ஆசிரியர் மீது போக்சோ வழக்கு - 2 டி.இ.ஓ., மீதும் நடவடிக்கை...

 மதுரையில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர் மீது, 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் மீது நடவடிக்கை எடுக்காத இரண்டு டி.இ.ஓ.,க்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


மதுரை, ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி ஆங்கில ஆசிரியர் விஜயபிரபாகரன், 45. இவர், 2020 ஜூலையில், பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.மாணவியின் தந்தை மாநகராட்சி, மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லை. இது குறித்து, கோதண்டம் என்பவர், 'போக்சோ' வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.


நீதிமன்ற உத்தரவின்படி, விஜயபிரபாகரன் மீது கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில், புகார் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இருவர் சேர்க்கப்பட்டு, அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


இந்நிலையில், விஜயபிரபாகரனை, மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா, 'சஸ்பெண்ட்' செய்தார். அவர் கூறுகையில், ''புகார் அளித்தவுடன், பெண்கள் பள்ளியில் இருந்து, ஆண்கள் பள்ளிக்கு விஜயபிரபாகரன் மாற்றப்பட்டார். மாநகராட்சி கமிஷனர் உத்தரவுப்படி, சஸ்பெண்ட் செய்துள்ளோம். வழக்கில், கல்வி அதிகாரிகளை சேர்த்துள்ள தகவல் எனக்கு தெரியாது,'' என்றார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...