கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School Morning Prayer Activities லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
School Morning Prayer Activities லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-07-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-07-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 101:

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.     

  விளக்கம்: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.


பழமொழி :
Winners never quit, and quitters never win.

வெற்றி பெறுவோர் ஒரு போதும் கைவிட மாட்டார்கள்.  கைவிடுவோர் வெற்றி பெற மாட்டார்கள்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :

அன்புள்ள மனிதன் தான் எதிலும் வெற்றியைப் பெறுகின்றான் - ரமணர்


பொது அறிவு :

01.உலகின் கூரை என்று அழைக்கப்படும் பீடபூமி எது?

         திபெத் பீடபூமி(Tibetan plateau)

02..தமிழ்நாட்டின் தலைமை தேர்தல்  ஆணையர் யார்?

  திருமதி. அர்ச்சனா பட்நாயக் I.A.S

Tmt. Archana patnaik, I.A.S


English words :

variants–a slightly different form of a thing. திரிபு வடிவம் அல்லது உருவம்


Grammar Tips:

Small –not big
Tiny - smaller than small
Small: A general term for something of limited size
Ex. "She had a small cup of coffee.
"Tiny: Implies a very, very small size.
Ex: "He took a tiny sip of his coffee."


அறிவியல் களஞ்சியம் :

மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது.


ஜூலை 11

உலக மக்கள் தொகை நாள்

உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.


நீதிக்கதை

ஒரு ஊரில் ஒரு எலி இருந்தது. ஒருநாள் அதற்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை.‌ பசியோட அலைந்த எலி ஓரிடத்தில் ஒரு ஓட்டை தெரிவதை பார்த்தது. அதன் உள்ளே சென்றது. அங்கு பார்த்தால் நிறைய தானியங்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதைக் கண்ட எலி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. அங்கே இருந்து அந்த தானியங்களை உண்ண ஆரம்பித்தது. அதிக ஆசையால் சோம்பேறித்தனத்தால் அங்கேயே தங்கியிருந்து எல்லா தானியங்களையும் தானே சாப்பிட்டு முடிக்க முடிவு செய்தது.‌ உணவுத் தேடி எங்கும் அலைய வேண்டாம் என்று நினைத்து சந்தோஷப்பட்டது.‌ சில நாட்களுக்குப் பின்பு வெளியில் வந்து வெளி உலகப் பார்க்க நினைத்தது. ஆனால் வேலை செய்யாமல் இருந்து சாப்பிட்டதினால் உடம்பு மிகவும் பெருத்து விட்டது. இப்போது அதனால் அந்த ஓட்டை வழியாக வெளியே வர முடியவில்லை. அங்கேயே முட்டி மோதி இறந்து போனது

நீதி:  பேராசை பெருநஷ்டம்


இன்றைய செய்திகள்

11.07.2025

⭐தமிழகத்தில் தொழில்துறை தலைநிமிர்ந்து நிற்கிறது மு.க.ஸ்டாலின்

⭐ கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

⭐டெல்லியில் நிலநடுக்கம் - பீதியில் மக்கள்

⭐எலான் மஸ்க்கின் Starlink செயற்கைகோள்களுக்கு இந்திய விண்வெளி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

⭐டிரம்ப் உத்தரவு எதிரொலி: 2,000 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் நாசா

🏀 விளையாட்டுச் செய்திகள்🥳

🏀லார்ட்ஸ் டெஸ்ட்: ஒரே ஓவரில் இங்கிலாந்தின் தொடக்க வீரர்களை வீழ்த்திய நிதிஷ் ரெட்டி..!

🏀ஆசிய கோப்பை தகுதிச்சுற்று ரவுண்ட் போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிராக இந்தியா 0-1 எனத் தோல்வியடைந்தது.


Today's Headlines

✏️ Tamil nadu CM M.K. Stalin noticed our Industry in Tamil Nadu is standing High

✏️ Coimbatore District Collector has advised people to be cautious. Because, Nipah virus has been reported in the state of Kerala. Therefore, the

✏️ Earthquake in Delhi ,so that the  People in panic

✏️Indian Space Regulatory Authority approves Elon Musk's Starlink satellites

✏️Echo of Trump's order: NASA to lay off 2,000 senior officials

*SPORTS NEWS

🏀 Lord's Test: Nitish Reddy bowls out England openers in one over.

🏀 India lost 0-1 to Hong Kong in the Asia Cup qualifiers.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-07-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-07-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 94:

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. 

விளக்க உரை: யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.


பழமொழி :
kindness costs nothing. 

நற்குணத்திற்கு செலவு கிடையாது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :

உண்மையான வாழ்க்கை என்பது மற்றவர்களுக்காக வாழ்வதாகும்

     –புரூஸ்லீ


பொது அறிவு :

01.' தமிழ்நாட்டின் கடல் நுழைவாயில்""  எது?

                 தூத்துக்குடி(Tuticorin)

02. இந்தியாவின் வர்த்தக தலைநகரம் எது?

                   மும்பை (Mumbai)


English words :

enchanted – pleased or very interested, மகிழ்ச்சியுற்ற, கவரப்பட்ட


Grammar Tips:

Raj's and simran's house

Joint possession

When two nouns are closely connected and show joint ownership
Apostrophe+ s 's is added only to the second noun

Raj and simran's house

Separate possession

When two  or more nouns imply separate ownership each noun must take its own apostrophe+s

Raj's and simran's house


அறிவியல் களஞ்சியம் :

இதயம் 24 மணிநேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மைல் நீள ரத்தகுழாய்களின் வழியே பரவச்செய்கிறது. இது உண்டாகும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடை உள்ள பொருளை பூமியில் இருந்து ஓரடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. 


ஜூலை 10

சீகன் பால்க் அவர்களின் பிறந்தநாள்

சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பிப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது. முதன் முதல் இந்தியாவில் அச்சகத்தை ஆரம்பித்தவர். முதன் முதல் இந்தியாவில் காகித ஆலையை ஆரம்பித்தவர். முதன் முதல் தமிழ் நாள்காட்டியை அச்சிட்டு வெளியிட்டவர். முதன் முதல் தமிழ் உரைநடையை அறிமுகப்படுத்தியவர். முதன் முதல் பெண்கள் பள்ளியை ஆரம்பித்தவர்.முதன் முதல் ஏழை பிள்ளைகளுக்கு காப்பகத்தை துவங்கியவர். முதன் முதல் பெண்களுக்கு தையல் கூடம் ஆரம்பித்தவர். முதன் முதல் மதிய உணவு வழங்குவதை துவங்கியவர். முதன் முதல் பள்ளி பிள்ளைகளுக்கு பாடநூலை அச்சிட்டவர்.  முதன் முதல் தமிழ் புரோட்டஸ்டன்ட் ஆலயத்தை கட்டினவர். முதன் முதல் பல் சமய உரையாடலை துவங்கினவர்.முதன் முதல் தமிழ் அகராதியை உருவாக்கினவர். முதன் முதல் தென்னிந்திய கடவுள்களின் வரலாற்றை எழுதியவர்.



நீதிக்கதை

பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.

“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.


இன்றைய செய்திகள்

10.07.2025

⭐20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⭐ஆகஸ்ட் 1 முதல் புதிய வரிவிதிப்பு
முறை நடைமுறைக்கு வரும் - அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி

⭐அடுத்த 5 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூல் குடிநீர் இல்லாத முதல் பெரிய நகரமாக மாறக்கூடும் என மெர்சி கார்ப்ஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.

⭐பி.எட். மாணவர்கள் சேர்க்கை: இணையதள விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் நீட்டிப்பு.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.


Today's Headlines

✏Tamilnadu Chief Minister M.K. Stalin  has announced 20 lakhs of  students to be provided laptops soon.

✏US President Trump confirms that  announced    New tax system will come into effect from August 1st.

✏Mercy Corps has warned that Kabul, the capital of Afghanistan, could become the first major city to run out of drinking water in the next 5 years.

✏ B.Ed. Admissions: Deadline for online application registration extended.

SPORTS NEWS

🏀The Indian cricket team has gone to England to participate in a 5-match Test series. England won the first Test and India won the second Test. As a result, the series is tied 1-1.

Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-07-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-07-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 92:

அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்            

விளக்கம் : முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.


பழமொழி :
A journey of a thousand miles begins with a single step.

ஆயிரம் மலை பயணம் ஒரு அடியில் தான் தொடங்குகிறது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :

ஒருவரது பேச்சு அவரது நடத்தையை எடுத்துக் காட்டும் ஒரு கோணமாகும். - ஜேம்ஸ் பார்ஸன்.


பொது அறிவு :

01.தமிழ்நாட்டில் மாமல்லபுரம் நகரை உருவாக்கிய மன்னன் யார்?

முதலாம்  நரசிம்மவர்ம பல்லவன்(Narasimhavarma pallava I)

02. இந்தியாவில் நறுமணப் பொருட்களின் தொட்டில் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?            

       கேரளா( Kerala)


English words :

Riddle – a difficult question which has a clever or amusing answer. புதிர்


Grammar Tips:

The radius of both the circles are equal

In this sentence radius should be replaced by radii.



அறிவியல் களஞ்சியம் :

மனித உடலில் 60 சதவிதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும். அதாவது நூறு கிலோ மனிதனின் உடலில் 60 லிட்டர் தண்ணீர் தான் இருக்கிறது. 


ஜூலை 09

9 ஜூலை 1875 - இந்தியாவின் முதல் பங்குச் சந்தையான மும்பை பங்குச் சந்தை இந்த நாளில் நிறுவப்பட்டது.



நீதிக்கதை

பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்

ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது.

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.

தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.


இன்றைய செய்திகள்

09.07.2025

⭐தமிழகத்தின் கிராம பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 100 உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ.505 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

⭐ ஜப்பானிலிருந்து வாகனங்கள் மற்றும் அரிசியை அதிகளவில் இறக்குமதி செய்து வரும் அமெரிக்கா ஜப்பானிய பொருள்களுக்கு 35 சதவீதம் வரை வரி விதிப்பதாக அறிவித்துள்ளது.

⭐தமிழகத்தில் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

⭐கடலூர் தனியார் பள்ளி வாகனம் மீது ரெயில் மோதி மாணவர்கள் உயிரிழப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀எகிறிய ஐபிஎல் பிராண்ட் மதிப்பு.. சிஎஸ்கே அணியை பின்னுக்கு தள்ளிய RCB, MI

🏀குரோஷியா சர்வதேச செஸ் போட்டி: நார்வே வீரர் கார்ல்சென் 'சாம்பியன்'.


Today's Headlines

✏️The Tamil Nadu government has issued an order allocating Rs. 505 crore for the construction of 100 high-level bridges on panchayat and panchayat union roads in rural areas of Tamil Nadu.

✏️The Tamil Nadu government has ordered the immediate filling of 2,299 vacant village assistant posts in Tamil Nadu.

✏️ Students killed after train hits the private school vehicle in Cuddalore.

✏️The United States, which imports a large amount of vehicles and rice from Japan, has announced that it will impose a tax of up to 35 percent on Japanese goods.

*SPORTS NEWS*

🏀 IPL brand value soars.. RCB, MI overtake CSK

🏀 Croatia International Chess Tournament: Norwegian Carlsen 'champion'.

Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 91:

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்         
விளக்கம் : அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.


பழமொழி :
Every cloud has a silver lining.

துன்பத்திற்குப் பிறகு நன்மை வரும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :

ஆண்களும்,பெண்களும் ஒழுக்கத்தில் நம்பிக்கை கொள்வது, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதற்கு அடிப்படை - லாண்டார்.


பொது அறிவு :

1. இந்தியாவிலிருந்து முதன் முதலில் அண்டார்டிகாவிற்கு சென்ற  இரு பெண் விஞ்ஞானிகள் யாவர்?

அதிதி பந்த்(Aditi pant)       Dr.சுதிப்தாசென்குப்தா (Sudipta Sengupta)

02. உலகின் மிக நீளமான தொங்கு பாலம் எங்கு உள்ளது?

கானாக்கலே பாலம் -துருக்கி

Canakkale Bridge- Turkey


English words :

broadcast – to send out radio or television programmes. ஒலிபரப்பு அல்லது ஒளிபரப்பு.


Grammar Tips:

Very, so
Very a common intensifier means highlight the adjectives and adverbs

Ex. It is a very good book

'So' high degree of intensifier

Ex. The view is so beautiful

2. Very can be used before superlative adjectives


     Ex. The very best

So" is used with "much" and "many" to emphasize a large quantity.

There were so many people at the party."


அறிவியல் களஞ்சியம் :

ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது.


ஜூலை 08

செளரவ் கங்குலி அவர்களின் பிறந்தநாள்

சௌரவ் சந்திதாஸ் கங்குலி (Sourav Chandidas Ganguly; ஒலிப்புⓘ; பிறப்பு: சூலை 8, 1972) தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவரும் ஆவார். தற்போது இவர் வங்காளத் துடுப்பாட்ட அவையின் தலைவராக உள்ளார்.[1] சர்வதேச துடுப்பாட்ட அரங்கில் மிகச் சிறந்த அணித் தலைவராகவும் மட்டையாளராகவும் விளங்கினார்.வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர் எனவே இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (வலது புறத்தின் கடவுள்) என அழைக்கப்படுகிறார்


நீதிக்கதை

ஒற்றுமையே பலமாம்

ஒரு காலத்துல ஒரு வியாபாரி வாழ்ந்துகிட்டு வந்தாரு.

அவருக்கு மூணு மகன்கள்.

அவுங்க மூணுபேரும் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க.

அந்த வியாபாரி எவ்வளவு முயர்ச்சி செஞ்சும் அவுங்கள ஒன்னு சேக்க முடியல.

ஒருநாள் அந்த வியாபாரி மூணு மகன்களையும் கூப்பிட்டாரு.

உங்களுக்கு ஒரு போட்டி இந்த கரும்பு கட்ட பிரிச்சி எல்லா கரும்பையும் ரெண்டா உடைக்கணும்னு சொன்னாரு.

இதைக்கேட்ட மூணுபேரும் வேக வேகமா உடைக்க ஆரம்பிச்சாங்க.

மூணுபேரும் ரொம்ப சுலபமா அந்த கரும்புங்கள உடைச்சாங்க.

உடைச்சு முடிச்சு அவுங்களுக்குள்ள யார் பலசாலின்னு மீண்டும் சண்டை வந்துச்சு.

இத பாத்த அந்த வியாபாரி போட்டி இன்னும் முடியல.

இப்ப அந்த கரும்பு கட்ட பிரிக்காம யாரு முழுசா உடைக்க முடியும்னு கேட்டாரு.

மூணு மகன்களும் முயற்சி பண்ணி பாத்தாங்க.

கரும்பு பிரிச்சி உடைக்க வேகமா உடைக்க முடிஞ்சது.

ஆனா இப்போ முடியலன்னு ரொம்ப வறுத்த பட்டாங்க.

அப்பத்தான் அந்த வியாபாரி பேச ஆரம்பிச்சாரு.

பாத்திங்களா நீங்களும் இந்த கரும்பு மாதிரிதான்,

தனி தனியா இருந்தீங்கன்னா உடைஞ்சி போயிடுவீங்க.

ஆனா மொத்தமா கட்டா இருந்தீங்கன்னா உடையாம பலமா இருப்பீங்க.

ஒற்றுமையே பலம்னு சொல்லி மூணு மகன் களையும் ஒண்ணா நட்பா இருக்க சொன்னாரு.

இதைக்கேட்ட அந்த மூணு பேரும் இத்தனை நாளா தனி தனியா இருந்தத.

நினைச்சு வருத்தப்பட்டாங்க.

பழமொழி : ஒற்றுமையே பலமாம் .


இன்றைய செய்திகள்

08.07.2025

⭐அரசு கலை கல்லூரிகளில் 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை - அமைச்சர் தகவல்.

⭐அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழை உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு.

⭐திருவாரூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்- கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர்.

⭐ தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 367-ல் ஆட்டமிழக்காமல் இருந்தும் லாரா சாதனையை முறியடிக்காமல் டிக்ளேர் அறிவித்த முல்டர்.

🏀சிமர்ஜித் சிங் இதுவரை இல்லாத அளவிற்கு 39 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.


Today's Headlines

Today's News

⭐ 20 % Additional Student Admissions in Government Arts Colleges - Minister Information.

⭐ Due to unprecedented  heavy rains in Texas of the United States the number of people who lost their lives rises to 81.

⭐ Chief Minister is having 2 Day Tour- Field Survey in Thiruvarur District.

⭐ 1,01,973 students have been provided with employment through campus conducted under the Department of Special Planning of the Government of Tamil Nadu.

🏀 Sports News

🏀 Mulder announced the Dicker without breaking the  Laura's record despite being  unbeaten in 367 runs.

🏀 Simarjit Singh has been auctioned for Rs 39 lakh.

Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-07-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-07-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 86:

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
   
விளக்கம் : வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.


பழமொழி :
The more you read,the wider you see.

அதிகமாகப் படிக்கிற போது, உலகம் பெரியதாகத் தெரிகிறது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :

ஒரு துளி பேனா மை பல லட்சம் பேரை சிந்திக்க வைக்கும - பைரன்


பொது அறிவு :

01.இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது?

            கட்ச் மாவட்டம்-குஜராத்

Kutch District - Gujarat

02. இந்தியாவில் மிக உயரமான அணை எது?

                 தெஹ்ரி அணை

உத்தரகண்ட்

Tehri Dam, Uttarakhand


English words :

awefully good – very good or extremely good. மிகவும் நன்று. aweful என்பது எதிர்மறை வார்த்தை ஆனால் good என்பதோடு சேரும் போது மிகவும் நன்று ஆகிறது.


It is an oxymoron word. Two different meaning words combined together to form a  word of 'greatness'


Grammar Tips:

They are Twin brethren

In this sentence we should use
They are twin brothers

Hint
Brother meant real life brothers from the same parent

Brethren meant people from the same group religion and so

Similarly

Cloth meant pieces or types of fabric/ materials
Clothes meant things we wear

Find out the meaning of
Dies and Dice
Indexes and Indices


அறிவியல் களஞ்சியம் :

ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப்பகுதியில் நடந்துச் சென்றபோது தனது கால்சட்டையில் ஒரு வித செடியின் முள்ளும் விதையும் ஒட்டியதன் அடிப்படையில் தற்செயலாக வெல்க்குரோ ஜிப்பினை கண்டுபிடித்து 1957ல் காப்புரிமை பெற்றார்.


ஜூலை 07

மகேந்திர சிங் தோனி அவர்களின் பிறந்தநாள்
  
மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி என்று (பிறப்பு: 7 சூலை, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும் , 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. நடுவரிசை மட்டையாளரும் இலக்குக் கவனிப்பாளரான இவர் ODI போட்டிகளில் 10,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்துள்ளார். இவர் ஒரு நாள் பன்னாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தினை முடித்துவைக்கும் திறன் கொண்டவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.மேலும் அவர் காலத்திலான ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்டத்தின் சிறந்த இலக்குக் கவனிப்பாளர்களில் ஒருவராகவும் சிறந்த அணித்தலைவராகவும் கருதப்படுகிறார்


நீதிக்கதை

நாவடக்கம் இல்லாத அரசன்


சேர நாட்டின் மேற்குக் கரையோரமுள்ள நெய்தல் நாட்டின் மன்னன் மூவன். அந்நெய்தலின் உட்பகுதி நல்ல வளமான வயல்களை உடைய செழிப்புமிக்க நாடு.

இந்த அரசன் திறமையானவன், நற்குணங்கள் பல உடையவன். ஆனால், நாவடக்கம் இல்லாதவன். யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவான். தான் பேசிய பேச்சிற்கு வருத்தமும் தெரிவிக்கமாட்டான். அமைச்சர்களும் கூட இவனிடம் தங்கள் கருத்துக்களைச் சொல்ல அஞ்சினர்.

ஒரு சமயம் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் மூவனைப் பாடிப் பரிசு பெற்றுச் செல்ல வந்தார். இப்புலவர் குமணவள்ளலைப் பாடிப் பரிசுகள் பல பெற்றவர். அப்பரிசுகளை எல்லாம் ஏழைகளுக்கு கொடுத்ததால் மறுபடியும் ஏழ்மை நிலையை அடைந்தார்.

புலவர் பல நாட்கள் காத்துக்கிடந்த பின் ஒரு நாள் மூவனை அரசவையில் சந்தித்து பாடல் ஒன்றைப் பாடினார்.

“அரசே, நான் ஒரு புலவன். என் பெயர் பெருந்தலைச் சாத்தனார்.”

“உமது பெயருக்கும் உருவத்திற்கும் சிறிதும் பொருத்தம் இல்லையே!”

“ஏன் மன்னா அப்படிக் கூறுகிறீர்கள்?”

“பெருந்தலைச் சாத்தனார் என்கிறீர்கள். உமது தலை பெரியதாக இல்லையே… சிறியதாகத்தானே இருக்கிறது.”

“மன்னிக்க வேண்டும் மன்னா. பெருந்தலை என்பது எனது ஊரின் பெயர்!”

“ஓ, அப்படியா செய்தி!”

“நான் குமணவள்ளலைப் பாடிப் பல பரிசுகள் பெற்றவன்!”

“இப்போதும் அவனிடமே செல்ல வேண்டியதுதானே. உன் போன்ற புலவர்களுக்குக் கொடுத்துக் கொடுத்து அவன் போண்டியாகி இருப்பான்!”

“அரசே, பழம் பழுத்த மரங்களை நாடித்தானே பறவைகள் செல்லும். அதைப் போல மன்னர்களையும், வள்ளல்களையும் நாடி பாவலர்களாகிய நாங்கள் வருகிறோம்.”

“நீங்கள் பொய்யாக எதையும் புனைந்து பாடுவீர்கள். இல்லாததை இருப்பதாகக் கூறுவீர்கள். அதைக் கேட்டு சிலர் மகிழ்ந்துபோய் உங்களுக்குப் பரிசு கொடுக்கிறார்கள். அவர்கள் தற்புகழ்ச்சியை விரும்புபவர்கள். நீங்கள் பொய் சொல்லியே பிழைக்கும் ஒரு வஞ்சகக் கூட்டம்… யாரங்கே, இந்தப் புலவரை வெளியே அனுப்பு.”

“இல்லை, நானே சென்றுவிடுகிறேன்.”

புலவர் அவமானத்தால் முகம் சோர்ந்து சென்றதைக் கண்ட மூவன் சிரிசிரி என்று சிரித்தான்.

மூவன், சேரன் கணைக்கால் இரும்பொறைக்குக் கட்டுப்பட்ட ஒரு குறுநில மன்னன். மூன்று ஆண்டுகளாகவே மூவன் கப்பம் கட்டாததை அறிந்தான் இரும்பொறை.

“என்ன சொல்கிறான் மூவன் என்று அறிந்துவா!” எனத் துõதுவனை

அனுப்பினான்.

மூவன் அவைக்கு வந்த தூதுவன், மூவனை மரபுப்படி வணங்கி, “”மன்னன் கணைக்கால் இரும்பொறையின் துõதுவன் நான்,” என்றான்.

“கணைக்காலனுக்குக் கருவூலத்தில் பணத்தட்டுப்பாடு வந்ததும் என் நினைவு வந்துவிட்டதாக்கும்… இங்கே என்ன கொட்டியா கிடக்கிறது?”

“மன்னா, நான் உங்களிடம் யாசகம் ஒன்றும் கேட்க வரவில்லை. எங்கள் மன்னருக்கு மூன்று ஆண்டுகளாக நீங்கள் கட்ட வேண்டிய திறையைச் செலுத்தவில்லை.”

“தூதுவனே! நன்றாகக் கேட்டுக் கொள். எனது நெய்தல் நாடு இன்றிலிருந்து சுதந்திர பூமி. நாங்கள் இனி யாருக்கும் கப்பம் கட்டமாட்டோம்.”

“எமது அரசரின் பெருமையையும், வலிமையையும் தெரிந்தே நீங்கள் இப்படிப் பேசுவது மிகவும் வருந்தத்தக்கது.”

“உனது கணைக்காலனுக்கு நான்தான் காலன். என்னைப் போர்க்களத்தில் வந்து சந்திக்கும்படி கூறு.”

“உங்களால் எம் மன்னனை வெல்ல முடியும் என்று நீவிர் நினைப்பது உங்கள் இறுமாப்பு. எமது மன்னனின் வலிமை தெரியாமல் பேசுவது மிகவும் இரங்கத்தக்கது.”

“அடே தூதுவனே… இங்கே நிற்காதே, ஓடிவிடு. இல்லையெனில் உன் முன்பற்களைத் தட்டிவிடுவேன். எச்சரிக்கை!”

தூதுவன் கணைக்கால் இரும்பொறையிடம் வந்து நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறினான்.

“தூதுவன் ஒருவனின் பற்களைத் தட்டுவேன் என்று நாவடக்கம் இல்லாமல் சொன்ன அந்த மூவனைப் போர்க்களத்தில் சந்தித்தே தீருவேன்,” என்று முடிவு கட்டினான் இரும்பொறை.

“மன்னா, சிறு நரியை எதிர்க்கச் சிங்கம் செல்வதா? வேண்டாம். இது உங்கள் வீரத்திற்கு இழுக்கு. நாவடக்கமின்றிப் பேசிய அந்த மூவனை வென்று அவன் முன்பற்களை உங்களிடம் கொண்டு வந்து காணிக்கையாக்குகிறேன்.” தளபதி வீரமுழுக்கமிட்டான்.

“அதுவும் சரிதான். மூவன் இனி வாயைத் திறக்கும் போதெல்லாம் நாவடக்கம் வேண்டும் என்பதை உணர வேண்டும். அவன் முன்பற்களைக் கொண்டு வருவது தான் நன்று!”

“சரி மன்னா, அப்படியே செய்கிறேன்.”

“தளபதியாரே, மூவனின் முன்பற்களைப் பிடுங்கி நம் தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவுகளில் பொருத்தி, “யாகாவாராயினும் நாகாக்க. நாவைக் காக்காத மூவனின் பற்களைப் பாரீர்!’ என்று அதன் கீழ் எழுதி வையுங்கள்.”

“உத்தரவு மன்னா!”

கணைக்கால் இரும்பொறையின் படைவீரர்கள் அவனை விரட்டிப் பிடித்து தளபதியிடம் கொண்டு வந்தனர்.

நாவடக்கமின்றிப் பேசிய மூவனின் முன் பற்கள் தட்டப்பட்டன. மன்னன் கூறியவாறே அவை தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவில் பதிக்கப்பட்டன.

சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் மூவன் தன் செயலுக்காக வருந்தினான், தன் நாவடக்கமற்ற செயலால் தனக்கும் தன் நாட்டுக்கும் தீராத அவமானம் தேடியதை நினைத்து நினைத்து சேரநாட்டுச் சிறையிலிருந்தே உயிர்விட்டான்.

குழந்தைகளே! வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி பிறருடைய மனதைப் புண்படுத்தாமல் இருக்க மூவனுக்கு ஏற்பட்ட நிலை ஒரு நல்ல பாடம்.


இன்றைய செய்திகள்

07.07.2025

⭐பொறியியல் படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு தொடக்கம்.

⭐ அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் ஆண்டுக்கு 2.895 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஏற்றுமதி பாதிக்கும் என்று உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

⭐உலகில் உள்ள பலவீனமான மக்களுக்கு சுகாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அமெரிக்கா வழங்கி வந்த USAID எனப்படும் சர்வதேச மேம்பாட்டு நிதியுதவி நிறுத்தப்பட்டதின் காரணமாக, வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 1.4 கோடிக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சர்வதேச ரேபிட் செஸ்: இந்திய வீரர் குகேஷ் 'சாம்பியன்' பட்டம் வென்றார்.

🏀வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில் - விராட் கோலி வாழ்த்து.


Today's Headlines

⭐ Engineering Counselling Begins
Counselling for state engineering admissions has officially started today.

⭐ Impact of U.S. Tax Policy
Due to new U.S. tax regulations, Indian exports worth $2.895 billion per year may be affected, says the World Trade Organization.

⭐ USAID Funding stopped – Global Health Risk
The halting of USAID (U.S. Agency for International Development) funding may lead to over 140 million deaths globally by 2030, due to the impact on health and social development for vulnerable people.

🏀 Sports News

🏆 International Rapid Chess:
India’s Gukesh won the Champion title, bringing glory to the nation.

🏏 Shubman Gill Creates History
Following his record-breaking achievement, Virat Kohli congratulates Shubman Gill.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-07-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-07-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 85:

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

விளக்கம்: விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?


பழமொழி :
Knowledge is a garden that blooms forever.

அறிவு என்ற தோட்டம் எப்போதும் மலர்கிறது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

ஒழுங்கு ,கட்டுப்பாடு, நெறிமுறைகள் இல்லாத புத்திசாலித்தனமானது,  மனித இனப் பண்புக் கூறுகளிலேயே மிகவும் அபாயகரமானது -  ஜெஸ்ஸி சியாங்


பொது அறிவு :

01.இந்தியாவில் நிலப் பகுதியை அடிப்படையாகக் கொண்ட முதல் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் (Eco Sensitivity Zone)எது?

மகாபலேஷ்வர் மற்றும்

பஞ்ச்கானி பகுதி-மகாராஷ்டிரா

            Mahabaleshwar and

Punjagani Area-Maharashtra

02. நர்மதை நதி எங்கு உற்பத்தியாகிறது?

      அமர்கண்டக் மலை

மத்தியப் பிரதேசம்

Amarkandak mountain

Madhyapradesh


English words & Tips :

knead - to press and squeeze a mixture of flour and water (dough) with your hands, மாப்பிசைதல்;

Need - .to have to, தேவை.‌ Both the words are homophones.


Grammar Tips:

Ways to make long sound
Magic  ''e'

* Cape

* Bite


அறிவியல் களஞ்சியம் :

நன்னீர் அளவில் பனிமலை/ பனிக்கட்டி 69 சதவீதமும், நிலத்தடி நீர் 30.1 சதவீதமும், மேற்பரப்பு நீர் 0.3 சதவீதமும், மற்றவை 0.6 சதவீதத்தையும் கொண்டுள்ளது. மேற்பரப்பு நீரில், ஏரிகள் 87 சதவீதமும், சதுப்பு நிலங்கள் 11 சதவீதமும் மற்றும் ஆறுகள் 2 சதவீதத்தையும் கொண்டதாக உள்ளன. மொத்த ஹைட்ரோஸ்பியர் நீர்த்தொகுதியில் உத்தேச நீர் அளவு 1,360,000,000 கி.மீ3 (326,000,000 மில்லியன் 3) கன அடிகள்.


ஜூலை 04

மேரி க்யூரி அவர்களின் நினைவுநாள்

மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Salomea Skłodowska-Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934[1]) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார்.

இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903[2], 1911[3] ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்



நீதிக்கதை

சிறந்த ஆயுதம்

சக்கரவர்த்தி அக்பர் சில பிரமுகர்களுடன் நந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பீர்பாலும் இருந்தார். நந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்துப் பரவசமான அக்பர், “ஆகா! பூமியில் ஒரு சொர்க்கம் உண்டு எனில் அது இந்த நந்தவனம்தான்!” என்றார்.

“ஆம், பிரபு! நீங்கள் கூறுவது சரி!” என்று அனைவரும் ஆமோதிக்க, பீர்பால் மட்டும் மௌனமாக இருந்தார். அதைக் கவனித்த அக்பர், “பீர்பால்! சற்று முன் நான் கூறியதில் உனக்கு உடன்பாடு இல்லையா?” என்று கேட்டார்.

“பிரபு! இந்த நந்தவனத்திற்கு அழகைத் தருவது இந்த ரோஜா மலர்கள் தான். ஆனால் அழகு எங்கே உள்ளதோ, அங்கே அபாயமும் உண்டு!” என்றார் பீர்பால். “ஓகோ! ரோஜாப்பூக்களில் உள்ள முட்களைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார்.

“இல்லை, பிரபு! நான் அவற்றைச் சொல்லவில்லை!” என்று பீர்பால் சொல்ல, “அப்படியானால், ரோஜாச் செடிகளின் உள்ளே மறைந்திருக்கும் பாம்புகளைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார்.

“மனிதனால்தான் பாம்புகளுக்கு அபாயம்! நம் காலடியோசையைக் கேட்டவுடனேயே அவை பயந்து ஓடி விடுகின்றன!” என்றார் பீர்பால்.

“பின் நீ எதைத்தான் அபாயம் என்று குறிப்பிடுகிறாய்?” என்று சலிப்புடன் அக்பர் கேட்க, “பிரபு! அபாயம் என்பது அழகை மட்டுமல்ல; வலிமை, செல்வம், புகழ் ஆகிய அனைத்தையும் அபாயம் சூழ்ந்து உள்ளது.

தாங்கள் பாரதத்தின் மிக வலிமை பொருந்திய, மிகப் புகழ்பெற்ற, சகல செல்வங்களையும் ஒருங்கே பெற்ற சக்கரவர்த்தி! ஆனால், மேற்கூறிய விஷயங்களினால், அண்டை ராஜ்யத்து மன்னர்கள் தங்கள் மீது பொறாமை கொண்டுள்ளனர். தங்களை வீழ்த்தி வெற்றிவாகை சூட சதித்திட்டம் இட்டவாறு உள்ளனர்.

அதனால்தான், பூலோக சொர்க்கம் என்று ஒன்று இருப்பதாக நான் எண்ணவில்லை” என்றார். பீர்பாலின் சொற்கள் அக்பரை சிந்திக்கத் தூண்டின. மறுநாள் சபையில் அக்பர், “திடீரென்று ஒருவனை அபாயம் சூழ்ந்தால், அவனுடைய தற்காப்புக்காகப் பயன்படும் சிறந்த ஆயுதம் எது?” என்று சபையோர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்டார்.

“வாள்!” என்றார் ஒருவர். “இல்லை!” என்று மறுத்த பீர்பல், சில சமயங்களில் வாள் பிடித்த கரம் செயலற்றுப் போவதுண்டு!” என்றார். “எதிரி மீது தொலைவிலிருந்தே குறிபார்த்து ஈட்டியை வீசுவதன் மூலம் அபாயத்திலிருந்து தப்பலாம்!” என்றார் மற்றொருவர்.

“பதற்றத்தில் ஈட்டியின் குறி தவறினால், அது பயன்படாது!” என்றார் பீர்பால். “சரிதான்! வாள், ஈட்டி, என்று எந்த ஆயுதமுமே சரியில்லை என்றால், எதுதான் ஆபத்தில் பயன்படும்?” என்று அக்பர் கேட்க, “சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயற்படும் நமது அறிவே சிறந்த ஆயுதம் ஆகும்!” என்றார் பீர்கால்.

“வெறும் பிதற்றல்! நீ ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது உன் மூளை எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கிறேன்!” என்று அக்பர் கிண்டல் செய்ய, சபையோர் அவருடன் சேர்ந்து பீர்பாலை எள்ளி நகையாடினர். “சமயம் வரும்போது நான் கூறியது உண்மை என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்!” என்றார் பீர்பால்.

மறுநாள், அக்பர் சில பிரமுகர்களுடன் நதிக்கரையில் உலவிக் கொண்டிருந்தபோது, பீர்பாலும் உடனிருந்தார். அப்போது, ஒரே கூச்சலும், கூக்குரலும் கேட்க, மக்கள் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர். சக்கரவர்த்தியைக் கண்ட அவர்கள் ஓடோடி வந்து, “பிரபு! ஆபத்து! அபாயம்! பட்டத்து யானைக்கு திடீரென மதம் பிடித்து விட்டது.

அது இந்தப் பக்கம்தான் ஓடி வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உடனே ஓடி விடுங்கள்!” என்று கூச்சலிட்டனர். அவர்கள் கூறி முடிப்பதற்குள் தொலைவில் மதயானை ஓடி வருவது தெரிந்தது.

உடனே, அக்பர் தன் இடையிலிருந்து வாளை உருவ, கூடியிருந்த அனைவரும் தங்கள் வாட்களை உருவிக் கொண்டனர். ஆனால், மதம் பிடித்த யானையை வாள் கொண்டு சமாளிக்க முடியாது என்று உணர்ந்ததும், அவர்கள் திக்பிரமை பிடித்து சிலைகளாக நின்றனர். தன்னைப் பெரிய ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதை அக்பரும் உணர்ந்தார்.

வாளினாலோ, ஈட்டியினாலோ யானையை ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ஆனால் கோழையைப் போல் பயந்து ஓடவும் அவருடைய தன்மானம் இடம் தரவில்லை. எல்லாரும் செய்வதறியாது செயலற்று நிற்க, பீர்பால் சட்டென்று அங்கிருந்த ஒரு பூனையைப் பிடித்து யானையின் முதுகில் வீசியெறிந்தார். யானையின் முதுகில் விழுந்ததால் மிரண்ட பூனை, தன் நகங்களினால் யானையைப் பிறாண்டியது.

வலி பொறுக்க முடியாத யானை, தன் தும்பிக்கையினால் பூனையைப் பிடிக்க முயல, அது தப்பித்துக் கீழேயிறங்கி ஓடியது. யானையின் கோபம் முழுவதும் பூனையின்பால் திரும்ப, அது பூனையைத் துரத்திக் கொண்டே எதிர் திசையில் ஓடியது.

தனது பருத்த உடலைத் தூக்கிக் கொண்டு யானையினால் விரைவாக ஓட முடியவில்லை. போக்குக் காட்டிக் கொண்டே ஓடிய பூனை, சாலையோரப் புதர்களின் உள்ளே மறைய, யானை புதர்களுக்குள் புகுந்து அதைத் தேடியது. இவ்வாறு, யானையின் கவனம் திசை திரும்ப, அக்பரும் மற்றவர்களும் யானையிடம் சிக்காமல் தப்பித்தனர்.

சற்றுநேரம் சிலையாய் நின்ற அக்பர் தெளிவடைந்தவுடன் பீர்பாலைக் கட்டித் தழுவிக் கொண்டார். “பீர்பால்! சபாஷ்! அறிவுதான் சிறந்த ஆயுதம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டாய்! சூழ்நிலைக்கு ஏற்றவாறு மூளையைப் பயன்படுத்தி சிந்தித்து செயற்படுவதே சாலச் சிறந்தது என்ற உண்மையை எங்களுக்குப் புரிய வைத்து விட்டாய்! நீ சொன்னதே சரி! உன்னைப் போன்ற அறிவாளி அருகிலிருந்தால் எந்த அபாயத்தையும் எதிர் கொள்ளலாம்!” என்று மனதாரப் பாராட்டினார்.


இன்றைய செய்திகள்

04.07.2025

⭐வேகமாக கார் ஓட்டுபவர்களின் மரணத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை: உச்சநீதிமன்றம்.

⭐208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

⭐செல்போனால் இளைஞர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம். அமெரிக்க நரம்பியல் அகாடமி எச்சரிக்கை.

⭐காசாவில் வான்தாக்குதல், துப்பாக்கிச்சூட்டில் 82 பாலஸ்தீனர்கள் பலி.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀அதிவேக அரைசதம்: ரிஷப் பண்டிற்கு பிறகு, வைபவ் சூர்யவன்ஷி படைத்த அசத்தல் சாதனை.

🏀கார் விபத்தில் பிரபல போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா பலி.


Today's Headlines

✏️ Supreme Court informed the  Insurance companies that they do not have to pay compensation for the deaths of speeding drivers:

✏️ Tamilnadu Chief Minister M.K. Stalin inaugurated 208 urban health centers

✏️ Kerala government orders to Police should not hesitate to shoot criminals

✏️Mobile phones may cause stroke in young people. American Academy of Neurology warns.

✏️82 Palestinians killed in Gaza airstrikes and gunfire. 

*SPORTS NEWS*

🏀Fastest half-century: After Rishabh Pant, Vaibhav Suryavanshi creates an amazing feat.

🏀Famous Portuguese footballer Diogo Jota dies in car accident.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-07-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-07-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 82:

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று    
   
விளக்கம்: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.


பழமொழி :

Silence is the loudest tool of a thinking mind.

யோசிக்கும் மனதின் அதிபெரிய கருவி அமைதி தான்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

அதிக அதிகாரம் உள்ளவர் அதை மிக மென்மையாக பயன்படுத்த வேண்டும் - செனீக்கா


பொது அறிவு :

01. உலக தடகளப் போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?

           அஞ்சு பாபி ஜார்ஜ்-

             நீளம் தாண்டுதல்

   Anju  Bobby George-  Long jump

02. தென்னிந்தியாவின் எல்லோரா  என்று அழைக்கப்படும் இடம் எது?

             கழுகுமலை-தமிழ்நாடு

             Kalugumalai - Tamilnadu


English words & Tips :

Trustee – தர்மகர்த்தா, பொறுப்பாளி.

  Trust –நம்பிக்கை


Grammar Tips:

Phrase
Under lock and key

Usage
She keeps her jewellery under lock and key

I keep all my secrets under lock and key


அறிவியல் களஞ்சியம் :

பசுபிக் மகா சமுத்திரம் 35.25 சதவீதத்தையும், அட்லாண்டிக் மகா சமுத்திரம் 20.09 சதவீதத்தையும், இந்து மகா சமுத்திரம் 14.65 சதவீதத்தையும் ஆக்ரமித்துள்ளன. கடல் 1.3 X 1018 டன் அளவுள்ள நீரைத் தன்வசம் கொண்டதாக இருக்கிறது.


ஜூலை 03

சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்

2008 ஆம் ஆண்டில், இத்தாலியில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளின் குழு, ரெஸெரோவின் தலைமையில், பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கவும் முடிவு செய்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான வலுவான வழக்கறிஞரான, புகழ்பெற்ற பாதுகாவலர் சர் டேவிட் அட்டன்பரோவின் பிறந்தநாளை ஒட்டி, ஜூலை 3-ஆம் தேதி, முதல் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வு வெற்றிகரமாக இருந்தது, முதன்மையாக இத்தாலியில் பிளாஸ்டிக் பைகள் இல்லாத மாற்றுகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியது.


நீதிக்கதை

எதிர்கால வாழ்க்கை

ஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார்.

அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜவவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான்.

அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு.

வீட்டுக்குள் தாயும் மகனும் ஏதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர்.

” இங்கே என்ன நடக்கிறது?” என்று முல்லா வினவினார்.

” முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன் அடித்து மிரட்டிப் பார்த்தேன் ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் ” என்றாள் தாய் வேதனையோடு.

” குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன்3 எதிர்காலத்துக்கு நல்லதில்லையா?” என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார். பையன் கேட்பதாக இல்லை.

” நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை” என்று அடம்பிடித்தான்.

முல்லா சுற்றும்முற்றும் பார்தார் தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது.

அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார். அதைக்கண்டு தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்.

” அம்மா முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே?” என்று திகைப்போடு கேட்டான் பையன்.

” பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா” என்றார் முல்லா.

இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான்.

அவன் சென்றபிறகு முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார்.


இன்றைய செய்திகள்

03.07.2025

⭐3 ஆயிரம் பயணிகளை கையாளும் வகையில் சென்னை துறைமுக கப்பல் முனையம் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தும் பணி துவங்கி உள்ளது.

  ⭐அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு.

⭐இந்தியாவுடன் குறைந்த வரியில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.

⭐தெற்காசிய நாடுகள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த சார்க் அமைப்பு செயலிழந்துள்ள நிலையில் தற்போது புதிய அமைப்பை உருவாக்க சீனா முயற்சி எடுத்து வருகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀2வது டி20 போட்டி: ஜெமிமா ரோட்ரிக்ஸ், அமன்ஜோத் கவுர் அதிரடியால் இந்தியா வெற்றி.

🏀விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய 23 முன்னணி வீரர், வீராங்கனைகள்.


Today's Headlines

✏️The work of upgrading the Chennai Port Ship Terminal to handle 3,000 passengers has begun at a cost of Rs. 19.25 crore.

✏️New restrictions for foreign students studying in the US.

✏️US President Trump announces a trade deal with India at a low tariff soon.

✏️With the SAARC organization to promote integration among South Asian countries in a dysfunctional state, China is currently trying to create a new organization.

*SPORTS NEWS*

🏀 2nd T20 - Jemimah Rodrigues, Amanjot Kaur,who leads to india's victory.

🏀 Wimbledon Tennis: 23 top players who crashed out in the first round.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-07-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-07-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 77:

என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.

விளக்கம்: எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.


பழமொழி :
Every drop of effort fills the bucket of success.

ஒவ்வொரு முயற்சியும் வெற்றியின் வாளியை நிரப்பும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

எல்லையற்ற அதிகாரம் அபாயகரமான முறைகேட்டில் முடியும் - எட்மண்ட் பர்க்


பொது அறிவு :

01. இந்திய வரலாற்றில் புகழ்பெற்ற பானிபட் என்ற இடம் எந்த மாநிலத்தில் உள்ளது?                

             அரியானா (Haryana)

02.  இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை துறைமுகம் எது?     

                 மும்பை-மகாராஷ்டிரா

                Mumbai - Maharashtra


English words & Tips :

Race - competition between people or vehicle. பந்தயம், இனம்

* Raise - to lift or move, உயர்த்துதல்


அறிவியல் களஞ்சியம் :

புவிப்பரப்பில் 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. இதில் கடல்நீரின் அளவு 97 சதவீதம் மற்றும் நன்னீரின் அளவு 3 சதவீதமாகும். சூழ்ந்துள்ள கடல்நீர் பரப்பு 1,49,400,000 சதுர கிலோ மீட்டர்கள்


ஜூலை 02

உலக விளையாட்டுத் துறை செய்தியாளர்கள் தினம்

சாதி, மதம், இனம், நாடு, மொழி எல்லாவற்றையம் கடந்து மக்களை விளையாட்டால் ஒன்று சேர்க்கும் பணியைச் செய்யும் விளையாட்டு பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் நாள் இன்று.



நீதிக்கதை

பெருமன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் பெரு மகிழ்ச்சியுற்று. தன்னிடமிருந்து ஏதாவது நன்கொடையொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரை வேண்டினான். முனிவரோ, எதுவும் வேண்டாம். என் நிலைமையில் மனத்திருப்தியை முற்றும் பெற்றுள்ளேன். இம்மரங்கள் எனக்கு உண்ணப் போதிய கனிகளைக் கொடுக்கின்றன; இவ்வழகிய தூய நீரோடைகள் எனக்கு வேண்டிய நீரையெல்லாம் தருகின்றன; இக்குகையிலே நான் உறங்குகிறேன்.

நீ ஒரு மன்னாதி மன்னனாயினும், உன் நன்கொடைகளை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? என்று கூறினார். பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று, இறைவா! இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள் எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே! என்றான். முனிவர் அவனை நோக்கி, மன்னா! பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும்? நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார். அன்பு வெளிப்படும் முறை இதுவன்று. இறைவனிடம் இதைத் தா அதைத்தா என்று நீ வேண்டுவாயானால் அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு?

என்று முனிவர் கூறினார். மன்னன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான்.


இன்றைய செய்திகள்

02.07.2025

⭐யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்- மு.க.ஸ்டாலின்.

⭐காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் 74 அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு.

⭐மத்திய அரசின் ஆலோசனையின் படி, வட சென்னையின் வியாசர்பாடி பணிமனையிலிருந்து 120 மின்சாரப் பேருந்துகளின் சேவை துவங்கப்பட்டு உள்ளது.

⭐விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி- முதலமைச்சர் உத்தரவு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை: ஸ்மிரிதி மந்தனா 3ஆவது இடத்திற்கு முன்னேற்றம்.

🏀
இங்கிலாந்து- இந்தியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை தொடங்குகிறது.


Today's Headlines

✏️Proud moment of "Naan Muthalvan scheme" - 50 out of 57 candidates who cleared the UPSC exam.

✏️As per the advice of the Central Government, the service of 120 electric buses has been started from the Vyasarpadi workshop in North Chennai.

✏️Rs. 4 lakh relief fund for the families of those who died in the Virudhunagar cracker factory explosion - Chief Minister ordered.

✏️Israeli attack on people waiting for food in Gaza leaves 74 innocent civilians dead.

*SPORTS NEWS*

🏀 ICC T20 Batting Rankings: Smriti Mandhana moves up to 3rd position.

🏀 England-India 2nd Test begins in Birmingham tomorrow


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-07-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-07-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 76:

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை  

விளக்கம் : அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

 
பழமொழி :
The mind grows when questions bloom.

கேள்விகள் மலரும் போது மனம் வளர்கிறது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

கட்டளையிடும் பதவி வேண்டுமானால் முதலில் கீழ்ப்படியக்  கற்றுக் கொள்ளுங்கள் - விவேகானந்தர்


பொது அறிவு :

01.புகழ் பெற்ற மதுராந்தகம் ஏரி எந்த மாவட்டத்தில் உள்ளது? 

          செங்கல்பட்டு மாவட்டம்

          Chengalpat  district

02. இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்டு வங்காள விரிகுடாவில் எத்தனை தீவுகள் உள்ளன?

           572  தீவுகள்

          572   Islands


English words & Tips :

callous-கடுமையான

heartless- இரக்கமற்ற



Grammar Tips:

There are seven coordinating conjunction which can be easily remembered by a word

FANBOYS

For
And
Nor
But
Or
Yet
So


அறிவியல் களஞ்சியம் :

காகிதத்தின் மீது வேகமாக ஊதும் போது, காகிதத்தின் மேல் பகுதியில் காற்று அதன் கீழ் பகுதியை விட வேகமாக நகரும். இந்த வகையில் காற்றில் ஏற்படும் வேறுபாடு காகிதத்தை மேல்நோக்கி தூக்கச் செல்கிறது. அது போன்றே பறக்கும் பறவையின் மேல் பகுதி, அதன் கீழ் பகுதியை விட வேகமாக நகருகிறது. இந்தக் காற்றின் செயல்பாடே பறவையை மேல்நோக்கி உயரச் செய்து பறக்க வைக்கிறது.


ஜூலை 01

தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) ஆகும்.



கல்பனா சாவ்லா அவர்களின் பிறந்த நாள்

கல்பானா சாவ்லா ஓர் இந்திய அமெரிக்க விண்ணோடி ஆவார்.விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனை


நீதிக்கதை

துன்பம்!

அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமை.. தனிமை.. தனிமை..!

சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்..

“உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!” கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்.. நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!”

எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்.. சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..

“ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..

ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..

மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!

அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்?

மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..

நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..!”

நீதி : தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை.. குறைகூறாதீர்கள்..!


இன்றைய செய்திகள்

01.07.2025

⭐தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் அமலுக்கு வந்தது 'வாட்டர் பெல்' திட்டம்.

⭐இளம் வயதினருக்கு வரும் புற்றுநோய்க்கு HPV வைரஸ் தொற்றே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

⭐கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.297 கோடி ஒதுக்கீடு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀விம்பிள்டன் ஓபன் டென்னிஸ்  கோலாகல தொடக்கம்: சாம்பியனுக்கு ரூ.35 கோடி பரிசு.

🏀கிரேட் அமெரிக்கன் பால் பார்க்கில் சின்சினாட்டி ரெட்ஸ் அணி சான் டியாகோ பேட்ரெஸை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி பின்தங்கிய நிலையில் வந்தது. 9வது போட்டியில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கிய ஸ்பென்சர் ஸ்டீர் ஆட்டத்தை சமன் செய்தார்.


Today's Headlines

✏️ The 'Water Bell' scheme was implemented in schools in Tamil Nadu.

✏️ The Tamil Nadu government has announced a special incentive of ₹297 crore for those engaged in sugarcane farming.

✏️ Doctors reported as  HPV virus infection is the cause of cancer in young people

✏️ Central government announces 8.2% interest rate for small savings schemes

*SPORTS NEWS*

🏀Wimbledon Open Tennis: Rs. 35 crore prize money for the champion.

🏀 The Cincinnati Reds came from behind to beat the San Diego Padres 3-2 at Great American Ball Park. Trailing 2-1 in the 9th, Spencer Steer tied the game.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஐ.நா. அமைப்பின் SEEUN திட்டத்தின் கீழ் பாங்காக் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களையும், ஆசிரியரையும் குறிப்பிட்டு அமைச்சர் வாழ்த்து

ஐ.நா. அமைப்பின் SEEUN திட்டத்தின் கீழ் பாங்காக் நகரில் நடைபெறவுள்ள பன்னாட்டு மாணவர் மன்றத்தில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி மாணவர்க...