'மகிழ் முற்றம்' திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக உலக அங்கீகார சான்று - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு
"மாணவர்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்தும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து, 'மகிழ் முற்றம்' எனும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறோம். ஒற்றுமையுணர்வு, சமூக மனப்பான்மை, வேற்றுமை களைதல் போன்ற நோக்கங்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
'மகிழ் முற்றம்' திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களுக்கு Inclusive Neighbourhood Children's Parliament அமைப்பு உலக அங்கீகார சான்று வழங்கியுள்ளது. இதனை இன்றைய தினம் நடைபெற்ற ஆசிரியர் தின விழா மேடையில் வழங்கி பெருமை கொண்டோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.