கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆசிரியராக இருப்பதையே விரும்புகிறேன்: அப்துல் கலாம்

"மனித சமுதாயம், மனித சமுதாயமாக நடந்து கொள்ள வேண்டும், என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார்.
ராமநாதபுரத்தில் நடந்த ஒரு விழாவில் அவர் பேசியதாவது: நான் விளக்காக இருப்பேன், படகாக இருப்பேன், ஏணியாக இருப்பேன், அடுத்தவர் துன்பத்தை துடைப்பதின் மூலம் மனநிறைவோடு வாழலாம்.
மகாத்மா காந்திக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது, அவரது தாயார், "மகனே, உன் வாழ்வில் அடுத்தவரின் துன்பத்தை துடைத்து, அவரது வாழ்வில் ஏதேனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால், நீ மனிதனாக பிறந்ததற்கான பலனை அடைந்து விடுவாய்" என்றார்.
எனவே, அந்த அறிவுரையை பின்பற்றி, நீங்கள் அடுத்தவர் துன்பப்படும் வேளையில், அவர்களது துன்பங்களை துடைத்து, துணையாக இருக்க வேண்டும். உலகில் யாராக இருந்தாலும் சாதிக்க முடியும், அதற்கு நான்கு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். லட்சியம், அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி இவைகள் இருந்தால் சாதனை எளிது, என்றார்.
அணு மின்சாரத்தை ஏன் ஆதரிக்கிறீர்கள்? என, கலாமிடம் சிலர் கேட்டதற்கு, அவர், "நீர் மின்சாரம், அணு மின்சாரம் தூய்மையானது, மற்றவை சுற்றுசூழலை பாதிக்கக்கூடியது. இதனால், அணுமின்சாரத்தை வரவேற்கிறேன்,&'&' என்றார். 
மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்தால் ஏற்று கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக இல்லை, நான் ஆசிரியராக இருப்பதையே விரும்புகிறேன், இதுதான் எனக்கு மனநிறைவை தருகிறது என்றார்.
எல்லையில் ராணுவ வீரர்கள் தலையை வெட்டி எடுத்த சென்ற சம்பவம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, மனித சமுதாயம் மனித சமுதாயமாக நடந்து கொள்ள வேண்டும், என்று கலாம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TN Assembly Election 2026 - Exit Poll Survey Results

வெளியானது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்   TN Assembly Election 2026 - Exit Poll Survey Results...