இடுகைகள்

போக்சோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் - POCSO சட்டத்தில் கைது...

படம்
 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆக்கிய உறவுக்கார இளைஞரான பாலசக்தி (22) என்பவர் போக்சோவில் கைது... அத்தை வீட்டுக்கு அடிக்கடி பள்ளி மாணவி வரும் போது, அத்தை மகனான பாலசக்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பள்ளி மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவரது தாய் அளித்த புகாரில் பாலசக்தியை திருக்கோவிலூர் போலீசார் POCSO சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 57 வயது கோயில் பூசாரிக்கு 40 ஆண்டுகள் சிறை - மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு...

படம்
 திருப்பூர் = 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய  57 வயது கோயில் பூசாரிக்கு 40 ஆண்டுகள் சிறை - மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு... திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (57). கோயில் பூசாரியான இவர், கடந்த 2021-ம் ஆண்டு கோயிலுக்கு வந்த 14 வயது சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ POCSO பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஐயப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையடுத்து சிறுமியை ஏமாற்றி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதற்காக 20 ஆண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் அபராதமும், கர்ப்பமாக்கிய குற்றத்துக்காக 20 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம், மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை பிரிவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம், கொலை மிரட்டல் பிரிவுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி ஸ்ரீத

பாலியல் குற்றச்சட்டம் POCSO Act 2012 - தொடர்பான விதிகளை தெளிவுபடுத்தும் காணொளிகள் youtube Video Links...

படம்
போக்சோ சட்டம் 2012 - பாலியல் குற்றச்சட்டம் POCSO Act 2012 - தொடர்பான விதிகளை தெளிவுபடுத்தும் காணொளிகள் youtube Video Links... POCSO Act 2012 Video Links Act, 2012 Section 23 https://youtu.be/oCLvqIWmbN4 Act, 2012 Section 22 https://youtu.be/nVcVPywmtPQ Act, 2012 Section 19 or 21 https://youtu.be/w9uJAM-kFhQ Act, 2012 Section 13 or https://youtu.be/5YwOroiU97Q 14 Act, 2012 Section 11 or 12 https://youtu.be/NEVy4db19mE Act, 2012 Section 5 or 9 https://youtu.be/WminwkMS_EYY Act,2012 Section 7 or 8 https://youtu.be/cnuwEl2d8Xc Act,2012 Section 3 or 4 https://youtu.be/jhPMDngnVxY Act 2012 https://youtu.be/f1Wxk6cyOeQ Act, 2012 Section 15 https://youtu.be/330xUd9ZE5Y   https://youtu.be/CoaegrZnkU Act, 2012 Rule 11 https://youtu.be/1fRyjetTVm4 Act, 2012 Rule 9 Act, 2012 Rule 8 https://youtu.be/MU8wIraGyD4   https://youtu.be/-lovmochQlw Act, 2012 Rule 7 https://youtu.be/a6TON8V/ZTA Act, 2012 Rule 4 https://youtu.be/sElomK-X9WM Act, 2012 Section 27 https://youtu.be/NK-12cLVEDA Act, 2012 Section

போக்சோ சட்டம் 2012 தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை மாணவர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...

படம்
போக்சோ சட்டம் 2012 தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை மாணவர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம்... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... From Dr. S. Kannappan, Director of School Education, Directorate of School Education, Perasiriyar Anbazhagan Kalvi Valagam, Chennai-06. To All Chief Educational Officers, All Districts. Sub: Ref: R.C.No 047338/M2/S1/2024, Dated .07.2024 School Education - Dissemination of Awareness Videos on the Protection of Children from Sexual Offences ( POCSO ) Act, 2012- Reg 1. From the Chairperson, National Commission for Protection of Child Rights F.No. 19424/2024/NCPCR/PCMA/NCPCR dated 08.07.2024 2. Deputy secretary to Government, Letter No. efile 6885/GL1(2)/2024-1, dated 19.07.2024 NCPCR has develop certain videos elucidating various critical provisions of protection of children from Sexual Offenses Act, 2012 and these videos are accessible on You Tube via links. A copy of the letter cited in references is enclosed here

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர்களை விடுவிக்கக் கோரி மாணவிகள் சாலை மறியல்...

படம்
திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளி மாணவிகள் திடீர் சாலைமறியல்... பாலியல் வழக்கில், கைதான 2 ஆசிரியர்கள் மீது தவறாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு... போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர்களை விடுவிக்கக் கோரி மாணவிகள் சாலை மறியல்... திருவள்ளூர் அருகே போக்சோ வழக்கில் இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  திருவள்ளூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் தங்களுக்கு எந்தவித தொந்தரவும் அளிக்கவில்லை எனக் கூறி ஆவடி - திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் அடுத்த செவ்வாய்பேட்டையில் அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் செவ்வாய்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் படித்து வரும் நிலையில், மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக, ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கு ஏரா

கர்ப்பத்துக்கு காரணம் ஆசிரியர் எனக் கூறிய மாணவி - விசாரணையில் போக்சோ சட்டத்தில் கைதான தந்தை (Student who said Teacher was the cause of pregnancy - Father arrested under POCSO Act in investigation)...

படம்
 கர்ப்பத்துக்கு காரணம் ஆசிரியர் எனக் கூறிய மாணவி - விசாரணையில் போக்சோ சட்டத்தில் கைதான தந்தை (Student who said Teacher was the cause of pregnancy - Father arrested under POCSO Act in investigation)... மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது ஓசூர்: ஓசூரில், மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தையை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த பத்தலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர், 30 வயது தொழிலாளி, முதல் கணவரை பிரிந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கு, 12 மற்றும் 10 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஏழாவது படிக்கும், 12 வயதான மகள் வயிறு வலிப்பதாக கூறவே, மருத்துவமனைக்கு தாய் அழைத்து சென்றார். அப்போது, மூன்று மாத கர்ப்பம் அடைந்திருந்த அந்த சிறுமியின் வயிற்றில் இரட்டை கரு இருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாய், ஓசூர் மகளிர் போலீசில் அளித்த புகாரின்படி, விசாரணை மேற்கொண்ட போலீசார், தந்தையை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, அந்த சிறுமியை தன்னால் மகளாக பார்க்க முடியவில்லை என்று கூறியதாக, போலீசார் கூறினர். எனினும்,

போக்சோ (POCSO) வழக்குகளில் கைது பற்றிய காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கை (Director General of Police's circular on arrests in POCSO cases)...

படம்
>>> போக்சோ (POCSO) வழக்குகளில் கைது பற்றிய காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கை (Director General of Police's circular on arrests in POCSO cases)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

சக ஆசிரியர்களை பழிவாங்க ‘போக்சோ’வில் மாணவிகளை பொய்ப் புகார் அளிக்கவைத்த தலைமை ஆசிரியர் மீதே போக்சோ சட்டம் பாய்ந்தது (The POCSO Act was passed on the HeadMaster who made the students file false complaints in 'POCSO' to take revenge on Teachers)...

படம்
சக ஆசிரியர்களை பழிவாங்க ‘போக்சோ’வில் மாணவிகளை பொய்ப் புகார் அளிக்கவைத்த தலைமை ஆசிரியர் மீதே போக்சோ சட்டம் பாய்ந்தது (The POCSO Act was passed on the HeadMaster who made the students file false complaints in 'POCSO' to take revenge on Teachers)... சக ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில் மாணவிகளை தவறாகப் பயன்படுத்திய மதுரை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் முயற்சியால் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ஒருவர், ஆகஸ்ட் 6-ல் ஊமச்சிகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், கருப்பாயூரணி போலீஸ் சரகத்திலுள்ள அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், சைல்டு லைன் (1098) எண்ணில் அழைத்தார். அவர் பணிபுரியும் பள்ளியின் புகார் பெட்டியில் தங்களது பள்ளியில் பயிலும் இரு சிறுமிகள் எழுதிய கடிதங்கள் சிக்கியதாகவும், அதே பள்ளி ஆசிரியர் ஒருவர் தவறான முறையில் வம்பு செய்திருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் குறிப்பிட்டதாகவும் தெரிவித்து இருந்தார். அதன்பேரில் 3 ஆசிரிய

போக்சோ சட்டம் 2012 - விழிப்புணர்வு பதிவு (POCSO Act 2012 - Awareness Message)...

படம்
போக்சோ சட்டம் 2012 - விழிப்புணர்வு பதிவு (POCSO Act 2012 - Awareness Message)...  *போக்சோ சட்டம் 2012...*   *விழிப்புணர்வு பதிவு...*  சமீப காலமாக அப்பாவி ஆசிரியர்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் இச்சட்டத்தின் சில பிரிவுகளை தெரிந்து கொண்டு, சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவே பதிவு... சட்டம் முழுவதும் குற்றம் செய்பவர்களை மனதில் வைத்தே எழுதப்படும். இச்சட்டமும் அது போன்றதே...  1.இச்சட்டத்தின் 2(d) பிரிவு,  18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் அனைவரும் குழந்தைகள் என்றே வரையறுக்கின்றது. (ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று அல்ல) மேலும் இச்சட்டம் முழுக்க குற்றமிழைக்கும் ஆண்களுக்கு பொருந்துவதோடு, சட்டப்பிரிவு 7ற்குப் பின் வரும் பிரிவுகள் அனைத்தும் ஆண்,பெண் இருவருக்கும் பொருந்தக் கூடியது. 2. *இச்சட்டப் பிரிவு 7-ன்படி சாதாரணமாகத் தொடுவதையே பாலியல் நோக்கத்தோடு தொடுவதாக கூறி விட இயலும்.* 3. சட்டப்பிரிவு 11-ன் படி பாலியல் நோக்கத்தோடு சப்தமிடல், சைகை காட்டுதல், பொருட்களை காட்டுதல், உடம்பில் ஒரு பகுதியை காட்டுதல் அல்லது குழந்தையை காட்டச் சொல்லுதல் ஆகிய அனைத்தும் குற்றம்  4.சட்டப்பிரிவு 16-இன் படி பால

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது (Sexual Harassment of Student - Headmaster Arrested under POCSO Act)...

படம்
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது (Sexual Harassment of Student - Headmaster Arrested under POCSO Act)...  வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள மாச்சம்பட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பேர்ணாம்பட்டு கோயில் தெருவை சேர்ந்த பால்வண்ணன் (55) என்பவரும், மற்றொரு ஆசிரியரும் பணி புரிகின்றனர். 75 மாணவ, மாணவியர் மாச்சம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளைக்கு மாணவ, மாணவியர் சென்றிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவியை வகுப்பறைக்கு தலைமை ஆசிரியர் பால்வண்ணன் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த மாணவியின் உறவினரான அதே பள்ளியில் படித்து வரும் மாணவி பார்த்துள்ளாராம். உடனே தலைமை ஆசிரியர் அந்த மாணவியை அடித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வீடு திரும்பிய மாணவிகள் இருவரும் நடந்த சம்பவத்தை தங்களது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொந்தரவு அளிப்போர் மீது புகார் தெரிவிக்க மாவட்ட வாரியாக காவல்துறை ஆய்வாளர்கள் அலைபேசி எண்கள் வெளியீடு...

படம்
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று கல்வி கற்க முடியாத நிலை உள்ளது. எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சமயத்தில் சில பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களிலுள்ள பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், ஆசிரியர்களால் பாலியல் ரீதியான தொந்தரவுகளைத் தவிர்ப்பதற்காகவும், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தக்கூடிய பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்களுடன் மத்திய மண்டல ஐ.ஜி., வே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூன் 08) காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், 255 பள்ளிகளின் முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். முழுவதும் பதிவு செய்ய வேண்டும் அப்போது அவர், “முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இணையவழி வகுப்புகள் உரிய முறைப்படுத்துதலுடன் நடைபெற வேண்டும். அனைத்து இணையவழி

இது எங்களுக்கும் ஒரு பாடம் தான்; பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு -அமைச்சர் அன்பில் மகேஷ்...

படம்
  சென்னையின் பிரபல தனியார் பள்ளியான பி.எஸ்.பி.பி-யில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர், மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்புக்கு வந்ததாகவும், ஆபாசமாகப் பேசியதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பள்ளியின் டீனுக்கு புகார் அனுப்பப்பட்டது. எனினும் பள்ளி தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற தகவல் வெளியானது, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த விவகாரம். இந்தநிலையில், ஆசிரியர் ராஜகோபாலனை தமிழக காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதனிடையே ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே ஆன்லைன் வகுப்புகளை நெறிப்படுத்துவது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில்

ஆசிரியர் மீது போக்சோ வழக்கு - 2 டி.இ.ஓ., மீதும் நடவடிக்கை...

 மதுரையில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர் மீது, 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் மீது நடவடிக்கை எடுக்காத இரண்டு டி.இ.ஓ.,க்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  மதுரை, ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி ஆங்கில ஆசிரியர் விஜயபிரபாகரன், 45. இவர், 2020 ஜூலையில், பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.மாணவியின் தந்தை மாநகராட்சி, மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லை. இது குறித்து, கோதண்டம் என்பவர், 'போக்சோ' வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின்படி, விஜயபிரபாகரன் மீது கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில், புகார் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இருவர் சேர்க்கப்பட்டு, அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இந்நிலையில், விஜயபிரபாகரனை, மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா, 'சஸ்பெண்ட்' செய்தார். அவர் கூறுகையில், ''புகார் அளித்தவுடன், பெண்கள் பள்ளியில் இருந்து, ஆண்கள் பள்ளி

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...