கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21-02-2025 - School Morning Prayer Activities

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-02-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்: 974

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு.

பொருள்:
மகளிர் தங்கள் மன உறுதியால் கற்பை காப்பது போல் ஒருவன் ஒழுக்கம் தவறாதிருப்பின் பெருமை உண்டு.


பழமொழி :
தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய். 

If humble thou shalt prosper.


இரண்டொழுக்க பண்புகள் :  

* என்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி பெருமை பேச மாட்டேன். 

* என்னிடம் இல்லாத பொருட்களை எண்ணி ஏக்கம் கொள்ள மாட்டேன்.


பொன்மொழி :

உழைப்பவனின் காலம் பொன் ஆகுகிறது.

உழைக்காதவனின் பொன் காலமாகுகிறது.

அறிஞர் அண்ணா.


பொது அறிவு :

1. லட்சத்தீவின் மலர் எது?

விடை : நீலக்குறிஞ்சி.      

2. தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

விடை: செங்காந்தள் மலர்


English words & meanings :

Factory.   -     தொழிற்சாலை

Farm.     -       பண்ணை


வேளாண்மையும் வாழ்வும் :

  பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.


பிப்ரவரி 21

பன்னாட்டுத் தாய்மொழி நாள்

பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day) பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ)  1999, பெப்ரவரி 21 அன்று பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்நாளை யுனெஸ்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2013 ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யுனெஸ்கோ பாரிசில் "தாய்மொழிகளும் நூல்களும் - எண்ணிம நூல்களும் பாடநூல்களும்" (“Mother tongues and books - including digital books and textbooks”) என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.


நீதிக்கதை

நரியை வென்ற கழுதை

ஒரு நாள் காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதை கவனித்த நரி ஒன்று கழுதையை அடித்து கொல்லும் நோக்கத்துடன் கழுதையின் மேல் பாய்ந்தது.

தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்துவிட்டது கழுதை.

ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது தந்திரம் செய்து தான் தப்பிக்க வேண்டும் என்று கழுதை தீர்மானித்தது.

ஓநாய் பாய்ந்து வரும் போது சற்று விலகிக் கொண்டு, "ஓநாயரே! உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம் மாத்திரம். நான் இன்று உனக்கு இரையாக போவது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது.நானும் உனக்கு இரையாக தயாராக தான் இருக்கிறேன். அதற்கு முன்  நான் சொல்ல வேண்டிய விஷயத்தை  தயவுசெய்து கேட்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டது கழுதை.

"நீ என்ன சொல்ல விரும்புகிறாயோ அதை சீக்கிரம் சொல்" என்று கேட்டது ஓநாய்

"ஓநாயரே! என் காலில் முள் ஒன்று குத்திவிட்டது.முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காலில் முள் உள்ள நிலையில் தாங்கள் என்னை சாப்பிட்டால் அந்த முள் உங்கள் தொண்டையில் குத்தி விடும். அது உங்களுக்கு கடுமையான வேதனையை தருவதுடன்,உங்கள் உயிரையே பலி வாங்கி விடும். முதலில் என் காலில் உள்ள முள்ளை எடுத்துவிட்டு பின்னர் என்னை நீங்கள் சாப்பிடுவதில் எந்த ஆட்சேபனையும் எனக்கு இல்லை" என்று கூறியது கழுதை.

ஓநாயும் ஒத்துக்கொண்டது கழுதை தன் பின்னங்கால்களை எடுத்து ஓநாயிடம் காண்பித்தது ஓநாயும் முள் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கழுதை பின்னங்கால்களால் ஓநாயை பலமாக உதைத்தது.

ஓநாய் உயிர் பிழைத்தால் போதும் என்று ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது.

நீதி: எந்தவொரு சூழ்நிலையிலும் சிந்தித்து செயல்பட்டால் இறுதி வெற்றி நமக்கே.


இன்றைய செய்திகள்

21.02.2025

* தமிழக பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.25-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

* தமிழகத்தில் 23-ம் தேதி வரை வழக்கத்தைவிட வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

* விண்வெளித்துறையி்ல தற்சார்பு நிலையை அடையும் வகையில், 10 டன் எடையில் உலகின் மிகப் பெரிய செங்குத்து உந்துசக்தி கலவை இயந்திரத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

* ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மார்ச் 12-ம் தேதி பூமியில் இருந்து புறப்படுகிறது. அந்த விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்துடன் டாக்  ஆனதும், அதே விண்கலனில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 8 மாதங்களுக்கு பிறகு பூமி திரும்புகின்றனர். அவர்கள் மார்ச் 19-ம் தேதி அங்கிருந்து பூமிக்கு புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

* புரோ ஹாக்கி லீக்: நேற்றைய ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெற்றி.

* தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி: ஒரே நாளில் தமிழகத்திற்கு 6 தங்கப்பதக்கங்கள்.


Today's Headlines

* Tamil Nadu's budget is set to be approved on February 25, with Chief Minister M.K. Stalin leading the cabinet meeting at the Secretariat in Chennai. This meeting is crucial as it will finalize the state's budget, outlining its financial plans and allocations for the upcoming year.

* In other news, Chennai's temperature is expected to rise by 4 degrees Celsius above normal until February 23, according to the Chennai Meteorological Centre.

* ISRO has successfully developed the world's largest vertical rocket stage, weighing 10 tons, marking a significant milestone in India's space program.

*  The Space X Dragon spacecraft is scheduled to launch on March 12 and will dock at the International Space Station. Astronauts Sunita Williams and Butch Wilmore will return to Earth on March 19 after an eight-month mission.

* In sports, India defeated Germany in the Pro Hockey League, while Tamil Nadu won six gold medals in the National Para Athletics Championship.


Covai women ICT_போதிமரம்


20-02-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-02-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்:973

மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்; கீழ்இருந்தும்
கீழ்அல்லார் கீழ்அல் லவர்.

பொருள்:
உயர்ந்த நிலையிலிருந்தாலும் உயர்வான தன்மையில்லாதவா் சிறியர்; கீழ் நிலையில் இருந்தாலும் இழிவான எண்ணமில்லாதவர் பெரியோர்.


பழமொழி :
தன்னை அறிந்தவன் தானே தலைவன். 

He who knows himself may know his maker.


இரண்டொழுக்க பண்புகள் :  

* என்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி பெருமை பேச மாட்டேன். 

* என்னிடம் இல்லாத பொருட்களை எண்ணி ஏக்கம் கொள்ள மாட்டேன்.


பொன்மொழி :

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.

- கவிஞர் கண்ணதாசன்


பொது அறிவு :

1. விழாக்காலங்களில் பலூன்களில் நிரப்பப்படும் வாயு எது?

விடை : ஹீலியம்.      

2. இந்தியாவின் தேசிய நீர் வாழ் விலங்கு எது?

விடை : கங்கை டால்பின்


English words & meanings :

College.  -    கல்லூரி

Court.      -     நீதிமன்றம்


வேளாண்மையும் வாழ்வும் :

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..

இதனை உணர்ந்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்


பிப்ரவரி 20

உலக நீதி நாள்

சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.



நீதிக்கதை

தென்றலும்‌ சூறாவளியும்

ஆற்றங்கரையிலே நின்ற அந்த மாமரம்‌ சலசலவென்று சிலிர்த்து ஆடிக்கொண்டிருந்தது. அதன்‌ கிளைகளிலே தங்க நிற மாம்பழங்கள்‌ அழகாகத்‌ தொங்கிக்‌ கொண்டிருந்தன. ஓர்‌ அணிற்‌ பிள்ளையும்‌ ஒரு கிளிப்பிள்ளையும்‌ அந்த மாமரத்தை நெருங்கின.

“அம்மா, மாமரத்‌ தாயே ! பசித்து வந்திருக்‌கிறோம்‌” என்றது கிளிப்பிள்ளை. “உங்களுக்காகத்தானே பழம்‌ வைத்திருக்‌கிறேன்‌. நன்றாகச்‌ சாப்பிடுங்கள்‌”? என்று கூறியது மாமரம்‌.

“மாவம்மா,இன்று, ஒரே ஆனந்தமாயிருப்பது போல்‌ தெரிகிறதே! என்ன காரணம்‌?” என்று விசாரித்தது அணிற்பிள்ளை.

“பிள்ளைகளே ! தென்றல்‌மாமா வந்திருக்‌கிறார்‌. அவர்‌ வந்திருப்பதே ஓர்‌ இன்பம்தானே!” என்று கூறியது மாமரம்‌.

அணிற்பிள்ளையும்‌ கிளிப்பிள்ளையும்‌ வயிறு நிறைய பழம்‌ சாப்பிட்டுவிட்‌.டுச்‌ சென்றுவிட்டன. தென்றல்‌ மாமாவுடன்‌ நேரம்‌ போவது தெரியாமல்‌ பேசிக்‌ கொண்டிருந்தது மாமரம்‌.

இரண்டு நாட்கழித்து,

“மாவம்மா! நேற்றெல்லாம்‌ *ஓ*வென்று அலறிக்‌ கொண்டிருந்தாயே ஏன்‌?” என்று கேட்டுக் கொண்டே மாமரத்திடம் வந்தது அணிற்பிள்ளை.

மாமரத்தைப் பார்த்து “இதென்ன அநியாயம்‌! மாமரத்‌ தாயே! உன்‌கிளைகளெல்லாம்‌ ஏன்‌ முறிந்து கிடக்கின்றன. ஐயோ ! பழமெல்லாம்‌ கீழே வீழுந்து அழுகிக்‌ கிடக்கின்றனவே, ஏன்‌?' என்று பதறிப்‌ போய்க்‌ கேட்டது கிளிப்பிள்ளை.

பிள்ளைகளே, நேற்று சூறாவளி  என்கிற முரடன்‌ வந்தான்‌. அவன்‌ செய்த அட்டூழியம்தான்‌ இது!” என்று கூறிக்‌ கண்ணீர்‌ விட்டது மாமரம்‌. மாமரத்தின்‌ துன்பத்தைக்‌ காணப்‌ பொறுக்காமல்‌  கிளிப்பிள்ளையும்‌

அணிற்பிள்ளையும்‌ கண்ணீர்‌ விட்டன. 

அவற்றிற்குப்‌ பழம்‌ கொடுக்க முடியாமல்‌ போய்‌விட்டதே என்று மாமரம்‌ வருந்தியது. பின்னர்

அவையிரண்டும்‌  தத்தம்‌ இருப்பிடம்‌ நோக்கிச்‌ சென்றன.

கருத்துரை:-- நல்லவர்கள்‌  வரவால்‌ இன்பம்‌ உண்டாகும்‌. தீயோர்கள்‌ வரவால்‌ துன்பமே உண்டாகும்‌.


இன்றைய செய்திகள்

20.02.2025

* தமிழக அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த ஏதுவாக, மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்துக்குள் விடுவிக்க வேண்டும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

* 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள்: தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

* “விண்வெளி உட்பட பல துறைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது” - மத்திய தொழில்நுட்ப இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பெருமிதம்.

* தூய்மையான எரிசக்தி, தொழில்துறையை பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர்ச்சியடையும்  என ஐ.நா. கருத்து தெரிவித்துள்ளது.

* துபாய் ஓபன் டென்னிஸ் தொடர்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் கஜகஸ்தான் வீராங்கனை எலினா  ரைபகினா.

* பிரிட்டிஷ் ராலி சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தின் 2025-ம் ஆண்டு சீசனில் எம்ஆர்எஃப் அணி இணைந்துள்ளது. மேலும் இந்த தொடருக்கு தேவையான அனைத்து டயர்களையும் விநியோகம் செய்யும் உரிமையையும் எம்ஆர்எஃப் பெற்றுள்ளது.


Today's Headlines

*  Tamil Nadu Chief Minister M.K. Stalin has written to Union Minister for Women and Child Development Smriti Irani, requesting her to release the central government's share of funds for various schemes within a specified timeframe.

*  Tamil Nadu Chief Minister M.K. Stalin laid the foundation stone for the Tidal Parks in Trichy and Madurai, which will provide employment opportunities for 12,000 people.

*  "India is making rapid progress in various fields, including space technology," said Union Minister of State for Technology Jitendra Singh.

*  The United Nations has stated that India will experience rapid growth using clean energy and industrialization.

* Dubai Open Tennis: Kazakhstani player Elena Rybakina advances to the next round.

*  MRF team joins British Rally Championship for the 2025 season and obtains the rights to supply all the necessary tires for the tournament.


Covai women ICT_போதிமரம்


19-02-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-02-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்:பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள்எண் :972

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்புஓவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

பொருள்:
அனைத்து மக்களுக்கும் பிறப்பு ஒத்திருந்தாலும், செய்கின்ற செயல் வேற்றுமையால் பெருமை சிறுமை என்று இயல்புகள் வேறுபடும்.


பழமொழி :
தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது. 

To cheat one that has come for protection is bad.


இரண்டொழுக்க பண்புகள் :  

* என்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி பெருமை பேச மாட்டேன். 

* என்னிடம் இல்லாத பொருட்களை எண்ணி ஏக்கம் கொள்ள மாட்டேன்.


பொன்மொழி :

ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு எச்சரிக்கைக்கு சமம்.

--திரு. வோயாஸ்-


பொது அறிவு :

1. உலகின் இரண்டாவது உயரமான சிகரம் எது?

விடை :காட்வின் ஆஸ்டின்

2. தமிழ்நாட்டின் முக்கிய இழை பயிர் எது?

விடை : பருத்தி

English words & meanings :

Church.  -   தேவாலயம்

Castle.      -     கோட்டை


வேளாண்மையும் வாழ்வும் :

அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்..


நீதிக்கதை

வெப்பமும்‌ குளிர்ச்சியும்‌

காலையில்‌ கதிரவன்‌ தோன்றினான்‌. தன்‌ ஒளியைப்‌ பரப்பி உலகம்‌ முழுவதும் உள்ள இருளை விலகச் செய்தான்‌. கடல்‌ நீர்ப்பரப்பின்‌ மீதும்‌ அவன்‌ கதிர்கள்‌ விரிந்தன. கடலை அழகுபடுத்த வேண்டும்‌ என்று கதிரவன்‌ தன்‌ ஒளியை மேன்மேலும்‌ அதன்‌ மீது பாய்ச்சினான்‌. வெப்பத்தைத்‌ தாங்க முடியாமல்‌ கடல்‌ முகம்‌ சுருங்கியது.

அதன்‌ அலைகள்‌ தளர்ச்சியடைந்து  சிறுத்தன. தான்‌ அன்போடு  கதிர்‌ பாய்ச்சிக்‌ கடலை அழகுபடுத்த

முயலும்போது, அது ஏன்‌ முகத்தைச்‌ சுருக்கிக்‌ கொள்கிறது? என்று கதிரவனுக்குப்‌ புரியவில்லை.

“கடலே, என்ன கோபம்‌?'” என்று கேட்டான்‌.கடல்‌ பதில்‌ பேசவில்லை. பதில்‌ சொல்லக்‌ கூட விருப்பமில்லாத அளவு தன்‌ மீது கடல்‌ கோபமாய்‌ இருக்கக்‌ காரணம்‌ என்ன? என்று சிந்தித்தான்‌ கதிரவன்‌. அப்போது  அந்தப்‌ பக்கமாக  காற்றரசன்‌ வந்தான்‌.

கதிரவன்‌ சிந்தனையைக்‌ கண்டு காரணம்‌ கேட்டான்‌.  கடலின்‌  போக்கைப்பற்றிக்‌ கதிரவன்‌ கூறினான்‌. அதைக்‌ கேட்டபின்‌   காற்றரசன்‌ சொன்ன செய்தி கதிரவனை மேலும்‌ துன்பப்படச்‌ செய்தது.

“நீ வரும்போதுதான்‌ கடல்‌ தன்‌ அலைகளைச்‌ சுருக்கிக்‌  கொள்கிறது. இரவில்‌ நிலவரசன்‌ வரும்‌போது எவ்வளவு  மகிழ்ச்சி . கொள்ளுகிறது தெரியுமா ? பொங்கிப்‌ பொங்கி அலைகளை உயரச்‌ செலுத்தி ஆனந்தம்‌ கொள்ளுகிறது.உன்னுடைய நட்பை அது விரும்பவில்லை. நிலவரசனைத்தான்‌ அது விரும்புகிறது?” என்று காற்றரசன்‌ கூறினான்‌.

மறுநாள்‌ நிலவரசன்‌ பகலிலேயே வெளியில்‌ வந்தான்‌.  கடல்‌ அலைகளைப்‌ பெரிதாக்கிக்‌ கொண்டது. கதிரவன்‌ நிலவரசனை  நேருக்கு நேரே பார்த்தான்‌. "நிலாத்தம்பி, இந்த கடல் உன்னைக்‌ கண்டு பொங்குவதும்‌ என்னைக்‌ கண்டு. பொங்காததும்‌ ஏன்‌ ?” என்று கதிரவன்‌ கேட்டான்‌.

“அண்ணா, என்‌ கதிர்கள்‌ குளிர்ச்சியாயிருப்பதால்‌   கடலுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன.

அதனால்‌ ஆனந்தமாகப்‌ பொங்குகிறது. உன்‌ கதிர்கள்‌    வெப்பமாக இருப்பதால்‌ சூடு தாங்காமல்‌ சுருங்குகிறது?” என்றான்‌ நிலவரசன்‌. காரணமறிந்த கதிரவன்‌ மேற்கொண்டு எதுவும்‌ பேசவில்லை.

கருத்துரை:-- இனிய சொற்களே மகிழ்ச்சியைத்‌ தரும்‌. கடுஞ்‌சொற்கள்‌ மகிழ்ச்சியைத்‌ தராது.


இன்றைய செய்திகள்

19.02.2025

* வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும், பூம்புகார் மாநில விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

​* போக்சோ வழக்​கு​களில் தண்டனை பெற்ற ஆசிரியர்​களின் சான்​றிதழ்கள் ரத்து செய்​யப்​படும். புதிய ஆசிரியர்கள் நியமனத்​துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாய​மாக்​கப்​படும் என்று தலைமைச் செயலர் முரு​கானந்தம் அறிவித்​துள்ளார்.

* புதிய தேர்தல் ஆணையராக 1989-ம் ஆண்டு பேட்ச் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஹரியானாவைச் சேர்ந்த விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

* கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி: ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 2-வது சுற்றுக்கு தகுதி.

* 3-வது ஒருநாள் போட்டி: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஜிம்பாப்வே.


Today's Headlines

* Tamil Nadu Chief Minister M.K. Stalin awarded the "Living Crafts Tradition Award" to 9 skilled craftsmen and the "Poompuhar State Award" to 9 skilled craftsmen.

* The certificates of teachers who were punished in the POCSO cases will be cancelled. Henceforth, police verification certificates will be made mandatory for new teacher appointments, announced Chief Secretary Muruganandam.

* Vivek Joshi, a 1989-batch Indian Administrative Service officer from Haryana, has been appointed as the new Election Commissioner, announced by Ministry of Law.Russia has expressed its readiness to hold talks with Ukrainian President Zelensky if necessary.

* Qatar Open Tennis Tournament: Spanish player Alcaraz qualifies for the 2nd round.

* 3rd One-Day Match: Zimbabwe wins the series by defeating Ireland.


Covai women ICT_போதிமரம்


18-02-2025 - School Morning Prayer Activities

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-02-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்:971

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை; இனிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்.

பொருள்:
ஊக்கம் மிகுதியே ஒருவனுக்கு பெருமையாகும்: ஊக்கமின்றி உயிர் வாழ எண்ணுதல் சிறுமையேயாகும்.


பழமொழி :
சௌரியம் பேசேல். 

Boast not of your strength.



இரண்டொழுக்க பண்புகள் :  

* என்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி பெருமை பேச மாட்டேன். 

* என்னிடம் இல்லாத பொருட்களை எண்ணி ஏக்கம் கொள்ள மாட்டேன்.



பொன்மொழி :

உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி. உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.

--அன்னை தெரசா



பொது அறிவு :

1. உங்கள் உள்ளங்கையில் வைத்தாலே உருகும் உலோகம் எது?

விடை: காலியம்

2. பூமியின் மையத்தில் ஒரு பொருளின் எடை எவ்வளவு?

விடை: பூஜ்ஜியம்



English words & meanings :

Bookstore. -    புத்தகக் கடை

Bus stop.    -   பேருந்து நிறுத்தம்



பிப்ரவரி 18

மார்ட்டின் லூதர்  அவர்களின் நினைவுநாள்

மார்ட்டின் லூதர் (Martin Luther, நவம்பர் 10, 1483–பெப்ரவரி 18, 1546) ஒரு கிறித்தவத் துறவியும் செருமனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது.



மைக்கலாஞ்சலோ அவர்களின் நினைவுநாள்


மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.

மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.



நீதிக்கதை

கறையும்‌ இருளும்‌

இரவு நேரம்‌. நாரையொன்று காற்றில்‌ பறந்து சென்று கொண்டிருந்தது. எங்கும்‌ பட்டப்‌ பகல்போல்‌ ஒளி பரவியிருந்தது.  அந்த ஒளியில்‌ வெப்பம் இல்லை.குளிர்ச்சி நிறைந்த  அந்த ஒளி எங்கிருந்து வருகிறது? என்று தேடித்தான்‌ அந்த நாரை பறந்து கொண்டிருந்தது. 

உலகமமெங்கும் அந்த இன்ப ஒளி பரவியிருந்தது. நாரை  சென்ற இடமெல்லாம்‌  அந்த ஒளி நிறைந்‌திருந்தது, நாரை, சிந்தனையோடு வானை நோக்கி நிமிர்ந்தது.

உயரத்தில்‌ ஒளித்தகடு போல்‌ வட்டநிலா அழகுடன்‌ விளங்கியது.  நாரை  அதன் அழகில்‌ மயங்கி நிலாவையே பார்த்துக்‌ கொண்டு நின்றது.

நிலா  அழகாகத்தான்‌ இருந்தது.  உலகம் முழுவதும்‌  ஒளி பரப்பும்‌ பேரொளியைப்‌ பெற்றுத்தான்‌ விளங்கியது. ஆனால்‌ அந்த ஒளிநிறைந்த நிலாவின்‌ இடையிலே ஓர்‌ இருட்டுப்‌ பகுதியும்‌ இருந்தது. அது நிலவின்‌ இடையில்‌ ஒரு கறை போல இருந்தது. இவ்வளவு  அழகான நிலவின்‌ இடையில்‌ இப்படி ஒரு கறையிருக்கிறதே என்று வருந்தியது நாரை.

தன்னிடம்‌ உள்ள கறையை நீக்கிக்‌கொள்ளாமல்‌ உலகைச்‌ சூழ்ந்துள்ள இருளை   ஓட்டப்‌ புறப்பட்டு விட்டதே இந்த நிலவு! இதன்‌ கருத்து என்ன என்று அறிய நாரை ஆசைப்‌பட்டது.

அது நிலாவை நோக்கிப்‌ பறந்தது.எவ்வளவு உயரம்‌ பறந்தும்‌ அதனால்‌ நிலாவை அடைய முடியவில்லை . போகப்‌ போக மேலும்‌ மேலும்‌  தொலைவில்தான்‌ இருந்து கொண்டிருந்தது.

நிலாவை  நெருங்க  முடியாது  என்று  கண்டு கொண்ட நாரை, அருகில்‌ காற்றில்‌ தவழ்ந்து சென்று கொண்டிருந்த ஒரு மேகத்தைப்‌ பார்த்து “மேகமே, நிலா  தன்னிடமுள்ள கறையைப்‌ போக்கிக்‌ கொள்ளாமல்‌, உலகில்‌உள்ள இருளைப்‌ போக்குகிறதே இதன்‌ கருத்து என்ன ? என்று கேட்டது.

“நாரையே, உயர்ந்த பெரியோர்கள்‌  தங்கள்‌ துன்பத்தை விட பிறருடைய துன்பத்தை  நீக்குவதே முதற்கடமை என்று நினைப்பார்கள்‌. அது போன்றதுதான்‌ நிலாவின்‌ இயல்பு!” என்றது மேகம்.

நிலாவின்‌ உயர்ந்த தன்மையை வியந்து பாராட்டிக்‌ கொண்டே இறங்கி வந்தது நாரை.

கருத்துரை :-- தன்‌  துன்பத்தைக்‌ காட்டிலும்‌  பிறர்‌ துன்பத்தைப்‌ பெரிதாக நினைத்து அதைப்‌ போக்க உதவி செய்வதே நல்லோர்‌ இயல்பாகும்‌.


இன்றைய செய்திகள்

18.02.2025

* கோடைகால மின் தேவையை சமாளிக்க, 8,525 மெகாவாட் மின்சாரத்தை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய மின்வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

* சென்னையில்பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் ரூ.5,000 அபராதம்: இடிபாட்டு கழிவுகள் மேலாண்​மை வழிகாட்டு​தல் வெளி​யீடு.

* தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவானது.

* உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

* 6 வது புரோ ஆக்கி லீக் தொடர்: ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெற்றி.

* ஐ.எஸ்.எல். கால்பந்து: முகமதன் எஸ்.சி. அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் வெற்றி.


Today's Headlines

* * To meet the summer electricity demand, the Electricity Regulatory Commission has granted permission to the Power Department to purchase 8,525 megawatts of electricity on a short-term contract basis.

* * In Chennai, a fine of Rs. 5,000 will be imposed for dumping construction waste in public places: Guidelines for Construction Waste Management released.

* * An earthquake occurred in Delhi and its surrounding areas yesterday, measuring 4.0 on the Richter scale.

* * Ukrainian President Vladinir Zelensky stated that they will not recognize agreements made without Ukraine's participation.

* In the 6th Pro Archery League, India won by defeating Spain.

* In the ISL football match, East Bengal won by defeating Mohammedan SC.


Covai women ICT_போதிமரம்


17-02-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-02-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை.


குறள் 426:


எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவ தறிவு.


விளக்கம்:


உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.



பழமொழி : 


Necessity knows no low. All is fair in love and war.


ஆபத்துக்கு பாவம் இல்லை.



பொன்மொழி:


  I am the captain of my soul. I am the master of my fate.


 என் ஆன்மாவுக்கு நானே தலைவன். என் தலைவிதியையும் நானே எழுதுகிறேன்.



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 பொருளின் கட்டுமான அலகு - அணு

வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு

கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி

ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்

பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்

நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Deliver - வழங்குதல்

Demand - தேவை

Demolish - இடித்தல்

Depart - புறப்படுதல்

Descend - இறங்குதல்

Desert - பாலைவனம்


ஆரோக்கியம்


தக்காளி, கீரை சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகுமா?


தக்காளி, கீரை வகைகளைச் சாப்பிடுவதன்மூலம் ஒருவருக்குச் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாது. இது தேவையற்ற பயம். ஆனால், ஏற்கெனவே சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நலம். காரணம், இந்த இரண்டிலும் சிறுநீரகக் கல்லை உருவாக்கக்கூடிய ஆக்சலேட்டுகள் அதிகம்.



இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 17


1867 – சூயசுக் கால்வாயூடாக முதலாவது கப்பல் சென்றது.


1965 – அப்பல்லோ 11 மூலம் நிலாவிற்கு மனிதரை அனுப்புவதற்கு முன்னோட்டமாக நிலாவில் தரையிறங்குவதற்கான இடத்தைப் படம் எடுப்பதற்காக ரேஞ்சர் 8 விண்கலம் ஏவப்பட்டது.


1996 – பிலடெல்பியாவில் நடைபெற்ற சதுரங்க ஆட்டத்தில் காரி காஸ்பரொவ் ஐபிஎம்மின் டீப் புளூ மீத்திறன் கணினியை வென்றார்.


2000 – விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.



சிறப்பு நாட்கள்


விடுதலை நாள் (கொசோவோ, 2008)

புரட்சி நாள் (லிபியா)



நீதிக்கதை


தேனும் கசந்தது 


உணவைத் தேடி ஒரு கரடி காட்டில் அலைந்து கொண்டிருந்தது. அந்த பரிதாபமான கரடி நல்ல உணவை சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. அதற்கு பிடித்தமான வேர்கள், கொத்துக்கொத்தான பழங்கள், தேன் முதலியவற்றை நினைத்தாலே அதற்கு நாக்கில் நீர் ஊறிற்று. அது ஓர் அடர்த்தியான காடு; பல மயில்கள் பரவி இருந்தது. தன் பசியை போக்க கூடிய உணவு எப்போது கிடைக்கும் என்று எண்ணியவாறு கரடி காடு முழுவதும் அலைந்து திரிந்தது.


சற்றுத் தொலைவில் மரக்கிளையில் இருந்து தொங்கிக் கொண்டிருந்த ஏதோ ஒன்று திடீரென்று அதன் கண்களுக்கு தென்பட்டது. அந்த மரத்தை நோக்கி கரடி சென்றது. அருகில் நெருங்கியது; தேன்கூடு ஒன்று கிளையில் இருந்து தொங்குவதை கண்டதும் அதற்கு வியப்பு தாங்கவில்லை. நம்ப முடியாமல் தன் கண்களை தேய்த்துக் கொண்டது.


மரக்கிளையிலிருந்து தொங்கிக் கொண்டிருப்பது தேன்கூடா? ஆம், தேன் கூடுதான். தன் அதிர்ஷ்டத்தை கரடியால் நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியால் துள்ளி குதித்தது. தேன்கூட்டுக்குள் தேனீக்கள் இருக்கின்றனவா என்று உற்று நோக்கியது. அங்கு தேனீக்கள் இல்லை மிக உற்சாகத்தோடு சுவையான தேனைத் தேன் கூட்டில் இருந்து எடுக்க தன் காலை தூக்கியது.


அந்த நேரத்தில் சத்தமாக ரீங்காரமிட்டவாறு ஒரு பெரிய தேனீ கூட்டம் தன்னை நோக்கி வருவதை கண்டு கரடி துணுக்குற்றது. அந்தக் கூட்டை சேர்ந்த தேனீக்கள் அவை. தேனீக்கள் நாள் முழுவதும் கடுமையாக உழைத்து சேகரித்து தேனை கூட்டில் வைப்பதற்காக வந்து கொண்டிருந்தன. கூட்டை  நெருங்கும் போது அங்கிருந்த கரடியை பார்த்தன. அவை சேகரித்த விலைமதிப்பற்ற தேனை கரடி அபகரிக்க வருவதைக் கண்ட தேனீக்கள் கரடியை சூழ்ந்து கொண்டு கோபத்துடன் அதை கொட்ட ஆரம்பித்தன.



தேனீக்கள் கொட்டியதால் கரடிக்கு மிகவும் வலித்தது. வலி தாங்காத கரடிக்கு அதிகமாக ஆத்திரம்  ஏற்பட்டது. “எனக்கு கிடைக்காத தேன், தேனீக்களுக்கும் கிடைக்கக்கூடாது” என்று கரடி எண்ணியது. மேலே எழும்பி குதித்து கூட்டை கைப்பற்ற எண்ணியது. கைப்பற்றியவுடன் கூட்டை கீழே போட்டு உடைத்து அதை அழிக்க வேண்டும் என்று வெறி அதற்கு ஏற்பட்டது.


ஆனால், புத்தியுள்ள தேனீக்களுக்கு கரடி என்ன செய்ய முயல்கிறது என்பது தெரிந்தது. ரீங்காரம் செய்தவாரே அவை கரடியை சுற்றி சுற்றி வந்து வலிமையெல்லாம் ஒன்று சேர்த்து கொடுக்குகளால் கொட்டின. மறுமுறையும் தேனீக்கள் தாக்கியவுடன் கரடி திகைத்துப் போனது. தேன் கூட்டை பிடிக்கும் எண்ணத்தை கைவிட்டது. அவை இன்னமும் அதிகமாக தாக்குவதற்குள் அங்கிருந்து தப்பித்துக் கொள்ள தீர்மானித்தது.


கரடி மிக வேகமாக ஓடியது. ஆனால், அதன் உடலில் பல இடங்களிலும் கொட்டியவாறு தேனீக்கள் கரடியை பின் தொடர்ந்தன. தங்களுடைய தேனை பேராசை பிடித்த அந்த கரடி மறுபடியும் திருடாமல் இருக்க தேனீக்கள் அதற்கு ஒரு பாடம் புகட்ட விரும்பின.


அந்த அளவு தேனை சேகரிக்க தேனீக்கள் அரும்பாடு பட்டுள்ளன. தங்களுடைய கடுமையான உழைப்பின் பலனை கரடி அனுபவிக்க எண்ணியதை தேனீக்கள் விரும்பவில்லை. தேனீக்களுக்கு கரடி மீது கடும் கோபம் ஏற்பட்டது. அதற்கு தண்டனை அளிக்க தீர்மானித்தன.



தேனீக்களிடம் பயந்து போன அந்த கரடிக்கு எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை. காட்டுக்கு நடுவில் வேகமாக ஓடி ஆற்றுக்கு அருகில் கரடி வந்து சேர்ந்தது. ஓடி வந்த கரடி குளிர்ந்த நீருக்குள் குதித்தது. தேனீக்கள் கொட்டியதால் ஏற்பட்ட எரிச்சலை குளிர்ந்த நீர் தணித்தது. நீருக்குள் கரடி நீண்ட நேரம் தன்னை முழுவதுமாக அமிழ்த்திக் கொண்டது. பொறுமை இழந்து தேனீகள் தம் கூட்டை நோக்கி திரும்பும் வரையில் தண்ணீருக்கடியிலேயே கரடி காத்திருந்தது.


உடலில் பட்ட காயத்தால் வருந்திய கரடி தண்ணீரை விட்டு வெளியேறி தன் இடத்திற்கு சென்றது. இனிமேல் தேன் கூட்டு பக்கம் போவதில்லை என்று தீர்மானித்தது. இனிப்பான தேனை நினைத்தாலே கசப்பான இந்த அனுபவம் தான் அதன் நினைவுக்கு வரும்.


 நீதி : ஆசை, வெறியினால் அழிவு உறுதி.




இன்றைய முக்கிய செய்திகள் 


17-02-2025


2030ம் ஆண்டுக்குள் நாட்டின் ஜவுளி ஏற்றுமதி ரூ. 9 லட்சம் கோடி இலக்கை எட்டும்; பிரதமர் மோடி நம்பிக்கை...


மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவுபடுத்தப்படும்; துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...


அமெரிக்கா இந்தியாவிற்கு எப் 35 ரக ஜெட் விமானங்களை வழங்கும்: டொனால்டு டிரம்ப்...


பாஸ்டேக் கொண்டுவந்துள்ள புதிய விதிகள்: 17ஆம் தேதி முதல் அமல்...


ஒன்றிய அரசின் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வு குறியீடு அறிக்கை வெளியீடு: செயல்பாடுகள் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம்...


சாகச சுற்றுலாவை ஊக்கப்படுத்த பூண்டி, கொல்லிமலை, ஜவ்வாது மலை உள்ளிட்ட 7 இடங்கள் தேர்வு: சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல்...


நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா..? ஒன்றிய கல்வி அமைச்சருக்கு துணை முதல்வர் உதயநிதி கடும் கண்டனம்...


அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களால் ஆண்டுதோறும் ₹69,000 கோடி வருவாய் கிடைப்பதாக அந்நாட்டு அரசு தகவல்...


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது..? ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி...


உத்திர பிரதேசம் கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு...


அரசியல் பார்க்காமல் உரிய நிதியை ஒதுக்க வேண்டும். இன்னொரு மொழிப்போரைத் தூண்ட வேண்டாம்: மத்திய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை...



Today's Headlines:

17-02-2025


The country's textile exports will reach Rs 9 lakh crore by 2030; Prime Minister Modi is confident...


Women's Entitlement Scheme to be expanded; Deputy Chief Minister Udhayanidhi Stalin...


US to provide F-35 jets to India: Donald Trump...


New rules introduced by FASTag: Effective from the 17th...


Union Government's Panchayats' Power Sharing Index Report Released: Tamil Nadu tops the performance index...


7 places including Poondi, Kolli Hills, Jawvadhu Hills selected to promote adventure tourism: Tourism officials inform...


If you ask for financial rights, are you threatening Tamil Nadu to accept Hindi? Deputy Chief Minister Udhayanidhi strongly condemns the Union Education Minister...


Indian students studying in the US generate an annual revenue of ₹69,000 crore, according to the US government...


Which section of the Indian Constitution makes the trilingual policy mandatory? Chief Minister M.K. Stalin's question to the Union Minister...


18 people killed in stampede at Delhi railway station as people headed to Kumbh Mela in Uttar Pradesh...


Appropriate funds should be allocated without looking at politics. Don't instigate another language war: Minister Anbil Mahesh warns the central government...


- Kalvi Anjal


14-02-2025 - School Morning Prayer Activities

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-02-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை.


குறள் 424:


எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு.


விளக்கம்:


நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.



பழமொழி : 


Look before you leap


ஆழமறியாமல் காலை விடாதே.


பொன்மொழி:


Great works are performed not by strength, but perseverance.  


மிகப் பெரிய வேலைகள் விடாமுயற்சியால்தான் சாதிக்கப்படுகின்றன. அவரது வலிமையால் அல்ல.


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 திட்ட அலகு என்பது - SI முறை

அடி, பவுண்டு, விநாடி என்பது - FPS முறை

நிலவு இல்லாத கோள் - வெள்ளி

கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு

பில்லியன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு - அண்டம்

உர்சாமேஜர் என்பது - ஒரு விண்மீன் குழு


ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Daily - தினமும்

Decrease - குறை 

Dark - இருட்டு 

Deaf - காது கேட்காமை 

Debt - கடன் 


ஆரோக்கியம்


செயற்கையான சுவையூட்டிகளில் சேர்க்கப்படும் சர்க்கரை, காஃபீன் ஆபத்தானதா?


செயற்கையான சர்க்கரை, காஃபீன் போன்றவற்றைச் சத்துணவுகளில் சேர்ப்பது பெரும் ஆபத்தாக முடியும். இவை உடல் செயல்பாடுகளை, பல்வேறு வகைகளில் பாதிக்கின்றன. குறிப்பாகச் செயற்கை சர்க்கரையைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பயன்படுத்தும்போது புற்றுநோய் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதீதச் சர்க்கரை உடல்பருமன், நீரிழிவு நோய் போன்றவற்றையும், காஃபீன் பக்கவாதம், வலிப்பு சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.


இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 14


1946 – இங்கிலாந்து வங்கி தேசியமயமாக்கப்பட்டது.


1949 – இசுரேலிய நாடாளுமன்றம் முதற்தடவையாகக் கூடியது.


1961 – 103வது தனிமம் இலாரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.


1990 – வொயேஜர் 1 விண்கலம் பூமியின் படம் ஒன்றை எடுத்தது. இப்படம் பின்னர் வெளிர் நீலப் புள்ளி எனப் பெயர்பெற்றது.


2000 – நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.


2005 – கல்லூரி மாணவர்கள் சிலரால் யூடியூப் முதன் முதலில் வெளியிடப்பட்டது.



பிறந்த நாள் 

1483 – பாபர், முகலாயப் பேரரசர் (இ. 1530)


நினைவு நாள் 

269 – புனித வேலண்டைன், ரோம கத்தோலிக்க ஆயர், புனிதர் (பி. 176)


1995 – யு நூ, பர்மாவின் 1வது பிரதமர் (பி. 1907)


சிறப்பு நாட்கள்

வேலன்டைன் நாள்



நீதிக்கதை



ஆணவத்தின் முடிவு அவமானம் 


ஒரு காலத்தில் வடக்கிலிருந்து வீசும் வாடைக் காற்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த வருடத்துக் குளிர் காலம் நீண்டதாகவும் அதிக குளிருடனும் இருந்ததால் வாடைக்காற்று மிக கர்வம் அடைந்தது. ‘உலகம் முழுவதையும் என்னால் கடும் குளிரில் உறைய வைக்க முடிந்தது. பூமியிலேயே மிகவும் வலிமை வாய்ந்த சக்தியாக நான் விளங்குகிறேன். என்னை விட வலிமையானவர் யாரும் இல்லை, என்று காற்று, அதிகமாக பெருமைப்பட்டுக் கொண்டது.


அதிக நேரமாக இதனுடைய பேச்சை கேட்ட பிறகு சூரியனுக்கு அலுத்துவிட்டது. மேகங்களுக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்த சூரியன், வாடைக்காற்றை கூப்பிட்டது. “வலிமையும் பலமும் பொருந்திய இயற்கை சக்தியான நீ இவ்வாறு பெருமைப்பட்டுக் கொள்வது நல்லதன்று. நம் ஒவ்வொருவருக்கும் செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலை உண்டு,” என்று சூரியன் கூறியது.


ஆனால், வாடைக்காற்று மிக மிக அதிகமாக தன் வலிமையை நினைத்து கர்வப்பட்டு கொண்டிருந்ததால் சூரியன் கூறியது எதையும் கேட்பதாக அது இல்லை.


“என்னளவு பலம் உனக்கு இல்லாததால், நீ இவ்வாறு என்னிடம் சொல்கிறாய். இந்த பூமியில் எதை வேண்டுமானாலும் சாதிக்க என்னால் முடியும்,” என்று மிக அலட்சியமாக பதில் கூறியது வாடைக்காற்று.


இதை கேட்டதும் சூரியனுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது


” உனக்கு ரொம்ப வலிமை இருப்பதாகவும் இந்த பூமியில் உன்னால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும் நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், உன்னால் சிலவற்றை தான் செய்ய முடியும்,” என்று சூரியன் சொன்னது.


இதை கேட்டு சிரித்த காற்று, “என்னால் செய்ய முடியாதது என்ற ஒரு விஷயத்தை நீ கூறு, பார்க்கலாம்,” என்று சவால்விட்டது.


சூரியன் கீழே குனிந்து பார்த்தது. பூமியில் ஒரு மனிதன் சாலையில் போய்க்கொண்டிருந்தான். மிகவும் குளிராக இருந்ததால் அவன் தன்  மேலங்கியை கழட்டி தன்னை சுற்றி இறுக்கி போர்திக் கொண்டான்.



சூரியனுக்கு ஓர் எண்ணம் உதித்தது, வாடைக்காற்றிடம் சொல்லிற்று, “கீழே சாலையில் நடந்து செல்லும் அந்த மனிதனைப் பார். அங்கு நீ மிகவும்  குளிர்ச்சியாக செய்திருப்பதால் அவன் தன்னுடைய மேலங்கியை இழுத்துப் போர்த்திக் கொண்டிருக்கிறான். உன்னுடைய வலிமையை நீ உபயோகி; மேலங்கியை அவன் எடுத்து விட்டால் நீ தான் மிகவும் வலிமையானவன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்றது.


இது மிகவும் எளிமையான பணி என்று வாடைக்காற்று எண்ணியதால் சவாலை ஏற்றுக் கொண்டது. காற்று வேகமாக வீசிற்று. சாலையில் அந்த மனிதன் இருந்த இடத்தில் இன்னும் அதிகவேகமாக வீசிற்று. மேலங்கியை அவன் கழற்றவில்லை.


ஆனால், காற்று வேகமாக, வலுவாக வீச, வீச, குளிர் தாங்காமல் அந்த மனிதன் தன் மேலங்கியை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டான். வாடைக் காற்றால் சவாலில் வெற்றி பெற முடியவில்லை. சூரியனை முயற்சி செய்யுமாறு காற்று கேட்டுக் கொண்டது.


சூரியன் மிகவும் பிரகாசமாக வெளிவந்தது, திடீரென்று வெப்பமாக இருப்பதை உணர்ந்த அந்த மனிதன், “என்ன வேடிக்கை! சற்று முன் கடுங்குளிராக இருந்தது; இப்போது வெப்பமாக இருக்கிறதே,” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். சூரியன் மேலும் வெப்பத்தை அதிகரித்தது. அவன், மேலும் வெப்பம் பரவுவதை உணர்ந்தான்.


சகிக்க முடியாத வெப்பத்தால் தன் மேலங்கியை கழற்றினான்; தலையை மூடிக் கொண்டான். இன்னமும் வெப்பம் அதிகரிக்கவே, தன்னுடைய மேலங்கியை எடுத்துவிட்டு அங்கிருந்த குளத்திற்குள் குதித்து விட்டான்.


இவற்றையெல்லாம் பார்த்த காற்று  அவமானமடைந்தது; தன் தோல்வியை ஒப்புக் கொண்டது. அதன் பிறகு  வாடைக்காற்று கர்வத்தை விட்டொழித்தது; தன்னுடைய கடமையை தவறாமல் செய்து வந்தது.


 நீதி : தற்பெருமை அவமானத்தை ஏற்படுத்தும்.




இன்றைய முக்கிய செய்திகள் 


14-02-2025

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பு...


நட்பு நாடுகள்தான் அதிக வரி விதிக்கின்றன: டிரம்ப் ஆதங்கம்...


பா.ஜ.க. ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடையாது - நிர்மலா சீதாராமன்...


திபெத்திய புத்தமத தலைவரான தலாய் லாமாவிற்கு இசட் பிரிவு பாதுகாப்பு - மத்திய அரசு...


அரசுத் துறையை கலைக்க வேண்டும் - எலான் மஸ்க் கருத்தால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி...


ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்க கூடாது - மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம்...




Today's Headlines:

14-02-2025


PM Modi meets US President Donald Trump...


Allies impose high taxes: Trump Anxiety... 


BJP Opposition's allegation that Center is neglecting non-ruled states has no basis - Nirmala Sitharaman...


Z Wing Protection for Tibetan Buddhist Leader Dalai Lama - Central Govt... 


Americans are shocked by Elon Musk's idea to dissolve the government department... 


No driving without driving license - Motor Vehicle Accident Compensation Tribunal...


- Kalvi Anjal


13-02-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-02-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: மானம்

குறள் எண்:968

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து?

பொருள்:
உயர் நலங்கெட்டு மானமிழந்த நிலையில், உடலை வளர்த்தல் உயிருக்கு மருந்தாகுமா?


பழமொழி :


Health is happiness.

ஆரோக்கியமே ஆனந்தம்.


இரண்டொழுக்க பண்புகள் :  

* ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு  தனித்திறமை இருக்கும். யாருடைய திறமையையும் குறைவாக எண்ணமாட்டேன். ‌

*தேர்வுகள் மூலம் எனது கற்றலை மதிப்பிட முடியும். எனவே தைரியமாக தேர்வுகளை எழுதுவேன்.


பொன் மொழி:

நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ? அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு.


பொது அறிவு :

1. எந்த நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது?

விடை: இங்கிலாந்து.    

2. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ், தகவலை பெறுவதற்கான கால அளவு_____________

விடை: 30 நாட்கள்


English words & meanings :

Tunnel     -       சுரங்கப்பாதை

Volcano     -     எரிமலை


வேளாண்மையும் வாழ்வும் :

தற்போதைய, சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தண்ணீரைப் பயன்படுத்த நீர் மேலாளர்கள் அதிக நிலையான தீர்வுகளைத் தேடுகின்றனர்.


பிப்ரவரி 13

உலக வானொலி நாள்

உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது.[1] வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.


கவிக்குயில் சரோஜினி அவர்களின் பிறந்தநாள்

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் பாரத்திய கோகிலா [1] (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.


நீதிக்கதை

நரியின் வஞ்சகம்‌

ஒரு காட்டில்‌ எருது ஒன்று இருத்தது. அந்தக்‌ காட்டின்‌ ஒரு பகுதியில்‌ பச்சைப்பசேல்‌ என்று புல்‌ மண்டிக்‌ கிடந்தது. தான்‌ இருந்த இடத்தில்‌ கிடைத்த

புல்லே எருதுக்கு போதுமானதாக இருக்கும்‌.

எனினும்‌, தூரத்துப்‌ புல்லே கண்ணுக்கு அழகாக இருந்ததால்‌, புல்‌ மண்டிக்‌ கிடந்த பகுதியை நோக்கி ஒரு நாள் புறப்பட்டது. அது  போகும்போது, மரத்தில்‌ இருந்த பச்சைக்‌ கிளி அதைக்‌ கூப்பிட்டது. “*எருதண்ணா எங்கேபோகிறீர்கள்‌?” * என்று கேட்டது பச்சைக்கிளி. "எதிரில்‌ உள்ள புல்வெளிக்குப்‌ புதுப்‌ புல்‌ தின்னப்‌ போகிறேன்‌”? என்றது.

எருது.

“அண்ணா, வேண்டாம்‌; அங்கே புலியிருக்‌கிறது!”” என்று எச்சரித்தது பச்சைக்கிளி.

அப்போது, அங்கே  நரி ஒன்று வந்து சேர்ந்தது. அது பச்சைக்கிளியைப்‌ பார்த்து, “ஒருவர்‌ ஒரு வேலையாகப்‌ போகும்போது எங்கே போகிறீர்கள்‌? என்று கேட்பதே  தவறு; மேலும்‌ எருதண்ணா ஆசையாகப்‌ புதுப்புல்‌  தின்னப்‌ போவதைத்‌  தடுப்பது சரியில்லை. அங்கே புலியிருக்கிறது என்று சொல்லி அவரை பயமுறுத்துவது மிகமிகத்‌ தவறு"என்றது.

மேலும், நரி, "புல்வெளியிலே புலியிருப்பதில்லை. புலி பசித்தாலும்‌ புல்லைத்‌ தின்னாது என்று நீ கேள்விப்பட்டது இல்லையா?அப்படியே புலியிருந்தாலும்‌ எருதண்ணாவை  நீ என்னவென்று நினைத்துக்‌ கொண்டாய்‌?” எருதண்ணாவின்‌ கொம்பு அதன்‌ குடலைக்‌ கிழித்து விடாதா?,"என்று கேட்டது.

நரியின்‌ பேச்சைக்‌ கேட்ட எருதுக்குக்‌ கிளியின்‌ மேலே கோபம்‌ கோபமாக வந்தது. தன்‌ வீரத்தைப்‌ பாராட்டிய நரியோடு புல்வெளியை நோக்கிச்‌ சென்றது. அது பேசிக்கொண்டே இன்பமாக மேய்ந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்து நரி தழுவியது.

புல்வெளியின் ஒரு புறத்தில்‌ மறைந்திருந்த கிழட்டுப்‌ புலி எருதின்‌  மேல்‌   பாய்ந்தது.  பச்சைக்கிளியின்‌ எச்சரிக்கையை

பொருட்படுத்தாமல்‌

நரியின்‌   நயவஞ்சகத்திற்கு ஆளானதை எண்ணி எருது வருந்தியது.

கருத்துரை:--  வஞ்சகமில்லாதவர்கள்‌ கூறும் கடுஞ்‌சொல்லும்‌  நன்மையைத்‌தரும்‌.  வஞ்சகரின்‌ இன்சொல்லோ துன்பத்தையே தரும்‌.


இன்றைய செய்திகள்

13.02.2025

* தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதியுதவி கோரி ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்விடம் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை மனு அளித்தார்.

* சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் கூடுதல் இருக்கை....ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை.

* பாண்டிச்சேரியில் Heritage Car Rally 2025 – சுதந்திரத்திற்கு முன்பிருந்த பண்டைய கார்கள் முதல் ‘90களின் இளமை வரை!அணிவகுத்த வின்டேஜ் கார்கள்! - முதலமைச்சர், ஆளுநர் சிறப்பித்த பாரம்பரிய கார் விழா! ஆச்சர்யத்துடன் மக்கள்கண்டு ரசித்தனர்.

* சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் ஆகியோர் மார்ச் மாத மத்தியிலேயே பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதற்கான அறிவிப்பை நாசா வெளியிட்டது

* இங்கிலாந்துக்கு எதிரான 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.


Today's Headlines

* Tamil Nadu Finance, Environment and Climate Change Minister Thangam Thennarasu submitted a request to Union Environment, Forest and Climate Change Minister Bhupender Yadav for financial assistance for Tamil Nadu's projects.

* Additional seats at Chennai Central Suburban Railway Station....Railway Administration takes action!

* Heritage Car Rally 2025 in Pondicherry - From ancient cars from before independence to the youth of the '90s! Vintage cars paraded! - Heritage car festival celebrated by the Chief Minister and Governor! People watched in amazement.

* Sunitha Williams and Butch Wilmore, who are stranded at the International Space Station, are expected to return to Earth by mid-March. NASA made an announcement to this effect

* The Indian team won the 3rd and final ODI against England and won the series 3-0.


Covai women ICT_போதிமரம்


12-02-2025 - School Morning Prayer Activities

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-02-2025 - School Morning Prayer Activities


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்


*நாள்:-12-02-2025

*கிழமை:-புதன்கிழமை*


*திருக்குறள்:

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : மெய்யுணர்தல்


*குறள்:354

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.


*விளக்கம்:

மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.


*பழமொழி :

Necessity has no law

ஆபத்துக்கு பாவமில்லை.


*இரண்டொழுக்க பண்புகள் :

1 . மகிழ்ச்சி உங்கள் மனதில் தோன்ற புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் குடியேற வேண்டும்.

2. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும். எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.


*பொன்மொழி :

தன் குழந்தை மீதான தாயின் அன்புக்கு நிகராக இந்த உலகில் எதுவும் இல்லை. --அகதா கிறிஸ்டி


*பொது அறிவு :


1. உலகின் மிக நீளமான மலைத்தொடர் எது?

விடை: ஆண்டிஸ் மலை


2. உலகின் மிக நீளமான நீர்வீழ்ச்சி எது?

விடை: ஏஞ்சல் நீர்வீழ்ச்சி


*English words & meanings :


Engrossing - interesting, ஆர்வத்தை ஈர்த்தல்,

gracious - kind, generous, கனிவான, இனிய பண்பு


*ஆரோக்ய வாழ்வு :

பசலை கீரை : பசலைக் கீரையில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது பொதுவாக உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப் படுகிறது. சோடியத்தின் அளவை கட்டுப் படுத்துவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.


*நீதிக்கதை

_ஓர் ஆற்றின் கரை அருகே ஒரு வேப்பமரம் இருந்தது. அந்த வேப்பமரத்தில் சுஸ்வரூபி என்று ஒரு குருவி. அது அந்த மரத்தில் கூடுகட்டி முட்டைகள் இட்டு குஞ்சுகள் பொறித்து இருந்தது. தன் குஞ்சுகளை பாசமாக பராமரித்து வந்தது.


ஒருநாள் பலத்த காற்றுடன் மழை வேகமாகப் பெய்தது. இதனால் ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடி யது! சுஸ்வரூபியின் கூடு சேதமடையத் தொடங்கியது. குஞ்சுகளுக்கு பயம் கவ்விக்கொண்டது. அம்மா!.... இப்போ என்னம்மா செய்யறது!.... நாங்களெல்லாம் கீழே ஓடும் ஆற்றில் விழுந்துடுவோமா?...எங்களுக்குப் பறக்கக்கூடத் தெரியாதே.....இப்படி மழை பெய்கிறதே..... அம்மா!.... நீ எங்கேயாவது போய்விடும்மா!.... உன்னால் பறக்க முடியும்! எங்களைப் பற்றிக் கவலைப்படாதே.... நீ நினைத்தால் மேலும் முட்டைகள் இட்டுக் குஞ்சு பொறித்துக் கொள்ளலாம்.... இந்த மழையில் எங்களைத் தூக்கிக்கொண்டு உன்னால் பறக்க முடியாது!.... எங்களைக் கடவுள் காப்பாற்றுவார்!" என்றன.


சுஸ்வரூபிக்கு அழுகையே வந்துவிட்டது!.... குழந்தைகளின் பேச்சு அவளது நெஞ்சைக் கரைத்துவிட்டது. எவ்வளவு அறிவாய் பேசுதுங்க என் குஞ்சுகள்! இவைகளையா விட்டுவிட முடியும்?.... கண்ணீர் முட்டியது. கடவுளைப் பிரார்த்தித்தது.


இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, "கண்மணிகளா!.... அப்படிச் சொல்லாதீங்க...... நம்மகிட்டே தன்னம்பிக்கை இருக்கிறது.... எந்தத் தடங்கல் வந்தாலும் சமாளிப்போம்!..... கவலைப்படாதீங்க...." என்றது சுஸ்வரூபி. அதன் பின் மழையும் புயலும் குறைந்தது.சுஸ்வரூபியும் குஞ்சுகளும் மகிழ்ச்சியடைந்தன.ஆபத்தில் பயப்படாமல் தன்னம்பிக்கையுடன் கடவுளை வேண்டி செயல்படவேண்டும்.


*இன்றைய செய்திகள் : 12.02.2025


 மாநிலச்செய்தி:

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள், பிற அரசு துறைகள் ரூ.7,351 கோடி மின்கட்டண பாக்கி


உள்நாட்டு செய்தி:

முதல்வர் பிரேன்சிங் ராஜினாமா - மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி


உலக செய்தி:

 மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா’ என பெயர்  மாற்றிய டிரம்ப்: விமானத்தில் பறந்து கொண்டே உத்தரவு.


விளையாட்டுச் செய்தி:

ஏபிஎன் ஆம்நரா டென்னிஸ் அல்காரஸ் சாம்பியன்: ஆஸ்திரேலிய வீரரை வென்றார்.


*Todays headlines - 12.02.2025


State News:

TamilNadu Electricity Board owes Rs 7,351 crore to local bodies, other government departments


National News:

Chief Minister Biren singh resigns: President's rule in Manipur


World News:

Trump renames Gulf of Mexico as 'Gulf of America': Orders while flying


Sports News:

ABN Amro Tennis Alcaraz Champion: Beats Australian Player.



10-02-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-02-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: மானம்

குறள் எண்:966.      

புகழ்இன்றால்; புத்தேள்நாட்டு உய்யாதால்; என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை?

பொருள்:
அவமதிப்பார் பின், மானம் விட்டு நிற்பதால் என்ன பயன்? புகழும் வாராது; மறுமையில் விண்ணுலகும் கிட்டாது.


பழமொழி :
The finest lawn soonest stains.

காய்ந்த  மரமே கல்லடி படும்


இரண்டொழுக்க பண்புகள் :  

* ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு  தனித்திறமை இருக்கும். யாருடைய திறமையையும் குறைவாக எண்ணமாட்டேன். ‌

*தேர்வுகள் மூலம் எனது கற்றலை மதிப்பிட முடியும். எனவே தைரியமாக தேர்வுகளை எழுதுவேன்.


பொன்மொழி :

தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம் தேவையான பொருட்களை விற்கும் நிலைக்கு கொண்டு வந்துவிடும்.

- பொருளாதார நிபுணர்


பொது அறிவு :

1. இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி 2024____________

விடை: திரு. டி. ஒய். சந்திரசூட்.  (தற்போது திரு. சஞ்சீவ் கண்ணா)

2. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் 2024____________

விடை:   திரு. சக்தி காந்ததாஸ் (தற்போது திரு. சஞ்சய் மல்கோதரா)


English words & meanings :


Riverbank.    -     ஆற்றங்கரை

Road.     -      சாலை



நீதிக்கதை

பேராசை மனநிம்மதியைக் கெடுக்கும்


ஓர் ஊரில் விறகு வெட்டி ஒருவன் இருந்தான். நாள்தோறும் அவன் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி, அவற்றை மக்களிடம் விற்று, அதனால் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தான். இதில் அவனுக்குத் குறைந்த வருமானமே கிடைத்தது. என்றாலும், மனநிம்மதியோடு வாழ்ந்து வந்தான்.

ஒருநாள் அவன் வழக்கம் போல் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருக்கும்போது ஓர் அரசமரத்தின் பக்கமிருந்து, “உனக்கு ஏழு ஜாடி தங்கம் வேண்டுமா?” என்று குரல் கேட்டது.

விறகுவெட்டி அந்த மரத்தின் அருகில் சென்றான். “நான் இந்த மரத்தில் வசிக்கும் அரக்கன். இந்த அரசமரத்தின் கீழே ஏழு ஜாடி நிறைய தங்கம் இருக்கிறது. உனக்குத் தேவையானால் தோண்டி எடுத்துக்கொள்” என்றது அந்தக் குரல்.


விறகு வெட்டி, “ஏழு ஜாடி தங்கம்” என்றதும் மிகவும் மகிழ்ந்தான். அவசர அவசரமாக அந்த மரத்தின் கீழே பள்ளம் தோண்டினான். அரக்கன் சொன்னது போலவே, பூமிக்குள் ஏழு ஜாடிகள் இருந்தன. விறகு வெட்டி எல்லா ஜாடிகளையும் திறந்து பார்த்தான். அவற்றின் உள்ளே தங்கம் இருந்தது.

ஆனால், ஒரே ஒரு ஜாடியில் மட்டும் பாதியளவுதான் தங்கம் இருந்தது. “பாதிதானே குறைகிறது… இதை எப்படியும் நாம் நிரப்பி விடலாம்” என்று எண்ணி, ஏழு ஜாடிகளையும் தனது வீட்டுக்குக் கொண்டு வந்தான் விறகு வெட்டி. வீட்டுக்கு வந்ததும், ஏற்கெனவே தன்னிடமிருந்த தங்க நகைகளைப் பாதியளவு இருந்த ஜாடியில் போட்டான். பிறகு ஜாடி நிறையத் தங்கம் சேர்க்க வேண்டும் என்பதற்காக முன்பை விடக் கடினமாக உழைத்துப் பணம் சம்பாதித்தான். அதனைத் தங்கமாக்கி அந்தச் ஜாடிக்குள் போட்டான்.

அவன் எவ்வளவு தங்கத்தைச் ஜாடியில் போட்டாலும் ஜாடி நிரம்பவே இல்லை. விறகு வெட்டியும் விடவில்லை, எப்படியாவது அந்த ஜாடி நிரம்பத் தங்கத்தைச் சேர்த்துவிட வேண்டும் என்று இரவு பகலாக உழைத்தான். இதனால் அவன் நிம்மதி போயிற்று, தூக்கம் போயிற்று. உணவு உண்ணவும் மறந்தான்.

இறுதியில் அவன் துரும்பாக இளைத்து விட்டான். இவ்வாறே தொடர்ந்து செய்து வந்தான். ஒருநாள் அவன் நண்பன் ஒருவனைப் பார்த்தான். அவன் விறகு வெட்டியின் நிலைமையைப் பார்த்து பரிதாபப்பட்டான். அவனுடைய நிலைமைக்குக் காரணம் என்னவென்று கேட்டான். விறகு வெட்டி நடந்த கதை அனைத்தையும் கூறினான்.

அதற்கு அவன், தங்கத்திற்கு ஆசைப்பட்டு உன் மனநிம்மதியைக் கெடுத்துக் கொண்டயே என்றான்.”  அப்படியானால் நான் இப்பொழுது என்ன செய்வது? என்று கேட்டான் விறகு வெட்டி. இந்த ஜாடிகளை எடுத்துச் சென்று முன்பிருந்த இடத்திலேயே புதைத்து விட்டு, “பேராசையைத் தூண்டி விட்டு மன நிம்மதியைக் கெடுக்கும் உன் ஏழு ஜாடி தங்கத்தை நீயே வைத்துக்கொள்” என்று அரக்கனிடம் கூறிவிட்டு வந்துவிடு என்றான், விறகு வெட்டியின் நண்பன்.

விறகு வெட்டியும் மறுநாள் தன் நண்பன் கூறியபடியே ஏழு ஜாடிகளையும் எடுத்துச் சென்று அரச மரத்தடியில் புதைத்து விட்டு நண்பன் தன்னிடம் கூறியபடியே அரக்கனிடம் கூறிவிட்டு தன் வீட்டிற்கு வந்தான். அதற்கு பிறகு விறகு வெட்டியின் பேராசை முழுவதும் தணிந்திருந்தது. அவன் மனநிம்மதியுடன் வாழ்ந்தான்.

நீதி: ஏதாவதொரு பொருளின் மீது நாம் பேராசை பட்டால் நமது மனநிம்மதிதான் கெடும். எனவே, ஆசையை அளவோடு வைத்துக்கொண்டு வாழப் பழக வேண்டும்.


இன்றைய செய்திகள்

10.02.2025

* மதுரை அருகே மலைச்சரிவில் 800 ஆண்டுகள் தொன்மையான, பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

* வரும் கல்வியாண்டில் 35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* ககன்யான் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் சிஇ20 என்ற கிரையோஜெனிக் இன்ஜின் பரிசோதனையை மகேந்திரிகிரியில் உள்ள பரிசோதனை மையத்தில் இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டது.

* ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி வெற்றி பெற்றது சென்னையின் எப்.சி அணி.

* தேசிய விளையாட்டுப் போட்டி:  போல்வால்ட் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை பவித்ரா.


Today's Headlines

* 800 years old,  inscriptions have been discovered at the hill station near Madurai from the period of Pandiyar.

* Transport officials have said that the bus pass will be taken to 35.12 lakh students in the coming academic year.

* ISRO successfully carried out the CE20 Cyogenic engine test used for the Gayanan project at the test center in Mahendirigiri.

* ISL Football: East Bengal beat the FC team in Chennai.

* National Games: Pavithra won gold in Bolwald.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO arrested for getting Rs 2 lakh bribe from teacher

ரூ.2 லட்சம் லஞ்சம் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கைது District Education Officer arrested for getting Rs 2 lakh bribe from teach...