கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நிதி மோசடி வழக்கில் Neomax சொத்தை கையகப்படுத்தி அரசாணை வெளியிடுக - உயர்நீதிமன்றம்...



 நியோமேக்ஸ் சொத்தை கையகப்படுத்தி அரசாணை வெளியிடுக - உயர்நீதிமன்றம்...


ரூ.6,000 கோடி மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை கையகப்படுத்தி அரசாணை வெளியிட ஆணை.


நிதி மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை முடக்கி வருகிற 19ஆம் தேதிக்குள் அரசாணை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.


தவறும் பட்சத்தில் தமிழக உள்துறைச் செயலர், பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை.


தற்போது வரை எடுத்த நடவடிக்கை குறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.


தூத்துக்குடியை சேர்ந்த ஜெயின் குமார், நடராஜன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை நீதிபதி முரளிசங்கர் ஆணை.


நியோமேக்ஸ் இயக்குநர்கள், நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரி வழக்கு.


மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களும் உள்ளன. இந்த நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக நெல்லை, பாளையங்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிளைகளை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய சில நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றக்கோரியும், சிலருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் ஏராளமான வழக்குகள் தாக்கல் ஆகின.


இந்த நிலையில், நியோமேக்ஸ் மோசடி வழக்கில் சார்லஸ், இளையராஜாவிற்கு அளித்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, ‘நியோமேக்ஸ் வழக்கில் என்னதான் நடக்கிறது?. இன்னும் எவ்வளவு கால தேவைப்படும்?. இந்த வழக்கு தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?. எத்தனை பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்?. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.


சொத்துக்களை வழக்கில் இணைத்து அரசாணை வெளியிடுவதற்கு தாமதிக்க என்ன காரணம்? அரசாணை வெளியிடுவது தொடர்பாக இனியும் கால அவகாசம் வழங்க முடியாது. எனவே, அக்டோபர் 19ஆம் தேதிக்குள் நியோமேக்ஸ் நிதி நிறுவன சொத்துக்களை வழக்கில் இணைத்து அதனை முடக்கி அரசாணை வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டார். மேலும் அவர், “அரசாணை வெளியிட தவறும்பட்சத்தில் உள்துறை செயலாளர், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆஜராக நேரிடும்” என்று கூறினார்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalai Thiruvizha - Dates for CRC and Block level competitions - SPD Proceedings, Dated : 14-10-2024

  குறுவளமைய மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடைபெறும் நாட்கள் அறிவிப்பு - SPD செயல்முறைகள், நாள் : 14-10-2024... Kalai Thiruvizha - Dates f...