இணையவழி சூதாட்டம் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை...
ஆன்லைன் சூதாட்டம் - Online Gaming - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை... ஆன்லைன் சூதாட்டம்: விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், பேனர்கள், ஆட்டோ விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்த கூடாது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளம்பரம் செய்தால் 1 ஆண்டு சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம். அதே குற்றத்தை மீண்டும் செய்தால், 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்- தமிழக அரசு. இணைய சூதாட்டத்தை ஊக்குவித்தால் ஒரு ஆண்டு சிறை: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை... இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது துாண்டும் நபர்கள், நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இணைய வழி சூதாட்டத்தால், ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயம் போன்றவற்றை விளம்பரப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இணையவழி சூதாட்டங்கள் குறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவத