கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி - மன்ற செயல்பாடுகள்‌ 2023-24 - வட்டார அளவில்‌ பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்‌ நடத்துதல்‌ -ஆகஸ்டு 2023 - நிதி விடுவித்தல்‌ - சார்பு - மாநிலத்‌ திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண்‌: 3437/ ஆ3/ CLUB/ ஒபக/ 2023, நாள்‌: 04.08.2023 (Samagra Shiksha - Forum Activities- 2023-24 - Conduct of Block Level Competitions for School Students - August 2023 - Release of Funds - Regarding - State Project Director's letter Rc.No: 3437/ B3/ CLUB/ SS/ 2023, Dated: 04.08.2023)...

 

ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி - மன்ற செயல்பாடுகள்‌ 2023-24 - வட்டார அளவில்‌ பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்‌ நடத்துதல்‌ -ஆகஸ்டு 2023 - நிதி விடுவித்தல்‌ - சார்பு - மாநிலத்‌ திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண்‌: 3437/ ஆ3/ CLUB/ ஒபக/ 2023, நாள்‌: 04.08.2023 (Samagra Shiksha - Mandram Activities- 2023-24 - Conduct of Block Level Competitions for School Students - August 2023 - Release of Funds - Regarding - State Project Director's letter Rc.No: 3437/ B3/ CLUB/ SS/ 2023, Dated: 04.08.2023)...



>>> மாநிலத்‌ திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண்‌: 3437/ ஆ3/ CLUB/ ஒபக/ 2023, நாள்‌: 04.08.2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி


விடுநர்‌ 


திருமதி. மா. ஆர்த்தி இ.ஆ.ப., 

மாநிலத்‌ திட்ட இயக்குநர்‌, .

ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி,

சென்னை- 600006.


பெறுநர்‌

முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌,

அனைத்து மாவட்டங்கள்‌


ந.க.எண்‌: 3437/ ஆ3/ CLUB/ ஒபக7/ 2023, நாள்‌: 04.08.2023


பொருள்‌: ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி-மன்ற செயல்பாடுகள்‌ 2023-24 - வட்டார அளவில்‌ பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்‌ நடத்துதல்‌ -ஆகஸ்டு 2023 - நிதி விடுவித்தல்‌ - சார்பு.

பார்வை: தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 019528 / எம்‌/ 1 / 2022. நாள்‌: 26.07.2023


***********


2023-2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ பள்ளி அளவிலான மன்ற செயல்பாடுகள்‌ நடத்துதல்‌ மற்றும்‌ அதனைத்‌ தொடர்ந்து வட்டார, மாவட்ட அளவிலான போட்டிகள்‌ நடத்துவது சார்ந்து அறிவுரைகள்‌ பார்வை-(1)ல்‌ கண்டுள்ள பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகளின்‌ வாயிலாக அனைத்து மாவட்டங்களுக்கும்‌ பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓரு பள்ளியிலிருந்து ஜூன்‌, ஜூலை மற்றும்‌ ஆகஸ்டு மாதங்களில்‌ பள்ளி அளவில்‌ நடைபெற்ற 10 போட்டிகளில்‌ வெற்றி பெற்ற 30 மாணவர்கள்‌ வட்டார அளவிலான போட்டிகளில்‌ பங்கு பெறுவர்‌. இம்மாணவர்களை வட்டார அளவில்‌ நடைபெறும்‌ போட்டிகளில்‌ கலந்து கொள்ள ஏதுவாக ஓர்‌ ஆசிரியர்‌ பள்ளியிலிருந்து அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டிகளில்‌ கலந்துக்‌ கொள்ளும்‌ மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும்‌ சிற்றுண்டி செலவினம்‌, 2 நடுவர்களுக்கான மதிப்பூதியம்‌ & நினைவு பரிசு, வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள்‌, வட்டார அளவில்‌ போட்டிகள்‌ நடத்துவதற்கான செலவினத்திற்கான நிதி இணைப்பில்‌ உள்ளவாறு ரூ.2,81,06,035/- (ரூபாய்‌ இரண்டு கோடியே எண்பத்து ஒரு இலட்சத்து ஆறாயிரத்து முப்பத்தைந்து ரூபாய் மட்டும்) அனைத்து மாவட்டங்களுக்கும் விடுவிக்கப்படுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

+2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி...

  +2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி...  அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈர...