கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பாதுகாக்க வேண்டிய காது: காது கேளாதோர் வாரம் (செப்., 24 - 30)

 
ஒலியை கேட்பதில் சிரமம் ஏற்பட்டால், அதுவே காது கேளாமை எனப்படுகிறது. உலக காது கேளாதோர் அமைப்பு, 1958ம் ஆண்டு, காது கேளாதோர் தினத்தை உருவாக்கியது. பின் இது காது கேளாதோர் வாரமாக மாற்றப்பட்டது. ஆண்டுதோறும் செப்., கடைசி வாரம் கடைபிடிக்கப்படுகிறது. சமூகத்தில், காது கேளாதோர் சந்திக்கும் பிரச்னைகளையும், அவர்களது கோரிக்கைகளையும், அவர்களுக்கான வசதிகளை உருவாக்கவும், ஒவ்வொரு அரசும் பரிசீலிக்க வேண்டும் என்பதை இவ்வாரம் வலியுறுத்துகிறது.

முழுமையாகவோ அல்லது பாதியாகவோ ஒலியை உணர அல்லது புரிந்து கொள்ள முடியாதவர்கள், காது கேளாதவர் எனப்படுகின்றனர். சிலரிடம் பேசும் போது, அவர்கள் நாம் சொன்னதை திரும்ப திரும்ப கேட்பார்கள். அப்படியெனில், அவர்களுக்கு காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம். இது எல்லா உயிரினங்களுக்கும் ஏற்படும் ஒன்று. நமது காது சாதாரணமாக, 20 ஹெர்ட்ஸில் இருந்து 20 கிலோ ஹெர்ட்ஸ் வரை கேட்கும் திறன் பெற்றது. ஒரு கிலோ ஹெர்ட்ஸ் = 1000 ஹெர்ட்ஸ்.

பாதிக்கப்படுவது ஏன்:
அதிக சப்தத்தை கேட்பதால் கூட காது கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் இந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர். பெற்றோருக்கு இக்குறைபாடு இருப்பின், குழந்தையையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அடிக்கடி சளி அல்லது தொண்டை வலி ஏற்பட்டாலும் காது கேட்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. குழந்தைகளுக்கு காது கேளாமை இருந்தால், உடனே டாக்டரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில் இது குழந்தையின் பேச்சுத் திறனையும் பாதிக்கும். மொபைல் போன் கதிர்வீச்சு காரணமாகக் கூட கேட்கும் திறன் பாதிப்படையலாம்.

என்ன செய்ய வேண்டும்: காதில் அழுக்கை சுத்தம் செய்கிறோம் என்ற பேரில், கண்ட கண்ட குச்சியை பயன்படுத்துவது, காதின் கேட்கும் திறனை பாதிக்கும். இதற்கு பதிலாக, அதற்கென தயாரிக்கப்பட்ட பஞ்சு உள்ள குச்சியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பலத்த சத்தம் ஏற்படும் இடங்களில் வேலை செய்வோர், ஒலித்தடுப்பு கருவிகளை பொருத்திக் கொண்டால், காது கேளாமையில் இருந்து தப்பிக்கலாம்.
*பூச்சி எதாவது காதில் நுழைந்து விட்டால், சுத்தமான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். இது பூச்சியைக் கொன்று விடும்.

கருவிகள்:
தற்போது அறிவியல் வளர்ச்சியின் முன்னேற்றத்தால், டிஜிட்டல் மற்றும் புரோகிராம் செய்யப்பட்ட காது கேட்கும் கருவிகள் வந்து விட்டன. இதை "ஹெட் போன்' போல மாற்றிக் கொள்ள முடியாது. இதை பயன்படுத்த பயற்சி பெற வேண்டும். ஈ.என்.டி., டாக்டர்களின் ஆலோசனையின் பேரில், இதை பொருத்திக் கொள்ளலாம். காது கேளாதோரின் கேட்கும் திறனைப் பொறுத்து, இக்கருவியின் ஒலி அளவை நிர்ணயிக்கப்படுகிறது. இது நிரந்தரமாக காது கேளாமை பிரச்னையை தீர்க்காது. ஆனால் காது கேட்பதற்கு இந்த கருவி உதவும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.3.1 - Updated on 18-07-2025

தற்போது TNSED Schools  App-ல் Break Fast & Noon Meal பதிவு செய்வதற்கான  புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.3...