கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

POCSO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
POCSO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

POCSO - Rules that Teachers / Head Teachers should be aware of

 

மாணவிக்கு மாணவர்கள் பாலியல் தொந்தரவு -  குற்றம் செய்யாத ஆசிரியர்கள்  / தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது  செய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன? - ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்கள் அறிந்து இருக்க வேண்டிய விதிமுறைகள்


Female Student sexual harassment by students - What is the reason why non-criminal teachers/headmaster has been arrested under POCSO Act? - Terms that Teachers / Head Teachers should be aware of


7ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு, 11ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததன் விளைவாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களான ஒரு பெண் ஆசிரியர், ஒரு ஆண் ஆசிரியர் என குற்றம் செய்யாத மூன்று ஆசிரியர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன?



POCSO சட்டம் என்ன சொல்கிறது


POCSO என்பது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை  செய்தவர்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் வகையிலும் மட்டுமே உருவாக்கப்பட வில்லை.


அதில் குற்றம் செய்தவர்களை தாண்டி மற்றவர்களுக்கும் தண்டனை வழங்கும் பல்வேறு பிரிவுகள் உள்ளன.


📌குறிப்பாக ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்கள் அறிந்து இருக்க வேண்டிய விதிமுறைகள்: 


1)போக்சோ சட்டம் பிரிவு 19 மற்றும் 21 என்றால் என்ன?


1)19(1)-இன்படி, 

பாலியல்

ஒரு குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றம் குறித்து தெரிந்த எவரும் காவல்துறையிடம் நியாயமான நேரத்தில்

புகார் அளிக்க வேண்டும்.    இது கட்டாயப் புகாரளிக்கும் தேவையாகும்,  மேலும் புகாரளிக்கத் தவறிய எந்தவொரு நபரும் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் பெறும் அளவுக்கு குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.


📌 மேற்கண்ட பிரிவில் கல்வி நிறுவனங்களின் நிலை :-


ஒரு குழந்தை  பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அறிந்திருந்த எவரும் (பள்ளி அளவில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அடங்குவர்)


📌பிரிவு 19 இன் துணைப்பிரிவு (2) இன் கீழ் 24 மணி நேரத்தில் குற்றத்தை பதிவு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.


குற்றத்தைப் பதிவு செய்யத் தவறியவருக்கு 

ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கக்கூடிய இரண்டு வகையான சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.



இது போன்று நிகழ்வுகளில் இருந்து ஆசிரியர்கள் தப்பிக்க செய்ய வேண்டியவைகள்:-


1) பாடம் நடத்துவது மட்டும் நமது வேலை என்று ஒதுங்கும் சூழல் தற்போது இல்லை, மாணவர் / மாணவிகளுக்கு பள்ளி மற்றும் வெளியில் என எங்கு பிரச்சனை நடந்தாலும் அவை நமது கவனத்திற்கு வருகின்ற நிலையில் மாணவிகள்/ மாணவர்கள் சொல்லும் தகவலை ஆசிரியர்கள் உடனேயே தலைமை ஆசிரியர் கவனத்திற்கு கொண்டு செல்லவும்.


2) குறிப்பாக பாலியல் சார்ந்த புகார்களை மாணவர்கள் உங்களிடத்தில் கூறியவுடன்  , அந்த மாணவர் / மாணவியையும் உடன் வைத்துக் கொண்டு குற்றம் நடந்து உள்ளதாக மாணவர் கூறுவதாக குறிப்பிட்டு தலைமை ஆசிரியரிடம் கடிதம் மூலமாக தகவல் கொடுத்து விடவும். 

கடிதத்தை நகல் எடுத்து தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று வைத்துக் கொள்ளவும்.


3) தலைமை ஆசிரியர்கள் உடனடியாக வட்டாரக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவல் கொடுத்தது மட்டுமல்லாமல் 

ந.க.எண் போட்டு கடிதம் ஒன்றை அனுப்பி விடவும்.


4) தலைமை ஆசிரியர் PTA & SMC க்கு தகவல் மட்டும் கொடுத்து விடவும். அவர்கள் தீர்த்து வைப்பதாக கூறினாலும் 

உயர் அலுவலர் / CEO வுக்கு  சொல்லித்தான் ஆக வேண்டும் என்று தெளிவாக கூறி விடவும்.


5) எக்காரணம் கொண்டும் PTA, SMC, கட்சி பிரமுகர்களுடன் இணைந்து சமாதான பஞ்சாயத்துகளில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டாம்.


6) முதன்மைக் கல்வி அலுவலர் ஒப்புதலுடன் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்து விடவும்.


விழிப்புணர்வுக்காக மட்டுமே இத்தகவல் பகிரப்படுகிறது.


POCSO தொடர்பான அரசின் வழிகாட்டுதல் / வரைவுத் திட்டம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை பின்பற்றவும்.


Government school teacher arrested in POCSO for sexually harassing female students

 

மாணவிகளிடம் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட அரசுப்பள்ளி கணித ஆசிரியர் கைது


Government school mathematics teacher arrested in POCSO for sexually harassing female students


வகுப்பறையில் ஒழுங்கீன செயல் -  கணித ஆசிரியர் மீது வழக்குப்பதிவு


வகுப்பறையில் ஒழுங்கீன செயல்


திருப்பூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன் ஒழுங்கீனமாக செயல்பட்ட கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு


அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கணித ஆசிரியர் சுந்தர வடிவேலு என்பவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.


மேலும் மாணவர்களை செல்போனில் புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வகுப்பு மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இது குறித்து பெற்றோரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் புகார் தெரிவித்தனர். இதற்கிடையில் திருப்பூர் தெற்கு போலீசாரும் விசாரணையைத் தொடங்கினார்கள்.


மேலும், 7-ம் வகுப்பு கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு என்பவர் சில மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சைல்டு ஹெல்ப்லைன் எண் 1098-க்கு புகார் சென்றது.


இதையடுத்து, பள்ளி கல்வி துறையினர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலர் ரியாஸ் அகமது பாட்ஷா, மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் ஆறுச்சாமி, திருப்பூர் தெற்கு போலீஸார் ஆகியோர் நேற்று மதியம் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். இதில் பெற்றோர் மற்றும் புகார் அளித்த வகுப்பு மாணவிகளிடம் தனித்தனியாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.


இதையடுத்து, செய்தியாளர்களிடம் மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலர் ரியாஸ் அகமது பாட்ஷா கூறும் போது, “7-ம் வகுப்பு ஆசிரியர் ஒருவர், குழந்தைகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக புகார் வந்தது. இது தொடர்பாக அனைவரிடமும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு, எழுத்துப்பூர்வமாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார். இதனையடுத்து கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


அதிகாரிகள் தேடியபோது ஆசிரியரான சுந்தர வடிவேலு தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றது உறுதி செய்யப்படவே, அவரை தேடிச் சென்ற அதிகாரிகள் அங்கு அவரை அதிரடியாக கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து வீரபாண்டி காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தர வடிவேலுவை போலீசார் கைது செய்துள்ளனர்.


What happened in Krishnagiri schoolgirl sexual harrasment case? How were the 3 teachers arrested?



 கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நடந்தது என்ன? 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது எப்படி?


What happened in Krishnagiri schoolgirl sexual harrasment case? How were the 3 teachers arrested?


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக அவர்களைத் தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) முனிராஜ் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


தலைமையாசிரியரால் வெளிச்சத்துக்கு வந்த குற்றம்

அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி ஒரு மாத காலமாக பள்ளிக்கு வராத நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவியின் நண்பர்களிடம் விசாரித்துள்ளார். பிறகு, பள்ளி ஆசிரியர்களுடன் மாணவியின் வீட்டுக்கு சென்று பெற்றோரையும் சந்தித்துள்ளார்.


அப்போது அந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நேர்ந்திருப்பதாகவும், அதில் ஈடுபட்டது அவரது பள்ளியின் ஆசிரியர்கள் என்றும் மாணவியின் தாய் தெரிவித்துள்ளார். பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் அவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் மாணவியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.


இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்குமாறு மாணவியின் தாயாரை அறிவுறுத்தினார். அதன்பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்ததாக மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.


மாணவியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் அந்த மாணவியை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காகச் சேர்த்தனர். இந்தச் சம்பவம் குறித்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புகார் தெரிவித்தார். இது தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டன.


போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு


சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் 3 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


"கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று இரவு, தகவல் கிடைத்தவுடன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


ஜனவரி 3ஆம் தேதியில் இருந்து ஒரு மாதமாக மாணவி பள்ளிக்கு வராததால் பள்ளி சார்பில் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டதில் சிறுமி பாதிக்கப்பட்டது தெரிய வந்தது," என்று அவர் குறிப்பிட்டார்.


அதோடு, பள்ளி ஆசிரியர்களுடைய வழிகாட்டுதலில் சிறுமியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், காவல் நிலையம் அளித்த வழிகாட்டுதல் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு அலகைத் தொடர்பு கொண்டதாகவும் அவர் தெர்வித்தார்.


அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மன நல ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளதாகவும் ஆட்சியர் கூறினார்.


தலைமை ஆசிரியருக்கு காவல்துறை பாதுகாப்பு

இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த காரணத்தால் தலைமை ஆசிரியருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதி அவரது இல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.


"சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீது போக்சோ 5 (f), 6(1), BNS 329(3), உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் மற்றும் குற்றத்தை வெளிக் கொண்டு வரக் காரணமாக இருந்த தலைமை ஆசிரியருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது" என்று மாவட்ட காவல் துறை எஸ்பி தங்கதுரை தெரிவித்தார்.


ஆசிரியர்கள் சஸ்பெண்ட்


மாணவி வன்கொடுமை வழக்கில் ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகிய மூவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


"குற்றச்சாட்டைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட உள் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் மீது வேறு எந்த மாணவரோ அல்லது ஆசிரியரோ எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. ஆசிரியர்கள் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். ஆயினும், மூன்று ஆசிரியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்று முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பு திரு.முனிராஜ் கூறினார். குற்றப் பத்திரிக்கை பெறப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆசிரியர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்" என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) முனிராஜ் தெரிவித்தார்.


பொதுமக்கள் சாலை மறியல்

பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியின் முன்பு குவிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பர்கூர் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர்களை இங்கு அழைத்து வந்தால் மட்டுமே சாலை மறியலைக் கைவிடுவோம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கூட்டு பாலியல் வன்கொடுமை 


போலீசார் விசாரணையில் மாணவி பயின்ற அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் 3 பேர் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், இதன் காரணமாக மாணவி கர்ப்பமானதும் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறையில் பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படுகிறது. சிறுமி நீண்ட காலமாக பள்ளிக்கு வராமல் இருந்ததை விசாரிக்க ஆசிரியர்கள் திங்கள்கிழமை அவரது வீட்டிற்குச் சென்றபோதுதான் குற்றம் வெளிச்சத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பர்கூர் டி.எஸ்.பி. தலைமையில் அனைத்து மகளிர் போலீசார் அரசு பள்ளி ஆசிரியர்களான 3 பேரை போக்சோ வழக்கில் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மூவரையும் பள்ளிக் கல்வித் துறையினர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள நிலையில், கைதான ஆசிரியர்களின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவி பயின்ற அரசுப் பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


ஒரு மாதமாக மாணவியின் பெற்றோர் புகார் அளிக்காததது ஏன்?


தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவியின் வீட்டுக்குச் சென்றபோது, மாணவியின் தாய், ஜனவரி முதல் வாரத்தில் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கழிப்பறையில் மூன்று ஆசிரியர்களால் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும்  கூறியதாக உள்ளூர் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.


ஆனால் இந்தத் தகவலை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மறுத்துள்ளார்.


"சிறுமிக்கு கருக் கலைப்பு நடந்ததாக தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம். இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றன" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


இந்த விவகாரம் குறித்து, குழந்தைகள் நல அலுவலர் கூறுகையில், "குழந்தைக்கு கருக்கலைப்பு செய்யபட்டதாக வதந்திகள் பரப்பப்படுகிறது. ஆட்சியரும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் அச்சத்தால் புகார் அளிக்க முன்வரவில்லை," என்று தெரிவித்தார்.


அதோடு, தலைமை ஆசிரியரின் முன்னெடுப்புகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அளித்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே பெற்றோர் புகார் அளிக்க முன் வந்தததாகவும் அவர் கூறினார்.


மேலும், "பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 24 மணிநேரமும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் அடிப்படைத் தேவைகளுக்கான நிதி உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளது" என்றார்.


இந்நிலையில் இந்தக் கொடூரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் என்றும், இது போன்ற பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் அரசிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.



Sexual Harassment of Govt School Girls - Teacher Arrested in POCSO Act

 

  அரசுப் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு - ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது


Sexual Harassment of Govt School Girls - Teacher Arrested in POCSO Act


சேலத்தில் ஏற்காடு பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பழங்குடியின மாணவ மாணவிகள் பயிலும் அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் இளையகண்ணு என்பவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், கருமந்துறை, ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதியிலிருந்து பல மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அரசு விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் தற்காலிக ஆசிரியராக சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் நெய்ய மலை பகுதியை சேர்ந்த இளைய கண்ணு என்பவர் 2019 முதல் பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரான வெள்ளி மலையை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அதில், தன்னிடமும் தனது தோழிகள் 4 பேரிடமும், ஆசிரியர் இளைய கண்ணு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.


அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இப்புகார் பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகாரிகளுக்கும், சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தார். அதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் அப்பள்ளியில் சென்று மாணவியரிடம் விசாரித்தனர். விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட போது மாணவியரிடம் பாலியல் சீண்டல் இருந்தால் தெரிவிக்கலாம். உங்களது பெயர் வெளியில் வராமல் நாங்கள் பாதுகாப்போம் என்று கூறியதை அடுத்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் அறிவியல் ஆசிரியர் இளையகண்ணுவின் மீது பாலியல் சீண்டல் குறித்து புகார்கள் தெரிவித்தனர். 


இவர் பல ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை இவர் மீது பழங்குடியினர் நலத்துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இவருக்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் செல்வாக்கு இருந்ததால் அதிகாரிகள் இவரை கண்டித்து மட்டும் அனுப்பி வைத்துள்ளனர்.


 ஏற்காடு காவல் நிலையத்தில் மாணவி ஒருவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி தலைமையிலான போலீஸார் சென்று மாணவியரிடம் விசாரணை நடத்தினர். அதில், பாதிக்கப்பட்ட மாணவி உட்பட பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஆசிரியர் இளைய கண்ணு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் பெற்றோரை பிரிந்து விடுதியில் தங்கியிருந்து படித்து வருவதால் மாணவிகளை வெளியில் சொல்லாமல் இருந்து வந்தது தெரிய வந்தது. இதை எடுத்து ஆசிரியர் இளைய கண்ணு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையறிந்த அவர் தலைமறைவானார். இந்நிலையில், சென்னையில் நேற்று, இளையகண்ணுவை கைது செய்த போலீசார் ஏற்காடு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


கடந்த ஒரு வாரத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் இரண்டு போக்சோ வழக்குகளில் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Baby girl born to class 9 student - 10th Standard student became Father - Arrested under POCSO Act - Shock in Tanjore

 

 9ஆம் வகுப்பு மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை - தந்தையான 10ஆம் வகுப்பு மாணவன் - போக்சோ சட்டத்தில் கைது - தஞ்சையில் அதிர்ச்சி...


Baby girl born to class 9 student - 10th Standard student became Father - Arrested under POCSO Act - Shock in Thanjavur 


தஞ்சாவூர் மாவட்டத்தில் ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அதாவது சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அப்போது சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் தான் கர்ப்பத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது.




அந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவனை தான் காதலிப்பது ஆகவும், அவர்தான் குழந்தைக்கு தந்தை எனவும் சிறுமி கூறியுள்ளார். இது தொடர்பாக வல்லம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். மேலும் 9-ம் வகுப்பு சிறுமி தாயான நிலையில் அதற்கு தந்தை 10-ம் வகுப்பு சிறுவன் என்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Teacher arrested for giving alcohol to female students and violating

 


மாணவிகளுக்கு மது கொடுத்து அத்துமீறல் - போக்சோ (POCSO) சட்டத்தில் ஆசிரியர் கைது


உடன்குடியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த மாணவிகளை உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், மண்டல அளவிலான விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்றபோது அவர்களுக்கு மதுகொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.


குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் கோவையில் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.


மாணவிகளை மது அருந்த வைத்து பாலியல் அத்துமீறல்... உடற்கல்வி ஆசிரியர் கைது


உடற்கல்வி ஆசிரியர் கடந்த மாதம் 22-ம் தேதி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக பள்ளி மாணவிகள் 5 பேரை தூத்துக்குடி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த அறையில் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


தூத்துக்குடியில் மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு அழைத்துச் சென்ற இடத்தில், கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட விவகாரத்தில் உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உடன்குடியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.


இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அதே பகுதியைச் சேர்ந்த பொன்சிங்.


இவர் கடந்த மாதம் 22-ம் தேதி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக பள்ளி மாணவிகள் 5 பேரை தூத்துக்குடி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த அறையில் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


மேலும் இதுகுறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளதாகவும் தெரிகிறது.


இந்த நிலையில் இதுகுறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் கூறியுள்ளார். பெற்றோர்கள் பள்ளியில் முறையிட்டுள்ளனர்.


ஆனால் பள்ளி நிர்வாகம் முறையாக பதில் அளிக்கவில்லை என்பதால், இன்று மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


மாவட்ட கல்வி அலுவலர் உள்பட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ், வட்டாட்சியர் பாலசுந்தரம் உள்பட அதிகாரிகள் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் தலைமறைவானார்.


பெற்றோர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, கல்வி அதிகாரிகள் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கோவையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. போலீசார் அங்கு விரைந்துள்ளனர். அவரை விரைவில் அங்கிருந்து பிடித்து வர நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதி அளித்தனர்.


இதையடுத்து பெற்றோர்கள் சமாதானம் அடைந்து பள்ளி வாசலில் காத்திருந்தனர்.


இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் கோவை மாவட்ட காவல்துறையினர் இணைந்து உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்ஸோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


போலீசார் விசாரணைக்காக உடற்கல்வி ஆசிரியரை திருச்செந்தூர் அழைத்து வருகின்றனர்.


+ 1 student who gave birth to a girl child - Brother arrested under POCSO Act


பெண் குழந்தை பெற்ற பிளஸ் 1 மாணவி - அண்ணன் போக்சோ சட்டத்தில் கைது


+ 1 student who gave birth to a girl child - Brother arrested under POCSO Act


 ராசிபுரம் அருகே படிக்க வந்த இடத்தில், ஆசைவார்த்தை கூறி தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணனை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவி ஒருவர், நேற்று முன்தினம் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது திடீரென மயங்கி சரிந்தார். இதனால், திடுக்கிட்ட சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 


அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர். தொடர் சிகிச்சையில் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மாணவி மற்றும் குழந்தையை மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த நாமக்கல் சைல்டு லைன் அலுவலர்கள், மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். புகாரின்பேரில், திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான சாணார்புதூர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (எ) ரங்கராஜ் (28) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


இதுகுறித்து போலீசார் கூறுகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சாணார்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (எ) ரங்கராஜ்(28). கூலி தொழிலாளியான இவரது பெரியம்மா மகளான 16 வயது மாணவி, கடந்தாண்டு ராசிபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பில் சேர்ந்தார். தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் மாணவி, சித்தி அங்காயி வீட்டில் தங்கி படித்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் வீட்டில் யாரும் இல்லாத போது மாணவியிடம் தங்கராஜ் ஆசைவார்த்தை கூறி தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பலாத்காரம் செய்ததில் மாணவி கர்ப்பமானார். இதை அறிந்து பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரை வாங்க முயற்சித்துள்ளார். ஆனால், மாத்திரை கிடைக்கவில்லை. இதனிடையே 10ஆம் வகுப்பு படிப்பை முடித்த மாணவி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பள்ளிபாளையம் வந்துவிட்டார். பின்னர், அங்குள்ள மகளிர் பள்ளியில் பிளஸ்1 சேர்ந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு நேற்று முன்தினம் வகுப்பறையில் பிரசவ வலி ஏற்பட்டு மயங்கியுள்ளார். சக மாணவிகள், ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது, அங்கு பெண் குழந்தையை மாணவி பிரசவித்துள்ளார். விசாரணைக்கு பின்பு தங்கராஜை கைது செய்துள்ளோம் என்றனர்.


கோயில் அர்ச்சகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...

கோயில் அர்ச்சகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...



தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடகரை பகுதியில் சிறார்களை கோயிலுக்குள் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கோயில் அர்ச்சகர் திலகர் (வயது 70) போக்சோ சட்டத்தின் கீழ் கைது...


குழந்தைகள் தங்களின் பெற்றோரிடம் இது குறித்து தெரிவிக்க, அப்பகுதி மக்கள் கோயிலை நோக்கி திரண்டு வர, அர்ச்சகர் திலகர் உள்ளே இருந்துகொண்டு கோயிலைப் பூட்டியுள்ளார்.


போலீசாருக்கு தகவல் தெரிந்து அவர்கள் வந்து அர்ச்சகர் திலகரை அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்...


தேனி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பகவதி அம்மன் கோயிலில் 70 வயது நபர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை கோயில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கி கோயிலுக்குள் அழைத்துச் சென்ற பூசாரி, அவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.


இதனையடுத்து, பதட்டத்துடன் வெளியே வந்த சிறுமி, இந்த சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோயில் முன்பாக கூடினர். இதனைத் தொடர்ந்து, உறவினர்கள் தாக்க வந்து விடுவார்கள் என நினைத்த பூசாரி, கோயிலை பூட்டிக் கொண்டு கோயிலுக்குள் ஒளிந்து கொண்டார்.


இதனை அடுத்து, வடகரை காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் கோயிலை அடைத்துக் கொண்டு உள்ளே ஒளிந்திருந்த பூசாரியை அழைத்து, கோயிலைத் திறந்து கோவிலுக்குள்ளேயே விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, சிறுவர் சிறுமியரின் உறவினர்கள் பெருமளவு திரண்டு பூசாரியைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட முற்பட்டதால், காவல்துறையினர் கோயில் பூசாரியை வடகரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.


மேலும், இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பூசாரி திலகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் - POCSO சட்டத்தில் கைது...


 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆக்கிய உறவுக்கார இளைஞரான பாலசக்தி (22) என்பவர் போக்சோவில் கைது...


அத்தை வீட்டுக்கு அடிக்கடி பள்ளி மாணவி வரும் போது, அத்தை மகனான பாலசக்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


பள்ளி மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவரது தாய் அளித்த புகாரில் பாலசக்தியை திருக்கோவிலூர் போலீசார் POCSO சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 57 வயது கோயில் பூசாரிக்கு 40 ஆண்டுகள் சிறை - மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு...


 திருப்பூர் = 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய  57 வயது கோயில் பூசாரிக்கு 40 ஆண்டுகள் சிறை - மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு...


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (57). கோயில் பூசாரியான இவர், கடந்த 2021-ம் ஆண்டு கோயிலுக்கு வந்த 14 வயது சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ POCSO பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஐயப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையடுத்து சிறுமியை ஏமாற்றி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதற்காக 20 ஆண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் அபராதமும், கர்ப்பமாக்கிய குற்றத்துக்காக 20 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம், மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை பிரிவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம், கொலை மிரட்டல் பிரிவுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.


இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.



பாலியல் குற்றச்சட்டம் POCSO Act 2012 - தொடர்பான விதிகளை தெளிவுபடுத்தும் காணொளிகள் youtube Video Links...


போக்சோ சட்டம் 2012 - பாலியல் குற்றச்சட்டம் POCSO Act 2012 - தொடர்பான விதிகளை தெளிவுபடுத்தும் காணொளிகள் youtube Video Links...


POCSO Act 2012

Video Links


Act, 2012 Section 23

https://youtu.be/oCLvqIWmbN4


Act, 2012 Section 22

https://youtu.be/nVcVPywmtPQ


Act, 2012 Section 19 or 21

https://youtu.be/w9uJAM-kFhQ


Act, 2012 Section 13 or

https://youtu.be/5YwOroiU97Q


14 Act, 2012 Section 11 or 12

https://youtu.be/NEVy4db19mE


Act, 2012 Section 5 or 9

https://youtu.be/WminwkMS_EYY


Act,2012 Section 7 or 8

https://youtu.be/cnuwEl2d8Xc


Act,2012 Section 3 or 4

https://youtu.be/jhPMDngnVxY


Act 2012

https://youtu.be/f1Wxk6cyOeQ


Act, 2012 Section 15

https://youtu.be/330xUd9ZE5Y 

https://youtu.be/CoaegrZnkU


Act, 2012 Rule 11

https://youtu.be/1fRyjetTVm4


Act, 2012 Rule 9

Act, 2012 Rule 8

https://youtu.be/MU8wIraGyD4 

https://youtu.be/-lovmochQlw


Act, 2012 Rule 7

https://youtu.be/a6TON8V/ZTA


Act, 2012 Rule 4

https://youtu.be/sElomK-X9WM


Act, 2012 Section 27

https://youtu.be/NK-12cLVEDA


Act, 2012 Section 38

Act 2012 Section 34

https://youtu.be/Mcd10Fh5dw



>>> போக்சோ சட்டம் 2012 தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை மாணவர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...


போக்சோ சட்டம் 2012 தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை மாணவர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...


போக்சோ சட்டம் 2012 தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை மாணவர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



From

Dr. S. Kannappan,

Director of School Education,

Directorate of School Education,

Perasiriyar Anbazhagan Kalvi Valagam,

Chennai-06.


To

All Chief Educational Officers,

All Districts.


Sub:

Ref: R.C.No 047338/M2/S1/2024, Dated .07.2024

School Education - Dissemination of Awareness Videos on the Protection of Children from Sexual Offences ( POCSO ) Act, 2012- Reg

1. From the Chairperson, National Commission for Protection of Child Rights F.No. 19424/2024/NCPCR/PCMA/NCPCR dated 08.07.2024

2. Deputy secretary to Government, Letter No. efile 6885/GL1(2)/2024-1, dated 19.07.2024


NCPCR has develop certain videos elucidating various critical provisions of protection of children from Sexual Offenses Act, 2012 and these videos are accessible on You Tube via links. A copy of the letter cited in references is enclosed herewith.


It is instructed the All Chief Educational Officers shall direct all Head Masters of the schools to use the videos in all schools during the Movie Screening time and in Club Activities during 29.07.2024 to 10.08.2024 the progress report shall be updated through the below google link


https://docs.google.com/spreadsheets/d/1aDyqsiXqYsBR3vDaeAIk7IHwLoEjkzxBJJfZnSf2ttedit?usp=sharing


Director

Copy to

1. Chairperson,

Nation Commission for Protection of Child Rights

2. Deputy Secretary to government,

School Education Department,

Secretariat, Chennai-9.



>>> போக்சோ சட்டம் 2012 - தொடர்பான விதிகளை தெளிவுபடுத்தும் காணொளிகள் youtube Links...


போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர்களை விடுவிக்கக் கோரி மாணவிகள் சாலை மறியல்...



திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளி மாணவிகள் திடீர் சாலைமறியல்...


பாலியல் வழக்கில், கைதான 2 ஆசிரியர்கள் மீது தவறாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு...


போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர்களை விடுவிக்கக் கோரி மாணவிகள் சாலை மறியல்...


திருவள்ளூர் அருகே போக்சோ வழக்கில் இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


 திருவள்ளூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் தங்களுக்கு எந்தவித தொந்தரவும் அளிக்கவில்லை எனக் கூறி ஆவடி - திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் அடுத்த செவ்வாய்பேட்டையில் அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் செவ்வாய்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் படித்து வரும் நிலையில், மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக, ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கு ஏராளமான புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த ஜூலை 1-ம் தேதி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பள்ளியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். மேலும், பள்ளி மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் தீவிர விசாரணை நடத்தியுள்ளார். அதில், மாணவிகள் சிலர் கணித ஆசிரியர் ஜெகதீசன் மற்றும் அறிவியல் ஆசிரியர் பிரேம்குமார் ஆகிய 2 பேரும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிக்கை பெறப்பட்டதை தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் மூலம் இது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, புகார் தெரிவிக்கப்பட்ட 2 ஆசிரியர்களும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.


இதனையடுத்து, பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்குப்பதிவு செய்து 2 ஆசிரியர்களையும் போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 2 ஆசிரியர்களை போக்சோவில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர்-ஆவடி சாலையில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 ஆசிரியர்களும் மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்கள் என்றும், வேண்டுமென்றே அவர் மீது பொய்யான புகார் கொடுத்து போக்சோவில் கைது செய்து இருப்பதால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம், வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் காவல் துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.


ஆனால், கைது செய்யப்பட்ட 2 ஆசிரியர்களையும் விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் மாணவிகளுக்கு உறுதுணையாக அவர்களது பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். பின்னர், எழுத்துப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் புகார் மனுக்களை எழுதி கொடுத்துள்ளனர். இதனையடுத்து, புகார் மனுக்கள் ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என காவல் துறையினர் மாணவிகளிடம் கூறிய நிலையில், மாணவிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு விலகிச் சென்றுள்ளனர். 4 மணிநேரத்திற்கும் மேலாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


நன்றி : ETV 

கர்ப்பத்துக்கு காரணம் ஆசிரியர் எனக் கூறிய மாணவி - விசாரணையில் போக்சோ சட்டத்தில் கைதான தந்தை (Student who said Teacher was the cause of pregnancy - Father arrested under POCSO Act in investigation)...

 கர்ப்பத்துக்கு காரணம் ஆசிரியர் எனக் கூறிய மாணவி - விசாரணையில் போக்சோ சட்டத்தில் கைதான தந்தை (Student who said Teacher was the cause of pregnancy - Father arrested under POCSO Act in investigation)...


மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது


ஓசூர்: ஓசூரில், மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தையை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த பத்தலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர், 30 வயது தொழிலாளி, முதல் கணவரை பிரிந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார்.


அந்த பெண்ணுக்கு, 12 மற்றும் 10 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஏழாவது படிக்கும், 12 வயதான மகள் வயிறு வலிப்பதாக கூறவே, மருத்துவமனைக்கு தாய் அழைத்து சென்றார்.


அப்போது, மூன்று மாத கர்ப்பம் அடைந்திருந்த அந்த சிறுமியின் வயிற்றில் இரட்டை கரு இருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாய், ஓசூர் மகளிர் போலீசில் அளித்த புகாரின்படி, விசாரணை மேற்கொண்ட போலீசார், தந்தையை கைது செய்தனர்.


அவரிடம் விசாரித்த போது, அந்த சிறுமியை தன்னால் மகளாக பார்க்க முடியவில்லை என்று கூறியதாக, போலீசார் கூறினர்.


எனினும், சிறுமியிடம் அத்துமீறிய அந்த தந்தையை கண்டித்த போலீசார், அவர் மீது போக்சோ சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


ஆசிரியரை கைகாட்டிய சிறுமி

பாதிக்கப்பட்ட அந்த சிறுமியிடம் முதலில் விசாரித்த போது, தந்தையை காட்டிக் கொடுக்க அவர் விரும்பவில்லை. மாறாக, தனக்கு பிடிக்காத பள்ளி ஆசிரியர் ஒருவர்தான் கர்ப்பத்துக்கு காரணம் என்றார். அந்த அப்பாவி ஆசிரியரிடம் போலீசார் விசாரித்தபோது, சிறுமியுடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லாதது தெரிந்தது. அதன்பின், அந்த சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது, பக்கத்து வீட்டு இளைஞனை கை காட்டினார். அவரிடமும் விசாரித்த போது, அந்த குற்றத்திற்கு அவர் காரணமில்லை என்பது தெரிந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில், தாயின் இரண்டாவது கணவரே, கர்ப்பத்துக்கு காரணம் என்பதை அந்த 'பலே' சிறுமி ஒப்புக்கொண்டார்.



சக ஆசிரியர்களை பழிவாங்க ‘போக்சோ’வில் மாணவிகளை பொய்ப் புகார் அளிக்கவைத்த தலைமை ஆசிரியர் மீதே போக்சோ சட்டம் பாய்ந்தது (The POCSO Act was passed on the HeadMaster who made the students file false complaints in 'POCSO' to take revenge on Teachers)...


சக ஆசிரியர்களை பழிவாங்க ‘போக்சோ’வில் மாணவிகளை பொய்ப் புகார் அளிக்கவைத்த தலைமை ஆசிரியர் மீதே போக்சோ சட்டம் பாய்ந்தது (The POCSO Act was passed on the HeadMaster who made the students file false complaints in 'POCSO' to take revenge on Teachers)...



சக ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில் மாணவிகளை தவறாகப் பயன்படுத்திய மதுரை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் முயற்சியால் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.



மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ஒருவர், ஆகஸ்ட் 6-ல் ஊமச்சிகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், கருப்பாயூரணி போலீஸ் சரகத்திலுள்ள அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், சைல்டு லைன் (1098) எண்ணில் அழைத்தார். அவர் பணிபுரியும் பள்ளியின் புகார் பெட்டியில் தங்களது பள்ளியில் பயிலும் இரு சிறுமிகள் எழுதிய கடிதங்கள் சிக்கியதாகவும், அதே பள்ளி ஆசிரியர் ஒருவர் தவறான முறையில் வம்பு செய்திருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் குறிப்பிட்டதாகவும் தெரிவித்து இருந்தார். அதன்பேரில் 3 ஆசிரியர்கள் மீது ‘ போக்சோ’ சட்டத்தில் கருப்பாயூரணி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.



இந்நிலையில், இவ்வழக்கில் சிக்கிய பெண் ஆசிரியர் ஒருவர் ,தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்கிடம் புகார் ஒன்றை கொடுத்தார். ‘‘எங்கள் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு இடையேயான விரோதப் போக்கை கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்ட அப்பொய் புகார் பற்றி விசாரிக்க வேண்டும்’ ’என அவர் வலியுறுத்தி இருந்தார்.



ஐஜி-யின் உத்தரவின்பேரில், மதுரை டிஐஜி ஆர்.பொன்னி, எஸ்பி சிவபிரசாத் மேற்பார்வையில் ஊமச்சிகுளம் பெண் காவல் ஆய்வாளர் விசாரித்தார். பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமிகள், அவர்களது பெற்றோர், பள்ளி ஆசிரியர்களிடம் தனித்தனியே விசாரிக்கப்பட்டது. விசாரணையில், “நாங்களாகவே அக்கடிதத்தை எழுதவில்லை. பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறி தான் அவ்வாறு எழுதினோம். உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களிடம் தவறாக நடக்கவில்லை’’ என சிறுமிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட சிறுமிகள் மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


 


சிறுமிகளின் வாக்குமூலம், சாட்சிகளிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், மேற்கண்ட புகார் பொய் என தெரியவந்தது. மேலும், அப்பள்ளியில் ஆசிரியர்களுக்குள் விரோத போக்கு உள்ளதாகவும், அந்தப் பகையின் காரணமாக பழிவாங்கும் நோக்கில் பள்ளித் தலைமை ஆசிரியர் பொய்யான புகாரை உடற்கல்வி ஆசிரியர், 2 பெண் ஆசிரியர்கள் மீது சுமத்த பள்ளி மாணவிகளை பயன்படுத்தி இருப்பதும் தெரிந்தது. இது தொடர்பாக காவல் ஆய்வாளர் இறுதி அறிக்கை தாக்கல் செய்தார். இதை ஏற்ற ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றம், அக்டோபர் 31-ல் தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தது. வழக்கு பதிவு முதல் தாமதமின்றி சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 80 நாளுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி அறிக்கை சரியென தீர்ப்பு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



தவறு செய்யாதவர்கள் தண்டனை பெற்றுவிடக் கூடாது என்ற அடிப்படையில் இவ்வழக்கை தீர விசாரித்து விரைந்து உண்மையை வெளிக்கொண்டு வந்த மதுரை டிஐஜி பொன்னி, எஸ்பி சிவபிரசாத், ஊமச்சிகுளம் டிஎஸ்பி, பெண் காவல் ஆய்வாளர் அடங்கிய அதிகாரிகளை தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் பாராட்டினார்.

 


எஸ்.பி கூறுகையில், ‘‘தனது சுய லாபத்திற்கென மாணவிகளை துண்டிவிட்டு, பொய் புகார் கொடுக்க வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.



சக ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில் பொய் புகார் அளிக்க, மாணவிகளை தூண்டிய சம்பவத்தில் தலைமை ஆசிரியர் மீதே போக்சோ சட்டம் பாய்ந்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



மதுரை: ஆசிரியர்கள் மீது போக்‍சோ வழக்‍கில் புகாரளிக்‍க மாணவிகளைத் தூண்டிய தலைமை ஆசிரியர் சரியான விசாரணை செய்த காவல்துறைக்கு தென்மண்டல ஐஜி  அஸ்ரா கார்க் பாராட்டு...


---------------------------------------------------



மதுரையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது பொய்யாக போக்சோ வழக்குப்பதிவு செய்ய மாணவிகளை தூண்டிய தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

மதுரை மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் மற்றும் ஊமச்சிகுளம் மகளிர் காவல்நிலையத்திற்கு கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் தனது பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மீது சில மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் பெட்டியில் மாணவிகள் கடிதத்தை போட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து புகாருக்‍கு உள்ளான 3 ஆசிரியர்கள் மீதும் கருப்பாயூரணி காவல் நிலையத்தில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் புகாருக்‍குள்ளான பெண் ஆசிரியர் ஒருவர் தென்மண்டல ஐஜியிடம் ஆசிரியர்களுக்கு இடையேயான விரோதப்போக்கில் பொய்புகாரை அளிக்‍க தலைமை ஆசிரியர் மாணவிகளைத் தூண்டியதாகவும், அதனடிப்ப​டையில் பொய்ப்புகார் அளிக்‍கப்பட்டதாகவும் ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று மனு அளித்தார். இதைத் தொடர்ந்து, புகாரளித்த சிறுமிகளை தனித்தனியே விசாரித்தபோது தாங்களாக அக்கடிதத்தை எழுதவில்லை என்றும் தலைமை ஆசிரியர் கூறி தான் அவ்வாறு செய்ததாகவும் எந்த ஆசிரியரும் தங்களிடம் தவறாக நடக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியருக்‍கு காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்‍கை விடுத்துள்ள நிலையில், குற்றம் செய்யாதவர்கள் தண்டனை பெற்றுவிடக்‍ கூடாது என்ற எண்ணத்தில் துரித விசாரணை நடத்திய காவல் துறையினருக்‍கு காவல் துறை தென்மண்டலத் தலைவர் அஸ்ரா கார்க்‍ பாராட்டு தெரிவித்துள்ளார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




போக்சோ சட்டம் 2012 - விழிப்புணர்வு பதிவு (POCSO Act 2012 - Awareness Message)...



போக்சோ சட்டம் 2012 - விழிப்புணர்வு பதிவு (POCSO Act 2012 - Awareness Message)...


 *போக்சோ சட்டம் 2012...*

 

*விழிப்புணர்வு பதிவு...*


 சமீப காலமாக அப்பாவி ஆசிரியர்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் இச்சட்டத்தின் சில பிரிவுகளை தெரிந்து கொண்டு, சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவே பதிவு...


சட்டம் முழுவதும் குற்றம் செய்பவர்களை மனதில் வைத்தே எழுதப்படும். இச்சட்டமும் அது போன்றதே...


 1.இச்சட்டத்தின் 2(d) பிரிவு,  18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் அனைவரும் குழந்தைகள் என்றே வரையறுக்கின்றது. (ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று அல்ல) மேலும் இச்சட்டம் முழுக்க குற்றமிழைக்கும் ஆண்களுக்கு பொருந்துவதோடு, சட்டப்பிரிவு 7ற்குப் பின் வரும் பிரிவுகள் அனைத்தும் ஆண்,பெண் இருவருக்கும் பொருந்தக் கூடியது.


2. *இச்சட்டப் பிரிவு 7-ன்படி சாதாரணமாகத் தொடுவதையே பாலியல் நோக்கத்தோடு தொடுவதாக கூறி விட இயலும்.*


3. சட்டப்பிரிவு 11-ன் படி பாலியல் நோக்கத்தோடு சப்தமிடல், சைகை காட்டுதல், பொருட்களை காட்டுதல், உடம்பில் ஒரு பகுதியை காட்டுதல் அல்லது குழந்தையை காட்டச் சொல்லுதல் ஆகிய அனைத்தும் குற்றம் 


4.சட்டப்பிரிவு 16-இன் படி பாலியல் சீண்டல்களுக்கு உடந்தையாய் இருப்பதும் குற்றம் 


5.குற்றம் பதியப்பட்டு அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்திற்கும் குழந்தைகள் நல குழுவிற்கும் போலீசார் தகவல் தெரிவிக்க வேண்டும் (பிரிவு 19.6)


6. சட்டப்பிரிவு 21(2)-ன் படி ஒரு நிறுவனத்திற்குள் பாலியல் அத்துமீறல்கள் நடக்குமானால், அந்நிறுவனத்தின் பொறுப்பாளர்(தலைவர்) காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பொறுப்பாளருக்கு அதிகபட்சம் ஓராண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.


7. சட்டப்பிரிவு 22(1)-ன் படி பாலியல் அத்துமீறல் நடந்ததாக தவறான தகவலை போலீசாரிடம் தெரிவிப்பாரானால் அவருக்கு ஆறு மாத கால சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.



8. சட்டப்பிரிவு 23 இன் படி குழந்தையின் அடையாளத்தை பொதுவெளியில் நீதிமன்ற உத்தரவின்றி பகிரக்கூடாது.


9.இச்ட்டத்தின் கீழ் வழக்கை பதிவு செய்யும் போலீசாரிடம் கருணையை எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில் சட்டப்பிரிவு 5(a) மற்றும் 8(a) ஆகியவை முதலில் போலீசாரை பற்றி தான் பேசுகிறது.


10.சீரான கால இடைவெளிகளில் தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் மற்றும் வானொலி ஆகியவற்றின் மூலம் விளம்பரம் செய்து, பொதுமக்கள்,பெற்றோர், பாதுகாவலர், குழந்தைகள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என 43(a) பிரிவு கூறுகிறது. 


*அதே சமயம் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள், ஆசிரியர்களுடன் அதிக நேரங்களை  செலவிடுகிறார்கள் என்பதையும், ஆசிரியர்களைப் பிடிக்காத குழந்தைகள், ஆசிரியர்கள் கண்டிக்கும் போது அவர்களுக்கு எதிராக  இச்சட்டத்தை திருப்பி விடுவது நிகழ்ந்துவிடும்  என்பதையும், இச்சட்டத்தை இயற்றியவர்கள் சிந்திக்காதது நமது துரதிஷ்டமே...*



இனி.....


நாம் பள்ளிகளில் எவ்வாறு நடந்து கொள்வது....


அ. நான் ஆண் ஆசிரியன் - ஆண்கள் பள்ளியில் பணியாற்றுபவன்,  நான் பெண் ஆசிரியை- பெண்கள் பள்ளியில் பணியாற்றுபவள். ஆகையால் இச்சட்டத்தால் எனக்கு எந்த பாதிப்பும் வராது என்ற எண்ணத்தை முதலில் கை கழுவுங்கள்.


ஆ. மாணவ/மாணவியரை 2- அடி தள்ளியே நிறுத்துங்கள். அருகில் அனுமதிக்காதீர்கள்.


இ.மாணவ/மாணவியரைத் தனியாய் கூப்பிட்டு புத்திமதி/ விசாரணை/குடும்பச் சூழல் என எதையும் பேசாதீர்கள்.



ஈ. வீட்டிற்கு தெரியாமல் மாணவ/மாணவியர் தவறு செய்யும் போது, அவற்றை செய்யக்கூடாது எனப் பொதுவெளியில் பொதுவாய் கூறிவிட்டு அத்தோடு விட்டு விடுங்கள்.


உ. எனது சொந்தக்காரன்,  மாணவன் / மாணவியின் பெற்றோரை எனக்கு நன்கு தெரியும் என உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். இச்சட்டம் குழந்தையின் ரத்த உறவுகளின் மீதுகூட பாயக் கூடியது என்பதை மறவாதீர்.


ஊ.பள்ளிக்கு வெளியே நடக்கும்/ நடந்த மாணவன் / மாணவி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை பள்ளிக்குள் பேசாதீர்கள். புகார்கள் வருமேயானால் முடிந்தவரை பெற்றோர்களிடம் சொல்லி விடுவது நல்லது.


எ. GOOD TOUCH,  BAD TOUCH  என எதுவும் வேண்டாம். DON'T TOUCH.  ஆசிரியர் - மாணவன், ஆசிரியை - மாணவி என ஒரே பாலினத்தவருக்கும் சேர்த்தே......


(உதாரணம் இணைக்கப்பட்டுள்ளது)



ஏ.முடிந்தவரை ஆசிரியர்கள் ஒற்றுமையாய் இருங்கள். 



*இவற்றையெல்லாம் பின்பற்றினால் பிரச்சனைகள் வராதா  என்றால்.....நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல முடியும். ஆனால் சிக்க வைக்கப்பட்டால் விரைவாக மீள முடியும்...*



*மன தைரியம் அவசியம்....* 


பேசுவோம்....👍

 


*DRPGTA - கரூர் மாவட்டம்*






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது (Sexual Harassment of Student - Headmaster Arrested under POCSO Act)...



மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது (Sexual Harassment of Student - Headmaster Arrested under POCSO Act)...


 வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள மாச்சம்பட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பேர்ணாம்பட்டு கோயில் தெருவை சேர்ந்த பால்வண்ணன் (55) என்பவரும், மற்றொரு ஆசிரியரும் பணி புரிகின்றனர். 75 மாணவ, மாணவியர் மாச்சம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.


இந்நிலையில் நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளைக்கு மாணவ, மாணவியர் சென்றிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவியை வகுப்பறைக்கு தலைமை ஆசிரியர் பால்வண்ணன் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த மாணவியின் உறவினரான அதே பள்ளியில் படித்து வரும் மாணவி பார்த்துள்ளாராம். உடனே தலைமை ஆசிரியர் அந்த மாணவியை அடித்ததாக கூறப்படுகிறது.


இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வீடு திரும்பிய மாணவிகள் இருவரும் நடந்த சம்பவத்தை தங்களது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை இதுபற்றி உம்ராபாத் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் பால்வண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.



பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொந்தரவு அளிப்போர் மீது புகார் தெரிவிக்க மாவட்ட வாரியாக காவல்துறை ஆய்வாளர்கள் அலைபேசி எண்கள் வெளியீடு...



கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று கல்வி கற்க முடியாத நிலை உள்ளது. எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சமயத்தில் சில பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார்கள் எழுந்தன.


இதையடுத்து, மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களிலுள்ள பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், ஆசிரியர்களால் பாலியல் ரீதியான தொந்தரவுகளைத் தவிர்ப்பதற்காகவும், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தக்கூடிய பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்களுடன் மத்திய மண்டல ஐ.ஜி., வே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூன் 08) காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், 255 பள்ளிகளின் முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.


முழுவதும் பதிவு செய்ய வேண்டும்

அப்போது அவர், “முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இணையவழி வகுப்புகள் உரிய முறைப்படுத்துதலுடன் நடைபெற வேண்டும். அனைத்து இணையவழி வகுப்புகளும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரால் முழுவதுமாகப் பதிவு செய்யப்பட்டு, அவற்றினைப் பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டும்.


பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த 2 நபர்கள் மூலம் குறிப்பிட்ட இடைவெளியில் அந்தப் பதிவுகள் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை எளிதில் அளித்திடும் வகையில் காவல்துறையின் உதவி எண்களைப் பள்ளி நிர்வாகத்தினர் மாணவ, மாணவிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.


மாணவ, மாணவிகளிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி, தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.




பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்

தங்கள் பள்ளி மூலம் நடத்தப்படும் இணையவழி வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் செயல்படுவதையும், மாணவ, மாணவிகள் எவ்வித அச்சமும், தயக்கமுமின்றி அவ்வகுப்புகளில் பயில்வதையும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்.


மத்திய மண்டலத்திலுள்ள மாவட்டங்களில் செயல்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாளும் பிரிவின் காவல் அதிகாரிகள், தங்களது பகுதிக்குட்பட்ட பள்ளி நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு இணையம் வழியாகப் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.



மாவட்ட வாரியாக இன்ஸ்பெக்டர் நியமனம்

பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிப்போர் மீது புகார் தெரிவிப்பதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட வாரியாக இன்ஸ்பெக்டர்களை நியமித்து ஐ.ஜி., வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.


இதன்படி திருச்சி மாவட்டத்தினர் 94981 77954 (யசோதா), புதுக்கோட்டை மாவட்டத்தினர் 94981 58812 (ரசியா சுரேஷ்), கரூர் மாவட்டத்தினர் 83000 54716 (சிவசங்கரி), பெரம்பலூர் மாவட்டத்தினர் 94981 06582 (அஜீம்), அரியலூர் மாவட்டத்தினர் 94981 57522 (சிந்துநதி), தஞ்சாவூர் மாவட்டத்தினர் 94981 07760 (கலைவாணி), திருவாரூர் மாவட்டத்தினர் 94981 62853 (ஸ்ரீபிரியா), நாகப்பட்டினம் மாவட்டத்தினர் 94981 10509 (ரேவதி), மயிலாடுதுறை மாவட்டத்தினர் 94981 57810 (சித்ரா) ஆகியோரைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.


இது எங்களுக்கும் ஒரு பாடம் தான்; பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு -அமைச்சர் அன்பில் மகேஷ்...

 



சென்னையின் பிரபல தனியார் பள்ளியான பி.எஸ்.பி.பி-யில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர், மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்புக்கு வந்ததாகவும், ஆபாசமாகப் பேசியதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பள்ளியின் டீனுக்கு புகார் அனுப்பப்பட்டது. எனினும் பள்ளி தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற தகவல் வெளியானது, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த விவகாரம்.


இந்தநிலையில், ஆசிரியர் ராஜகோபாலனை தமிழக காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதனிடையே ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இதனிடையே ஆன்லைன் வகுப்புகளை நெறிப்படுத்துவது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்திக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ``ஆன்லைன் வகுப்புக்கு என்று தனியாக நெறிமுறைகள் இருக்கிறது. இப்போது அது பின்பற்றப்படுவதாக் தெரியவில்லை. தொடர்ந்து அனைத்து நெறிமுறைகளை பின்பற்றுவது உறுதி செய்யப்படும். புதிய நெறிமுறைகளும் வெளியிடப்படும். போலீஸார் தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.


பள்ளிகளில் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு என்று தனிக்குழு அமைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது. நல்ல ஆசிரியர்களுக்கு களங்கம் வராத வகையில் இந்த குழு அமையும். ஆன்லைன் வகுப்புகளில் இப்படி ஒரு விஷயம் நடக்கும்னு யாரும் எதிர்பார்க்கவில்லை.. இது எங்களுக்கும் ஒரு பாடம் தான். இனி வரும் காலங்களில் அது மாதிரியான தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்வோம்” என்றார்.


இதனிடையே, இந்த பாலியல் புகார் விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்ப போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள். மாணவர்கள் புகார் தெரிவித்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO arrested for getting Rs 2 lakh bribe from teacher

ரூ.2 லட்சம் லஞ்சம் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கைது District Education Officer arrested for getting Rs 2 lakh bribe from teach...