கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார் முதல்வர்

இந்தக் கல்வியாண்டில், பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்ததுடன், மாணவியருக்குப் பரிசுகளையும் வழங்கினார்.
தமிழகத்தில், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமுதாயங்களைச் சேர்ந்த மாணவியர் அனைவருக்கும், சைக்கிள் வழங்கும் திட்டம் கடந்த, 2001-02ல் துவக்கப்பட்டது. தொடர்ந்து, 2005-06ல், மாணவர்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
கடந்த, 2011-12 கல்வியாண்டில், 179.21 கோடி ரூபாய் செலவில், 2.77 லட்சம் மாணவர்கள்; 3.44 லட்சம் மாணவியர் என, மொத்தம், 6.21 லட்சம் மாணவர்களுக்கு, சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நடப்பு கல்வியாண்டில், 196.10 கோடி ரூபாய் செலவில், 2.81 லட்சம் மாணவர்கள்; 3.49 லட்சம் மாணவியர் என, 6.30 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்தக் கல்வியாண்டில், பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்தார். மேலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மை வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, ரொக்கப் பரிசுகளை முதல்வர் வழங்கினார்.
இதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு தேர்வுகளில், மாநில அளவில் மூன்று இடங்களை பிடித்த, 93 மாணவ, மாணவியருக்கு, மொத்தம், 18.20 லட்சம் ரூபாய்க்கான ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Application for Paramedical courses starts from 17.06.2025

TamilNadu Paramedical துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பம் 17.06.2025 முதல் துவங்குகிறது Counseling application for Paramed...