அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் (ம) நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள்
Standard operating procedures to be followed by drivers and conductors when transporting differently abled persons in State Transport Corporation buses
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் போது ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள். கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள் (Standard Operating Procedures) போக்குவரத்துத்துறை, தலைவர் அலுவலகம் வாயிலாக கடித எண் 453/Ch2/ChO/2022, நாள்: 10/01/2022. கடித எண்: 750/Ch5/ChO/2022. நாள்: 05/01/2023 மற்றும் கடித எண்: 453/Ch5/Cho/2023. நாள்: 30/01/2023 மூலம் வழங்கப்பட்டு, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், சில நேரங்களில் இவ்வியக்க நடைமுறைகள் பின்பற்றப்படாமல் புகார்கள் பெறப்படுகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு. கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள இயக்க நடைமுறைகளை, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தவறாது பின்பற்றுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
2. ஓட்டுநர் பேருந்து நிற்பதற்கு என அறிதியிடப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்தத்திற்கு முன்பாகவோ /தள்ளியோ நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏறி / இறங்க சிரமம் ஏற்படுத்துக்கூடாது.
3. நடத்துனர் வேண்டும் என்றே. பேருந்தில் இடமில்லை என்று கூறி பேருந்தில் ஏறும் மாற்றுத்திறனாளி பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது.
4. மாற்றுத்திறனாளிகளுக்கு என பேருந்தில் ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு மேல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதை அறிவித்து. அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய உதவி செய்ய வேண்டும்.
5. மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குரிய இருக்கையில் அமர்ந்தவுடன், கனிவுடன் பயணச்சீட்டுக்கள் வழங்கி அவர்கள் இறங்க வேண்டிய இடங்களில் பேருந்தினை நிறுத்தி, இறங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடத்துனர்கள் உதவி செய்வதுடன், அவர்கள் இறங்கும் வரை காத்திருந்து அவர்கள் இறங்கி கடந்து சென்ற பின்னர் பேருந்தினை நகர்த்த வேண்டும்.
6. சாதாரண பயணிகள் மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர்களை கனிவுடன் மாற்று இருக்கைகளில் அமரச்செய்து, மாற்றுத்திறனாளிகளை அந்த இருக்கையில் அமரச் செய்ய வேண்டும்
7. பேருந்து நிலையங்களில் பேருந்து புறப்படுவதற்கு முன், மாற்றுத் திறனாளிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இருக்கையில், பேருந்து புறப்படும் வரையில் இதர பயணிகளை அமர வைக்காமல் வைத்திருந்து, ஒரு வேளை சாதாரண பயணிகள் அமர்ந்து இருப்பின், கடைசி நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறினால், சாதாரண பயணிகளை மாற்றுத்திறனாளிகள் அமரும் பொருட்டு அவர்களுக்கான இருக்கையினை தர வேண்டும் என தெரிவித்து அமர வைக்க வேண்டும்.
8. மாற்றுத்திறனாளி பயணிகளிடம் அவர்கள் மனம் புண்படும் வகையிலோ,எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ. ஏௗனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது.
9. பேருந்தில் ஏறும் மாற்றுத் திறனாளி பயணிகளை கனிவுடனும், அன்புடனும் நடத்திட வேண்டும்.
10. மாற்றுத்திறனாளி பயணிகள் ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும் கண்காணித்து ஓட்டுனருக்கு சமிக்ஞை (Signal) செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும்.
11. இந்திய அரசு அறிவித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய தேசிய அடையாள அட்டை (Unique Disability ID Card) and National Disabilty Identity Certificate Cards (NDIC) அசல் அட்டை கொண்டு. 40 சதவீதம் மாற்றுத் திறன் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர் (Escort) ஒருவருடன் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (White board) மட்டும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவர்கள் இருவருக்கும் உரிய கட்டணமில்லா பயணச் சீட்டினை பேருந்து நடத்துனர் வழங்க வேண்டும்.
12. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் புறநகர் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி. 75% பயணக் கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
13. இயற்கை சீற்றம் உள்ள நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு கட்டண நிறுத்தம் இல்லாத இடங்களிலும், கோரிக்கையின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மகளிர் கேட்கும் பேருந்து நிறுத்தங்களில் பேருந்தினை நிறுத்தி ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.
14. ஒவ்வொரு மண்டலத்திலும் மாதந்தோறும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொழுது, சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளியை அழைத்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தெரிவிக்குமாறும், அதற்கேற்ப மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது கனிவுடனும் பொறுமையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்கும் முகாமில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
பேருந்தில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது தவறாமல் மேற்குறிப்பிட்டுள்ள நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்ற, தகுந்த சுற்றறிக்கையை அனைத்து பணிமனைகளுக்கும் அனுப்பி, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தி, இது பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்கப்பட வேண்டும் என்று அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.