கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Local holiday notification for Nagapattinam district on Thursday 12th December


 நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு டிசம்பர் 12 வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


நாகை மாவட்டம் நாகூரில் நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹூல் அமீது பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இங்கு 468-வது ஆண்டு கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி வருகிற 12-ந் தேதி(வியாழக்கிழமை) அதிகாலை நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.


இந்த நிலையில், நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக 21-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Revised Budget of the Government of Tamil Nadu for 2026 | Press Release

  தமிழ்நாடு அரசு திருத்திய நிதிநிலை அறிக்கை 2026 தாக்கல் செய்தல் குறித்த அறிவிப்பு வெளியீடு Announcement regarding the presentation of the R...