கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மத்திய அரசு ஊழியர்கள் பணி விவரங்களை ஒரே தளத்தில் அறிந்து கொள்ள ஏற்பாடு...

 


மின்னனு- மனிதவள மேலாண்மை அமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிய அறிக்கையை, மத்திய உள்துறைச் செயலாளர் ஏ.கே.பல்லா வெளியிட்டார்.

மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சிதுறை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்த மின்னனு- மனிதவள மேலாண்மை அமைப்பில் (இ-எச்ஆர்எம்எஸ்) ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை மத்திய உள்துறை மற்றும் மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறைச் செயலாளர் ஏ.கே. பல்லா வெளியிட்டார். இந்த இ-எச்ஆர்எம்எஸ் அமைப்பில், 5 தொகுப்புகளின் 25 பயன்பாடுகள் இருந்தன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பல்லா, ‘‘வரும் காலங்களில் அனைத்து அமைச்சகங்களுக்கும் இந்த இ-எச்ஆர்எம்எஸ் மிகச் சிறந்த உபகரணமாக இருக்கும். இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு உபகரணம், கொள்கைகளை உருவாக்கவும், பணியாளர் சார்ந்த விஷயங்களைக் கையாளவும் மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த இ-எச்ஆர்எம்எஸ் இதர அமைச்சகங்களிலும் விரிவாக பயன்படுத்துதைப் பிரபலப்படுத்த வேண்டும்’’ என்றார்.

மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கூடுதல் செயலாளர் ராஷ்மி சவுத்திரி கூறுகையில் ‘‘இ-எச்ஆர்எம்எஸ் மூலம் அரசு ஊழியர்கள், தங்கள் பணி தொடர்பான அனைத்து விஷயங்களையும் மின்னணு முறையில் பெறலாம் என்பதால், இது ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

இந்த இ-எச்ஆர்எம்எஸ் மூலம் அரசு ஊழியர்கள் தங்கள் பணி விவரப் புத்தகம், விடுப்பு, வருங்கால வைப்பு நிதி, சம்பளம், கடன் , முன்பணம், சுற்றுலா உட்பட பல விவரங்களை ஒரே தளத்தில் பெறலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them

பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்...