கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொறியியல் அரியர் தேர்வு எழுத மாணவர்களுக்கு சலுகை...

இன்ஜினியரிங் மாணவர்களில் 'அரியர்' உள்ளவர்கள் இன்னும் மூன்று செமஸ்டர் தேர்வுகளை கூடுதலாக எழுதி கொள்ளலாம் என அண்ணா பல்கலை அனுமதி அளித்துள்ளது.




அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு பதிவாளர் கருணாமூர்த்தி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படித்த மாணவர்களில் குறித்த காலத்தில் அரியர் தேர்வுகளை முடிக்காதவர்கள் தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.




இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் 2020 ஜூலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் '1990 முதல் படிப்பில் சேர்ந்தவர்களுக்கு இன்னும் மூன்று முறை அரியர் தேர்வை எழுத அவகாசம் வழங்கலாம்' என முடிவானது. இதையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட அண்ணா பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில் அவகாசம் முடிந்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஆக. - செப். தேர்வு அடுத்த ஆண்டு பிப். - ஆக. தேர்வு ஆகியவற்றில் பங்கேற்க சிறப்பு அனுமதி தர முடிவானது.




அதன்படி அண்ணா பல்கலையின் சென்னை வளாகத்தில் 1990 முதல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் சேர்ந்தவர்களும்; அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில் 2001ம் ஆண்டின் மூன்றாவது செமஸ்டர் மற்றும் 2002 முதல் செமஸ்டர் முதலும் சேர்ந்த மாணவர்கள் கூடுதல் அவகாச சலுகையை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TN Assembly Election 2026 - Exit Poll Survey Results

வெளியானது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்   TN Assembly Election 2026 - Exit Poll Survey Results...