இடுகைகள்

தலையங்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை - 21-04-2023 - தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் (No Teacher Eligibility Test Required - 21-04-2023 - Dinathanti Daily Editorial)...

படம்
ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை - 21-04-2023 - தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் (No Teacher Eligibility Test Required - 21-04-2023 - Dinathanti Daily Editorial)... “ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி” என்பது ஆன்றோர் வாக்கு. "ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி" என்பது ஆன்றோர் வாக்கு. அதனால்தான் "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்று ஆசிரியர்களை தெய்வத்துக்கு இணையாக போற்றி வணங்குவது, தமிழர்களின் மரபாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆசிரியர்கள் எவ்வாறு மதிக்கப்படுகிறார்கள்? என்பதை பள்ளிக்கூட கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டசபையில் மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து பேசும்போது, அவர் படித்த ஒரு பத்திரிகை செய்தியை மேற்கோள்காட்டி பேசினார். 'அமெரிக்காவில் 2 பேரை மிக உயர்ந்தவர்களாக பார்க்கிறார்கள். ஒருவர் விஞ்ஞானி, மற்றொருவர் ஆசிரியர். பிரான்சை பொருத்தமட்டில், நீதிமன்றத்தில் உட்காரக்கூடிய அந்த உரிமை ஆசிரியர்களுக்கு மட்டும்தான் உண்டு. ஜப்பானில் ஒரு ஆசிரியரை கைதுசெய்ய வேண்டுமென்றால், அரசாங்கத்தின் அனுமதியை பெற்றால்தான் முடியும்.

கையறு நிலையில் ஆசிரியர்கள் - தினமணி தலையங்கம் (Teachers at nothing can be done position - Dinamani editorial)...

படம்
  கையறு நிலையில் ஆசிரியர்கள் - தினமணி தலையங்கம் (Teachers at nothing can be done position - Dinamani editorial)... அண்மைக்காலமாக, பள்ளி வகுப்பறையிலும்‌, பொது இடங்களிலும்‌ மாணவர்கள்‌ சிலரின்‌ செயல்பாடுகள்‌ நம்மை முகம்‌ சுளிக்க வைப்பது மட்டுமின்றி எதிர்கால இந்தியாவின்‌ நம்பிக்கை நட்சத்திரங்களாக மின்ன வேண்டிய மாணவர்கள்‌ இப்படி மோசமாக செயல்பட்டு வருகிறார்களே என்ற கவலையும்‌ ஏற்படுதியுள்ளன. மாதா, பிதா, குரு, தெய்வம்‌ என்று முன்னோர்‌ பெருமைப்படுத்தி வைத்துள்ளனர்‌. அப்படிப்பட்ட குருவை, அலட்சியப்படுத்தும்‌ போக்கு இன்றைய மாணவ சமூகத்தில்‌ அதிகரித்து வருகிறது. பல ஆண்டுகளாகவே ஆசிரியர்களின்‌ கைகள்‌ கட்டப்பட்டு விட்டதால்‌ மாணவர்களின்‌ போக்கு திசைமாறி மோசமான பாதையில்‌ பயணிக்க தொடங்கி விட்டது. இன்றைய சமூக ஊடகங்களின்‌ தாக்கத்தால்‌ மாணவர்களின்‌ மோசமான செயல்பாடுகள்‌ மிக வேகமாக பரவி பொதுமக்கள்‌ மத்தியில்‌ பேசுபொருளாக மாறிவிட்டன. மாணவர்களின்‌ இத்தகைய ஒழுக்கமற்ற போக்கிற்குக்‌ காரணம்‌ தவறு செய்யும்‌ மாணவர்களைக்‌ கண்டிக்கக்கூடிய அதிகாரம்‌ ஆசிரியர்களுக்கு இல்லாமல்‌ போனதுதான்‌. தவறு செய்யும்‌ மாணவர்களைக்‌ கண்டிக

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...