கரூர் துயர சம்பவத்தில் நடந்தது என்ன? - ADGP விளக்கம்
விஜய் பேசும்போது மின்சாரம் தடை செய்யப்படவில்லை : மின்வாரிய அதிகாரி ராஜலட்சுமி பேட்டி
* கரூரில் தவெகவினர் முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தான பகுதி, ஒரு பக்கம் பெட்ரோல் பங்க், மற்றொரு பக்கம் அமராவதி ஆறு, பாலம் உள்ளது
* 2வதாக அனுமதி கேட்ட உழவர் சந்தை பகுதி மிகவும் குறுகலான இடம்
* 3வதாக அனுமதி அளிக்கப்பட்ட வேலுச்சாமிபுரம் பஸ்ஸ்டாப் ஏற்கனவே அதிமுக பிரச்சாரம் செய்த இடம் என்பதால் பரிந்துரைத்தோம்
* போலீஸ் பரிந்துரையை ஏற்றுக்கொண்டுதான் வேலுச்சாமிபுரம் பஸ்ஸ்டாப் பகுதியில் தவெகவினர் அனுமதி பெற்றனர்
* கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் கல்வீச்சு ஏதும் நடைபெறவில்லை
* நேற்று, விஜய் வந்தபோது 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
* அதற்கு முந்தைய நாள், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தின்போது 137 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
* கூட்டம் அதிகம் உள்ளதால் 50 மீட்டர் முன்னதாகவே வாகனத்தை நிறுத்தமாறு காவல்துறை அறிவுறுத்தலுக்கு விஜய் தரப்பு மறுப்பு,
* குறிப்பிட்ட இடத்தில்தான் பிரச்சாரம் மேற்கொள்வேன் என விஜய் திட்டவட்டம் - சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம்
* தவெகவினர் அமைத்திருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்துவிட்டது
* விஜய் வருவதற்கு முன்பு தொண்டர்கள் மரம், மின்கம்பம் மீது ஏறி இருந்ததால் அவர்களை கீழே இறக்கவதற்காக சிறிது நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது
* விஜய் பேசும்போதும் மின்சாரம் தடை செய்யப்படவில்லை - மின்துறை விளக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.