கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பிரதமர் வீடுகள் கட்டும் திட்டம் - ரூ.209 கோடி ஒதுக்கீடு



பிரதமர் வீடுகள் கட்டும் திட்டம் - ரூ.209 கோடி ஒதுக்கீடு.


ஊரகப் பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2024 - 2025 ஆம் ஆண்டில் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ. 209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை.


ஒரு வீட்டுக்கு ரூ.1.20 லட்சம் என்ற அடிப்படையில் முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு.


மத்திய அரசின் பங்கு 125 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை 83 கோடி என்று மொத்தம் ரூ.209 கோடி ஒதுக்கீடு.


பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 68,569 வீடுகள் கட்ட ரூ. 209 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் 25 ஜூன் 2015 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாதவர்கள் வீடு கட்டவோ அல்லது வாங்கவோ பயன் பெறுவார்கள். மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படுகிறது.


இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு நடப்பு நிதியாண்டில் ஊரக பகுதிகளில் இந்த திட்டத்தின் கீழ் 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பங்கு ரூ.125 கோடி மற்றும் மாநில அரசின் பங்கு ரூ.83 கோடி என மொத்தம் ரூ. 209 கோடி ஒதுக்கீடு செய்து ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது.


ஒரு வீட்டுக்கு ரூ.1.20 லட்சம் என்ற அடிப்படையில் முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு ஒன்றிய அரசு 60%, மாநில அரசு 40% நிதி வழங்குகின்றன.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100 குறட்பாக்கள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.200 பரிசுத்தொகை - நன்னெறி வகுப்புகள் நடைபெறுவதை உறுதிப்படுத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு...

  100 குறட்பாக்கள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.200 பரிசுத்தொகை - அரசுப் பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் நடைபெறுவதை உறுதிப்படுத்த பள்ளிக் கல...