கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மானியம் இல்லாத சிலிண்டர் விலை 750 ரூபாய்:எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம்

நடப்பு நிதியாண்டில், அக்டோபர் முதல், 2013 மார்ச் வரையிலான, ஆறு மாத காலத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும், மூன்று சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும். அதற்கு மேல், தேவைப்படுவோர் சிலிண்டர் ஒன்றுக்கு, 750 ரூபாய் செலுத்த வேண்டும்.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்து வருவதால், சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியத்தைக் குறைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. அதனால், "ஒரு வீட்டிற்கு, ஆண்டுக்கு ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும். அதற்கு மேல் தேவைப்படுவோர், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அவ்வப்போது நிர்ணயிக்கும், சந்தை விலையை கொடுத்து, காஸ் சிலிண்டர் வாங்கிக் கொள்ள வேண்டும்' என, சமீபத்தில் அறிவித்தது.
அதேநேரத்தில், "இந்த நிதியாண்டில், மீதமுள்ள ஆறு மாதங்களுக்கு, மூன்று சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும்' என்றும் தெரிவித்தது.அதனால், அக்டோபர் 1ம் தேதி முதல், 2013, மார்ச் 31 வரையிலான, ஆறு மாத காலத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும், மூன்று சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில், அதாவது, 399 ரூபாய்க்கு வழங்கப்படும். அதற்குமேல், காஸ் சிலிண்டர் வாங்குவோர், 14.2 கிலோ எடை கொண்ட ஒரு காஸ் சிலிண்டருக்கு, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள சந்தை விலையான, ரூ.756.50 செலுத்த வேண்டும்.
இந்த சந்தை விலையும், சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், மாதம் தோறும் மாறுபடும். அதே நேரத்தில், வர்த்தக பயன்பாட்டிற்கான, 19 கிலோ எடை கொண்ட, காஸ் சிலிண்டருக்கு, 1,334 ரூபாய் செலுத்த வேண்டும்.காங்கிரஸ் கட்சி ஆளும், சில மாநிலங்கள் மட்டும், "ஆண்டுக்கு ஒன்பது, சமையல் காஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும்' என, அறிவித்துள்ளன. மத்திய அரசு அறிவித்துள்ள, ஆறு சிலிண்டர்கள் போக, மீதமுள்ள மூன்றுக்கான மானியத்தை, மாநில அரசுகளே வழங்கி விடும். பொதுமக்களின் நலன் கருதி, இந்த முடிவை எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...