கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடவுளின் கருணை - எடிசனின் பதில்...

 


கடவுளின் கருணை - எடிசனின் பதில்...


எடிசன் தனது அறுபத்தைந்தாவது வயதை நெருங்கிக் கொண்டிருக்கையில், 

அவரைப் பேட்டி கண்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை நிருபர்,


 "இத்தனை கண்டுபிடிப்புகளை உங்களைச் செய்யத் தூண்டிய ஆண்டவரின் கருணையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?" என்று கேட்டார்.


எடிசன் சிரித்துக் கொண்டே சொன்னார், 


"இன்று மதியம் நான் உண்ட உணவில் அற்புதமான மீன் கறி ஒன்றை எனக்குப் பரிமாறினார்கள். எனக்குக் கிடைத்த மதிய உணவு கடவுளின் கருணை என்றால், 

அந்த மீனுக்கு கடவுள் காட்டிய கருணை என்ன.? 

நான் உண்ட மீனையும் அந்தக் கடவுள்தானே படைத்திருக்க வேண்டும்..?"


 என்று கேட்டுச் சிரித்தார். 


தொடர்ந்து அவரே சொன்னார்.


 "கடவுள் என்று தனியே ஒன்றும் இல்லை. 

எல்லாம் இயற்கைதான். இயற்கைக்குக் கருணையோ, கொடூரத் தன்மையோ எதுவும் கிடையாது. 

இயற்கைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. 

அது தன் போக்கில் எல்லாச் செயல்களையும் செய்து முடிக்கிறது.!" என்றார் எடிசன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Karur District Secondary Grade Teacher Vacancies

     இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் நிறைவடைந்தது. மீதி உள்ள காலிப்பணியிடங்களுக்கு அடுத்த வாரம் புதிதாக இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்ப...