போட்டித் தேர்வு வழியாகத் தேர்வு செய்யப்பட்ட, 34 உதவி தொடக்கக் கல்வி
அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று பணி நியமன
உத்தரவுகளை வழங்கினார். ஆசிரியர் தேர்வு வாரியம், 34 உதவி தொடக்கக் கல்வி
அலுவலர் பணியிடங்களை நிரப்ப, சில மாதங்களுக்கு முன், போட்டித் தேர்வை
நடத்தி, சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், தேர்வுப் பட்டியலை வெளியிட்டது.
தலைமைச் செயலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி அமைச்சர்
சிவபதி, 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும், பணி நியமன உத்தரவுகளை
வழங்கினார். தேர்வான, 34 பேரில், 16 பேர் ஆண்கள்; 18 பேர் பெண்கள். 34
பேரும், அவரவர் சொந்த மாவட்டங்களில், பயிற்சியை மேற்கொள்ளும் வகையில்,
ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கல்வி அலுவலகங்கள், ஆசிரியர் பயிற்சி மையம்,
பள்ளிகள், ஆகியவற்றில், 59 நாட்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என,
தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்,
துறை முதன்மை செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர்
முகம்மது அஸ்லம், பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி ( D.A.) உயர்வு - விரைவில் அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி ( Dearness Allowance) உயர்வு - விரைவில் அறிவிப்பு ஜூலை 2025 இல் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊ...
