கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School Morning Prayer Activities லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
School Morning Prayer Activities லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-06-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 72:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

விளக்கம்: அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்


பழமொழி :
Humility is the best virtue.

அடக்கமுடைமை சிறந்த பண்பாகும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

நூறு முட்டாள்களுக்கு தலைவனாக இருப்பதைவிட ஒரு அறிவாளிக்கு அடிமையாக இருப்பது மேல். - ஸ்டீபன் ஸ்மித்


பொது அறிவு :

01. 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற்றது?

பாரிஸ்-பிரான்ஸ்
Paris- France

02. சென்னையில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

கொசஸ்தலை ஆறு -திருவள்ளூர்
Kosasthalaiyaru - Thiruvallur



English words & Tips :

calamity     -     பேரழிவு

barriers     -     தடைகள்


Grammar Tips :

Collective nouns refer to groups of people, animals, or things considered as a single unit. So they often take a singular verb when referring to the group as a whole, but can take a plural verb when referring to the individual members.

Singular verb e.g., "The team is playing well".

Plural verb: when referring to the individual members within the group
Eg. "The team members are arguing about strategy".



அறிவியல் களஞ்சியம் :

மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது.


ஜூன் 27

பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் பிறந்த நாள்

பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838 – ஏப்ரல் 8, 1894) ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார். இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.


ஹெலன் கெல்லர் அவர்களின் பிறந்தநாள்

ஹெலன் கெல்லர் (Helen Adams Keller) (ஜூன் 27, 1880 - ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண்மணி ஆவார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்

ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காதும் கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார். 1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். 


பி. டி. உஷா அவர்களின் பிறந்தநாள்

பி. டி. உஷா கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார்.இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



நீதிக்கதை

வலிமை!

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.

கழுதைப்புலியோ "நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது. குட்டி கழுதைப்புலி சொல்லியது: "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வரமுடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்" அதைக்கேட்ட கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது.

சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. "ஏன் இங்கே வந்தாய்?" கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: "ராஜ சிங்கமே ! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்."

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது. பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே? "மகனே... சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய் கழுதைப்புலி.

நீதி : நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.


இன்றைய செய்திகள்

27.06.2025

⭐ தமிழகத்தில் உள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சைகளைத் தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

⭐அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

⭐டிரம்பை சந்திக்க உள்ளார் ஜெலன்ஸ்கி நெதர்லாந்தில் 2 நாட்கள் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில், டச்சு மன்னர், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு. உக்ரைன் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர, டிரம்புடன், ஜெலன்ஸ்கி சந்தித்து பேச உள்ளதாக தகவல்.

⭐வேலூரில் ரூ.198 கோடியில் கட்டப்பட்ட அரசு
பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார்
முதல்வர் மு.க.ஸ்டாலின்.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் தடகளம்; தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.


Today's Headlines

✏ A Tamil Nadu government order has been issued approving the start of dialysis treatments in 50 primary health centers in Tamil Nadu.

✏ The Tamil Nadu government has issued a government order providing 4% quota for the differently abled in government job promotions.

✏ Chief Minister M.K. Stalin inaugurated the government multi-purpose high-speciality hospital built at a cost of Rs. 198 crore in Vellore.

✏ Zelensky is reportedly set to meet with Trump at the two-day NATO summit in the Netherlands.

SPORTS NEWS

🏀 Ostrava Golden Spike Athletics; Neeraj Chopra wins gold.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-06-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 21:

ஒழுக்கத்து நீத்தார். பெருமாமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு

விளக்கம்: ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.


பழமொழி :
Focus is the quiet power behind success.

கவனம் தான் வெற்றிக்குப் பின்னாலிருக்கும் அமைதியான சக்தி.


இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

புத்திசாலிகள் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள் - பிரான்சிஸ் பேகன்


பொது அறிவு :

01.தமிழ்நாட்டில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் எங்குள்ளது?          

          ஆனைகட்டி- கோயம்புத்தூர்

          Anaikatti- Coimbatore

02. மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

                   கோதாவரி(Godavari)


English words & Tips :

abstain    -     விலகி இரு

decency.     -     கண்ணியம்


Grammar Tips;

When G is followed by e,i,u, It makes the sound/j/

Gem giant, gym



அறிவியல் களஞ்சியம் :

* நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.

* நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

* நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.


ஜூன் 26

ஜூன் 26 அன்று சர்வதேச போதைப்பொருள் முறையற்ற பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம் கொண்டாடப்படுகிறது.  ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட இந்த நாள், போதைப்பொருள் இல்லாத உலகத்தை நோக்கி நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு முயற்சிகளை ஆதரிக்கிறது.


நீதிக்கதை

புத்திசாலி புலவரும் நெல்மணிகளும்

அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

சில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது மேலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று புலவர் யோசித்துக்கொண்டு இருந்தார்.

புலவரின் நிலையைப் பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று, "நம் நாட்டின் அரசரை புகழ்ந்து பாடும் புலவருக்கு கேட்கும் பரிசினை கொடுக்கிறார். அந்த பரிசினைப் பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலமே" என்று கூறினார்.

இது சரியான தருணம் என்று கருதிய புலவரும் மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார்.

மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர் அரண்மனையை அடைந்தார். மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்.

புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம், "உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்" என கூறினார்.

புலவரும் இதுபோன்ற வறுமை எப்பொழுதும் என் குடும்பத்தை பாதிக்கக் கூடாதென்று யோசித்தார். பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்க பலகை இருப்பதைப் பார்த்தார். "அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் அங்கே சதுரங்க பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின் ஓவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாகினால் அதை தக்க பரிசாக ஏற்றுகொள்வேன்" என்று கூறினார்.

மன்னர் புலவரைப்பார்த்து, "நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா?" என்று கேட்டார்.

புலவரோ "அரசே எனக்கு நெல்மணிகள் மட்டும் போதும்" என்று கூறிவிட்டார்.

பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என கூறிவிட்டார்.

பின்னர் அரசர் அரண்மனை சேவகர்களிடம், "புலவர் கேட்ட நெல்மணிகளை எடுத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். சேவகர்களும் சதுரங்கப் பலகையில் புலவர் கூறியபடியே நெல்மணிகளை சதுரங்க பலகையின் மேல் அடுக்கினர்.

1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 4, 4ம் கட்டத்தில் 8 என நெல்மணிகளை அடுக்கினர்.

10ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 512 என ஆனது.

20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது.

பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது.

விரைவில் நெல்மணிகளின் எண்ணிக்கை கோடனகோடிகளை தாண்டியது. இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம் இழக்கும் நிலை ஏற்பட்டது.

புலவரின் புத்தி சாதுரியத்தையும், தான் செய்த தவறை உணர்ந்த அரசர் புலவரிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை புலவரிடம் ஒப்படைத்தார்.

நீதி:

கூட்டுப்பலனின் பெருக்கும் சக்தியை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.



இன்றைய செய்திகள்

26.06.2025

⭐சென்னையில் உள்ள பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளிலும் மிதக்கும் சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு முடிவு திட்டமிட்டுள்ளது.

⭐காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 20,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

⭐விண்வெளிக்கு சென்றார் இந்திய விண்வெளி வீரர்"சுபான்ஷூ சுக்லா".

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் திலீப் ஜோஷி காலமானார்.

🏀 கிரிக்கெட் முதல் டெஸ்ட் போட்டி : இங்கிலாந்து அபாரம்.


Today's Headlines

✏️ The Tamil Nadu government has decided to install floating solar panels in all three lakes in Chennai - Poondi, Puzhal and Chembarambakkam - to generate electricity.

✏️ Due to continuous rains in the Cauvery catchment areas, the water inflow to Kabini Dam has increased. While 20,000 cubic feet of water is coming in, 25,000 cubic feet of water is being released. Due to this, the water inflow in the Cauvery river at Okenakkal has increased.

✏️ Indian astronaut "Subhanshu Shukla" went to space.

*SPORTS NEWS*

🏀 Former Indian cricketer Dilip Joshi passes away.

🏀 Cricket First Test Match: England is amazing.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-06-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 19:

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்.    

விளக்கம் : மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.


பழமொழி :
Don't judge a book by its cover.

புறதோற்றத்தைப் பார்த்து உள்ளதைக் கணிக்காதே.


இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

புத்திசாலித்தனம் பெரிய வேலைகளை ஆரம்பித்துத் தான் வைக்கிறது. அதை முடித்து வைப்பது உழைப்புதான் - கோபர்ட்


பொது அறிவு :

01.இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?

       உத்திர பிரதேசம்(Uttar pradesh)

02. உலகிலேயே அரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் நாடு எது?

                     சீனா(China)


English words & Tips :

angry   -     கோபம்

agent       -    முகவர்


Grammar Tips :

Use preposition

at    for places ( small areas and location)
In. For places ( large area)



அறிவியல் களஞ்சியம் :

பால் கொதித்தால் பொங்குகிறது. ஆனால் தண்ணீர் அப்படி ஆவதில்லை. இதற்கு காரணம் பால் கொதிக்கும்போது அதிலுள்ள கொழுப்பு, புரதம் போன்றவை அடர்த்தி குறைவு என்பதால் பாலின் மேற்புறத்தில் பாலாடையாக படர்கின்றன. இது பாலில் உள்ள நீர் கொதிநிலையை அடைந்ததும் நீராவியாக மேலே எழுவதை தடுக்கிறது. எனினும் அடர்த்தி குறைவான நீராவி, பாலாடையை தள்ளி மேலே எழும்பி வெளியேறுகிறது. இதைத்தான் 'பால் பொங்குகிறது' என்கிறோம். அடுப்பின் வெப்பத்தைக் குறைத்தால் நீர் கொதிநிலையை அடையும் வேகம் குறைந்து பொங்குவது அடங்கும்.


ஜூன் 25

வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள்

விஸ்வநாத் பிரதாப் சிங் (சூன் 25 1931 - நவம்பர் 27, 2008) இந்தியக் குடியரசின் 7 ஆவது இந்திய பிரதமர் ஆவார். இவர் வி. பி. சிங் என அறியப்படுபவர். டிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார்.

2023-இல் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்குக்கு முழு உருவச் சிலை அமைக்கும் அறிவிப்பை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.

வி. பி. சிங்கை "இந்தியத் தலைமை அமைச்சர்களிலேயே மிகவும் அரிதான தலைமை அமைச்சராக இருந்தவர்" எனப் புகழ்ந்தார் தமிழறிஞர் கி. குணத்தொகையன்


நீதிக்கதை

செய்யும் செயலில் அவதானம் வேண்டும்

ஒரு ஊரில் ஒரு இளம் பெண் பால் விற்று ஜீவியம் செய்து வந்தாள். அவள் தினமும் தன்னிடம் இருந்த ஒரு பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து அதை ஒரு குடத்திலிட்டு தன் தலையில் வைத்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தாள்.  தான் ஏழையாக இருப்பதனாலே இப்படி தினமும் பால் விற்று சீவிக்க வேண்டி உள்ளது. என் போன்ற மற்றப் பெண்களெல்லாம் விதம் விதமாக ஆடை அணிந்து எடுப்பாகச் செல்கிறார்களே என தன்னுள் கவலையுடன் இருந்தாள்.

ஒருநாள் அவள் வழமைபோல் பாலைக் கறந்தெடுத்து குடத்தினுள் விட்டு அதனை விற்பதற்காக தெரு வீதி வழியே சென்று கொண்டிருந்த போது தன் வாழ்க்கைத் தரத்தை எப்படி முன்னேற்றலாம் என கற்பனை செய்தாள்.

இன்று பாலை விற்று வரும் பணத்தில். சில கோழிக் குஞ்சுகள் வாங்குவேன். அவை வளர்ந்து பெரிதானதும்..அவைகளை விற்று வரும் பணத்தில் இரண்டு ஆட்டுக் குட்டிகள் வாங்குவேன்.. அவை வளர்ந்ததும் அவற்றை விற்று இன்னொரு பசு மாடு வாங்குவேன்.. அவற்றைக் கொண்டு ஒரு பெரிய மாட்டுப் பண்ணை வைப்பேன். அதில் வேலை செய்ய பல பெண்களை வேலைக்கு அமர்த்துவேன்.

வருமானம் பெருகவே பலவிதமான ஆடை அணிகளையும் நகைகளையும் வாங்கி அவற்றை அணிந்து கொண்டு மற்றப் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து அதிசயிக்க தக்கதாக  உல்லாசமாக இப்படி நடப்பேன், என தலையில் பால் குடம் இருந்ததை மறந்து அதைப் பிடித்திருந்த கையை எடுத்து வீசி ஸ்டையிலாக நடக்க ஆரம்பித்தாள்.

என்ன பரிதாபம் அவள் நடந்த நடையில் தலையில் இருந்த அனைத்து பாலும் கீழே கொட்டியது. குடமும் உடைந்தது.

அவளுக்கு அன்றைய பால் வியாபாரம் நஷ்டமடைந்ததுடன்..பால் குடமும் வேறு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போதுதான் அவள், எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன், அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது என்பதை உணர்ந்தாள்.

எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்..அதை முதலில் கவனமாக முடிக்க வேண்டும். இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே

செய்யும் செயலில் அவதானம் வேண்டும். இல்லையேல் பெருநஷ்டம்.


இன்றைய செய்திகள்

25.06.2025

⭐9 மாவட்ட
கலெக்டர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு.

⭐சென்னையில் இருந்து 2 நாள் பயணமாக  முதல்வர் மு.க.ஸ்டாலின்  ரயில் மூலம் காட்பாடி பயணம்: வேலூர், திருப்பத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

⭐ பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் சுமார் 1,07,677 வண்டல் வடிகட்டி தொட்டிகளை தூர்வாருதல் மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஹெடிங்லி டெஸ்ட்: இந்தியா VS இங்கிலாந்து -5வது நாள் த்ரில் தொடர்கிறது.

🏀ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா  செக் குடியரசின் ஆஸ்ட்ராவாவில் நடைபெறும் மதிப்புமிக்க கோல்டன் ஸ்பைக் போட்டியில் இடம்பெறுகிறார்.


Today's Headlines

✏️Tamil Nadu government ordered  55 IAS officers, including 9 district collectors tobe transferred:

✏️  Tamilnadu state Chief Minister M.K. Stalin will travel by train from Chennai to Katpadi for a 2-day trip: He will participate in various programmes in Vellore and Tirupattur.

✏️As a precautionary measure for the monsoon, dredging and waste removal work is being carried out in water bodies, canals, rainwater drains and in approximately 1,07,677 sediment filter tanks, in the Chennai Corporation areas.

*SPORTS NEWS

🏀 Headingley Test: India VS England - 5th Day  thrill continues.

🏀 Javelin thrower Neeraj Chopra will feature in the prestigious Golden Spike tournament in Ostrava, Czech Republic.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-06-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 14:

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

விளக்கம் : மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.


பழமொழி :
Books open more doors than keys do.

புத்தகங்கள் திறக்காத கதவுகள் இல்லை.


இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

குழந்தை பருவத்தில்தான் சொர்க்கம் நம்மிடையே உள்ளது - வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்


பொது அறிவு :

01.இந்தியாவின் புராண காலங்களில் தக்சண கங்கா என்று அழைக்கப்பட்ட நதியின் தற்போதைய பெயர் என்ன?

கோதவரி (Godavari)

02. இந்தியாவில் அமிர்தசரத்தில் உள்ள பொற்கோவிலை முழுமையாக கட்டி முடித்தவர் யார்?

குரு அர்ஜுன் தேவ்
(Guru Arjun dev)


English words & Tips :

attack    -     தாக்குதல்

allow         -       அனுமதி


Grammar Tips:

Difference between
I used to and I am used to,

1,I used to wake up early in the morning

2,I am used to waking up early in the morning
 
1 Describes something that regularly happens in the past but it does not happen now

2. Describe something that feel normal and familiar because it is not new anymore



அறிவியல் களஞ்சியம் :

செவ்வாய் கோளில் உள்ள 'அர்சியா மான்ஸ்' என்ற உயரமான எரிமலையை விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்துள்ளனர். 2001ல் அமெரிக்காவின் நாசா அனுப்பிய 'மார்ஸ் ஒடிசிய் ஆர்பிட்டர்' கடந்த மே 2ல், தெர்மல் எமிசன் இமேஜிங் சிஸ்டம் தொழில்நுட்பம் மூலம் இந்த புகைப் படத்தை எடுத்துள்ளது. இதன் உயரம் 20 கி.மீ. அகலம் 120 கி.மீ. இது பூமியின் உயரமான எரிமலையான ஹவாய் தீவிலுள்ள 'மவுனா லாவ்' எரிமலையை (9 கி.மீ.,) விட இரண்டு மடங்கு உயரமானது. மேலும் 'அர்சிய மான்ஸ்' பகுதியில் மேகத்தின் தடிமன், பூமியில் மவுனா லாவ் பகுதி மேகத்தை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது


ஜூன் 24

கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள்

கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சேரமான் காதலி  என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.



நீதிக்கதை

அன்பா, செல்வமா, வெற்றியா? எது சிறந்தது?

ஒரு ஊரில் குமரன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான். அப்போது அவன் வீட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து ‘ உள்ளேவரலாமா ?‘ என்று கேட்டனர்.

தந்தை ‘வாருங்கள்’ என்றார்.

‘நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது…யாராவது ஒருவர் தான் வரமுடியும்…என் பெயர் பணம்…இவர் பெயர் வெற்றி…இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும்…எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்’ என்றார் பணம் எனப்படுபவர்.

குமரனின் தந்தை ‘ வெற்றியை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்’ என்றார்.

ஆனால் குமரனோ …’அப்பா பணத்தையே உள்ளே அழைக்கலாம்…நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்…எல்லாவற்றையும்..வெற்றி ..உட்பட …அனைத்தையும் வாங்கலாம்’ என்றான்.

ஆனால் குமரனின் தாயோ ‘வேண்டாம்…அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்’ என்றாள்.

பின் மூவரும், ”அன்பு உள்ளே வரட்டும்” என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர்.

உடன் குமரனின் அம்மா’அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்’ என்றார்.

அன்பு சொன்னார்,’ நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால்..மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம்.

ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்.. நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்’.

அன்பு உள்ளம் இருந்தால்..நம் வாழ்வில் வெற்றியும்,தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும்.


இன்றைய செய்திகள்

24.06.2025

⭐ தமிழ்நாடு அரசு
அறிவிப்பின்படி பூங்காவாக மாறுகிறது கிண்டி ரேஸ் கோர்ஸ்! ரூ.4,832 கோடி மதிப்பிலான இந்த நிலத்தில் பசுமை பூங்கா அமைக்கப்படும்.

⭐பொது இடங்களில் போதுமான அளவு கழிப்பறைகளை அமைத்து, அவற்றை தரமாக பராமரிக்க வேண்டும்," என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிற்கு அறிவுறுத்தியுள்ளது.

⭐UPSC
முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

⭐உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் 20% க்கும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் பாராளுமன்றம் அச்சுறுத்தியுள்ளது - இது எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு $100 க்கு மேல் உயரக்கூடும்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀பிரயாக்ராஜில் (அலகாபாத்) முதல் முறையாக நடைபெறும் 20 வயதுக்குட்பட்ட தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 22 அன்று மேம்படுத்தப்பட்ட மதன் மோகன் மால்வியா மைதானத்தில் தொடங்கியது.

🏀கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஜூன் 28 ஆம் தேதி தொடங்கி ஜூலை 22 வரை நடைபெறும்.


Today's Headlines

✏ Tamil Nadu Government Announces Guindy Race Course to be converted into a park, A green park will be built on this land worth Rs. 4,832 crore.

✏ "The Madras High Court has instructed the Tamil Nadu government to construct sufficient number of toilets in public places and maintain them to a standard," it said.

✏ Tamil Nadu government announcement regarding UPSC Incentive of Rs. 25,000 for those who pass the first stage exam .

✏ Iran's parliament has threatened to close the Strait of Hormuz, which is crucial for more than 20% of global oil exports - a move that could send oil prices above $100 a barrel.

SPORTS NEWS
🏀 The first-ever National Junior Athletics Championship under 20 years of age in Prayagraj (Allahabad) began on June 22 at the upgraded Madan Mohan Malviya Stadium.

🏀 Led by captain Harmanpreet Kaur, with Smriti Mandhana as vice-captain, the Indian women's cricket team will play from June 28 to July 22.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-06-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

விளக்கம் : மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.


பழமொழி :
Hitch your wagon to a star.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.


இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

உங்கள் எதிர்காலத்தை உங்களால் மாற்ற முடியாது . பழக்க வழக்கங்களை மாற்றலாம் . உங்கள் பழக்கவழக்கங்கள் நிச்சயம் எதிர்காலத்தை மாற்றும் - ஏ பி ஜே அப்துல் கலாம்.


பொது அறிவு :

01.இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் எது?

நாளந்தா பல்கலைக்கழகம்
பீகார்(Nalanda university- Bihar)

02. இந்தியாவின் கேப் கென்னடி என்று அழைக்கப்படும் இடம் எது?

ஸ்ரீஹரிகோட்டா-ஆந்திரபிரதேசம்

Sriharikota-Andarapradesh



English words & Tips :

alone     -      தனிமை

  ability    -       திறமை


Grammar Tips:

"At" and "in" are prepositions used to indicate location, but they differ in their specificity.
"In" is used for enclosed spaces or larger areas, like rooms, cities, or countries.
"at" is used for specific points or locations, like addresses or specific places like a bus stop or particular house



அறிவியல் களஞ்சியம் :

செவ்வாய் கோளில் உள்ள 'அர்சியா மான்ஸ்' என்ற உயரமான எரிமலையை விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்துள்ளனர். 2001ல் அமெரிக்காவின் நாசா அனுப்பிய 'மார்ஸ் ஒடிசிய் ஆர்பிட்டர்' கடந்த மே 2ல், தெர்மல் எமிசன் இமேஜிங் சிஸ்டம் தொழில்நுட்பம் மூலம் இந்த புகைப் படத்தை எடுத்துள்ளது. இதன் உயரம் 20 கி.மீ. அகலம் 120 கி.மீ. இது பூமியின் உயரமான எரிமலையான ஹவாய் தீவிலுள்ள 'மவுனா லாவ்' எரிமலையை (9 கி.மீ.,) விட இரண்டு மடங்கு உயரமானது. மேலும் 'அர்சிய மான்ஸ்' பகுதியில் மேகத்தின் தடிமன், பூமியில் மவுனா லாவ் பகுதி மேகத்தை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது


ஜூன் 23

கிஜூபாய் பதேக்கா அவர்களின் நினைவுநாள்

கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை  நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.



நீதிக்கதை

விட்டுக் கொடுத்து நடந்தால் ஒற்றுமை வளரும், நஸ்டம் ஏற்படாது

ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.

ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.

குரங்கிடம் அப்பத்தை கொடுத்து  அதைச் சமமாக பிரித்துத் தரும்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பிய்த்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து வைத்தது.

அப்போது ஒரு அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால் அந்தத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது  கடித்து விட்டு மீண்டும் போட்டது.

இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.

அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.

ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.

பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.

நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்



இன்றைய செய்திகள்

23.06.2025

⭐புதிய மினி பஸ் சேவை திட்டத்தின் மூலம் 3,103 வழித்தடங்களில் போக்குவரத்து வசதி; தற்போது வரை 90,000 கிராமங்களை சேர்ந்த 1 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். தமிழக அரசு தகவல்.

⭐ ஈரானிய அணுசக்தி நிலையங்கள் உட்பட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

⭐டெல்லியில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கில் தலா ரூ.8000 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் ஆவடி நாசர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀கிளாட்பெக் களிமண் போட்டியில் நடந்த இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் நோலியா மந்தாவை 6-2, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்து டீன் ஏஜ் வீராங்கனை மாயா ராஜேஷ்வரன் தனது முதல் ITF ஜூனியர் பட்டத்தை வென்றார்.

🏀FIH ஹாக்கி புரோ லீக்கில் இன்று இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பெல்ஜியத்தை எதிர்கொள்கின்றன.

🏀பாரீஸ் டைமண்ட் போட்டியில்
88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.


Today's Headlines

⭐ By new mini bus service project transport facilities are afforded to 3,103 routes till date. Up to 90,000 villages and  1 crore people are benefitted information by Tamil Nadu Government.

⭐In three nuclear power stations including  Iranian nuclear power stations    United States did the air strike.

⭐ Minister Avadi Nasar has  donated Rs.8000 in the bank accounts of people who were affected by Delhi house demolition.

⭐Maya Rajeshwaran, the first junior to defeat Switzerland's Noliya Manta by 6-2, 6-4 in the Gladbeck Kaliman competition and won her first IFT junior title.

⭐In FIH Hockey Pro League today Indian men and women facing the Belgium team.
Indian player Neeraj Chopra won the championship by throwing 88.16 meters in Javelin throw


Covai women ICT_போதிமரம்


G.O. No. 335, Dated 02.06.2017 - அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் காலை இறைவணக்கக் கூட்டம் நடத்துதல் குறித்து வழிகாட்டுதல் அரசாணை வெளியீடு

 

 G.O. No. 335, Dated 02.06.2017 - அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் காலை இறைவணக்கக் கூட்டம் நடத்துதல் குறித்து வழிகாட்டுதல் அரசாணை வெளியீடு


>>> அரசாணை எண் 335 - இறை வணக்கக் கூட்டம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசாணை (G.O.) எண் : 335, நாள் : 02-06-2017, பள்ளிகளில் காலை இறைவணக்கக் கூட்டங்களை அனைத்து வேலை நாட்களிலும் நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இந்த அரசாணை, அனைத்து பள்ளிகளிலும் காலை இறைவணக்கக் கூட்டங்களை தவறாமல் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 

இதன் முக்கிய அம்சங்கள்: 

அனைத்து வேலை நாட்களிலும்:

அரசாணை 335ன் படி, பள்ளிகளில் காலை இறைவணக்கக் கூட்டங்களை வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது.

வழிகாட்டுதல்கள்:

இந்த அரசாணை, காலை இறைவணக்கக் கூட்டங்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்குகிறது.

இறைவணக்கக் கூட்டம்:

இந்த அரசாணை, பள்ளி வேலை நாட்களில் இறைவணக்கக் கூட்டத்தை நடத்துவதை கட்டாயமாக்குகிறது.



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-06-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

விளக்கம் : உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.


பழமொழி :
Kindness makes even intelligence beautiful.

நற்குணம் இருந்தால் அறிவும் அழகாகிறது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

படைப்பில் பிரம்மாண்டமான படைப்பு நமது மனதுதான் . மனதை அழகுபடுத்துங்கள் , வாழ்க்கை அழகாகும். - புத்தர்


பொது அறிவு :

01.உலக அஞ்சலக தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் 9 (October 9)

02. அடையாறு புற்றுநோய் மையத்தை ஏற்படுத்தியவர் யார்?

டாக்டர். முத்துலட்சுமி 
Dr.Muthulakshmi 


English words & Tips :

awful     -     மிக மோசமான

converse      -     உரையாடு


Grammar Tips :
Fish (one  fish)

Fish ( 3 or more when they are same type)

Fishes ( 3 or more fish when they are different type of fish)


அறிவியல் களஞ்சியம் :

மைக்ரோசாப்ட் உருவாக்கிய அரோரா AI, சூறாவளி மற்றும் மணல் புயல் உட்பட பல வானிலை நிகழ்வுகளை 91% துல்லியத்துடன் கணித்துள்ளது.


ஜூன் 20

கவிஞர் சுரதா அவர்களின் நினைவுநாள்

சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.



நீதிக்கதை

துஷ்ட்டருக்கு அறிவுரை கூறக் கூடாது


ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.

அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.

மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது.  மனம் பொறுக்காமல் ‘ குரங்காரே..என்னைப்பாரும்…வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன்.  அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உன்னைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?….

இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்’ என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.

பறவைக்கு அப்போதுதான் புரிந்தது’ அறிவுரைகளைக்கூட…..அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும்  என்று.

துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது.

நாமும்… ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று புரிந்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.


இன்றைய செய்திகள்

20.06.2025

⭐தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.

⭐ தமிழ்நாடு அரசு வீடு தேடி சென்று, ரேஷன் பொருட்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.

⭐ மத்திய கிழக்கு நாடுகள் உற்பத்தி செய்யும் எண்ணெயை உலகச் சந்தைகளுக்கு கொண்டு செல்லும் முக்கிய நீர்வழி பாதையான 'ஹார்மோஸ் நீரிணை'யை மூடப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது.

⭐பொதுமக்களுக்கு இலவசமாக சுத்தமான  குடிநீர் வழங்கும் வகையில் சென்னையில் ரூ.6.04 கோடியில் 50 குடிநீர் ஏடிஎம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀லீட்ஸ் டெஸ்டுக்கு முன்னதாக எம்எஸ் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் எதிர்நோக்குகிறார்.

🏀ஹாக்கிக்கு ஒரு பெரிய ஊக்கமாக, 2025 ஆம் ஆண்டு FIH ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியை நடத்துவதற்காக ஹாக்கி இந்தியா தமிழ்நாடு அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.


Today's Headlines

✏ Temperatures in Tamil Nadu to be above normal: Chennai Meteorological Department warns.

✏ Tamil Nadu government plans to go door to door and distribute ration items.

✏ Iran has announced that it will close the Strait of Hormuz, a key waterway that carries oil produced by Middle Eastern countries to world markets.

✏ Chief Minister M.K. Stalin inaugurated 50 drinking water ATMs in Chennai at a cost of Rs. 6.04 crore to provide free clean drinking water to the public.

SPORTS NEWS

🏀 Rishabh Pant looks forward to matching MS Dhoni's record ahead of Leeds Test.

🏀 In a major boost for hockey, Hockey India has signed a Memorandum of Understanding with the Tamil Nadu government to host the FIH Men's Junior World Cup Hockey in 2025.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-06-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 11:

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
     
விளக்கம் : மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் Secunderabad அமிழ்தம் என்று
உணரத்தக்கதாகும்.


பழமொழி :
Small rudders guide great ships.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும் . முயன்றால் முடியும். - நெல்சன் மண்டேலா.


பொது அறிவு :

" 01.பனாமா கால்வாய் இணைக்கும் இரு  பெருங்கடல்கள் எவை?

    அட்லாண்டிக் மற்றும் பசுபிக்       பெருங்கடல்கள்

(Atlantic and Pacific oceans)

02. இந்திய காடுகளின் ராஜா என்று அழைக்கப்படும் மரம் எது?

               ஆலமரம்(Banyan tree)


English words & Tips :

pamper   -       செல்லம் கொடு,

virtue        -      நல்லொழுக்கம்


Grammar Tips

K rule
We all know that letter K is silent in some words but most of the children got confused.There is a small trick ,when it is silent and when it is not.

K  is not silent in King kite and kettle whereas

K is silent in knot,knit,knot,knight, from this we can conclude that when k comes before n then K is silent 


அறிவியல் களஞ்சியம் :

விஞ்ஞானிகள் இருண்ட பொருளைத் தேட ஒரு லெவிட்டேட்டட் காந்தத்தைப் பயன்படுத்தினர், இது பிரபஞ்சம் முழுவதும் இருப்பதாக நம்பப்படும் அடையாளம் காணப்படாத பொருள். இருண்ட பொருள் அல்ட்ராலைட் துகள்களால் ஆனது என்றால், அது காந்தத்தை நுட்பமாகத் தள்ளும் அலை போல நடந்து கொள்ளக்கூடும்.


ஜூன் 19

ஆங் சான் சூச்சி அவர்களின் பிறந்தநாள்

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார்.


நீதிக்கதை

பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்

ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது.

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.

தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.


இன்றைய செய்திகள்

19.06.2025

இன்றைய செய்திகள்

பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகம்; சீனாவை விட 3 மடங்கு குறைவு: சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் தகவல்.

⭐ உக்ரைனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 6,000 க்கும் மேற்பட்ட வடகொரியா வீரர்கள் பலியானதாக இங்கிலாந்து உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

⭐ தமிழ் நாடெங்கும் 10,000 இடங்களில் தமிழக மக்களின் நலத்திட்ட உதவிகள் சம்பந்தமாக சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்திய மகளிர் ஹாக்கி அணி தற்போது நடந்து வரும் FIH புரோ லீக்கில் அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.

🏀இந்திய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணி வரவிருக்கும் நான்கு நாடுகள் போட்டியில் பங்கேற்க  பெர்லினுக்கு புறப்பட்டுள்ளது.



TODAY'S HEADLINES

✏️ India has more nuclear weapons than Pakistan; 3 times fewer than China,  report by  International research institute

✏️ A British intelligence report says more than 6,000 North Korean soldiers were killed after being unable to withstand the Ukrainian offensive.

✏️ Theஆங் சான் சூச்சி அவர்களின் பிறந்தநாள்

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார். Tamil Nadu government is planning to hold special camps related to welfare schemes for the people of Tamil Nadu at 10,000 locations acrosஆங் சான் சூச்சி அவர்களின் பிறந்தநாள்

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார்.s Tamil Nadu.

*SPORTS NEWS*

🏀 The Indian women's hockey team is currently facing Argentina in the ongoing FIH Pro League.

🏀 The Indian junior men's hockey team has left for Berlin to participate in the upcoming Four Nations Tournament.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-06-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 7:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

விளக்கம் : தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது


பழமொழி :
Do well what you have to do.

செய்வன திருந்தச் செய்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

உங்களின் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் உங்களின் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் - அப்துல் கலாம்


பொது அறிவு :

01.இந்தியாவில் தேசிய வன ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் எது?

டேராடூன்(Dehradun)

02. உலக வங்கியின் தலைமையகம் எங்கு உள்ளது?

வாஷிங்டன்(Washington)


English words & Tips :

insolent     -     திமிரான

innate    -       உடன் பிறந்த


Grammar Tips :

* The most simple way to find that a given word is a noun is if it follows an article like "the" or "a." Examples: The Apple is red in colour.

* Nouns can also follow possessives or numbers. Examples: There are four pillows on my bed.



அறிவியல் களஞ்சியம் :

பூமியும் வெள்ளியும் ஒன்று போலவே இருப்பதால் இவற்றை ‘இரட்டைக்கோள்கள்’ என்று அழைக்கிறோம். பூமியைப் போலவே வெள்ளியிலும் கண்ட நகர்வு நடப்பதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் மேரிலாண்டு பல்கலை. ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்..


ஜூன் 18

மாக்சிம் கார்க்கி அவர்களின் நினைவுநாள்

மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


கக்கன் அவர்களின் பிறந்தநாள்

திரு. கக்கன்

பி. கக்கன் (P. Kakkan, 18 சூன் 1908 – 23 திசம்பர் 1981), விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதர பல பொறுப்புகளை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்த, அரசியல்வாதி ஆவார்.


 
நீதிக்கதை

ஒரு கா‌ட்டி‌ல் பல ‌வில‌ங்குக‌ள் வா‌ழ்‌ந்து வ‌ந்தன. அ‌தி‌ல் ஒரு ‌சி‌ங்கமு‌ம், ந‌ரியு‌ம் வெகு நாளாக உண‌வி‌ன்‌றி அலை‌ந்து ‌தி‌ரி‌ந்து கொ‌‌ண்டிரு‌ந்தன. ஒரு நா‌ள் இர‌ண்டு‌ம் நேரு‌க்கு நே‌ர் ச‌ந்‌தி‌த்து த‌த்தமது ‌நிலைமையை புல‌ம்‌பி‌க் கொ‌ண்டன.

இறு‌தியாக இர‌ண்டு‌ம் சே‌ர்‌ந்து வே‌ட்டையாடுவது எ‌ன்ற முடிவு‌க்கு வ‌ந்தன. அத‌ற்கு ‌சி‌ங்க‌ம் ஒரு ‌தி‌ட்ட‌ம் வகு‌த்து‌க் கொடு‌த்தது. அதாவது, ந‌ரி பலமாக ச‌த்த‌ம் போ‌ட்டு க‌த்த வே‌ண்டு‌ம். அ‌ந்த ச‌த்த‌த்தை‌க் கே‌ட்டது‌ம் கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் ‌மிர‌ண்டு அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் ஓடு‌ம். அ‌ப்படி ஓடு‌ம் ‌மிருக‌ங்களை ‌சி‌ங்க‌ம் அடி‌த்து‌க் கொ‌‌ல்ல வே‌ண்டு‌ம்.

இ‌ந்த யோசனை ந‌ரி‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌த்‌திரு‌ந்தது. அதனா‌ல் உடனே ஒ‌ப்பு‌க் கொ‌ண்டது. அத‌ன்படி, ந‌ரி தனது பய‌ங்கரமான குர‌லி‌ல் க‌த்த‌த் துவ‌ங்‌கியது. அத‌ன் ‌வி‌சி‌த்‌திரமான ச‌த்த‌த்தை‌க் கே‌ட்ட கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் வேகமாக ஓடின. அ‌‌ந்த சமய‌த்‌தி‌ல் ‌சி‌ங்க‌ம் ‌நி‌ன்‌றிரு‌ந்த ப‌க்க‌ம் வ‌ந்த ‌வில‌ங்குகளை எ‌ல்லா‌ம் ‌சி‌ங்க‌ம் வே‌ட்டையாடி‌க் கொ‌‌ன்றது.

ஒரு க‌ட்ட‌த்‌தி‌ல் ந‌ரி க‌த்துவதை ‌நிறு‌த்தி ‌வி‌ட்டு ‌சி‌ங்க‌த்‌தி‌ன் ப‌க்க‌ம் வ‌ந்தது. அ‌ங்கு வ‌‌ந்தது‌ம் ‌ந‌ரி‌க்கு ஏக‌ப்ப‌ட்ட ச‌ந்தோஷ‌ம். ஏனெ‌னி‌ல் ‌‌நிறைய ‌மிருக‌ங்க‌‌ள் அ‌ங்கு இற‌ந்து ‌கிட‌‌‌ந்தன. அதை‌ப் பா‌ர்‌த்தது‌ம் ந‌ரி, தா‌ன் அகோரமாக‌க் க‌த்‌தியதா‌ல்தா‌ன் இ‌ந்த ‌மிருக‌ங்க‌ள் இற‌ந்து‌வி‌ட்டன எ‌ன்று ‌க‌ர்வ‌ம் கொ‌ண்டது.

சி‌ங்க‌த்‌தி‌ன் அரு‌கி‌ல் வ‌ந்து, எ‌ன்னுடைய வேலையை‌ப் ப‌ற்‌றி எ‌ன்ன ‌நினை‌க்‌கிறா‌ய்.. நா‌ன் க‌த்‌தியே இ‌த்தனை ‌மிருக‌ங்களை கொ‌ன்று‌வி‌ட்டே‌ன் பா‌ர்‌த்தாயா எ‌ன்று க‌ர்வ‌த்துட‌ன் கே‌ட்டது.

அத‌ற்கு ‌சி‌ங்க‌ம்.. ஆமா‌ம்.. உ‌ன் வேலையை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்ல வே‌ண்டுமா எ‌ன்ன? ‌நீதா‌ன் க‌த்து‌கிறா‌ய் எ‌ன்று தெ‌ரியாம‌ல் இரு‌ந்‌திரு‌ந்தா‌ல் ஒரு வேளை நானு‌ம் ப‌ய‌த்‌திலேயே செத்து‌ப் போ‌‌யிரு‌ப்பே‌ன் எ‌‌ன்று பாரா‌ட்டியது.



இன்றைய செய்திகள்

18.06.2025

⭐ தமிழ்நாட்டில் புதிதாக 3,103 வழித்தடங்களில் மினிபஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

⭐இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அரபு நாடுகளில் பணியாற்றி வரும் 92 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

⭐சென்னையிலிருந்து ,,
திருநெல்வேலிக்கு பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கூடுதல் இரயில்கள் இயக்கப்படும் - தெற்கு இரயில்வே அறிவிப்பு.

⭐நீட் மறுக் கூட்டல் அறிவிப்பு தேதி ஒத்திவைப்பு-

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 பாரிஸ் டயமண்ட் லீக்கிற்கு நீரஜ் சோப்ரா உறுதி செய்யப்பட்டார்.
இந்தியாவின் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா பாரிஸ் டயமண்ட் லீக் தொடக்கப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

🏀U-23 & சீனியர் பெண்கள் கால்பந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


Today's Headlines

✏ The minibus scheme has been introduced on 3,103 new routes in Tamil Nadu.

✏ Additional trains will be run from Chennai to Tirunelveli to avoid passenger congestion - Southern Railway announcement

✏ NEET re-valuation  announcement date postponed

✏ The Israel-Iran conflict has disrupted crude oil production, putting 9.2 million Indians working in Arab countries at risk of losing their jobs.

SPORTS NEWS

🏀 Neeraj Chopra confirmed for Paris Diamond League. India's Olympic javelin champion Neeraj Chopra has been included in the starting list for the Paris Diamond League.

🏀 U-23 & Infront Women's Football Teams Announced


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-06-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-06-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 786:

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

விளக்கம் :
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்."


பழமொழி :
No good building without a good foundation.

நல்ல அஸ்திவாரம் இன்றி நல்ல கட்டடம் இல்லை.


இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

நூறு அறிவாளிகளோடு மோதுவதை விட ஒரு மூடனோடு மோதுவது சிரமமானது.

ஈ.வே.ரா.பெரியார்


பொது அறிவு :

01. உலக எழுத்தறிவு நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?            

                    செப்டம்பர் 8

                      September  8

02.அரசியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?       

                    அரிஸ்டாட்டில்

                     Aristotle


English words & Tips :

dream     -      கனவு

many       -        பல


Grammar Tips

Tips to write plurals

* Uncountable objects won't have plural forms


Grass – grass
Sand – sand
Fish – fish


* Irregular Plurals:


         Some nouns have unique plural forms that don't follow the standard rules, like "child" becoming "children" or "man" becoming "men".


அறிவியல் களஞ்சியம் :

அறிவியல் வரலாற்றில் இதுவரை மரபணு மாற்ற CRISPR-Cas9 தொழில்நுட்பம், பல விலங்குகள், தாவரங்கள் ஏன் பாக்டீரியா மீது கூட பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக ஜெர்மனியில் உள்ள பெய்ரூட் பல்கலை, சிலந்திகள் மீது பயன்படுத்தி உள்ளது. மரபணு மாற்றப்பட்ட சிலந்தி ஒளிர்கின்ற சிவப்பு நிற வலையைப் பின்னுகிறது. சிலந்திகளின் வலை நுால் பல துறைகளில் பயன்படுகிறது.


ஜூன் 17

லியாண்டர் பயஸ் அவர்களின் பிறந்தநாள்

லியாண்டர் பயஸ் (பி. ஜூன் 17, 1973) புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் ஆவார். இவர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். லியாண்டர் பயஸ் கோவாவில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்தவர். இவரது தாயாரான ஜெனிபர் பயஸ் பிரபலமான கூடைப்பந்து வீரரவார். 1980 ஆசியக் கூடைப்பந்துப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர். இவரது தந்தையான வெஸ் பயஸ் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி (ஹொக்கி) அணியில் விளையாடியவர்.



நீதிக்கதை

ஒரு ஊரில் மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வேட்டையாடுவதில் அதிக இன்பம். அவர் தமது ஆயுதங்களுடன் காட்டில் கொடிய மிருகங்களை வேட்டையாடி விட்டு நகருக்கு எல்லையில் உள்ள கோயில் மரத்தின் நிழலில் சிறிது நேரம் ஓய்வாக உறங்கிக் கொண்டிருந்தார்.

திடீரென்று எங்கிருந்தோ ஒரு கல் வந்து மன்னரை காயப்படுத்தி, அவர் தூக்கத்தை கலைத்தது. சுற்றி இருந்த காவலர்கள் நாலா பக்கமும் சென்று, ஒரு நடுத்தர வயது பெண்ணை பிடித்து, அழைத்து வந்து மன்னர் முன் நிறுத்தினார்கள்.

மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “ஏனம்மா என் மீது கல்லை எறிந்தாய்? அது என் தூக்கத்தை கலைத்ததுடன் என்னையும் காயப்படுத்தி விட்டது” என்றார்.

அதற்கு அந்த பெண் அரசரை பார்த்து, “மன்னர் பெருமகனே, நான் காட்டில் விறகு வெட்டியும், அவைகளை பொறுக்கியும், நாட்டில் விலைக்கு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் என் குழந்தைகளுக்கு உணவு அளிக்கிறேன்.

வரும் வழியில் மரத்தில் பழங்கள் இருப்பதை பார்த்தேன். என் குழந்தைகளின் நினைவு வந்தது. பிள்ளைகளின் பசியை போக்குவது பெற்றவள் கடமை அல்லவா?.

அந்த பழங்களை பறிப்பதற்காக ஒரு கல்லை எடுத்து மரத்தில் எறிந்தேன். தாங்கள் மர நிழலில் உறங்கிக் கொண்டிருந்தது தூரத்தில் இருந்து எனக்கு தெரியவில்லை.

நான்  எறிந்த அந்த கல்லானது உங்கள் மீது பட்டு உங்கள் தூக்கத்தை கலைத்ததுடன், உங்களையும் காயப்படுத்தி விட்டது. இந்த தவறுக்கு நான் தான் காரணம் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று வேண்டி நின்றாள்.

மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “பெண்ணே, நீ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கின்றாய். அது உன் சிறந்த பண்பு. உன்னை மன்னித்து விட்டேன்”, என்று கூறியதோட அப்பெண்ணுக்கு இரண்டு பசுக்களையும், கை செலவுக்கு பணத்தையும் கொடுக்க ஆணையிட்டார்.

சுற்றி இருந்த காவலர்கள் மன்னரை நோக்கி, “அரசே, தங்களை கல்லால் அடித்தவளை மன்னித்ததுடன் அவளுக்கு பரிசும் தருகிறீர்கள் இச்செயல் எங்களுக்கு வியப்பு அளிக்கிறது” என்றனர்.

காவலர்களை பார்த்து மன்னர், “காவலர்களே, அறிவற்ற மரம் கல்லால் அடித்தால் பழம் தருகிறது. அவ்வாறு இருக்க அறிவுள்ள நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?. மேலும் அவள் வேண்டுமென்று என்னை கல்லால் அடிக்கவில்லை.

பழங்களை உதிர்க்கவே கல்லால் அடித்தால் அது தவறுதலாக என் மீது பட்டு என்னை காயப்படுத்தியது. அவள் தான் செய்த தவறுக்கு வருந்தி என்னிடம் மன்னிப்பு கேட்டாள்.

அது மட்டுமல்ல அவள் தன் பிள்ளைகளின் பசியை போக்கவே மரத்தின் மீது கல் எறிந்தாள். அது தாயாகிய அவள் கடமை அல்லவா?. அவள் அவளுடைய பிள்ளைகளுக்காக அவ்வாறு செய்தாள்.

நான் என் குடிமக்களுக்காக அவளுக்கு பரிசு வழங்கினேன்” என்றார். காவலர்கள் மன்னரின் விளக்கம் கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

நீதி : செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பது சிறந்த குணமாகும். எனவே, நாம் தெரியாமல் தவறு செய்திருந்தால் உரியவரிடம் மன்னிப்பு கேட்டு பழக வேண்டும்.


இன்றைய செய்திகள்

17.06.2025


⭐ SBI வங்கி கடன் வட்டி வீதம் 2.5% ஆக குறைப்பு -

⭐ இந்தியா தனது அரிய வகை கனிமங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தவுள்ளது.

⭐ தமிழகம் முழுவதும் கடந்த 25 நாட்களில்,  10 லட்சம் மோசடி எஸ்.எம்.எஸ் லிங்க் தடுத்து நிறுத்தம்: சைபர் க்ரைம் கூடுதல் எஜிபி சந்தீப் மிட்டல் தகவல்.

⭐ இஸ்ரேலில் விடியற்காலையில் டெல் அவிவ் மற்றும் ஹைஃபாவில் ஈரான் ஏவுகணைகளை ஏவி, வீடுகள், ஹோட்டல்கள் மற்றும் மின் உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆறு நகர அணிகள் பங்கேற்கும் முதல் ரக்பி பிரீமியர் லீக் ஜூன் 15 அன்று மும்பையில் தொடங்கியது.

🏀 பொகாரோவின் ஆர்பிஎஃப்
பாராக்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஜார்க்கண்டின் 18 வயதுக்குட்பட்டோர் மாநில அளவிலான கபடி போட்டியில் 22 மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 639 சிறுவர், சிறுமிகள் பங்கேற்கின்றனர்.

🏀3 ஆண்டுகளுக்கு பிறகு மகளிர் சென்னை டென்னிஸ் போட்டி அக்டோபர் மாதம்  நடைபெற உள்ளது.. சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு அறிவிப்பு


Today's Headlines

✏️ SBI Bank loan interest rate reduced to 2.5%

✏️ India planned to stop exporting its rare earth minerals to other countries.

✏️ 10 lakh fraudulent SMS links intercepted across Tamil Nadu in last 25 days: Cyber Crime Additional AGP Sandeep Mittal.

✏️ In Israel, Iran fired missiles at Tel Aviv and Haifa in the early hours of the morning, hitting homes, hotels and electrical infrastructure.

*SPORTS NEWS*

🏀 The first Rugby Premier League, featuring six city teams, began in Mumbai on June 15.

🏀  A team of 639 Boys and Girls from 22 districts are participating in the Jharkhand Under-18 State Level Kabaddi Tournament being held at the RBF Barracks Ground, Bokaro.

🏀 International Tennis Federation announced, The Women's Chennai Tennis Tournament will be held in October after 3 years..


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Krishnarayapuram Block - Vacant Places

  கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் - காலிப் பணியிடங்கள் விவரம்  Karur District, Krishnarayapuram Union - Vacancy Details *தொடக்கப்பள...