கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Antibiotic Resistance - தவிர்க்கும் வழிமுறைகள்



Antibiotic Resistance - தவிர்க்கும் வழிமுறைகள்


ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டெண்ஸ் 

தவிர்க்க சில எளிய டிப்ஸ் 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


ஆண்டிபயாடிக்குகள்  கண்டறியப்படாத  காலகட்டத்தில் , அதாவது 19ஆம் நூற்றாண்டு வரை 


  புண்கள், கீறல்கள், விலங்குகளிடம்  கடிபடுவது என்பது போன்ற சாதாரண நிகழ்வுகளினால் ஏற்படும் காயங்கள் சீழ்  வைத்து அது ஆறாமல்  பெரிதாகி உடல் முழுவதும் பரவி இறந்து வந்தனர். 


பென்சிலின் என்ற ஆண்டிபயாடிக்கை  ஃப்ளெமிங் கண்டறியும் முன் நடந்த முதல் உலகப்போரில் போர் காயங்கள் ஆறாமல் முற்றிப்போய்  இறந்த மக்கள் தொகை பல மில்லியன்கள். 


அதற்குப்பிறகு பல ஆண்டிபயாடிக்குகள்  கண்டறியப்பட்டு பாக்டீரியாக்களுக்கு எதிராக நாம் தொடுக்கும் போரில்  நமக்கு சிறந்த ஆயுதங்களாக  செயல்பட்டு வருகின்றன. 


எதிரிகளும் நம்மை விட அதி வேகமாக பல்கிப்பெருகும்  ஆற்றலுடன்  இருப்பதால் நமது ஆயுதங்களுக்கு எதிராக அவர்களை தகவமைத்துக்கொள்கிறார்கள். 


எனவே இது நமக்கும் பாக்டீரியாக்களுக்கும் இடையே நடக்கும் தொடர் யுத்தமாகவே  இருக்கிறது. 


இதில் எதிரி நம்மை விட பலம் கூடினால் நம் நிலை பிரச்சனைக்குள்ளாகும். 


உலகின் கடைசி ஆண்ட்டிபயாடிக்கும் வேலை செய்யாத நிலை இப்போதே வந்து விட்டது. இதை Total Drug Resistance என்கிறோம்


இந்த நிலையை 

காச நோய் எனும் Tuberculosis இல் அதிகம் பார்க்க முடிகிறது. 


எத்தனை விலை உயர்ந்த ஆண்ட்டிபயாடிக்குகள்  கொடுத்தும் நிலைமை சரியாகாமல் நோயாளிகள் இறந்து வருகிறார்கள். 


இத்தனை ஆபத்தான

ஆண்ட்டிபயாடிக்  ரெசிஸ்டெண்ஸை நம்மளவில் தவிர்ப்பது எப்படி ? 


1. எந்த ஒரு உடல் சார்ந்த பிரச்சனையாக இருந்தாலும் குடும்ப மருத்துவரை சந்திக்க வேண்டும் என்ற கொள்கையை வைத்துக்கொள்ள வேண்டும். நாமாக நேரே  மருந்தகங்களுக்குச்  சென்று ஆண்டிபயாடிக்  மாத்திரைகளை  எடுக்கக்கூடாது. 


2. பெரும்பாலும் மழை சீசன்களில்  வரும் சளி மூக்கடைப்பு  காய்ச்சலுக்கு  வைரஸ்களே  காரணம். ஆகவே இவற்றுக்கு  ஆண்ட்டிபயாடிக்  எனும் பாக்டீரியாக்களை  எடுத்து ப்ரயோஜனமே  இல்லை. 

மருத்துவர்களும் இவ்வகை வைரஸ் தொற்றுகளுக்கு  ஆண்டிபயாடிக்  பரிந்துரைப்பதை  நிறுத்த வேண்டும். மேலும் நோயாளிகளும்  மருத்துவர்களை ஆண்டிபயாடிக்  பரிந்துரை செய்யுமாறு  வற்புறுத்தக்கூடாது. 


என்னை சந்திக்கும் பலரும் முதல் இரண்டு நாள் ஏதாவது ஒரு ஆண்டிபயாடிக்கை  எடுத்து விட்டு தான் என்னை சந்திக்கின்றனர்  என்பதை பதிவு செய்கிறேன். பெரும்பாலும் குழந்தைகளுக்கு அவர்களின் தாயார் முந்தைய ப்ரிஸ்க்ரிப்சனை  வைத்து ஆண்ட்டிபயாடிக்  சிரப்  வாங்கி கொடுத்து விடுகின்றனர். 


இவனுக்கு க்ளாவம் ( ஒரு ஆண்டிபயாடிக்  பெயர்)  கொடுத்தா தான் சார் கேட்கும்..  என்று நமக்கே டஃப் கொடுக்கும் தாய்மார்களை கடந்தே வருகிறேன். இந்த விசயத்தில் மருத்துவர் பேச்சை கேட்பது தான் சிறந்தது தாய்மார்களே. 

நீங்களாக ஆண்டிபயாடிக்  ஆரம்பித்து குழந்தைக்கு நன்மை செய்வதில்லை. 


3. மருத்துவர் ஆண்ட்டிபயாடிக் பரிந்துரைக்கும் கால அளவை  "ஒரு கோர்ஸ்" ( course of antibiotic)  என்று 

அழைக்கிறோம் 


இந்த கோர்ஸ் என்பது குறிப்பிட்ட நோயின் தன்மை பொறுத்தும் பரிந்துரைக்கப்படும் ஆண்ட்டிபயாட்டிக்கின்  தன்மை பொறுத்தும் மாறுபடும் 


ஒருவருக்கு காலை இரவு இருவேளையும்  அடுத்த ஐந்து நாட்களுக்கும் ஒரு ஆண்ட்டிபயாடிக்  எழுதப்பட்டால் அதை அவ்வாறே எடுக்க வேண்டும். 

இரண்டு நாட்களில் நோயின் அறிகுறிகள் (symptomatic relief)  குணமாகிவிடும். ஆனால் நோயை ஏற்படுத்திய கிருமிகள் இன்னும் முழுமையாக இறந்திருக்காது . அதனால் இத்தோடு நோய் சரியாகி விட்டது என்று மாத்திரையை விட்டால் மீண்டும் வில்லன்  எழுந்து வருவான் . எனவே கிருமிகளை  முழுவதுமாக  அழிக்க வேண்டும் என்பதே நமது குறி. 


இன்னும் சிலர் மருத்துவர்  காலை இரவு 

500mg மாத்திரை என்று எழுதிய மாத்திரையை அரையாக  ஒடித்து  காலை இரவு 250mg என்று சாப்பிடுவார். 


கேட்டால் எனக்கு பவர் ஒத்துக்காது  என்பார். 

ஆனால் அவர் போடும் 250மில்லிகிராம் எனும் பவரில் எதிரிகளான  கிருமிகள் வெகு சீக்கிரமாக ஆண்டிபயாடிக்  ரெசிஸ்டெண்சை  வளர்த்துக்கொள்ளும்.  


அப்போது அவருக்கு நோய் குணமானதாக  தெரிந்தாலும். நாளடைவில் அவருக்கு அந்த மருந்து வேலையே செய்யாமல் போய் விடும்.


இதே போன்று தான் காலை இரவு என்று இரு வேளை எழுதிய மாத்திரைகளை ஒரு வேளை மட்டும் போடுவது. 


இது எதற்கு சமம் என்றால் 

 வங்கிக்கு பகல் நேரத்தில் மட்டும் காவலாளி வைத்து விட்டு இரவு நேரத்தில் வைக்காமல் விடுவதற்கு சமம். 


பகல் நேரத்தில் மாத்திரை போடுவதால் மூர்ச்சை நிலைக்கு செல்லும் கிருமிகள் அடுத்த ஷிப்ட்டு  மாத்திரை போடாததால்  மீண்டும் எழுந்து நம்மை அடிக்கும்.  இதுவும் ரெசிஸ்டெண்சை  வரவழைக்கும். 


4. கால்நடை மற்றும் இறைச்சிக்காக கோழிகள் வளர்ப்புத்துறையில் மனிதனுக்கு  பயன்படும் ஆண்ட்டிபயாடிக்  உபயோகத்தை குறைக்க வேண்டும். முறைப்படுத்த வேண்டும். கடந்த ஜூலை மாதம் இதன் ஒரு பகுதியாக மனிதனுக்கு ஆபத்து நேரத்தில் பயன்படும் கோலிஸ்டின்  எனும் உயிர்காக்கும் ஆண்ட்டிபயாடிக்கை கால்நடைகளில் உபயோகிப்பதை  இந்திய அரசு தடை செய்துள்ளது வரவேற்கத்தக்கது.   


4. முடிந்த அளவு தொற்று நோய்களால்  பாதிக்கப்படுவதை  தவிர்த்தால் , ஆண்டிபயாடிக்  போடும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளாமல்  இருக்கலாம். 


வைரஸ் காய்ச்சல் பரவும் சீசன்களில்  கைகளை  அடிக்கடி சோப் போட்டு கழுவுவது  , 

இருமும்  போதும் தும்மும்  போதும் கைக்குட்டை  கொண்டு மூக்கையும்  வாயையும்  மூடுவது, தண்ணீரை வடிகட்டி  காய்ச்சி குடிப்பது, பொதுவெளியில்  மலம் கழிக்காமல்  இருப்பது, சளி பிடித்தவர் அடுத்தவருக்கு கை குலுக்காமல்  இருப்பது, குழந்தைகளுக்கு  முத்தம் கொடுக்காமல் இருப்பது போன்ற சாதாரண அன்றாட நடவடிக்கைகள்  மூலம் நாம் நோய் கிருமி  தொற்றுகளில் இருந்து காத்துக்கொள்ள முடியும். 


5. கர்ப்பிணிகள் / குழந்தைகள் / முதியோர்கள்/ நீரிழிவு நோயர்கள் / கான்சர்  பாதித்து சிகிச்சை எடுப்பவர்கள் / மருத்துவ காரணங்களுக்காக ஸ்டீராய்டு  எடுப்பவர்கள் 


மிக மிக இன்றியமையாத தேவையின்றி உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை எடுக்கும் மருத்துவமனைகளுக்கு வேறு நோயாளிகளைப்  பார்க்க செல்லாமல் தவிர்க்கலாம். காரணம் இது போன்ற எந்த ஆண்ட்டிபயாடிக்குக்கும் கேட்காத பெரிய சூப்பர் பக்  வகை கிருமிகள் அனைத்தும் உள் நோயாளிகளை அட்மிட் செய்து பார்க்கும் மருத்துவமனைகளில் இருக்கும். இதை HAI  என்று சுருக்கமாக  அழைக்கிறோம். 

HAI  என்றால் Hospital Acquired Infection என்கிறோம். 

இந்த வகை கிருமிகள் பரவாமல் இருக்க பல கிருமித்தொற்றுப்பரவல்  தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவமனையில் கடைபிடிக்கிறோம். 


( சரி சார்.. எங்கள தேவையில்லாம வர வேண்டாம்னு சொல்லிட்டீங்க.. ஆனா நீங்க டாக்டர்ஸ், நர்ஸ்களாம்  அங்க தான சார் வேலை பாக்குறீங்க.. உங்களுக்கு பாதுகாப்பு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது 


இதற்கு பதிலாக.. 

குணா படத்தின் பாடலை எடுத்துக்காட்டுகிறேன் 

நன்றி இசை ஞானி / கலை ஞானி 


"என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக்கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே .....எந்தன் காதல் என்ன என்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது ..எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றென்னும் போது வந்த அழுகை நின்றது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது ................!!!" 

😄😄


சரி..  ஃபரூக் டாக்டர் சொல்லிட்டாரு.. நான் குழந்தை பெத்துக்க  ஆஸ்பத்திரிக்கு  வரமாட்டேன். வீட்ல தான் குழந்தை பெத்துப்பேன்.  ஆஸ்பத்திரல  HAI  இருக்கு என்றெல்லாம் கூறிவிடாதீர்கள் சகோதரிகாள் 🙏😄


நம் உடல் ரீதியான ஆரோக்கிய ரீதியான தேவைக்கன்றி அடிக்கடி மருத்துவமனைக்கு விசிட் செல்வது தான் தவறு. 

மேற்சொன்ன மக்கள் இன்பேசண்ட்டுடன் அட்டெண்டராக தங்குவதைக்  கூட மறுபரிசீலனை  செய்யலாம். 


6. சளி இருமல் போன்று தொற்று இருப்பவர்கள் முடிந்தவரை அடுத்த வீட்டுக்கு/ அடுத்த ஊருக்கு / அடுத்த நாட்டுக்கு பயணம் செய்யாமல் இருக்கலாம். இதனால் ஒரு இடத்தில் இருக்கும் தொற்று மற்றொரு இடத்திற்கு பரவாமல் இருக்கும். ஆனால் இது அந்த அளவு ப்ராக்டிகலாக  தோன்றவில்லை. காரணம் ஒரு சளி வந்தது என்பதற்காக ப்ளைட்  டிக்கெட்டை யாரும் கேன்சல் செய்ய முடியாது. 

இருப்பினும்  கிருமித்தொற்று இருந்தால் 

முடிந்தவரை பயணங்களை  தவிர்த்தல் சிறந்தது. 


சிந்திப்போம் மக்களே. 

மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். 

மாற்றம் ஒன்றே மாறாதது.


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

சிவகங்கை


Bajaj Pygmy Go 178MM Mini Fan with LED Lighting | Rechargeable | USB Charging | 4-hours Battery Backup | 3 Speed | 2-Light Brightness Setting | High Speed | Portable【Blue】


https://amzn.to/4oRIpth




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ICT Nodal Teacherன் பணிகள்

  ICT Nodal Teacherன் பணிகள் பள்ளியின் அனைத்து தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகளுக்கும் ஒற்றை தொடர்பு புள்ளி (SPOC).  பள்ளி வேலை நேரத்தில் இணையத...