இடுகைகள்

ஸ்மார்ட் கார்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆசிரியர்கள் அனைவருக்கும் இனி ஸ்மார்ட் கார்ட் கட்டாயம் - தமிழக அரசு...

படம்
 தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு கியூஆர் கோடு வசதியுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக, எமிஸ் என்ற இணையதளம் மூலம், பெயர், முகவரி, ரத்த வகை, புகைப்படம் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன. அதன்படி ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர், ஆசிரியல்லா பணியாளர் என 24 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளன. தற்போது முதல்கட்டமாக, 12 ஆயிரத்து , 901 கார்டுகள் தயார் நிலையில் உள்ளது. அதனை மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மூலம், அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறக்கும் போது, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வரும்போது, ஸ்மார்ட் கார்ட்டை கட்டாயம் அணிந்து வரவேண்டும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...