கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு 10-07-2023 முதல் அமல் (Increase in deed registration fee effective from 10-07-2023)...



>>> பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு 10-07-2023 முதல் அமல் (Increase in deed registration fee effective from 10-07-2023)...


இன்று முதல் அமலுக்கு வந்த பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு.. முழு விவரம் இதோ..!!👉


பத்திரப் பதிவுக் கட்டணம்..!!


📑 பத்திரப் பதிவுத்துறையில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் பதிவுக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.


📑 புதிதாக அமலுக்கு வந்த பதிவுக் கட்டணம் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!!


பதிவுக் கட்டணம்:


📑 தமிழ்நாட்டில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் சொத்து வாங்குவது, விற்பது போன்ற சொத்து பரிமாற்றம் தொடர்பான பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.


📑 இந்த பத்திரப் பதிவுகளுக்கு பதிவுக் கட்டணம் 20 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த நிலையில், தற்போது புதிய கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


📑 அதாவது, பதிவுச்சட்டம் 1908ன் பிரிவு 78இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும், சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரைக் கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.


📑 அந்த வகையில் ரசீது ஆவணப் பதிவுக் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும்,


📑 குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் 4,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும்,


📑 அதிகபட்ச முத்திரைத் தீர்வை 25,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாகவும்,


📑 தனி மனை பதிவு கட்டணம் 200 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


📑 மேலும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு ரூ.10,000 என்பதை சொத்தின் சந்தை மதிப்புக்கு 1%எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 90 மாணவர்களுக்கு பாதிப்பு

  அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 90 மாணவர்களுக்கு பாதிப்பு  அரியலூர் அருகே உள்ள வெற்றியூரில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உண...