கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, கூடுதல் இட ஒதுக்கீட்டால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இடம் வழங்க, எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று நடக்கிறது.
தமிழகத்தில் அமலில் உள்ள, 69% இடஒதுக்கீட்டின்படி, எம்.பி.பி.எஸ்., படிப்பில், மாணவர் சேர்க்கைக்கு இரண்டு கட்டமாக நடந்த கலந்தாய்வு, கடந்த, 18ம் தேதி முடிந்தது. இதில், தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின், 1,823 மற்றும் 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக உள்ள, 838 எம்.பி.பி.எஸ்., இடங்கள் முழுவதும் நிரம்பிவிட்டன.
இந்நிலையில், 69% இடஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கடந்த, 24ம் தேதி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், 69% இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டுள்ள, தகுதியுடைய மாணவர்களுக்கு, கல்வி நிறுவனங்களில், கூடுதல் இடங்களை உருவாக்கி, அவர்களை சேர்க்கும் நடவடிக்கையை, மாநில அரசு உடனே எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி, 99% மதிப்பெண் பெற்றும், மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவ, மாணவியருக்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை அடுத்து, 50% இடஒதுக்கீட்டின்படி, எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இக்கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதியான மாணவர்களுக்கு, இன்று கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர் சுகுமார் கூறியதாவது: இன்று நடக்கும் கலந்தாய்விற்கான, தரவரிசை பட்டியல் உள்ளிட்ட விவரங்கள், www.tnhealth.org , www.tn.gov.in ஆகிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி மட்டுமே, விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். இவர்களுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., இடம் வழங்கப்படும்.
இக்கலந்தாய்வில் அதிகரிக்கப்படும், எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதலை பெற, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுகுமார் கூறினார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீடு எம்.பி.பி.எஸ்., இடங்களும், இடஒதுக்கீடு முறையில் தான் நிரப்பப்படுகின்றன. ஆனால், இன்று, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தான், 50% இடஒதுக்கீட்டின் படி, கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு... 27-04-2024 – Press News – Date Extension for Online Application - Direct R...