கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆசிரியராக இருப்பதையே விரும்புகிறேன்: அப்துல் கலாம்

"மனித சமுதாயம், மனித சமுதாயமாக நடந்து கொள்ள வேண்டும், என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார்.
ராமநாதபுரத்தில் நடந்த ஒரு விழாவில் அவர் பேசியதாவது: நான் விளக்காக இருப்பேன், படகாக இருப்பேன், ஏணியாக இருப்பேன், அடுத்தவர் துன்பத்தை துடைப்பதின் மூலம் மனநிறைவோடு வாழலாம்.
மகாத்மா காந்திக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது, அவரது தாயார், "மகனே, உன் வாழ்வில் அடுத்தவரின் துன்பத்தை துடைத்து, அவரது வாழ்வில் ஏதேனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால், நீ மனிதனாக பிறந்ததற்கான பலனை அடைந்து விடுவாய்" என்றார்.
எனவே, அந்த அறிவுரையை பின்பற்றி, நீங்கள் அடுத்தவர் துன்பப்படும் வேளையில், அவர்களது துன்பங்களை துடைத்து, துணையாக இருக்க வேண்டும். உலகில் யாராக இருந்தாலும் சாதிக்க முடியும், அதற்கு நான்கு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். லட்சியம், அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி இவைகள் இருந்தால் சாதனை எளிது, என்றார்.
அணு மின்சாரத்தை ஏன் ஆதரிக்கிறீர்கள்? என, கலாமிடம் சிலர் கேட்டதற்கு, அவர், "நீர் மின்சாரம், அணு மின்சாரம் தூய்மையானது, மற்றவை சுற்றுசூழலை பாதிக்கக்கூடியது. இதனால், அணுமின்சாரத்தை வரவேற்கிறேன்,&'&' என்றார். 
மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்தால் ஏற்று கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக இல்லை, நான் ஆசிரியராக இருப்பதையே விரும்புகிறேன், இதுதான் எனக்கு மனநிறைவை தருகிறது என்றார்.
எல்லையில் ராணுவ வீரர்கள் தலையை வெட்டி எடுத்த சென்ற சம்பவம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, மனித சமுதாயம் மனித சமுதாயமாக நடந்து கொள்ள வேண்டும், என்று கலாம் தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Term 3 - Unit 5 - February 3rd Week - Lesson Plan - Ennum Ezhuthum - 4 & 5th Std

  4 & 5ஆம் வகுப்பு - பருவம் 3 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - அலகு5 – பிப்ரவரி 4வது வாரம் (Term 3 - Unit 5 - February 3rd Week - Les...