கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>உதவி தொடக்க கல்வி அலுவலர் 34 பேருக்கு பணி நியமன உத்தரவு

போட்டித் தேர்வு வழியாகத் தேர்வு செய்யப்பட்ட, 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். ஆசிரியர் தேர்வு வாரியம், 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப, சில மாதங்களுக்கு முன், போட்டித் தேர்வை நடத்தி, சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், தேர்வுப் பட்டியலை வெளியிட்டது. தலைமைச் செயலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும், பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். தேர்வான, 34 பேரில், 16 பேர் ஆண்கள்; 18 பேர் பெண்கள். 34 பேரும், அவரவர் சொந்த மாவட்டங்களில், பயிற்சியை மேற்கொள்ளும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கல்வி அலுவலகங்கள், ஆசிரியர் பயிற்சி மையம், பள்ளிகள், ஆகியவற்றில், 59 நாட்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என, தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், துறை முதன்மை செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் முகம்மது அஸ்லம், பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2329 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்...

  மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2329 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்... >>> விண்ணப்பதாரர்கள...