கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவு...

 தமிழகத்தில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் தற்போது அரசு மருத்துவமனைகளில் 41 ஆயிரம் படுக்கைகள் உள்ள நிலையில், 22 ஆயிரம் படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.



தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


அந்த வகையில் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய 12 ஆயிரத்து 468 படுக்கைகள் தயாராகி வருகின்றன. இதில் 5000 படுக்கைகள் தயார் செய்யும் பணி முடிவடைந்துள்ளன. மீதமுள்ள படுக்கைகளை தயார் செய்யும் பணி ஒரு வாரத்தில் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...