🍁🍁🍁 இரண்டு கைகளால் வேகமாக எழுதும் மாணவி: இளம் எழுத்தாளரின் அசர வைக்கும் திறமை...
ஒரே நேரத்தில் இரு கைகளாலும் எழுதும் ஆதி ஸ்வரூபா மங்களூருவை சேர்ந்த 15 வயது மாணவியும், இளம் எழுத்தாளருமான ஆதி ஸ்வரூபா ஒரே நேரத்தில் தன் இரு கைகளாலும் இரு மொழிகளில் மின்னல் வேகத்தில் எழுதுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தக்ஷன கன்னட மாவட்டம் மங்களூருவை சேர்ந்தவர் கோபாட்கர். தனியார் பள்ளி ஆசிரியரான இவரது மகள் ஆதி ஸ்வரூபா. 15 வயதான இவர் சிறுவயதிலே பாடல், நடனம், ஓவியம் உள்ளிட்டவற்றை ஆர்வமுடன் கற்று சிறந்து விளங்கினார். அதே வேளையில் படிப்பிலும் முதல் வகுப்பில் தேர்வாகினார். ஆதி ஸ்வரூபா சிறு வயதில் வலது, இடது ஆகிய இரு கைகளிலும் எழுதி பழகியுள்ளார். இந்த வித்தியாசமான திறமையை கண்ட தாய் சுமத்கர், அவரை ஊக்குவித்துள்ளார். இதன் விளைவாக ஒரு நிமிடத்தில் இரு கைகளாலும் 45 வார்த்தைகளை எழுதி சாதனை படைத்துள்ளார். ஆதி ஸ்வரூபாவின் மின்னல் வேக எழுதும் ஆற்றலை பாராட்டி உத்தர பிரதேசத்தை சேர்ந்த பரேலி லதா நிறுவனம் அண்மையில் 'இளம் சாதனையாளர் விருது' வழங்கியுள்ளது. இதுகுறித்து ஆதி ஸ்வரூபா கூறியதாவது: சிறுவயதில் இருந்தே என் தாயும் தந்தையும் என்னை ஊக்குவித்து வந்தனர். இதனால் பரத நாட