பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-03-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள்:- 12.03.2026
கிழமை:- வியாழன்
திருக்குறள்:
குறள் 618:
பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை இன்மை பழி.
விளக்க உரை:
நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.
பழமொழி :
A closed mouth catches no flies.
நுணலும் தன் வாயால் கெடும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.
2.எனவே ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.
பொன்மொழி :
பேச்சினில் தீமை கலந்து விட்டால் மனதிலும் தீமை கலந்து விடும் - செனெகா
பொது அறிவு :
01.எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்?
நீர்யானை - Hippopotamus
02.உலகில் முட்டை உற்பத்தியில் முதலிடத்தில் வகிக்கும் நாடு எது?
சீனா -China
English words :
Ancestral-related to
Bifurcated-divided into two parts
தமிழ் இலக்கணம்:
று, டு ஆகிய எழுத்துக்கள் உடன் வேற்றுமை உருபு அல்லது மற்ற சொற்கள் சேர்ந்து வரும் போது இந்த எழுத்துகளுக்கு முன்னாடியும் வல்லினம் மிகுந்து வரும்
எ.கா
1.அடையாறில் போக்குவரத்து நெரிசல் அதிகம்.
தவறு
அடையாறு + இல் = அடையாற்றில்
அடையாறில் போக்குவரத்து நெரிசல் அதிகம்....சரி
2.கயிரைப் பிடித்து கரை ஏறினர். தவறு
கயிற்றைப் பிடித்து கரை ஏறினர்....சரி
நீதிக்கதை
சிட்டுக்குருவியின் பேராசை
இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.
சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.
“போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது.
தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து “அப்படிப்போடு………..அப்படிப்போடு” என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.
திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.
முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.
இன்றைய செய்திகள்
12.03.2026
⭐ தமிழகத்தில் நாளை முதல் வெப்பநிலை அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்
⭐பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கான 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.
⭐ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை பாதுகாப்பதற்காக பிரான்ஸ் தலைமையில் ஒரு பிரம்மாண்டமான கடற்படையை
உருவாக்க உலக நாடுகள் முன் வந்துள்ளன.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀ICC Rankings /
முதல் இரண்டு
இடங்களை பிடித்து அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் சாதனை
🏀ஐ.பி.எல். தொடர் வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
Today's Headlines
⭐ The Meteorological Department has informed that the temperature will increase in Tamil Nadu from tomorrow.
⭐ PM Narendra Modi has inaugurated 5 new train services for Tamilnadu.
⭐ Countries around the world have come forward to form a massive naval force under the leadership of France to reopen the Strait of Hormuz and ensure the safety of oil and gas supplies.
*SPORTS NEWS*
🏀 In the International Cricket Council (ICC) rankings Abhishek Sharma and Ishan Kishan have achieved the milestone of securing the top two positions.
🏀 The Indian Premier League (IPL)will be held from March 28 to May 31.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.