இடுகைகள்

ஆவி பிடித்தல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா? மருத்துவர் கூறும் பதில்...

படம்
 நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா? பதில் சொல்கிறார் அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி. “நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா என்ற பயம் தேவையற்றது. ஆனால், அதே நேரம் `நான் மணிக்கணக்கில் நீராவி பிடித்தே கொரோனாவை விரட்டி விடுவேன்’ என நினைப்பது தவறு. அளவுக்கு மிஞ்சினால் எல்லாமே ஆபத்துதான். இதையே சித்த மருத்துவமும் வலியுறுத்துகிறது. அதன்படி 2 முதல் 3 நிமிடங்கள் ஆவி பிடித்தால் போதுமானது. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், ஆவி பிடிக்கும்போது நன்கு வியர்ப்பதே அது போதுமானது என்பதற்கான அர்த்தம். ஆவி பிடிக்கும்போது உடலிலுள்ள தேவையற்ற நீர் வெளியேறுவது மிக நல்ல விஷயம். தலைவலி இதன் மூலம் தலைபாரம், நீரேற்றம், கப சுரம், விஷ சுரம், குளிர் சுரம் போன்ற உபாதைகள் நீங்கி, தொண்டையில் உள்ள கிருமிகள் நீங்கும், காதுவலி, உடல்வலி நீங்கும் என்கிறது சித்த மருத்துவம். ஆவி பிடிப்பதன் மூலம் கப ஆதிக்கம் குறையும். அப்போது ஒருவித வறட்சி ஏற்படும். அதிக நேரம் ஆவிபிடிக்கும்போது அந்த வறட்சியானது தொண்டை, மூக்குப் பகுதிகளைப் பாதிக்கும். அந்த இடங்களில் எரிச்சல், கொப்புளங்கள் தோன்றுவதெல்லாம் நடக்கும். அதனால்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...