கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்...

 


ரூ.2.80 கோடி மதிப்பிலான வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழா, ரூ.6 லட்சம் மதிப்பிலான வ.உ.சி. பூங்கா புதுப்பித்தல் பணிகள், சக்தி மசாலா அறக்கட்டளையின் சார்பில் கொங்காலம்மன் கோயிலில் கட்டப்பட்டுள்ள அன்னதான கூடம் திறப்பு விழா மற்றும் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பசுமைக் கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் நடைபெற்றது. 

 ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், இறுதி முடிவை முதல்வர் தான் அறிவிப்பார் என்றார். 

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை. இதுகுறித்து வல்லுநர்களுடன் கல்வித்துறை ஆலோசித்து முதல்வர் இறுதி முடிவு எடுப்பார் என்றார். தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த நிலை தொடரும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiyam Mobile App New Version Update - Version 1.21.2 - Updated on 07-04-2025

   Kalanjiyam App Update செய்த பிறகு New / Old Regime தேர்வு செய்ய முடிகிறது  KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.21.2 *  IFHRMS   Kalanjiya...