அரசு மருத்துவமனை, மாணவர்கள் விடுதி, காவலர் பயிற்சி பள்ளி உள்ளிட்ட
அரசு துறைகளுக்கு, மானிய விலையில், காஸ் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டு
வந்தது. தற்போது, மானியத்தை ரத்து செய்து, "வாட்' வரியுடன் சேர்த்து,
விற்பனை செய்ய, ஏஜென்சிகளுக்கு, ஆயில் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன. ஐ.ஓ.சி., - ஹெச்.பி., - பி.பி., ஆகிய, பொதுத்துறை ஆயில் நிறுவனங்கள்,
வீட்டு உபயோகத்திற்காக, 14.2 கிலோ எடையுள்ள, காஸ் சிலிண்டர்களையும், வணிக
பயன்பாட்டிற்காக, 19 கிலோ எடையுள்ள, கமர்ஷியல் காஸ் சிலிண்டர்களையும்
வினியோகம் செய்கின்றன. நடப்பு நிதியாண்டில், 1.87 லட்சம் கோடி ரூபாய்
இழப்பை சந்தித்துள்ளதாக கூறிய, பொதுத்துறை ஆயில் நிறுவனங்கள், கடந்த மாதம்,
டீசல் விலையை உயர்த்தியது. அதோடு, ஒரு குடும்பத்திற்கு, ஆண்டுதோறும், ஆறு
சிலிண்டர் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும் என, அறிவித்தது. அடுத்த
கட்டமாக, ஒரு குடும்பத்திற்கு, கூடுதலாக மூன்று சிலிண்டர்களை, இரண்டாம்
கட்ட மானியத்தில் வழங்குவதாக அறிவித்து, மூன்று சிலிண்டர்கள் விலையை,
சிலிண்டருக்கு, 920.50 ரூபாய் என, ஆயில் நிறுவனங்கள் நிர்ணயம் செய்துள்ளன.
சில நாட்களுக்கு முன், டொமஸ்டிக் சிலிண்டர் விலையும், 11 ரூபாய்
உயர்த்தப்பட்டது. இதனால், ஆண்டு ஒன்றுக்கு, ஆறு சிலிண்டர்களை தலா, 401
ரூபாய் செலுத்தியும், அதற்கு மேல் வாங்கும் மூன்று சிலிண்டர்களை தலா,
920.50 ரூபாய் செலுத்தியும் வாங்க வேண்டிய நிர்பந்தம்,
வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள, எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., மாணவர்
விடுதி, காவலர் பயிற்சி பள்ளி, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம்,
அங்கன்வாடி மையம் போன்ற, சில அரசு துறைகளுக்கு மட்டும், வணிக பயன்பாட்டில்
இருந்து விலக்கு அளித்து, மானியத்துடன் கூடிய காஸ் சிலிண்டர்களை, ஆயில்
நிறுவனங்கள் வினியோகம் செய்தன. இந்நிலையில், இவைகளுக்கான மானியமும், ரத்து
செய்யப்பட்டுள்ளது. தற்போது, அரசு துறைகளுக்கு வினியோகிக்கும், 14.2 கிலோ
காஸ் சிலிண்டர் விலையை, 1,057 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு, 15
சதவீதம் வாட் வரி, 53 ரூபாய் சேர்த்து, 1,110 ரூபாய்க்கு வினியோகம் செய்ய,
ஏஜென்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயில் நிறுவனங்களின் இந்த அதிரடி
நடவடிக்கையால், இரு மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி, சிலிண்டர் வாங்க
வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது, அரசு மருத்துவமனை, மாணவர் விடுதி,
அங்கன்வாடி உள்ளிட்ட துறை அதிகாரிகளை, அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு
06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு மாண்புமிகு ம...
