கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suicide லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Suicide லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட அரசு ஊழியர் தம்பதி - அதிர்ச்சி சம்பவம்



 ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட அரசு ஊழியர் தம்பதி - நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்


தற்கொலை தடுக்க அழையுங்கள்

மாநில அரசின் உதவி எண், 104,  டெலி மனசு எண், 14416 ஆகிய எண்களில் உதவி பெறலாம்.


உயிரை மாய்த்துக் கொண்ட சுப்பிரமணி திருச்சி RTO-வாகவும், அவரது மனைவி பிரமிளா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளனர்.


கடன் தொல்லை காரணமாக இம்முடிவை எடுத்ததாகவும், தங்களது மகள் வேறு சமுதாய இளைஞரை காதலித்ததால் விபரீத முடிவு எனவும் வேறுபட்ட முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


நாமக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர், திருச்சியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா, நாமக்கல் ஆண்டாபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார்.



இந்தத் தம்பதியின் மகன் மருத்துவப் படிப்பு முடித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மேலும், மகள் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்துள்ளார். ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் திருச்சியில் பணியாற்றி வந்த சுப்பிரமணி நாமக்கல் வந்துள்ளார்.


இந்த நிலையில், அதிகாலையில் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதிக்கு தம்பதி இருவரும் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரயில் முன்பு பாய்ந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.


தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கரூர் ரயில்வே போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அரசு ஊழியர்களான இருவரும் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


முதற்கட்ட விசாரணையில் கடன் நெருக்கடியால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருவரும் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்பட்டது. இந்தச் சூழலில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியின் மகள், பெற்றோரின் எதிர்ப்பை மீறி அண்மையில் காதல் திருமணம் செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.



 இதன் காரணமாகவும் மன அழுத்தத்தில் இருந்த சுப்பிரமணி - பிரமிளா தம்பதி விபரீத முடிவு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இருந்தபோதும் தற்கொலைக்குக் குடும்பப் பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.



School student commits suicide - Case registered against 3 people including HM



 பள்ளி மாணவர் தற்கொலை - தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு


School student commits suicide - Case registered against 3 people including HeadMaster 


 மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை வேல் நகரை சேர்ந்தவர் கலாவதி (47). சேலையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். அவருடைய மகன் யோசுவா (15). பீர்க்கன்காரணை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.


பிப்ரவரி 27-ம் தேதி பள்ளியில் இருந்து கலாவதியை தொடர்பு கொண்டு உடன் படிக்கும் மாணவர் ஒருவரை யோசுவா அடித்து விட்டதாக கூறி பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளனர். அதற்கு தற்போது வேலையில் இருப்பதால் மறுநாள் வருவதாக கலாவதி கூறியுள்ளார். கலாவதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்றபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது யோசுவா கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.



போலீஸார் மாணவர் யோசுவாவின் உடலை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆசிரியர்கள் கண்டித்ததால், மன உளைச்சலில் இருந்த யோசுவா தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மாணவர் எழுதிய கடிதத்தில் உடல் உறுப்புகளை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்து விடுமாறும், தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், அட்வகேட் மேடம் ஆகியோர் தான் செய்யாத தவறுக்கு அடிக்கடி திட்டியதாகவும், அவர்களால் தனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது எனவும் எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.


மாணவர் உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என்றும், உண்மையான காரணத்தை போலீஸார் மறைப்பதாகவும் கூறி யோசுவாவின் உறவினர்கள், நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட முயன்றனர். பின்னர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.



இதற்கிடையே யோசுவாவின் தாய் கொடுத்த புகாரின் பேரில், பீர்க்கன்காரணை போலீஸார் பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த அறிக்கை செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்படும் என்றும் அவர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இச்சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலரால் ஆசிரியர்கள் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை நடைபெற்றதாகத் தெரிகிறது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

3201 Elementary School HM Vacancies : District wise

தமிழ்நாடு முழுவதும் உள்ள 3201 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் - மாவட்ட வாரியாக  Details of 3201 Primary School Headmas...