கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School Morning Prayer Activities லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
School Morning Prayer Activities லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-04-2025

  


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-04-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்: குடியியல்

அதிகாரம் :உழவு

குறள் எண்:1036

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

பொருள்:
உழவர் தம் தொழில் செய்யாது கை மடக்கியிருப்பாராயின் அனைவரும் விரும்பும் உணவும் இல்லை; துறவிகளுக்கு துறவுமில்லை.



பழமொழி :

இதயத்தின் மகிழ்ச்சி முகத்தை மகிழ்விக்கும்-

The joy of the heart makes the face merry


இரண்டொழுக்க பண்புகள் :

*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன்.

* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.


பொன்மொழி :

நல்லவர், கெட்டவர் என யாரையும் தீர்மானித்து விடாதீர்கள், சூழ்நிலை என்பது  எவரையும் தலைகீழாய்  புரட்டி  போடும்  வல்லமை  கொண்டது.


பொது அறிவு :

1. இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

விடை :விக்ரம் சாராபாய்.       

2. விக்ரம் சாராபாய் முயற்சியால் தொடங்கப்பட்ட நிறுவனம் எது?

விடை : இஸ்ரோ (ISRO)


English words & meanings :

Reception.     -    வரவேற்பு

Relatives.      -     உறவினர்


வேளாண்மையும் வாழ்வும் :

வனவிலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கு நீர் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.


ஏப்ரல் 24

ஜி. யு. போப் அவர்களின் பிறந்தநாள்

ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 11, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்



சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் அவர்களின் பிறந்தநாள்

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar), பிறப்பு ஏப்ரல் 24, 1973) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாகக் கருதப்படுகிறார்.[5].[6] இவர் பதினொரு வயதுமுதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். தனது பதினாறாவது வயதில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1989 இல் கராச்சியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதன்முறையாக விளையாடினார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்முதலாக இருநூறு ஓட்டங்களை எடுத்தவர் இவர் ஆவார். பன்னாட்டுப் போட்டிகளில் நூறு முறை நூறு (துடுப்பாட்டம்) எடுத்தவரும் இவர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே. மேலும் பன்னாட்டுச் துடுப்பாட்டப் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரரும் ஆவார்.



நீதிக்கதை

மெக்ஸிகோ தேசத்து மீனவன்...

மெக்ஸிகோ தேசத்து ஏழை மீனவன் ஒருவன் கடற்கரையில் அவனது கட்டுமரத்தில் மேல் படுத்து பானகம் பருகிக் கொண்டும், பாட்டுப் பாடிக்கொண்டும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். கடற்கரைக்கு வந்த துடிப்பானஇளைஞன் ஒருவன் இதைக் கவனித்தான்.

கடற்கரையை விட்டுச் சென்ற இளைஞன் சில மணி நேரம் கழித்து மீண்டும் கடற்கரைக்கு வந்த போதும் மீனவனைஅதே நிலையில் பார்த்தான். இளைஞனுக்குப் பொறுக்கவில்லை.

மீனவனிடம் சென்று "ஐயா! இப்படி வேலை செய்ய வேண்டிய காலத்தில் படுத்துப் பொழுதை வீணடிக்கிறீர்களே. இப்படி படுத்துக் கிடக்கும் நேரத்தில் கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் நாலு காசாவது கிடைக்குமே!" என்றான்.

அதற்கு மீனவன் "காசு கிடைச்சா...?" என்று கேட்டான்.

இளைஞன் "காசு சேர்த்தால் நீங்கள் இந்தக் கட்டுமரத்தை விற்றுவிட்டு ஒரு படகு வாங்கலாம். அதை எடுத்துக் கொண்டு கடலுக்குள் போனால் இன்னும் நிறைய மீன் பிடித்து வரலாம். ஒவ்வொரு நாளும்பணம் அதிகமாகசம்பாதிக்கலாம் என்று சொன்னான்.

மீனவன் "அதிகம் சம்பாதிச்சா....?" என்று கேட்டான்.

இளைஞன் பொறுமையாக "ஐயா, நீஙகள் உங்களுக்கு நல்லதொரு வீடு கட்டிக் கொள்ளலாம். சிறிது சிறிதாகப் பொருள் சேர்த்து மீன் பிடி கப்பல் ஒன்றை வாங்கலாம். ஆழ்கடலுக்குள் சென்று பல வகை மீன்களைப் பிடித்து வரலாம். உள்நாட்டுச் சந்தை தவிர வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் நீங்கள் அவற்றை ஏற்றுமதி செய்யலாம்" என்று சொன்னான்.

மீனவன் "ஏற்றுமதி செஞ்சா...?" என்று திருப்பிக் கேட்டான்.

இளைஞனுக்கு மீனவனின் அறியாமை குறித்து சிறிது அதிருப்தி ஏற்பட்டாலும் பொறுமையை தக்க வைத்துக் கொண்டு "ஏற்றுமதி செய்தால் உங்களுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பெரிய மாளிகை போன்ற வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். படகு போன்ற கார் வாங்கலாம். " என்றான்.

மீனவன் மறுபடியும் "இதெல்லாம் கிடைச்சா..." என்றான்.

இளைஞன் "உங்களுக்கு அதற்குப் பின்னால் வேலை செய்ய வேண்டிய தேவையே இருக்காது. மகிழ்ச்சியாக நாளெல்லாம் உலகின் அழகான நீலக் கடல் சார்ந்த கடற்கரைகளில் மணலில் படுத்து பானகம் பருகிக் பாட்டுப் பாடிக் கொண்டே வாழ்க்கையை அனுபவிக்கலாம்" என்றான்.

"நான் இப்பவே அதைத்தானே நண்பா செய்து கொண்டிருக்கிறேன்" என்றான் மீனவன்.

நீதி: மகிழ்ச்சி என்பது அவரவர் மனதை பொறுத்தது. நம்மை சுற்றி உள்ள பொருட்களில் இல்லை.



இன்றைய செய்திகள்

24.04.2025

* தமிழகத்தில் சூரியசக்தி மின்னுற்பத்தி 10 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிப்பு.

* ஐஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான தேர்வில் தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்களில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த (பிடிஏ) பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்கக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

* போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு ஏப்.26-ல் நடக்கும்: வாடிகன் அறிவிப்பு.

* பிரெஞ்சு ஓபனுக்கு முன்னோட்டமாக களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஸ்பெயினில் நேற்று தொடங்கி மே 4-ந்தேதி வரை நடக்க உள்ளது.

* உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை சிம்ரன்பிரீத் கவுர்.


Today's Headlines

* Tamil Nadu's solar power generation increased to 10,000 megawatts.


50 candidates who received training under the Tamil Nadu government's 'Naan Mudhalvan' scheme have passed the Civil Services Examination, including IAS.

* Prime Minister Modi and US Vice President Harris have welcomed the significant progress in the bilateral trade agreement (BTA) negotiations between India and the United States.

* Pope Francis's funeral will be held on April 26th: Vatican announcement.

* The Madrid Open tennis tournament, a clay-court event serving as a prelude to the French Open, began yesterday in Spain and will continue until May 4th.

* Indian shooter Simranpreet Kaur won a silver medal at the World Cup shooting competition.


Covai women 

ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-04-2025

 

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-04-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால் :பொருட்பால்

இயல் குடியியல்

அதிகாரம்: உழவு

குறள் எண்:1035.

இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது
கைசெய்துஊண் மாலை யவர்.

பொருள்:
உழவுத் தொழில் செய்து வாழ்பவர் இஙரக்கமாட்டார். தன்னை நாடி இரப்பவர்க்கு இல்லை எனக் கூறாது கொடுப்பர்.


பழமொழி :
உடல்நலமும் புரிந்துகொள்தலும் வாழ்கையின் இரு பெரும் பேறுகள்-

Health and understanding are two great blessings of life


இரண்டொழுக்க பண்புகள் :

*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன்.

* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.


பொன்மொழி :

விதி  ஆயிரம்  கதவுகளை  மூடினாலும், முயற்சி  ஒரு  ஜன்னலையாவது  திறக்கும்...முடங்கிவிடாதே  தொடர்ந்து  முயற்சி  செய்.


பொது அறிவு :

1.முசோலினி வெளியிட்ட செய்தித்தாளின் பெயர் என்ன?

அவந்தி.

2." உயிரியல் சொர்க்கம்" என்றழைக்கப்படுவது எது?

மன்னார் வளைகுடா.


English words & meanings :

Independence Day.  -  சுதந்திர தினம்

Marriage.    -     திருமணம்


வேளாண்மையும் வாழ்வும் :

நிலத்தடி நீர் ஆதாரங்களை பயன்படுத்துவதற்கான நிலையான முறைகளை நடைமுறைப்படுத்துவது நீர் பாதுகாப்பிற்கான கூடுதல் உத்தியாகும்.


ஏப்ரல் 24

உலகப் புத்தக நாள் (World Book Day)

உலகப் புத்தக நாள் (World Book Day) அல்லது உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது.
பாரிஸ் நகரில் 1995 ஆகத்து 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு,

"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"


நீதிக்கதை

எல்லோர்க்கும் நல்லவர்கள்

ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, "பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு" என்று ஏளனம் செய்தனர்.

இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், "இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்" என்று கிண்டலடித்தனர்.

இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான்மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்" என்றான்.

வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர்இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார்.

கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "இரண்டுதடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!" என்று காட்டமாக விமர்சித்தான்.

இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும்கழுதையிலிருந்து குதித்தனர்.

இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு "மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!" என்று முடிவு செய்தனர்.

அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும்செய்வதறியாது திகைத்து நின்றனர்.

நீதி:எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது.


இன்றைய செய்திகள்

24.04.2025

* ஐஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான தேர்வில் தேசிய அளவில் 1009 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழக அளவில் தருமபுரியைச் சேர்ந்த சிவசந்திரன் என்ற பட்டதாரி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

* தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க உயர் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை 3 மாதங்களில் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

* கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து நதிப் படுகைகளில் குறைவான பனிப்பொழிவு காரணமாக நீர்வரத்து குறைந்து வருகிறது.

* அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டு: சீன விஞ்​ஞானிகள் சோதனை வெற்றி.

* ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடர்: ஜெலினா ஓஸ்டாபென்கோ சாம்பியன்.

* டி20 கிரிக்கெட்டில் ரஷித் கான் உலகின் சிறந்த பவுலர் என சாய் கிஷோர் பேட்டி.


Today's Headlines

* A record of 1009 people have achieved success in the national-level examination for civil service positions, including IAS. At the Tamil Nadu level, Sivas Chandran, a graduate from Dharmapuri, has secured the first rank.

* The High Court has ordered the government to implement within 3 months its earlier order from 2018, which mandated equal pay for equal work for consolidated pay nurses.

* Water inflow is decreasing in the Ganges, Brahmaputra, and Indus river basins due to low snowfall.

* Non-nuclear Fluorodinitroethane (FL-2) explosive: Successful test by Chinese scientists.

* Stuttgart Open Tennis Tournament: Jelena Ostapenko is the champion.

* T20 Cricket: Sai Kishore interviews that Rashid Khan is the best bowler in the world.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-04-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-04-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல் :குடியியல்

அதிகாரம்: உழவு
                         
குறள் எண்:1034.

பலகுடை நீழலும் தம்கடைக்கீழ்க் காண்பர்
அலகுஉடை நீழ லவர்.

பொருள்:
நெற்ச்செல்வமுடைய உழவர், உலக அரசர்களின் கீழுள்ள நிலம் முழுவதையும், தம் அரசர் கீழாகச் செய்வர்.


பழமொழி :
அதிகப் பேச்சு அறிவுடைமை அல்ல-

It is not wise to talk more.


இரண்டொழுக்க பண்புகள் :

*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன்.

* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.


பொன்மொழி :

எதை  செய்ய வேண்டுமோ,  அதை முழு  கவனத்துடன் செய்தால்,  எதை அடைய நினைக்கிறீர்களோ, அதை  நிச்சயமாக அடையலாம்.


பொது அறிவு :

1. ஒரு தேனீக்கு எத்தனை கண்கள் உள்ளன?

விடை: ஐந்து கண்கள்.       

2. எந்த விலங்கு இளஞ்சிவப்பு வியர்வையை விடுகிறது?

விடை: நீர்யானை


English words & meanings :

Gift.     -      பரிசு

Groom.   -    மணமகன்


வேளாண்மையும் வாழ்வும் :

நிலத்தடி நீர் மாசுபடுவதால் கிடைக்கும் நன்னீர் நிரம்புவதும் குறைகிறது எனவே நிலத்தடி நீர் வளங்களை மாசுபடாமல் பாதுகாப்பதன் மூலம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நீர்பாதுகாப்பின் முக்கிய அம்சமாகும்.


ஏப்ரல் 22

புவி நாள்

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.
1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.

அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.

அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் (புவி [பூமி] நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


நீதிக்கதை

  வைத்திய செலவு

ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது.

வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில்உள்ள வட்டிகடைக்காரரைஅணுகினான். அதற்கு அவர்“பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்” என்று கேட்டார்.

தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் அவரும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.

பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் வட்டிகடைக்காரர் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்.

தெனாலிராமனைப் பார்த்து “என்னப்பா, உடல் குணமானதும் குதிரையைவிற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு என்றான். தெனாலிராமனும் நன்கு யோசித்தான். அநியாயவட்டி வாங்குபவருக்குபாடம் கற்பிக்க விரும்பினான்.

“சரி குதிரையை விற்று முழு பணத்தையும் உனக்கே தருகிறேன். என்னுடன் நீயும் வா” என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்துஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர்.

போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான்.

சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து“உன் குதிரை என்ன விலை” என்று கேட்டான்

அதற்கு தெனாலிராமனோ “குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான்இக்குதிரையைக் கொடுப்பேன்” என்றான்.

தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான்.

பின் வட்டிகடைக்காரருக்கு ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை அவர் வாங்க மறுத்து விட்டான். “குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே” என்றான்.

அதற்கு தெனாலிராமன் “ஐயா  குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொன்னேன். அதன்படியேகுதிரையை 1 பவுனுக்கு விற்றது. அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்டேன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே. இது என்ன நியாயம்” என்றான்.

அவரோ 500 பவுன் வேண்டுமென்றான் இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது.

மன்னர் இவ்வழக்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்ததுசரியே என்று தீர்ப்புக் கூறினார்.


இன்றைய செய்திகள்

22.04.2025

* கடந்த 2024-25ம் ஆண்டில் 10,153.48 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழகம் அகில இந்திய அளவில் தொடர்ந்து 3-வது முறையாக 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

* மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* நான்கு நாள் பயணமாக குடும்பத்துடன் இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்.

* கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார்.

* பெல்ஜியமில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி 2-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

* பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனே.


Today's Headlines

* Solar Power Production: In the year 2024-25, Tamil Nadu has maintained its 4th position at the All India level for the third consecutive time by generating 10,153.48 MW of solar power.

* Metropolitan Transport Corporation Employees: It has been announced that biometric attendance registration is mandatory for Metropolitan Transport Corporation employees starting today.

* US Vice President's Visit: US Vice President J.D. Vance has arrived in India with his family for a four-day trip.

* Pope Francis: The head of the Catholic Christian religion, Pope Francis, has passed away.

* Ajith Kumar's Car Race: Actor Ajith Kumar's team has secured the 2nd position in the car race held in Belgium, achieving a remarkable feat.

* Barcelona Open Tennis: Denmark's Holger Rune won the championship title at the Barcelona Open tennis tournament.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-04-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-04-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: உழவு

குறள் எண்:1033.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுஉண்டு பின்செல் பவர்.

பொருள்:
உழவு செய்து வாழ்பவர்கள் மட்டுமே வாழ்பவர்கள். மற்றவர்கள் உழவர்களை தொழுது உண்டு பின் செல்பவர்கள்.


பழமொழி :
தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும்.

Delay is dangerous.


இரண்டொழுக்க பண்புகள் :

*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன்.

* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.


பொன்மொழி :

""பெரிய நெருக்கடிகள் அரிய மனிதரை உருவாக்கும், பெரும் ஊக்கம்  தரும்  செயல்களை  அளிக்கும்.""  -- ஜான் F கென்னடி


பொது அறிவு :

1. ஆசிய ஜோதி யாருடைய வரலாற்றை எடுத்துரைக்கின்றது? 

விடை :கௌதம புத்தர்.      

2. ஒரு மெகா பைட் (mega byte) என்பது  எவ்வளவு?

விடை : 1024 kilo bytes


English words & meanings :

Candy.          -         மிட்டாய்

Engagement.   -    நிச்சயதார்த்தம்


வேளாண்மையும் வாழ்வும் :

மழைப்பொழிவு ஏற்படும்போது, தண்ணீர் மண்ணில் ஊடுருவி நிலத்தடிக்குச் செல்கிறது. இது நிலத்தடி நீர் எனப்படுகிறது


ஏப்ரல் 21

தேசிய குடிமை பணிகள் தினம் (Indian Civil Services day)

தேசிய குடிமை பணிகள் தினம் (Indian Civil Services day) என்பது இந்தியாவின் தேசிய தினங்களில் ஒன்றாகும். [1] நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ். (நிர்வாகம்), ஐ.பி.எஸ். (காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகின்றது. இத்தினம் 2006 ம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 21ம் திகதி இந்தியக் குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.


 
நீதிக்கதை

யானையின் அடக்கம்

யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்கு யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."

நீதி:தன் பலம், பலவீனம்

தெரிந்தவர்கள் அடக்கத்தில்

சிறந்தவர்களாக இருப்பார்கள்.



இன்றைய செய்திகள்

21.04.2025

* அரசு அலுவலகங்களில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்த வேண்டும்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு.

* புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் தங்க குண்டுமணி  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

* ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: திடீர் மழை, வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு.

* கே2-18பி என்ற தொலைதூர கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி டாக்டர் நிக்கு மதுசூதன் தலைமையிலான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

* பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர்: டென்மார்க் வீரர் ஹோல்கர் ருனே இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

* ஐபிஎல்: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி.


Today's Headlines

* Government offices to install prepaid meters: Electricity Regulatory Commission order.

* Gold bead found in ongoing excavation near Kodumbalur in Viralimalai, Pudukkottai district.

* Cloudburst in Jammu and Kashmir: 5 dead in sudden rain and floods.

* Scientists at the University of Cambridge, led by Indian-origin UK scientist Dr. Nikku Madhusudhan, have discovered signs of life on the distant planet K2-18b.

* Barcelona Open Tennis Tournament: Denmark's Holger Rune advances to the final.

* IPL: Bangalore defeats Punjab.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-04-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-04-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல் :குடியியல்

அதிகாரம்: உழவு

குறள் எண்: 1032
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து,

பொருள்:
உழவுத் தொழிலை தவிர்த்து பிற தொழில் புரிகின்றவர்களையும் உழவு தாங்குதலால் அது உலகத்தவர்க்கு அச்சாணியாகும்.


பழமொழி :
சுறுசுறுப்பு வெற்றி தரும்.

Briskness will bring success.


இரண்டொழுக்க பண்புகள் :

*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன்.

* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.


பொன்மொழி :

நீ  சுமக்கின்ற நம்பிக்கை  நீ  விழும்  போது  உன்னை  சுமக்கும்.


பொது அறிவு :

1. காமராஜரை கல்விக்கண் திறந்தவர் என மனதார பாராட்டியவர் யார்?

விடை: தந்தை பெரியார்.       

2. மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து எது?

விடை: கீழாநெல்லி


English words & meanings :

Bride.    -     மணமகள்

Candle.    -     மெழுகுவர்த்தி


வேளாண்மையும் வாழ்வும் :

நீர் பாதுகாப்பில் மற்றொரு உத்தி நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாப்பதாகும்.


ஏப்ரல் 17

உலக ஈமோஃபீலியா நாள்

ஈமோஃபீலியா (Haemophilia அல்லது Hemophilia) என்பது, மனித உடலில் குருதி உறையாமல் போகும் பரம்பரை நோயின் பெயராகும். மரபணு குறைபாடுகளின் காரணமாக (அல்லது, மிக அரிதான சமயங்களில், தன்னுடல் தாக்குநோய் (autoimmune disorder) காரணமாக இரத்தத்தை உறையச் செய்யும் குருதி நீர்மக் (Plasma) காரணிகளின் செயல்பாடு குன்றுவதால், இந் நோய் உண்டாகிறது. உடலில், உள் மற்றும் வெளிக் காயங்கள் ஏற்படும் போது இரத்தம் உறையாமல் தொடர்ந்து குருதிப்பெருக்கு ஏற்படுவதால் உயிர் அபாயம் உள்ள நோய்களில் இதுவும் ஒன்று.



நீதிக்கதை

நரித் தந்திரம்!

ஒரு காடு. அங்கே ஒரு சிங்கம். அந்தச் சிங்கம் ஒரு கூட்டம் போட்டது. எல்லா மிருகங்களும் வந்தன.

முதலில் ஒரு குரங்கைக் கூப்பிட்டது.

‘’இப்படிக் கிட்டே வா…என் உடம்பை முகர்ந்து பார்…எப்படி இருக்கு?’’என்று கேட்டது.

குரங்கு வந்து முகர்ந்து பார்த்து விட்டு …’’வாசனை நல்லா இல்லீங்க… கொஞ்சம் மோசமாத்தான் இருக்கு!’’என்றது.

சிங்கத்துக்கு கோபம் வந்து விட்டது. ‘’என் உடம்பைப் பத்தியா அப்படிச் சொல்றே’’ன்னு ஓங்கி ஒரு அறை விட்டது. குரங்கு சுருண்டு விழுந்துவிட்டது.

அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டது…. ‘’நீ வா…வந்து பார்த்துட்டு சொல்லு’’ என்றது. கரடி….அந்தக் குரங்கைப் பார்த்துக் கொண்டே வந்தது.

சிங்கத்தை முகர்ந்து பார்த்து…’’ஆகா …ரோஜாப்பூ வாசனை!’’ என்றது. "பொய்யா சொல்றே?ன்னு சிங்கம் ஓங்கி ஒரு அறை விட்டது. அதுவும் சுருண்டு விழுந்தது.

அடுத்த படியாக ஒரு நரியைக் கூப்பிட்டது. ‘’நீ வந்து சொல்லு…நீதான் சரியாச் சொல்லுவே!’’ என்றது சிங்கம்.

நரி…குரங்கையும் கரடியையும் பார்த்துக் கொண்டே வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்தது. அப்புறம் கூறியது, ‘’மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்!’’

நரி தன் தந்திரமான குணத்தாலும், சமயோசித புத்தியாலும் தப்பித்தது.


இன்றைய செய்திகள்

17.04.2025

* அரசாணைகளை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று அரசுத் துறை செயலாளர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

* தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* பச்சிளம் குழந்தை காணாமல் போனால் மருத்துவமனை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்.

* 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 85,000 விசாக்களை இந்தியர்களுக்கு வாரி வழங்கியுள்ளது சீனா.

* இந்திய ஓபன் தடகளம் 2025: ஈட்டி எறிதலில் பட்டம் வென்றார் யஷ் வீர் சிங்.

* பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனே காலிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* The Secretary of the Tamil Development and News Department has ordered all government department secretaries to issue government orders only in Tamil from now on.

* The Meteorological Department has reported that the temperature will increase in Tamil Nadu for the next three days starting tomorrow. The public is advised to be cautious regarding the heatwave.

* The Supreme Court has issued a strict order stating that the license of the concerned hospital must be canceled if a newborn child goes missing.

* China has issued 85,000 visas to Indians in the four months from January to April 2025. This is seen as a significant move in the relationship between the two countries.
.
* Indian Open Athletics: Yash Veer Singh has won the gold medal in the javelin throw event at the Indian Open Athletics Championships.

* Barcelona Open Tennis: Danish player Holger Rune has advanced to the quarterfinals of the Barcelona Open Tennis tournament. He is displaying excellent performance.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-04-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-04-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்: குடியியல்

அதிகாரம்: உழவு

குறள் எண்:1031

சூழன்றும்ஏர்ப் பின்னது உலகம்: அதனால்
உழந்தும் உழவே தலை.

பொருள்:
மக்கள் பலதொழில் வளங்களில் சிறந்திருந்தாலும் உணவிற்காக உழவை நாடுவர். எனவே உழவே முதன்மையானது.


பழமொழி :
Whatever is worth doing, is worth doing well.

செய்ய வேண்டியதைச் சரியாக செய்.


இரண்டொழுக்க பண்புகள் :

*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன்.

* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.


பொன்மொழி :

மொழி  மனிதனுக்கு  விழி  போன்றது. --- கலைஞர்


பொது அறிவு :

1. குழந்தை உதவி எண் எது?

விடை: 1098.     

2. மணிமுத்தாறு அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

விடை: தாமிரபரணி


English words & meanings :

Anniversary.   -     ஆண்டுவிழா

Birthday     -      பிறந்த நாள்


வேளாண்மையும் வாழ்வும் :

அறுவடை செய்து வடிகட்டிய மழைநீரை கழிப்பறை, வீட்டுத்தோட்டம், புல்வெளிப் பாசனம், சிறு விவசாயம் போன்ற செயல்களுக்குப் பயன்படுத்தலாம்.


ஏப்ரல் 16

சாப்ளின் அவர்களின் பிறந்தநாள்

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin, ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.

சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார். மே 16, 1922-இல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. சாப்ளின் தி சர்க்கஸ் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநர் விருதுகளுக்குத் தேர்வானார். இவருக்கு விருது கிடைக்காதென்று இருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும் மேதைமையையும் பாராட்டிச் சிறப்பு விருது அளித்தார்கள். அதே ஆண்டு, தி ஜாஸ் சிங்கர் படத்துக்காக இன்னொரு சிறப்பு விருதை வழங்கினார்கள். திரைப்படத்தை இந்நூற்றாண்டின் கலை வடிவமாக்குவதில் அளவிடமுடியாத பங்காற்றியதற்காக 44 ஆண்டுகளுக்குப் பிறகு 1972-ஆம் ஆண்டில் இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றார்.


நீதிக்கதை

கொக்குக்கு எத்தனை கால்?

பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம் தந்தார்.

“இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்,” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

சமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். கறிக் குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாது அவன் கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான்.

“முதலாளி கேட்கமாட்டார். கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்’ என்று நினைத்தான் அவன்.

சாப்பாட்டு நேரம்—

முதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலைச் சுவைத்து உண்ட அவர், “”மிக நன்றாக உள்ளது. இன்னொரு காலை கொண்டு வா,” என்று கேட்டார்.

திகைத்த சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. “கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலைக் கொண்டு வர முடியும்?” என்று கேட்டான்.

நண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி, “ம்ம்ம்… நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம்,” என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்னையை அதோடு விட்டு விட்டார்.

மறுநாள் பொழுது விடிந்தது. சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. “கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? இப்பொழுது சொல்,” என்று கேட்டார் முதலாளி.

“ஐயா! அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி,” என்றான் சமையல்காரன்.

முதலாளி, கொக்குக் கூட்டத்தை பார்த்து “ச்சூ’ என்று கூச்சல் போட்டு விரட்டினார்.

ஒரு காலில் நின்று கொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது தூரம் தாவிப் பின் பறந்து சென்றன.

“இப்பொழுது என்ன சொல்கிறாய்? கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா?” என்று மறுபடியும் கேட்டார் பண்ணையார்.

மேலும், “இனி இப்படி நடந்து கொள்ளாதே… பொய் சொல்வது, ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத குணம். உனக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கிச் சாப்பிடு,” என்றார் முதலாளி.

“என்னை மன்னிச்சிடுங்க முதலாளி… இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்!” என்றான் சமையல்காரன்.


இன்றைய செய்திகள்

16.04.2025

* மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்காக, கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பதற்கான அரசாணையை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

* இந்​தி​யா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 15 வெளி​நாட்​டினரை நாடு கடத்த அதி​காரி​கள் நடவடிக்கை மேற்​கொண்டுள்​ளனர்.

* அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்த பொருட்கள் ஏற்றுமதியை சீன அரசு நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவில் ராணுவத் தளவாட உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

* ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் மூலம் பெண் பிரபலங்கள் மட்டும் அடங்கிய குழு விண்வெளிக்கு சென்று வந்துள்ளனர்.

* மான்டி கார்லோ டென்னிஸ் தொடர் நிறைவு: வீரர்-வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஹாக்கி தொடர்: இந்திய அணி அறிவிப்பு.


Today's Headlines

* Chief Minister M.K. Stalin has announced in the Tamil Nadu Legislative Assembly that a high-level committee headed by retired Justice Kurian Joseph will be formed to protect the rights of the state.



* The Tamil Nadu Health Department has issued a government order to establish the Kalaignar Centenary Integrated Research Foundation to promote medical research and new discoveries.

* Authorities are taking action to deport 15 foreigners who were staying illegally in India.



* The Chinese government has stopped the export of minerals, metals, and magnetic materials to the United States. This has created a risk of impacting military equipment production in America.

* An all-female celebrity crew has traveled to and returned from space via Jeff Bezos's space company, Blue Origin.



* New rankings for male and female players have been released following the conclusion of the Monte Carlo Tennis Tournament.

* The Indian squad for the women's hockey series against Australia has been announced.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-04-2025



 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-04-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல் :குடியியல்

அதிகாரம்: நன்றிஇச் செல்வம்

குறள் எண்:1010

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறம்கூர்ந் தனையது உடைத்து.

பொருள்:
கொடையாளர்கள் சில காலம் வறுமையுறுதல், மேகம் வறுமையுற்றது போலாகும்.


பழமொழி :
செயல் வார்த்தைக்கு மிகுந்து பேசும்.

Action speaks louder than words.


இரண்டொழுக்க பண்புகள் :

*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன்.

* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.


பொன்மொழி :

இன்று கை கொடுக்க யாருமில்லை  என்று  வருந்தாதே, நாளை  கை  தட்ட உலகமே காத்திருக்கும்  நீ  ""முயற்சி"" செய்தால்.


பொது அறிவு :

1. மனித உடலில் உள்ள மிகச் சிறிய எலும்பு எது?

விடை :  காது எலும்பு.      

2. சமுதாய பூச்சி என அழைக்கப்படுவது எது?

விடை : தேனீக்கள்


English words & meanings :

Vehicle.   -   வண்டி/வாகனம்

Wheel.      -     சக்கரம்


வேளாண்மையும் வாழ்வும் :

பலநாடுகளில்  சுத்தமான பாத்திரங்களை வைத்து, மழைநீரை சேகரித்து அதை கொதிக்கவைத்து குடிக்கின்றனர்.


ஏப்ரல் 15

உலகக் கலை நாள்

உலகக் கலை நாள் (World Art Day) என்பது நுண்கலைகளின் ஒரு பன்னாட்டுக் கொண்டாட்ட நாள் ஆகும், இது பன்னாட்டுக் கலைச் சங்கத்தால் (IAA) உலகம் முழுவதும் ஆக்கபூர்வமான கலைச் செயல்பாடு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டது.
லியொனார்டோ டா வின்சியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்நிகழ்விற்கான நாள் முடிவு செய்யப்பட்டது. உலக அமைதி, கருத்துச் சுதந்திரம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், பல்லினப்பண்பாடு மற்றும் கலையின் முக்கியத்துவத்தின் சின்னமாக டாவின்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலகக் கலைக் கலை நாள் இணைய வழியிலும், முக்கியமாக கூகுள் கலைச் செயல்திட்டம் போன்றவை மூலம், முன்னெடுக்கப்படுகிறது.


லியொனார்டோ டா வின்சியின் பிறந்தநாள்

லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) அல்லது இலியனார்தோ தா வின்சி (ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோன லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரிய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல், குடிசார் பொறியியல் ஆகிய துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். இவர் தணியாத ஆர்வம் கொண்டவராகவும் தீவிர கற்பனை வளம் கொண்டவராகவும் இருந்துள்ளார் . உலகில் இது வரை வாழ்ந்த மிகச்சிறந்த ஒவியர்களில் ஒருவராகவும், பன்முக ஆற்றல் கொண்டவராகவும் இருந்துள்ளார்



நீதிக்கதை

ஒரு பூவும் வண்டும்

      ஒரு காட்டில் செடி ஒன்று இருந்தது. அதில்   சிறிதும் பெரிதுமாக நிறையப் பூக்கள் இருந்தன. வண்டு ஒன்று தேனுக்காக அந்தச் செடியைச் சுற்றிவந்தது.

அப்போது, பூ ஒன்று மிகுந்த வாட்டத்துடன் இருப்பதைப் பார்த்ததும், “நீ ஏன் வாட்டமா இருக்கே?” என்று கேட்டது.

அதற்கு அந்தப் பூ, “பூக்களின் தோற்றம் வளர்ச்சியில் ஏழு நிலைகள் உண்டு. அதை நீ தெரிஞ்சுக்கிட்டா என் வாட்டத்துக்கான காரணத்தைப் புரிஞ்சுக்க முடியும்!” என்றது.

“பூக்களின் வளர்ச்சில் ஏழு நிலைகளா? சொல்லு... சொல்லு” என ஆர்வமானது வண்டு.

‘`ஒரு பூ முதன்முதலா செடியில் உருவாகும்போது ‘அரும்பு’ எனச் சொல்வாங்க. அப்படி நான் உருவானபோது, ரொம்பச் சந்தோஷமா இருந்துச்சு. தாய்ச்செடி என்கிட்ட ரொம்ப வாஞ்சையா இருந்துச்சு. என் சகோதரிகள், பிரியமா நடந்துக்கிட்டாங்க. மழை, வெயில், காற்று, பனியினால் எனக்குக் கெடுதல் வந்துடக் கூடாதுனு, இலைகளால் மூடிப் பாதுகாக்கப்பட்டேன். அரும்புதான் என் மழலைப் பருவம். மிகவும் இனிமையான பருவம்!” என்றது பூ.

‘`ஆஹா அருமை. பூக்களின் இரண்டாம் நிலை?’’ - கேட்டது வண்டு.

`பூக்களின் இரண்டாம் நிலை ‘மொட்டு’. இந்த நிலையில் பூவின் இதழ்கள் வளர ஆரம்பிச்சாலும், குவிஞ்ச நிலையில்தான் இருக்கும்.அப்போ, சிறிசும் பெருசுமா நிறைய மொட்டுகள் இருந்தோம். நாங்க எல்லாரும் கூடிப் பேசுவோம். எங்க எல்லாருக்கும் பல கனவுகள் இருந்துச்சு. ‘மொட்டு’ எனது உற்சாகமான சிறார் பருவம்!” என்றது பூ.

“உன் கதையைக் கேட்கவே சுவராஸ்யமா இருக்கு. உன் அடுத்த நிலை என்ன?” என ரீங்காரமிட்டது வண்டு.

“பூக்களின் மூன்றாம் நிலை ‘முகில்’. ஒரு மொட்டின் இதழ்கள் முதன்முதலா அவிழ்ந்து விடுபடுவதைத்தான் முகிழ் அல்லது முகிழ்த்தல் எனச் சொல்வாங்க. இந்த நிலையில் எனக்குத் தாய்ச் செடியின் பராமரிப்பு அதிகம் தேவைப்படலை. நான் தன்னம்பிக்கையோடு இருந்தேன். நெக்டார் எனப்படும் தேன், என்னிடம் உருவாக ஆரம்பிச்சது. முகிழ்ப் பருவத்தை இளமையின் ஆரம்பநிலைனு சொல்லலாம்!” என்றது பூ. 

வண்டு வியப்புடன் பார்க்க, பூ தொடர்ந்து பேசியது. “பூக்களின் நான்காம் நிலை ‘மலர்’. இந்த நிலையில் எனது இதழ்கள் மேலும் பெருசா வளர்ந்துச்சு. என் நிறம், அடர்த்தியான நீலத்துக்கு மாறி, பார்க்கிறவங்க மனசைக் கவர்ந்தது. தினமும் காலையில் சூரிய உதயத்தின்போது மலர்வேன். அந்திசாயும் வேளையில் இதழ்கள் குவிவேன். உன்னை மாதிரி வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் தேனுக்காக வரும். மலர் ஒரு பூவின் துடிப்பான இளமைப் பருவம்!”

குறுக்கிட்ட வண்டு, “மொட்டுகளா இருந்தப்போ பலருக்கும் பல கனவுகள் இருந்ததா சொன்னியே, அது என்ன?” எனக் கேட்டது.

“வளர்ந்த மொட்டுகளைத் தங்கள் தேவைக்காக மனுஷங்க கொய்து எடுத்துட்டுப் போவாங்க. சில மொட்டுகளுக்குத் தாங்கள் அழகான மாலையாகத் தொடுக்கப்படணும்னு ஆசை இருந்துச்சு. சில மொட்டுகள் இறைவனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பாதமலரா இருக்கணும்னு ஆசைப்பட்டாங்க!”

“ஓகோ... நினைச்சது நடந்துச்சா?”

“எண்ணம்தானே வாழ்க்கை. எல்லா மொட்டுகளுக்கும் அவங்க நினைச்சதே நடந்துச்சு. பூக்களின் ஐந்தாம் நிலை ‘அலர்’. ஒரு பூ எப்போதும் மலர்ந்த நிலையிலேயே இருப்பது அலர்!” என்றது பூ.

“ஒரு சந்தேகம்... அலருக்கும் மலருக்கும் என்ன வித்தியாசம்?” எனக் கேட்டது கருவண்டு.

“அலர்ந்த நிலையில் ஒரு பூ தன் இதழ்கள் குவிந்து விரியும் தன்மையை இழந்துரும். மலர் இளமைப் பருவம்னா, அலர் முதுமையின் ஆரம்பம்னு சொல்லலாம். அலர்ந்த நிலையில் ஒரு பூவுக்குப் பனிக்காற்று, வெயில், மழையிலிருந்து பாதுகாப்பு கிடைக்காது. இதனால், பூ வாடத் தொடங்கும். மகரந்தத்தாள் காய ஆரம்பிக்கும். ஓர் அலர்ந்த பூ வாடும் நிலைதான் ஆறாம் நிலை!” என்றது பூ.

“புரியுது புரியுது! அப்போ, ஏழாம் நிலை என்ன?”

“பூக்களின் ஏழாம் நிலை, ‘செம்மல்’. வாடிய பூ வதங்கும் நிலை. பூக்களின் இதழ்கள் சுருங்கும். மகரந்தத்தாளும் முழுசா வாடிரும். இப்போ, நான் வதங்கியிருக்கேன். இது எனது ஏழாம் அதாவது கடைசி நிலை. இப்போ, இந்தச் செடியில் பெயரளவுக்குத்தான் ஒட்டிக்கிட்டுருக்கேன். ஒரு சின்னக் காற்று அடிச்சாலும் உதிர்ந்திருவேன். நீ என் பக்கத்துல வந்து உன் இறக்கைகளைப் படபடத்துவிட்டுப் போ!” என்றது பூ.

பூ கேட்டுக்கொண்டபடி வண்டு செடியின் அருகில் வந்து படபடத்தது. அதன் அதிர்வில் பூ காம்பிலிருந்து உதிர்ந்து ஓசையின்றித் தரையில் வீழ்ந்தது. விழுந்த பூவின் அருகே வண்டு சென்றது. “மொட்டா இருந்தப்போ, நீ என்ன ஆசைப்பட்டே?” எனக் கேட்டது வண்டு.

“என் ஏழு நிலைகளையும் தாய்ச் செடியிலேயே கழிக்கணும். அதன் காலடியில் விழுந்து சருகாக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் நினைச்சதே நடந்தது!” சிரித்தபடி சொன்னது பூ.

‘’ஆனால், யாருக்கும் பயனில்லாமல் போய்ட்டோமோ என்ற வருத்தம் இல்லியா?’’ எனக் கேட்டது வண்டு.

‘’யார் சொன்னது பயனில்லாமல் போனதாக? உன்னைப்போலப் பலருக்கும் பசியாற்றினேன். என் தாய்ச் செடிக்கே நான் உரமாகிறேன். என்னை இத்தனை தூரம் வளர்த்த மண்ணுக்கு நன்றி சொல்றேன்’’ - என்றது பூ.

வண்டு அமைதியாகத் தலைவணங்கி, அந்தப் பூவைச் சுற்றி வந்து, ரீங்காரமிட்டபடி பறந்து சென்றது.


இன்றைய செய்திகள்

15.04.2025

* நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களால் உயர்கல்வியில் இணையும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆண்டுகளில் 30% அதிகரித்துள்ளது.

* விதிமீறல் வாகனங்களை படம் பிடிக்க சென்னை சாலைகளில் 200 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள்.

* எதிரிநாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்தும் லேசர் அடிப்படையிலான ‘டி.இ.டபிள்யூ’ என்ற ஆயுத சோதனை டிஆர்டிஓ வெற்றிகரமாக மேற்கொண்டது. இதன்மூலம் இத்தகைய ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்தது.

* அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும், இதற்கு இணங்க மறுத்தால் அபராதமும் சிறைதண்டனையும் விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

* பக்ரைன் பார்முலா1 கார்பந்தயம்: ஆஸ்திரேலிய வீரர் பியாஸ்ட்ரி முதலிடம்.

* மாண்டி கார்லோ டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்.


Today's Headlines

* The number of government school students enrolling in higher education has increased by 30% in the last three years, due to schemes like "Naan Mudhalvan," "Pudhumai Penn," and "Tamil Pudhalvan."


   * AI (Artificial Intelligence) technology cameras have been installed in 200 locations on Chennai roads to capture traffic violations.

   * DRDO has successfully tested a laser-based weapon called 'DEW' (Directed Energy Weapon) that can shoot down enemy warplanes, missiles, and drones mid-air. With this, India has joined the list of a few countries possessing such weapons.

   * The Trump administration has announced that foreigners staying in the US for more than 30 days must register with the government. Failure to comply will result in fines and imprisonment.

   * Australian driver Piastri won first place in the Bahrain Formula 1 car race.

   * Alcaraz won the champion title in Monte Carlo Tennis.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-04-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-04-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால் :பொருட்பால்

இயல்: குடியியல்

குறள் எண்:1009

அதிகாரம்: நன்றிஇச் செல்வம்

அன்புஒரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

பொருள்:
அன்பின்றி அறம் செய்யாது சேர்த்த பொருளை எடுத்துக் கொள்வார் யாரோ?


பழமொழி :
No sweet without sweat

வியர்வை சிந்தாமல் இன்பம் இல்லை.


இரண்டொழுக்க பண்புகள் :

* தேர்வு எழுதுவதற்காக நான் அனைத்து பாடங்களையும் நன்கு படித்து தயாராவேன்.

* தேர்வு விடைத்தாளில் அழகாகவும், தெளிவாகவும், பிழை இல்லாமல்  எழுதுவேன்.


பொன்மொழி :

நேற்றிலிருந்து கற்றுக்கொள் ,இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை. மிக முக்கியமாக கேள்விகள் கேட்பதை மட்டும் நிறுத்தாதே. -- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


பொது அறிவு :

1. காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

விடை: தமிழ்நாடு.

2. இந்தியாவில் அதிக உப்பு உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

விடை : குஜராத்


English words & meanings :

Subway      -     சுரங்கப்பாதை

Submarine      -     நீர்மூழ்கிக் கப்பல்


வேளாண்மையும் வாழ்வும் :

நீர் சேமிப்பு உத்திகளில் ஒன்று மழைநீர் சேகரிப்பு ஆகும்.குளங்கள், ஏரிகள், கால்வாய்களை துார்வாருதல், நீர்த்தேக்கத்தை விரிவுபடுத்துதல், மழைநீர் பிடிக்கும் குழாய்கள் மற்றும் வடிகட்டும் அமைப்புகளை வீடுகளில் நிறுவுதல் ஆகியவை மழைநீரை சேகரிக்கும் வெவ்வேறு முறைகளாகும்.


ஏப்ரல் 11

மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே (ஆங்கில மொழி: Mahatma Jyotirao Govindrao Phule) இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதியாவார். சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர்.



நீதிக்கதை

குரங்கு அறிஞர்

ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.

”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.

”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.

”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.

அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.

அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

”குரங்கை வெளியே அனுப்புங்கள்" என்று கத்தினர்.

கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும்

அது தொந்தரவு தராதவாறு

நான் பார்த்துக் கொள்கிறேன்!”

அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது.

பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். ”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.



அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.



“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.



அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.

அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

நீதி: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.


இன்றைய செய்திகள்

11.04.2025

* சிறுதொழில் நிறுவனங்களுக்கான கூடுதல் முதலீட்டு மானிய உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேவையில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.

* சென்னையை அடுத்த ஒரகடம் இண்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில், ரூ.1,000 கோடி முதலீட்டில் 5 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு அளிக்கும் வகையில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

* வங்கதேசத்துக்கு வழங்கப்பட்ட சரக்கு முனைய வசதியை நிறுத்தியது இந்தியா.

* அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வரி யுத்தம் வலுத்துள்ளது. சீனா மீதான வரியை 104% ஆக ட்ரம்ப் உயர்த்திய நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன அதிபர் ஜி ஜின்பிங் 84% ஆக உயர்த்தி உள்ளார்.

* ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் பி.வி. சிந்து வெற்றி.

* ஐ.பி.எல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் தோனி கேப்டன்.


Today's Headlines

* The Minister of Micro, Small, and Medium Enterprises (MSME ) Tha.mo. Anbarasan, announced in the legislative assembly that the maximum limit for additional investment subsidies for small businesses will be increased from ₹5 lakh to ₹10 lakh.

   * An agreement was signed in the presence of Chief Minister M.K. Stalin with Dixon Technologies Limited at the IndoSpace Industrial Park in Oragadam, Chennai, for an investment of ₹1,000 crore, creating 5,000 job opportunities.

   * India has stopped the cargo terminal facility provided to Bangladesh.

   * The trade war between the United States and China has intensified. Following Trump's increase of tariffs on Chinese goods to 104%, Chinese President Xi Jinping has raised tariffs on American goods to 84%.

   * Asian Badminton Championship: P.V. Sindhu won her first-round match.

   * IPL 2025: Dhoni will captain Chennai Super Kings again.


Covai women ICT_போதிமரம்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-04-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-04-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல் :குடியியல்

குறள் எண்:1008

அதிகாரம்: நன்றிஇச் செல்வம்

நச்சுப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று.

பொருள்:
எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.


பழமொழி :
எல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன.

All roads lead to rome.


இரண்டொழுக்க பண்புகள் :

* தேர்வு எழுதுவதற்காக நான் அனைத்து பாடங்களையும் நன்கு படித்து தயாராவேன்.

* தேர்வு விடைத்தாளில் அழகாகவும், தெளிவாகவும், பிழை இல்லாமல்  எழுதுவேன்.


பொன்மொழி :

வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார் ,நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய். -- ஹிட்லர்


பொது அறிவு :

1. உலகில் அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு எது?

ஜப்பான்

2. மின்னஞ்சலின் தந்தை என்று அழைக்கப் படுபவர் யார்?

ரேமண்ட் டாம்லின்சன்



English words & meanings :

Car    -    சிற்றுந்து

Passenger    -     பயணியர்



வேளாண்மையும் வாழ்வும் :

குழாயைத் திறந்து விட்டுவிட்டு துணிகளை அலசாமல் ஒரு பக்கெட்டில் நீரைப் பிடித்து வைத்து அலசுங்கள்.


நீதிக்கதை

மனம் திருந்திய மணி

மணி ஒரு சோம்பேறி பையன், அவனை திருத்த நினைச்ச அவனோட அப்பா, அவனுடைய தாத்தாவிடம் அழைத்து சென்று”இவன் ரொம்ப சோம்பேறியாக இருக்கான். என்ன சொன்னாலும் சில பழக்க வழக்கங்களை மாத்தவே மாட்டேங்கிறான். நீங்க தான் அவன திருத்தனும்” என்று சொன்னார்.

தாத்தா ஒரு நாள், அவனை ஒரு காட்டுக்கு அழைத்து போனார். அங்க இருந்த ஒரு சிறிய செடிய பிடுங்க சொன்னார். உடனே ரொம்ப சுலபமா பிடிங்கி விட்டான். அப்புறம் கொஞ்சம் பெரிய செடிய பிடுங்க சொன்னார். கொஞ்ச முயற்சி பண்ணி பிடுங்கினான்.

இன்னும் கொஞ்சம் பெரிய புதர் மாதிரி இருந்ததை பிடுங்க சொன்னார் ரொம்ப கஷ்டப்பட்டு பிடுங்கினான். அதற்குள்அவன் ரொம்ப களைத்து போனான் . அப்புறம் ஒரு பெரிய மரத்தை காட்டி, அதை பிடுங்க சொன்னார். ஆனா அவனால முடியலை. என்னால முடியாது அப்படீன்னு சொல்லிட்டான்.

தாத்தா சொன்னார், ” இது பாரு, இப்படித்தான் நீ சின்ன பையனா இருக்கப்பவே உன்கிட்ட இருக்குற சோம்பலையும், சில கெட்ட பழக்க வழக்கங்களையும் மாத்திக்கணும். அது சுலபமா போய்டும். பெரியவனான்னா அது கிட்ட இருந்து விலகறது ரொம்ப கஷ்டம். விலகவும் முடியாது. உங்க அப்பா சொல்ற மாதிரி கேட்டுநடந்தேன்னா, நீ நல்லா இருப்பே” னு சொன்னார்.

பையனும் அவங்க அப்பா சொன்ன மாதிரி நல்லபடியா நடந்து வாழ்கையில பெரிய ஆளா ஆயிட்டான்.

நீதி: ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது.


இன்றைய செய்திகள்

09.04.2025

* க​னிம வளங்​கள் கொண்ட நிலங்​களுக்கு வரி விதிக்​கும் புதிய சட்​டம் கடந்த 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்​துள்​ளது என தமிழக அரசு தகவல்.

* காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்காக தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

* குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

* அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா தவறு மேல் தவறு செய்வதாகவும், இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை என்றும் இறுதிவரை போராடுவோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

* ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள நிங்போ நகரில் மார்ச் 8 முதல் 13-ந் தேதி வரை நடக்க உள்ளது.

* ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: மோகன் பகான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.


Today's Headlines

* Tamil Nadu Government Information: A new law imposing taxes on lands with mineral resources has come into effect from the 4th of this month.

* Minister K. Ponmudy's Statement in the Legislative Assembly: To prevent the effects of climate change, 100 million saplings have been planted in Tamil Nadu over the past 3 years.

* Supreme Court Verdict: The Supreme Court has ruled that the Tamil Nadu Governor withholding approval for 10 bills for the President's consideration is illegal.

* US-China Trade Tension: US President Trump has warned that if China does not withdraw the 34% tariff imposed on the US, an additional 50% tariff will be imposed on China. In response, China stated that the US is making repeated mistakes, they will not yield to such threats, and they will fight to the end.

* Asian Badminton Championship: The Asian Badminton Championship is scheduled from March 8th to 13th. in Ningbo, China, from March 8th to 13th.

* ISL Football Match: Mohun Bagan team has qualified for the final of the ISL football competition.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உங்கள் குழந்தை அரசு மருத்துவக் கல்லூரிகள், JIPMER, AIIMS, IIT & NIT போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டுமா?

 உங்கள் குழந்தை அரசு மருத்துவக் கல்லூரிகள், JIPMER, AIIMS, IIT & NIT போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டுமா? உங்கள் குழந்தை...