30 மாணவச் செல்வங்களுக்கு காமராசர் விருது, 51 மாணவச் செல்வங்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் காப்பீட்டு வைப்பு நிதி - மாண்புமிகு அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு
திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி மற்றும் இணை செயல்பாடுகளிலும் ஆர்வமாக பங்கேற்கும் மாணவர்களுக்கான காமராசர் விருதினை 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு முறையே தலா 15 மாணவச் செல்வங்களுக்கு வழங்கிப் பாராட்டினோம்.
மேலும், விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பராமரிப்புச் செலவினங்களுக்கு உதவும் வகையில் 51 மாணவச் செல்வங்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் காப்பீட்டு வைப்பு நிதிக்கான பத்திரங்களை வழங்கி நம்பிக்கையூட்டினோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.