கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை – தமிழக அரசு உத்தரவு...

 தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமலபடுத்தப்பட்டது. இதனால் பொது போக்குவரத்துகளான பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்த காரணத்தால் குறைந்த அளவில் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்டவைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.

தற்போது பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தேவையான அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகளும் 24 மணிநேரமும் இயக்கப்படுகிறது. அரசு சார்பில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் நலனுக்காக அயராது உழைக்கும் போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊக்கத்தொகையை அரசு உயர்த்தி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட உத்தரவின்படி, அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் நற்பணியை ஊக்கப்படுத்தும் வகையில் சாதனை ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி 2020ஆம் ஆண்டில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 : Literary Clubs & Quiz Competitions - Topics & Guidelines - DSE Proceedings

  2025-2026 : Literary Clubs & Quiz Competitions - Topics & Guidelines - DSE Proceedings , Dated : 17-07-2025 2025-2026 : தமிழ் இலக்...