கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Key Features of Union Budget 2025-2026




மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்டின்) சிறப்பு அம்சங்கள்


Special Features of Union Budget 2025-2026



>>> PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



• சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது


• தாமரை விதைகளுக்கு புதிய வாரியம்!


தாமரை விதைகளுக்காக புதிய வாரியம் பிகாரில் அமைக்கப்படும்


• கிரெடிட் கார்டு உச்ச வரம்பு உயர்வு


கிஷான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது


• அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும்


• இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும்


• ஆறாண்டுத் திட்டத்தின் கீழ் துவரை, உளுந்து, மைசூரு பருப்புகளின் உற்பத்திற்கு முக்கியத்துவம்


• தனம், தானிய கிஷான் யோஜனா திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.


இந்த திட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்


• பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கை


• பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ₹2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்


• லாஜிஸ்டிக் மையமாக மாற்றமடையும் இந்திய அஞ்சல்துறை


புற்றுநோய் உள்ளிட்ட அரியவகை நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்துகளுக்கு அடிப்படை இறக்குமதி வரியில் விலக்கு.


36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு முழுவதுமாக அடிப்படை சுங்கவரி விலக்கு-பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.


அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மைய வசதி.


மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்படும்.


அடுத்த ஆண்டில் மட்டும் சுமார் 10 ஆயிரம் புதிய மருத்துவ இடங்கள்.


லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி சுங்கவரி ரத்து; எல்.இ.டி. திரைக்கான இறக்குமதி சுங்கவரி 20% ஆக அதிகரிப்பு.


பட்டியலின பெண்(எஸ்சி/எஸ்டி) தொழில்முனைவோர்களின் முன்னேற்றத்திற்கு புதிய திட்டங்கள். இவர்கள் சுயதொழில் மூலம் முன்னேற ரூ.2 கோடி வரை கடன்


இந்திய மின்சார தேவையை சமாளிக்கும் நோக்கில் அணு உலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க திட்டம். 2047-ம் ஆண்டுக்குள் 100 கிகா.வாட் அணுமின் உற்பத்தி செய்ய திட்டம்.


அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 50,000 டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.


உடான் திட்டம் மூலம் இந்தியாவில் மேலும் 120 இடங்களில் விமான நிலையங்கள்.


இந்தியாவில் 8 கோடி குழந்தைகள் அங்கன்வாடிகள் மூலம் பயன்பெற்று வருகின்றனர். 


அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

 தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Supreme Co...