>>>நீதிமன்றத்தில் முறையிட பி.டி.எஸ்., மாணவர்கள் முடிவு

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின், தேர்வு மதிப்பெண் கணக்கீட்டு முறையை எதிர்த்து, மீண்டும் கோர்ட்டிற்கு செல்ல உள்ளதாக, தமிழ்நாடு பல் மருத்துவ மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை, கடந்த ஆண்டு ஆகஸ்டில், எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ்., மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு, மதிப்பெண் கணக்கீட்டு முறையில் மாற்றத்தை கொண்டு வந்தது.
இதன்படி, ஒரு பாடத்தில், எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு ஆகியவற்றில், குறைந்தபட்சம், 50 சதவீதம் மதிப்பெண் எடுத்தால், தேர்ச்சி என்ற நடைமுறை இருந்தது. இது, எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வுகளில், தனித்தனியாக, 50 மதிப்பெண் எடுத்தாக வேண்டும் என, மாற்றப்பட்டது.
இந்திய பல் மருத்துவக் கழக விதிமுறைகளுக்கு, இது எதிரானது எனக் கூறி, கடந்த ஆண்டு அக்டோபரில், பி.டி.எஸ்., பயிலும் மாணவர்கள் சார்பில், சென்னை ஐ கோர்ட்டில், 40க்கும் மேற்பட்ட, "ரிட்" மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த ஐகோர்ட், "மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு, முந்தைய நடைமுறைகளின்படியே, ஆண்டுத் தேர்வு நடத்த வேண்டும்&' என, கடந்த டிசம்பரில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரியில், பி.டி.எஸ்., மாணவர்களுக்கான துணைத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், "மருத்துவப் படிப்பின் தரத்தை உயர்த்துகிறோம்&' என, கூறி, புதிய மதிப்பெண் முறைக்கு, மருத்துவப் பல்கலை, இந்திய பல் மருத்துவக் கழகத்திடம், கடந்த ஜனவரியில், சிறப்பு அனுமதி வாங்கியது.
கடந்த மாதம் நடந்த, பி.டி.எஸ்., ஆண்டுத் தேர்வு, புதிய மதிப்பெண் முறையில் நடத்தப்பட்டுள்ளது. இதில், தேர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்துள்ளதையடுத்து, தேர்வில், பழைய மதிப்பெண் முறையை பின்பற்றக்கோரி, பி.டி.எஸ்., மாணவர்கள், மீண்டும் கோர்ட்டிற்கு செல்ல உள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு பல் மருத்துவ மாணவர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் அருளப்ப ராஜ் கூறியதாவது:
பழைய மதிப்பெண் முறையில், "தியரி" பிரிவில், எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் தொடர் மதிப்பீட்டுத் தேர்வு ஆகியவற்றுக்கு, தலா, 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். இம்மூன்று தேர்வுகளையும் சேர்த்து, 50 சதவீதம் மதிப்பெண்; செய்முறைத் தேர்வில், 100 மதிப்பெண்களுக்கு, 50 மதிப்பெண் எடுத்தால், ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றுவிடலாம். புதிய மதிப்பெண் முறையில், மேற்குறிப்பிட்ட நான்கு பிரிவுகளிலும், தனித்தனியே குறைந்தபட்சம், 50 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.
இதனால், கடந்த ஆண்டு வரை, 75 சதவீதமாக இருந்த, பி.டி.எஸ்., மாணவர்களின் தேர்ச்சி விகிதம், தற்போது, 30 சதவீதமாக குறைந்துள்ளது. "மருத்துவப் படிப்பின் தரத்தை மேம்படுத்த வேண்டும்" என்ற, பல்கலை துணைவேந்தரின் கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால், தேர்வு நேரத்தில், உடல்நிலை, குடும்ப சூழல் உள்ளிட்ட காரணங்களால், ஒரு மாணவனின் மதிப்பெண் குறையலாம். எனவே, தேர்வில் ஒரு மாணவர் எடுக்கும் மதிப்பெண்களை மட்டும், அவரின் தகுதிக்கான அளவீடாக கருதுவது சரியல்ல. எனவே, தேர்வு முறையில், பழைய மதிப்பெண் முறை கோரி, விரைவில் கோர்ட்டிற்கு செல்ல இருக்கிறோம். இவ்வாறு அருளப்பராஜ் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...