ஓபிசி வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்திட வேண்டும் - மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்...
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பை உடனடியாக ரூ.25 லட்சமாக உயர்த்திட வேண்டும் என மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர்சந்த் கெஹலோட்டுக்கு திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பு: “மத்திய அரசின் இட ஒதுக்கீடு சலுகைகளைப் பெறுவதற்கு இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும். இந்த உச்சவரம்புத் தொகையை மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டும். அதன்படி 1.9.2020 முதல் மாற்றி அமைத்த புதிய உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயித்திருக்க வேண்டும். ஆனால், இது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவதால், திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு இன்று (3.12.2020) மத்திய சமூக நலம் மற்றும் அதிகாரப்படுத்துதல் அமைச்சர் தாவர் சந்த் கெஹலோட்டுக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார். வல்லுநர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வருமான உச்சவரம்பு மூன்று ஆண்டுக