
பொருள்:
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
பழமொழி :
Faith is the force of life.
நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன்.
2. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.
பொன்மொழி :
வாய்ப்புக்காக காத்திருக்காதே; வாய்ப்பை உருவாக்கு.
Thought for the Day :
Kindness costs nothing but means everything.
பொது அறிவு :
1.தேசிய கீதம் இல்லாத நாடு எது?
சைப்ரஸ்.
2. நதிகள் இல்லாத நாடு எது?
வாடிகன்
English words :
Neglect – Ignore, புறக்கணி.
Conceal - Hide something from sight, மறை.
புவியியலும் சுற்றுசூழலும் :
NMMS :
SAT - கணிதம்
ஒரு பொருளை ₹850 க்கு விற்றதால் கிடைத்த இலாபமும் , அதே பொருளை ₹570 க்கு விற்றதால் ஏற்பட்ட நட்டமுமம் சமம் எனில் அந்த பொருளின் அடக்க விலை _________________ (1) ₹280.
(2)₹ 710.
(3) ₹720.
(4) @₹1420.
விடை: (2) ₹710
நீதிக்கதை
"ஒரு சிறிய விதையின் வெற்றி"
ஒரு கிராமத்தில் ஹேமா என்ற சிறுமி வாழ்ந்து வந்தாள். அவள் தினமும் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு வயதான தாத்தா மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
ஒருநாள் ஹேமா கேட்டாள்:
"தாத்தா, நீங்கள் நட்ட இந்த மரங்கள் பெரியதாக வளர பல ஆண்டுகள் ஆகுமே. அப்போது நீங்கள் இருப்பீர்களா?"
தாத்தா சிரித்துக் கொண்டு,
"நான் இல்லாவிட்டாலும், இந்த மரத்தின் நிழலில் ஓய்வெடுப்பவர்கள் இருப்பார்கள். நான் பெற்ற நன்மையைப் போல, மற்றவர்களும் நன்மை பெற வேண்டும் என்பதற்காகத்தான் இதை நடுகிறேன்," என்றார்.
அந்த வார்த்தைகள் யாழினியின் மனதில் பதிந்தன. அன்றே அவளும் வீட்டில் ஒரு மாமரக் கன்றை நட்டாள். தினமும் தண்ணீர் ஊற்றி அன்புடன் பராமரித்தாள்.
சில ஆண்டுகள் கழித்து, அந்த மரம் பெரியதாக வளர்ந்து, அதன் நிழலில் மக்கள் ஓய்வெடுத்தனர். அதன் பழங்களை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டனர்.
அப்போது யாழினி, "ஒரு சிறிய நல்ல செயல் பலருக்கு பெரிய மகிழ்ச்சியைத் தரும்" என்பதை உணர்ந்தாள்.
நீதி:
"நாம் செய்யும் சிறிய நற்செயலும், நாளை பலரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்."
🗒️ உலகளவில் கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் முதல் 50 நகரங்களின் பட்டியலில் மதுரை 7வது இடமும் சென்னை 49வது இடமும் பிடித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் 14 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
🗒️ மாற்றுத்திறனாளிகளுக்கான 4 % இடஒதுக்கீட்டு நடைமுறையை முழுமையாக செயல்படுத்தி வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
🗒️ 56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா மொத்தம் 5 தங்கம் வென்று சர்வதேச அளவில் பெரும் சாதனை படைத்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
🏀 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
Today's Headlines
☘️Madurai has been ranked 7th and Chennai 49th in the list of the world's top 50 cities facing the most extreme heat. A study conducted by researchers at the University of Oxford found that 14 Indian cities feature in the list.
☘️The Chief Minister of Tamil Nadu has directed that the 4% reservation for persons with disabilities be fully implemented to ensure employment opportunities for them.
☘️Due to the rapid growth of Artificial Intelligence (AI) and data centres, the carbon emissions of Microsoft, Amazon, and Google are increasing at an alarming rate.
☘️India has achieved a remarkable feat at the 56th International Physics Olympiad, winning 5 gold medals.
🏀Sports News
In the Wimbledon Championships, one of the four Grand Slam tournaments, Linda Nosková of the Czech Republic won the Women's Singles title for the first time.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:447
குறள்:
பொருள்:
கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.
பழமொழி :
As you sow, so You Reap
வினை விதைத்தவன் விதை அறுப்பான்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.
2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.
பொன்மொழி :
தன்னம்பிக்கை இருந்தால் தடைகள் கூட படிக்கட்டுகளாக மாறும்.
Thought for the Day :
Your attitude determines your direction.
பொது அறிவு :
1.கிரிக்கெட் விளையாட்டில் "God of cricket" என அழைக்கப்படும் வீரர் யார்?
சச்சின் டென்டுல்கர்.
2. கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர் அவர்களின் சுயசரிதையின் பெயர் என்ன?
"Playing it my way."
English words :
Locate – Find, கண்டறி.
Modify – Change, மாற்றியமை
புவியியலும் சுற்றுசூழலும் :
நாட்டை நேசிப்பது அதன் சட்டங்களை மதிப்பதிலிருந்து தொடங்குகிறது."சமத்துவம் ஒரு நல்ல சமுதாயத்தின் அடையாளம்.
NMMS :
MAT
(1) 42.
(2) 33.
(3) 44.
(4)36.
விடை: (3) 44
சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பிப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது. முதன் முதல் இந்தியாவில் அச்சகத்தை ஆரம்பித்தவர். முதன் முதல் இந்தியாவில் காகித ஆலையை ஆரம்பித்தவர். முதன் முதல் தமிழ் நாள்காட்டியை அச்சிட்டு வெளியிட்டவர். முதன் முதல் தமிழ் உரைநடையை அறிமுகப்படுத்தியவர். முதன் முதல் பெண்கள் பள்ளியை ஆரம்பித்தவர்.முதன் முதல் ஏழை பிள்ளைகளுக்கு காப்பகத்தை துவங்கியவர். முதன் முதல் பெண்களுக்கு தையல் கூடம் ஆரம்பித்தவர். முதன் முதல் மதிய உணவு வழங்குவதை துவங்கியவர். முதன் முதல் பள்ளி பிள்ளைகளுக்கு பாடநூலை அச்சிட்டவர். முதன் முதல் தமிழ் புரோட்டஸ்டன்ட் ஆலயத்தை கட்டினவர். முதன் முதல் பல் சமய உரையாடலை துவங்கினவர்.முதன் முதல் தமிழ் அகராதியை உருவாக்கினவர். முதன் முதல் தென்னிந்திய கடவுள்களின் வரலாற்றை எழுதியவர்.
நீதிக்கதை
"நெகிழிப் பாடம்"
ஒரு கிராமத்தில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில், ஒரு மாடு சாலையோரத்தில் கிடந்த நெகிழிப் பையைத் தின்றுகொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அதை கண்டதும் அவர்கள் மிகவும் வருந்தினர்.
அன்று பள்ளியில் ஆசிரியர் நெகிழியின் தீமைகளைப் பற்றி விளக்கினார். "நெகிழி மண்ணில் எளிதில் மக்காது. அதை விலங்குகள் தின்றால் அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். மேலும், நெகிழி சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும்," என்றார்.
அதை கேட்ட மாணவர்கள், அடுத்த நாள் முதல் நெகிழியைத் தவிர்ப்பது, துணிப்பையை மட்டுமே பயன்படுத்துவது என முடிவு எடுத்தனர். தங்கள் நண்பர்களுக்கும் துணிப்பைகளைப் பயன்படுத்தச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
சில மாதங்களில் அந்தக் கிராமத்தில் நெகிழிப் பயன்பாடு மிகவும் குறைந்தது. தெருக்களும் தூய்மையாக இருந்தன. விலங்குகளும் பாதுகாப்பாக வாழத் தொடங்கின.
நீதி:
நெகிழியைத் தவிர்ப்போம்; இயற்கையையும் உயிரினங்களையும் காப்போம்.
🗒️பள்ளிக்கல்வியின் முக்கிய குறியீடுகளில் தேசிய சராசரியை விட சிறந்து விளங்கும் தமிழ்நாடு - மத்திய அரசின் அறிக்கையில் தகவல்.
🗒️ "செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்" எனும் பயிற்சி வகுப்புகள் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில், நடைபெறவுள்ளது.
🗒️ஏலத்திற்கு வரும் டைனோசர் எலும்புக்கூடு; ரூ.250 கோடிக்கு ஏலம் போக வாய்ப்பு. கேரி கஸ் லிககிங்கை கவுரவிக்கும் விதமாக டைனோசருக்கு அவரின் பெயரே “கஸ் டி-ரெக்ஸ்” எனப் பெயரிடப்பட்டது.
விளையாட்டுச் செய்திகள்
🏀உலகக் கோப்பை கால்பந்து காலிறுதி: பிரான்ஸ்-மொராக்கோ நாளை மோதல். அர்ஜென்டினா, முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
🏀விம்பிள்டன் டென்னிஸ்: ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Today's Headlines
🗒️ Tamil Nadu outperforms the national average in key school education indicators, according to a report by the Central Government.
🗒️ A training programme on "App Development Using Artificial Intelligence" will be conducted in Chennai by the Entrepreneurship Development and Innovation Institute (EDII).
Sports News
🏀 Wimbledon Tennis: Alexander Zverev advances to the semi-finals.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:446
குறள்:
பொருள்:
தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.
பழமொழி :
As rare as hen's teeth.
அத்தி பூத்தார் போல.
இரண்டொழுக்க பண்புகள் :.
1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.
2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.
பொன்மொழி :
அறிவு வளர வளர பணிவும் வளர வேண்டும்.
Thought for the Day :
Small steps taken every day lead to great achievements.
பொது அறிவு :
1.உலகில் அதிகமாக விளையும் காய்கறி எது?
உருளைக்கிழங்கு.
2. மனித உடலின் மிகவும் நீளமான தசை எது?
நாக்கு.
English words :
Justify – Defend, நியாயப்படுத்து.
Knock – Strike, தட்டு.
புவியியலும் சுற்றுசூழலும் :
உள்ளாட்சி அமைப்புகள் மூன்றாக பிரிக்கப் பட்டுள்ளது.
1. கிராம பஞ்சாயத்து
2. நகராட்சி
3. மாநகராட்சி
NMMS :
(1) வட்டம்
(2) இணைகரம்
(3) சாய்சதுரம்
(4) சரிவகம்
விடை: (1) வட்டம்
நீதிக்கதை
"விக்னேஷின் ஒரு நாள்"
ஒரு நகரத்தில் விக்னேஷ் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எப்போதும் கைபேசி, தொலைக்காட்சி, வீடியோ விளையாட்டுகள்தான் பிடிக்கும். பள்ளி முடிந்ததும் வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டு அவற்றிலேயே நேரத்தை கழிப்பான்.
ஒருநாள் பள்ளி விடுமுறை . பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தனர். வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் தடைப்பட்டது.
வேறு வழியில்லாமல் வீட்டிற்கு அருகிலிருந்த பூங்காவிற்குச் சென்றான். அங்கே வண்ணத்துப்பூச்சிகள் மலர்களைச் சுற்றிப் பறப்பதையும், தேனீக்கள் தேன் சேகரிப்பதையும், மரக்கிளைகளில் பறவைகள் இனிமையாகக் கீச்சிடுவதையும் பார்த்தான்.
மெல்லிய காற்று அவன் முகத்தைத் தழுவியது. அருகிலிருந்த குளத்தில் தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன. அந்த அழகைக் கண்டு விக்னேஷின் மனம் மகிழ்ச்சியால் நிரம்பியது.
அப்போது அங்கு நடை பயிற்சி செய்து கொண்டிருந்த கவுன்சிலர் அண்ணன்,, "என்ன தம்பி, இயற்கையை ரசிக்கிறாயா? நல்லா இருக்கா ?” என்று கேட்டார். “ஆமாம் அண்ணா. இவை எல்லாம் பார்க்க ரொம்ப அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு” என்றான்.
அந்த அண்ணன்,“ஆமாம் தம்பி, இயற்கையை ரசிக்கக் கற்றுக்கொண்டால் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். இந்த அழகை எந்தத் திரையும் தர முடியாது,. உனக்கு ஓய்வு நேரங்களை இயற்கையோடு செலவிட்டுப் பார். இன்னும் மகிழ்ச்சியடைவாய் " என்றார்.
அந்த நாளிலிருந்து விக்னேஷ் தினமும் சிறிது நேரமாவது வெளியில் சென்று மரங்கள், மலர்கள், பறவைகள், சூரிய உதயம், மாலைச் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை ரசிக்கத் தொடங்கினான்.
இதனால் அவன் மனமும் அமைதியாகி, படிப்பிலும் நல்ல முன்னேற்றம் காண ஆரம்பித்தான்.
நீதி:
இயற்கையை ரசித்து வாழ்வது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தரும். 🌿🌸
🗒️முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செட்டிநாடு குழுமம் ரூ.3 கோடி நன்கொடை. செட்டிநாடு குழுமம் தனது பல்துறை வணிகங்கள் மூலம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது.
🗒️34 கோடி சந்தாதாரர்களுக்கு 15-ந்தேதிக்குள் 8.25 சதவீத பி.எப். வட்டி வந்து சேரும்: மத்திய மந்திரி அறிவிப்பு.
🗒️சீனாவில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி - தொடரும் தீவிர மீட்புப் பணிகள்.
விளையாட்டுச் செய்திகள்
🏀திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வெற்றி பெற்றோம் என இந்தியாவிற்கு எதிரான 3வது T20 போட்டியின் வெற்றிக்குப் பிறகு இங்கிலாந்து கேப்டன் பெருமிதம்.
Today's Headlines
🗒️ 8.25% EPF Interest to Be Credited to 340 Million Subscribers by July 15: Union Minister. The Union Minister announced that the 8.25% Employees' Provident Fund (EPF) interest will be credited to the accounts of 340 million subscribers by July 15.
Sports News
🏀 England's captain expressed pride after the victory in the third T20 match against India, stating that they had executed their plans excellently and succeeded.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:445
குறள்:
பழமொழி :
Art is long and life is short
கல்வி கரையில் கற்பவர் நாள் சில.
இரண்டொழுக்க பண்புகள் :.
1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.
2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.
பொன்மொழி :
பொறுமை கசப்பானது; அதன் பலன் இனிமையானது.
Thought for the Day :
Dream big, work hard, stay humble.
பொது அறிவு :
1. நோபல் பரிசு எப்போதும் எந்த நாளில் வழங்கப்படுகிறது?
டிசம்பர் 10.
2. சர்வதே மனித உரிமைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
டிசம்பர் 10.
English words :
Generate – Produce, உருவாக்கு.
Illustrate – Explain, விளக்கிக் காட்டு.
புவியியலும் சுற்றுசூழலும் :
உலகின் மிகப் பெரிய நாடு – ரஷ்யா. இது 11 நேர மண்டலங்களைக் கொண்டுள்ளது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு – இந்தியா
NMMS :
MAT
வேறுப்பட்டதை கண்டுபிடி.
விடை: (2)
சௌரவ் சந்திதாஸ் கங்குலி (Sourav Chandidas Ganguly; ; பிறப்பு: சூலை 8, 1972) தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவரும் ஆவார். தற்போது இவர் வங்காளத் துடுப்பாட்ட அவையின் தலைவராக உள்ளார். சர்வதேச துடுப்பாட்ட அரங்கில் மிகச் சிறந்த அணித் தலைவராகவும் மட்டையாளராகவும் விளங்கினார்.வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர் எனவே இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (வலது புறத்தின் கடவுள்) என அழைக்கப்படுகிறார்.
நீதிக்கதை
"நல்ல வார்த்தையின் சக்தி"
ஒரு பரபரப்பான கடை வீதியில் ரவி என்ற இளைஞன் பழக்கடை வைத்திருந்தான். அவன் எப்போதும், "இன்று வியாபாரம் எப்படி நடக்குமோ?,சரியாக இருக்காது", "யாரும் வாங்க வருகிற மாதிரி தெரியலையே. இன்றைய பழம் எல்லாம் விற்காமல் அழுகி விடுமோ?" என்று எதிர்மறையாகப் பேசிக்கொண்டே இருப்பான்.
அதே வீதியில் மீனா என்ற பெண் பூக்கடை வைத்திருந்தாள். அவள் எப்போதும், "இன்று நல்ல நாள்!", "எல்லாம் நன்றாக நடக்கும்!", "வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் வருவார்கள்!" என்று நேர்மறையான வார்த்தைகளையே பேசுவாள்.
ஒருநாள் இருவரின் கடைக்கும் ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்கள் வந்தனர். ரவி முகம் சுளித்து, சற்று சலிப்புடன் , "என்ன வேண்டும்?" என்று கேட்டான். வாடிக்கையாளர்களும் விரைவாக வாங்கிவிட்டு சென்றனர்.
மீனா மட்டும் புன்னகையுடன், "வணக்கம்! உங்களுக்கு என்ன பூ வேண்டும்? இன்று உங்கள் நாள் இனிமையாக அமையட்டும்!" என்று அன்பாகப் பேசினாள். வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்து, மீண்டும் மீண்டும் அவள் கடைக்கே வரத் தொடங்கினர்.
சில நாட்களுக்குப் பிறகு ரவி, "என் கடைக்கு ஏன் வாடிக்கையாளர்கள் குறைகிறார்கள்?" என்று கேட்டான்.
மீனா புன்னகையுடன், "நாம் பேசும் நல்ல வார்த்தைகளும், நேர்மறை எண்ணங்களும் மக்களின் மனதில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உருவாக்கும். அதுவே வெற்றிக்கான முதல் படி," என்றாள்.
அன்று முதல் ரவியும் நேர்மறையாகப் பேசத் தொடங்கினான். சிறிது காலத்தில் அவன் கடையிலும் வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர்.
நீதி:
நேர்மறை கருத்துகளும் நல்ல வார்த்தைகளும் நம்பிக்கையை வளர்த்து, வெற்றிக்கான பாதையைத் திறக்கும்.
🗒️கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மீனாட்சி பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்ததுடன், கோழிக்கோடு–வயநாடு இரட்டை சுரங்கப்பாதை திட்ட பணியாளர்களை தேடும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
🗒️பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
*விளையாட்டுச் செய்திகள்*
🏀2-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி.
🏀விராட் கோலியுடன் கிரிக்கெட் விளையாட ஆசை என விம்பிள்டன் சாம்பியன் நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
Today's Headlines
🗒️ One person died in a sudden landslide in the Meenatchi area of Kerala's Wayanad district, and intensive search and rescue operations are underway for workers involved in the Kozhikode-Wayanad twin tunnel project.
🗒️ Prime Minister Narendra Modi has been conferred Indonesia's highest civilian award.
Sports News
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:444
குறள்:
பொருள்:
அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.
பழமொழி :
Appearance is deceitful.
உருவத்தை கண்டு ஏமாறாதே.
இரண்டொழுக்க பண்புகள் :.
1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.
2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.
பொன்மொழி :
நம்பிக்கையுடன் தொடங்கும் ஒவ்வொரு செயலும் வெற்றியை நோக்கிச் செல்லும்.
Thought for the Day :
Discipline is the bridge between goals and achievement.
பொது அறிவு :
1. தமிழ்நாடு மாநிலம் உருவாகும் போது எத்தனை மாவட்டங்கள் இருந்தன?
13 மாவட்டங்கள்
2. மூளையை தூண்டி நினைவுத்தின் அதிகரிக்க வைக்கும் உணவு எது?
வால்நட்.
English words :
Require – Need, தேவைப்படு.
Conclude – Finish, முடி
புவியியலும் சுற்றுசூழலும் :
NMMS :
MAT
பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி
(1) PLAY.
(2) WRITE.
(3) THINK.
(4) WALK.
விடை: (3) THINK
நீதிக்கதை
"ஆரோக்கியமே உண்மையான செல்வம்"
ஒரு ஊரில் கார்த்திக், பிரியா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் சஞ்ஜய், வந்தனா ஆகியோர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
சஞ்ஜய்க்கு தினமும் பள்ளி முடிந்து வரும்போது பர்கர், சிப்ஸ், குளிர்பானம் போன்ற ஜங்க் ஃபுட் சாப்பிடும் பழக்கம் இருந்தது. அம்மா வீட்டில் சத்தான உணவு செய்து வைத்தாலும், "எனக்கு இதுதான் பிடிக்கும்!" என்று கூறி ஜங்க் ஃபுட்டையே விரும்பி சாப்பிடுவான்.
சில நாட்களில் சஞ்ஜய்க்கு அடிக்கடி வயிற்றுவலி, சோர்வு, பல் வலி ஆகியவை ஏற்பட ஆரம்பித்தன. விளையாடவும் முடியவில்லை. மருத்துவரிடம் சென்றபோது, "அதிகமாக ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கவில்லை. இனிமேல் வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான உணவைச் சாப்பிட வேண்டும்," என்று அறிவுரை கூறினார்.
அந்த நாளிலிருந்து சஞ்ஜயும் குடும்பத்தினரும் சேர்ந்து தினமும் சத்தான உணவுகளை சாப்பிடத் தொடங்கினர். பழங்கள், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்தனர்.
சில வாரங்களிலேயே சஞ்ஜயின் உடல்நலம் நன்றாகி, மீண்டும் உற்சாகமாக பள்ளிக்கும் விளையாட்டிற்கும் செல்ல ஆரம்பித்தான்.
அப்போது சஞ்ஜய் தனது தங்கையிடம், "சுவைக்காக மட்டும் ஜங்க் ஃபுட் சாப்பிடக் கூடாது. ஆரோக்கியமான உணவுதான் நம்மை வலிமையாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்," என்று கூறினான்.
நீதி: ஜங்க் ஃபுட்டை அதிகமாகச் சாப்பிடாமல், சத்தான உணவை உண்பதே நல்ல ஆரோக்கியத்திற்கான வழி.
🗒️உணவு பாதுகாப்புச் சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்.
🏀விம்பிள்டனில் ஜானிக் சின்னர் அசத்தல்... தொடர்ந்து 5-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறி சாதனை.
Today's Headlines
🗒️ Chief Minister Joseph Vijay has written to the Prime Minister urging a reconsideration of the proposed amendments to the Food Safety Act.
🗒️ India's first human spaceflight mission has achieved another milestone as the Gaganyaan test was successful. Earlier, ISRO had conducted more than 8,000 tests for the mission.
🗒️ As a result of summer heatwaves and climate change, 30,000 acres of trees were scorched by severe wildfires in Southern European countries.
Sports News
🏀 At Wimbledon, Jannik Sinner continued his impressive run by reaching the quarterfinals for the fifth consecutive time, setting a remarkable record.
🚂 நெரால் டு மாதேரான் : மேகங்களுக்கு நடுவே செல்லும் பொம்மை ரயில் பயணம்! 🌧️🌲 Neral To Matheran Toy Train சுற்றிலும் அடர்ந்த பச்சைக்காடுகள்...