கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை...

 24 கேள்விகளுக்கு இணையதளத்தில் தினமும் பதில் அளிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது .

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது , 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடந்து வருகிறது . பள்ளிக்கு வரும் மாணவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் . வகுப்பறையில் சமூக இடைவெளி கடைபிடித்து , முகக்கவசம் உள்ளிட்ட அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என ஏற்கனவே பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது . தற்போது , பள்ளி தலைமை ஆசிரியர்கள் EMIS ( 0.034 Version ) ஆப் பதிவிறக்கம் செய்து  EMIS Attendance app updated Version ஆப்பில் மாணவர்களுக்கு நன்மை தரும் சூழல் குறித்த 24 கேள்விகளுக்கு உரிய பதிலை அனைத்து வேலைநாட்களிலும் தவறாது பதிவு செய்ய வேண்டும் . 

தினமும் பள்ளி வேலை நாட்களில் மேற்கண்ட விவரங்களை பள்ளி கல்வி செயலரின் நேரடி கவனத்தின் கீழ் ,கண்காணிக்கப்படுவதால் , பதிவு செய்யாத பள்ளிகள் கண்டறிய நேரிட்டால் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியரே அதற்கான முழு பொறுப்பாவார்.  எனவே மேற்கண்ட பணிகளை கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் . அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் ( பொறுப்பு ) , ஆசிரியர் , பயிற்றுனர்கள் அவரவர் குறுவள மையங்களுக்குட்பட்ட உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளில் தினமும் இப்பணியை 100 சதவீதம் முடித்துள்ளதை உறுதி செய்ய வலியுறுத்தப்படுகிறது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மிகச்சிறந்த பவர் பேங்க் (Power Bank) மாடல்களின் விவரங்கள்

  இந்தியாவில் தற்போது (2025) விற்பனையில் உள்ள மிகச்சிறந்த மற்றும் நம்பிக்கையான பவர் பேங்க் (Power Bank) மாடல்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்ப...