கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணியிலுள்ள ஆசிரியர்கள் TETக்கு விண்ணப்பிக்கலாமா? வேண்டாமா?

 

 

 பணியிலுள்ள ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு TET விண்ணப்பிக்கலாமா? வேண்டாமா?


“அவசரம் எப்போதும் தவறை உருவாக்கும்;

காத்திருப்பதே புத்திசாலித்தனம்.”


தற்போது அறிவிக்கப்பட்டுள்ள TET தகுதித் தேர்வு, புதிய நியமனங்களுக்கானது.

ஆனால் நம்மில் பலர் ஏற்கனவே பணியில் இருப்போர். எனவே நாமாக விரைந்து சென்று தேர்வு எழுதுவது சிக்கலான முடிவாகிவிடும்.


“அரசுப் பணியில் இருப்போர், அரசின் உரிய வழிகாட்டல் இல்லாமல் தன்னிச்சையாகச் செய்வது

நம்மையே சிக்கலில் தள்ளும் செயல்.”


உயர் கல்விக்கான தேர்வெழுத அனுமதி கேட்பது வேறு;

ஆனால் வேலையில் இருக்கும் ஒருவர், வேலையில் சேராதோருக்கான தேர்வை எழுதுவது முறையே தவறானது.

“பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதச் சொல்வது போன்ற அபத்தம்.”


மேலும்:


விண்ணப்பிப்பதே பெரும் தண்டனை.


விண்ணப்பித்து படித்து தேர்வு எழுதுவது – நரகம் போன்ற சுமை.


“மூத்த ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை” என்ற புள்ளிவிபரங்கள் ஊடகங்களில் வெளியானால், நம்முடைய மதிப்பும் தகுதியும் கேள்விக்குள்ளாகும் அபாயம் உண்டு.


அவசரப்பட்டு விண்ணப்பித்தால்:


அரசு, “ஆசிரியர்கள் ஆர்வமாக உள்ளனர்” என்று தவறாக நினைத்துக்கொள்ளும்.


ஆசிரியர்களுக்குள்ளே பிரிவினை, வெறுப்பு உருவாகும்.



ஆனால், தீர்ப்பு வந்த பின்:


தேர்வே தேவையில்லை, சில பயிற்சிகள் மட்டும் போதுமானது என அரசு கூறும் வாய்ப்பு இருக்கிறது.


மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம்.


“தெரியாத பாதையில் விரைந்து செல்வதைவிட,

காத்திருந்து சரியான பாதையில் நடந்தால் தான் பாதுகாப்பு.”


குறிப்பு : இத்தகவல் வாட்ஸ் அப் பகிர்வு. அவரவர் கருத்துக்கு ஏற்ப சிந்தித்து செயல்படுங்கள். நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Service Register Audit Verification Checklist Form

  பணிப்பதிவேடு தணிக்கை சரிபார்ப்பு படிவம்  Audit SR Check List - BEO Office இடைநிலை ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்க...