கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மெட்ரிக் பள்ளிகளுக்கு(Matriculation Schools) இயக்குநர் எச்சரிக்கை...



 மெட்ரிக் பள்ளிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குனர் எச்சரித்துள்ளார்.


தமிழக மெட்ரிக் பள்ளி இயக்குனர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பல பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூடியிருப்பதை பார்க்க முடிகிறது. 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கவும், ஒன்பதாம் வகுப்புக்கான மதிப்பெண் பட்டியல் பெறவும், பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்.


இதனால், ஒரே நேரத்தில் அதிக கூட்டம் உள்ளது. கொரோனா விதிகளை பின்பற்றாமல், பல பள்ளிகளில் மாணவர்கள் திரளாக நிற்பது தெரியவந்துள்ளது.எனவே, பள்ளிகளில் கொரோனா விதிகளை பின்பற்றாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய செயல்திறன் குறியீடுகள் (KPIs) குறித்த DEE Proceedings

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு Proceedings of the Dir...