கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

செய்தி வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்தி வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Monthly salary of ₹2 lakh - Nurse (Male / Female) job in Germany - Free German language training - TN Govt Press Release



மாதச் சம்பளமாக ₹2 இலட்சம் - ஜெர்மனி நாட்டில் செவிலியர் (ஆண் / பெண்) பணி - இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவிக்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


Monthly salary of ₹2 lakh - Nurse (Male / Female) job in Germany - Free German language training will be provided - Tamil Nadu Government Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



ஜெர்மனியில் செவிலியர் பணிக்கு 2 லட்சம் ஊதியம் : தமிழ்நாடு அரசு


ஜெர்மனி நாட்டில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது


இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:


ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்க்கு ஆறு மாதம் பணி அனுபவம் பெற்ற 35 வயதிற்க்குள்பட்ட, டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.


இவர்களுக்கு B1 , B2 நிலையில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாத சம்பளமாக சுமார் 2 லட்சம் வழங்கப்படும்.


எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.03.2025க்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in மற்றும் 044- 22505886/ 63791 79200 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


12th Standard Public Exams Start Tomorrow - Cell Phone Banned - Punishment for disorderly Activities

 

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம் - அலைபேசிக்கு தடை - ஒழுங்கீனச் செயல்பாடுகளுக்குத் தண்டனை - செய்தி வெளியீடு எண்: 476, நாள் : 01-03-2025


 Class 12 Public Exams Start Tomorrow - Cell Phone Banned - Punishment for Misbehave Activities - Press Release No: 476, Dated : 01-03-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை (03.03.2025) தொடங்கி மார்ச் 25 வரை நடைபெற உள்ளது.


நடப்பாண்டு + 2 பொதுத்தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுத உள்ளனர்.


3,316 தேர்வுகள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


94983 83075, 94983 83076 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு மாணவர்கள், பெற்றோர்கள் சந்தேகங்களை கேட்கலாம் - பள்ளிக்கல்வித்துறை.


+2 பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்  3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை



CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them


பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து ஆணை - செய்தி வெளியீடு எண். 425, நாள் : 23-02-2025



In order to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them, the Chief Minister constituted a committee consisting of his ministers and ordered



Press Release No. 425, Dated : 23-02-2025


* பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து ஆணையிட்டுள்ளார்.


* இந்தக் குழுவில் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. எ வ வேலு , மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு ,  மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மாண்புமிகு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


* அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நாளை தலைமை செயலகத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


We are also studying the changes brought by the central government in the pension scheme - Hon'ble Tamil Nadu CM


 மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களையும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்


            மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.


We are also studying the changes brought by the central government in the pension scheme which may have a major impact on the financial condition of the state governments - Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M. K. Stalin.


மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களை ஆய்வு செய்து வருவதாக முதலமைச்சர் உரை - பக்கம் 4, பத்தி 2ல்





We have fulfilled 90% of our promises - Chief Minister Mr. M.K.Stalin


 90% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் - முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்


We have fulfilled 90% of our promises - Chief Minister Mr. M.K.Stalin


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது,  அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். நிச்சயம் அனைத்து வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம். அதேபோல், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்களைப் போன்று, தேர்தல் நேரத்தில் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம்.


- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





Actions to be taken by Educational Institutions to prevent sexual abuse against children - TN Govt Press Release



குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க தனியார் / அரசுப் பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


Actions to be taken by Private / Government Schools and Higher Education Institutions to prevent sexual abuse against children - Tamil Nadu Government Press Release


 The Chief Secretary to Government chaired a meeting on prevention of sexual abuse of school children


 Press Release No:358, Dated : 17-02-2025


செய்தி வெளியீடு எண்: 358, நாள்: 17.02.2025 


தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இப்பொருள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தனியார் / அரசுப் பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.







Competitions in 6 categories under the theme LoveTN to know about the merits and benefits of various programs implemented in 38 months



கடந்த 38 மாதங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களின் சிறப்பு மற்றும் பயன் குறித்து அறியும் விதமாகச் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் லவ் டிஎன் (LoveTN) என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. அதன்படி ரீல்ஸ் (Reels), புகைப்படப்போட்டி (Photography), வினாடி-வினாப் போட்டி (Quiz), ஓவியப்போட்டி (Painting/Drawing), செய்தி நறுக்குதல் போட்டி (Newpaper/Artical cutting), ஹாஷ் டாக் போட்டி (#hashtag) என்று 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தவுள்ளது.


In order to know about the merits and benefits of the various programs implemented in the last 38 months, a competition titled LoveTN will be held on behalf of the News Public Relations Department. Accordingly, competitions will be held in 6 categories namely Reels, Photography, Quiz, Painting/Drawing, Newspaper/Article cutting and Hashtag



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


A committee formed to make recommendations regarding the appropriate pension scheme - TN Govt Press Release No: 271, Dated: 04-02-2025


உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட  அதிகாரிகள் அடங்கிய குழு அமைப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 271, நாள் : 04-02-2025


A committee consisting of officials to make recommendations to the government regarding the appropriate pension scheme - Tamil Nadu Government Press Release No: 271, Dated: 04-02-2025


மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட  அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது


DIPR-P.R No.-271- TN Govt Press Release - Pension Scheme, Date - 04.02.2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 தமிழக அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய குழு


பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட மூன்று வகையான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய தமிழக அரசு குழு அமைந்துள்ளது.


ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங்பேடி உள்ளிட்ட 3 போ் கொண்ட குழு 9 மாதங்களுக்குள் அரசுக்கு பரிந்துரை அறிக்கை அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மாநில அரசுப் பணியாளா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே தருணத்தில் மத்திய அரசுப் பணியாளா்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளா்களுக்கு தொடா்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.


மாநில அரசுப் பணியாளா்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தைச் செயல்படுத்த தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதனிடையே மத்திய அரசுப் பணியாளா்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. 


குழு அமைப்பு: இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய ஒரு குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் நிதிநிலையையும், பணியாளா்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில்கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையை அரசுக்கு அளிக்க 3 அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் முன்னாள் இயக்குநா் கே.ஆா்.சண்முகம், நிதித் துறை துணைச் செயலா் (பட்ஜெட்) பிரத்திக் தாயள் ஆகியோா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.


இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Public should not panic - Tamil Nadu Government press release regarding HMPV virus outbreak



 பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - HMPV வைரஸ் பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு 


Public should not panic - Tamil Nadu Government press release regarding HMPV virus outbreak


HMP வைரஸ் புதியதல்ல; 2001இல் கண்டறியப்பட்ட வைரஸ்தான்


நீண்ட ஆண்டுகளாகவே இந்த வைரஸ் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை


HMP வைரஸ் சென்னையில் ஒருவருக்கும் சேலத்தில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது; இருவரின் உடல் நிலை சீராக உள்ளது


HMPV தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை ஆலோசனை நடத்தி உள்ளது


மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவும்


- தமிழ்நாடு சுகாதாரத் துறை


செய்தி வெளியீடு எண்: 48 நாள்: 06.01.2025 

மனித மெட்டாப்நியூமோவைரஸ்-தமிழ்நாடு 

ஹ்யூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) ஒரு புதிய வைரஸ் அல்ல, இது 2001 இல் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஏற்கனவே புழக்கத்தில் உள்ள வைரஸ் ஆகும். 

HMPV நோய்த்தொற்றுகள் சுய-கட்டுப்பாட்டு மற்றும் போதுமான நீரேற்றம் மற்றும் ஓய்வு உட்பட அறிகுறி கவனிப்புடன் தீர்க்கப்படுகின்றன. 

HMPV க்கான சிகிச்சையானது அறிகுறி மற்றும் ஆதரவாக உள்ளது. 

தற்போது. சென்னையில் ஒருவரும் சேலத்தில் ஒருவரும் மனித மெட்டாப்நியூமோவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிலையாக உள்ளனர் மற்றும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட பொதுவான சுவாச வைரஸ் நோய்க்கிருமிகளில் குறிப்பிடத்தக்க எழுச்சி எதுவும் இல்லை, ஜனவரி 6, 2025 அன்று, இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய சுகாதார செயலாளர் தலைமையில் அனைத்து மாநில சுகாதார அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் நடத்தியது. கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

 HMPV வைரஸ் நிலையானது மற்றும் பீதிக்கு ஒரு காரணம் அல்ல என்று இந்திய அரசு தெளிவுபடுத்தியது. தும்மல்/இருமல் போது வாய் மற்றும் மூக்கை மூடுதல், கைகளை கழுவுதல், நெரிசலான இடங்களில் முகமூடி அணிதல் மற்றும் தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பது போன்ற பிற சுவாச நோய்த்தொற்றுகளுக்கு போன்று HMPV தடுப்பு உள்ளது. HMPV பொதுவாக சுய-கட்டுப்படுத்தக்கூடியது மற்றும் நிர்வகிக்கக்கூடியது என்று பொதுமக்கள் உறுதியளிக்கிறார்கள். பீதி அடையத் தேவையில்லை. தமிழ்நாடு அரசு உறுதியுடன் உள்ளது மற்றும் தொடர்ந்து காய்ச்சல் போன்ற நோய்கள் (ஐஎல்ஐ) மற்றும் கடுமையான கடுமையான சுவாச நோய் (SARI) ஆகியவற்றை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. 


சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர்



Press Release No: 48

Date: 06.01.2025

Human Metapneumovirus-Tamll Nadu

Human Metapneumovirus (HMPV) is not a new virus and it is an already circulating virus that was first identified in 2001. HMPV infections are self- limiting and resolve with symptomatic care, including adequate hydration and rest. The treatment for HMPV is symptomatic and supportive. Presently. 2 cases of Human Metapneumovirus has been reported, one in Chennai and one in Salem. They are stable and are being monitored.

There is no significant surge in common respiratory viral pathogens that has been detected in Tamil Nadu On January 6, 2025, the Ministry of Health and Family Welfare,Government of India, conducted a video conference with all State Health officials chaired by Union Health Secretary. The senior health officials from Tamil Nadu also participated in this meeting led by Additional Chief Secretary. Health. The Government of India clarified that the HMPV virus remains stable and is not a cause for concern to panic.

The prevention of HMPV is similar to any other respiratory infection such as, covering your mouth and nose while sneezing/coughing, washing hands, wearing masks in crowded places and reporting to the health facility, if need arises. The public is reassured that HMPV is typically self-limiting and manageable. There is no need to panic. The Government of Tamil Nadu remains committed and is continuously monitoring the influenza Like llnesses (ILI) and Severe Acute Respiratory lliness (SARI) closely.

ADDITIONAL CHIEF SECRETARY OF HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT 



Anna University Student Case Investigation - Tamil Nadu Police Report



அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு விசாரணை - தமிழ்நாடு காவல்துறை அறிக்கை


Anna University Student Case Investigation - Tamil Nadu Police Press Release 


அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை, எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவை.


விசாரணை தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிட வேண்டாம். இவ்வாறான தவறான தகவல்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துவதுடன், புலன்விசாரணையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக் கூடும்”


- தமிழ்நாடு காவல்துறை அறிக்கை


January 04 ,2025    


An all women Special Investigation Team (SIT) has been constituted to investigate the cases in connection with sexual assault of a girl student at Anna University Chennai - Tamil Version


 Press Release No:33 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





Pongal Gift Package Notification 2025 - TN Government Order


2025-ஆம் ஆண்டிற்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு - ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு


Pongal Gift Package Notification for 2025 to All Rice Family Card Holders - Government of Tamil Nadu orders to provide one kg of rice, one kg of sugar and one whole sugarcane - Press Release No. 2354, Dated: 28-12-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Union Education Minister Mr. Dharmendra Pradhan launched The Teacher App - Press Release

 


 டீச்சர் ஆப் (The Teacher App) என்ற செயலியைத்  தொடங்கி வைத்தார் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் - செய்தி வெளியீடு


Union Education Minister Mr. Dharmendra Pradhan launched The Teacher App - Press Release



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கல்வியாளர்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 உடன் இணைவதற்கான ஒரு படியாக, பாரதி ஏர்டெல் அறக்கட்டளை உருவாக்கிய புதுமையான டிஜிட்டல் தளமான தி டீச்சர் செயலியை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினார் .



தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் "கர்மயோகிகள்" என்ற ஆசிரியர்களின் முக்கிய பங்கை பிரதான் வலியுறுத்தினார். “அடுத்த தலைமுறையின் உண்மையான கட்டிடக் கலைஞர்கள் ஆசிரியர்கள். NEP 2020 இன் உணர்வில் ஆசிரியர்களின் தொடர்ச்சியான திறன் மேம்பாட்டிற்காக நாங்கள் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம், ”என்று அவர் கூறினார், அறிவொளி பெற்ற ஆசிரியர்கள் அறிவொளி பெற்ற மாணவர்களை உருவாக்குகிறார்கள் மற்றும் ஆசிரியர்கள் வாய்ப்புகளைக் கண்டறிந்து நமது இளைஞர்கள் வளர்ச்சிக் கதையை வழிநடத்துவதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பார்கள்.


டீச்சர் ஆப் என்பது கல்வியாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு இலவச, பயனர் மையப்படுத்தப்பட்ட தளமாகும். கற்பித்தல் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் , மாணவர் ஈடுபாட்டை வளர்ப்பதற்கும், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் கற்றல் சூழல்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இது நவீன தொழில்நுட்பத்துடன் நடைமுறைக் கருவிகளை ஒருங்கிணைக்கிறது. இணையம், iOS மற்றும் ஆண்ட்ராய்டு வழியாக அணுகக்கூடியது, பாடநெறிகள், கற்றல் பைட்டுகள், குறுகிய வீடியோக்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் வெபினர்கள் உட்பட 260 மணிநேரத்திற்கும் மேலான க்யூரேட்டட் உள்ளடக்கத்திற்கான தடையற்ற அணுகலை ஆசிரியர்களுக்கு வழங்கும்.


திட்ட அடிப்படையிலான செயல்பாடுகள், பணித்தாள்கள், பாடத் திட்டங்கள் மற்றும் கேள்வி வங்கிகள் போன்ற 900 மணிநேர ஆதாரங்களை வழங்கும் கற்பித்தல் கருவிகள் அதன் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாகும். பயன்பாடு நேரலை நிபுணர் அமர்வுகளையும் சமூகம் சார்ந்த உள்ளடக்கத்தையும் வழங்குகிறது, இது நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்களிடமிருந்து தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை எடுத்துக்காட்டுகிறது.


Online Patta Transfer Service - Stopped till 31.12.2024 - TN Government Press Release


 இணையவழி பட்டா மாறுதல் சேவை - 31.12.2024 வரை தற்காலிகமாக நிறுத்திவைப்பு - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு



Online Patta Exchange Service - Temporarily Suspended till 31.12.2024 - Tamil Nadu Government Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Thirukkural Quiz Competition – Preliminary Competition Notification - Addresses of Examination Centers - District Control Room Numbers


 திருக்குறள் வினாடி வினாப் போட்டி – முதல்நிலைப் போட்டி அறிவிப்பு - தேர்வு மையங்களின் முகவரிகள் - மாவட்டக் கட்டுப்பாட்டு அறை எண்கள்


Thirukkural Quiz Competition – Preliminary Competition Notification - Addresses of Examination Centers - District Control Room Numbers



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TETOJAC State High Level Committee Members Meeting with Director of Elementary Education on 18-12-2024 - Full Details Released

18-12-2024 அன்று தொடக்கக்கல்வி இயக்குநருடன் டிட்டோஜாக் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் சந்திப்பு - முழு விவரம் வெளியீடு...


TETOJAC State High Level Committee Members Meeting with Director of Elementary Education on 18-12-2024 - Full Details Released



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



(18.12.2024) இன்று தொடக்க கல்வி இயக்குனர் முனைவர் P.A.நரேஷ் அவர்களுடன் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட க்குழு உறுப்பினர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்

👇👇👇👇👇👇👇






தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்)


மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு


மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் 23.10.2024 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக _*மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை செயலாளர்*_ அவர்களின் வழிகாட்டுதலின்படி _*மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர்*_ அவர்கள் டிட்டோஜேக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களை அழைத்து இன்று (18.12.2024) பேசினார்கள்.


டிட்டோஜேக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழுவின் சார்பில் தொடக்கக்கல்வி இணை இயக்குநர் (நிர்வாகம்) _*மதிப்புமிகு. ச.கோபிதாஸ்*_ அவர்களும், தொடக்கக்கல்வி இயக்கக நேர்முக உதவியாளர்களும், அலுவலர்களும் பங்கேற்றனர்.


 அரசாணை எண் 243 இரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதியம் மத்திய அரசுக்கு இணையாக வழங்குவது தொடர்பாக விடுபட்ட சங்கங்களை அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தி உரிய பரிந்துரைகளை அரசுக்கு அனுப்புதல், பதவி உயர்வு வழக்கு, EMIS பதிவேற்றப் பணிகளிலிருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவித்தல், கருத்தாளர்களாக விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்துதல், 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதிபெற்றவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு பழைய முறைப்படி வழங்க வேண்டுதல் தொடர்பான வழக்கு, உயர்கல்விக்கான பின்னேற்பு ஆணை வழங்கி பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் சேர்த்தல், ரூ.5400 தர ஊதியப் பிரச்சனை, பி.லிட்., பி.எட்., ஊக்க ஊதிய உயர்வு தணிக்கைத்தடை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


அதன் பின்னர் டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூடி 27.12.2024 அன்று மாண்புமிகு. நிதியமைச்சர், மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட கோரிக்கைகள் மீது ஆணை வழங்க வலியுறுத்துவது எனவும், 28.12.2024 அன்று சென்னையில் டிட்டோஜேக் மாநில பொதுக்குழுவை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


Submission to the Chief Minister of Tamil Nadu's draft policy on land use, employment, water resources, stray dogs management prepared by the State Planning Committee and the evaluation of breakfast, Puthumai Penn, Ennum Ezhuthum Schemes



மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டின் நிலப் பயன்பாடு, வேலைவாய்ப்பு, நீர்வளம், தெருநாய்கள் மேலாண்மை வரைவு கொள்கையை ஆவணங்களும், காலை உணவு, புதுமைப்பெண்,  எண்ணும் எழுத்தும் ஆகிய திட்டங்களின் மதிப்பீட்டாய்வுகளும் முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பிப்பு


Submission to the Chief Minister of Tamil Nadu's draft policy on land use, employment, water resources, stray dogs management prepared by the State Planning Committee and the evaluation of breakfast, Puthumai Penn, Ennum Ezhuthum Schemes



மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கையை ஆவணங்கள் மற்றும் மதிப்பீட்டாய்வுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள் சமர்ப்பித்தார்



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




மாநில திட்டக்குழு மதிப்பீட்டு அறிக்கைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு


மாநில திட்டக்குழு தயாரித்த மதிப்பீட்டு அறிக்கைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.


தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநில திட்ட குழுவானது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் ஓர் உயர் மட்ட ஆலோசனைக் குழுவாகும். தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி மக்கள் நல திட்டங்களை மதிப்பீட்டு ஆய்வு செய்தல், அரசு ஆளுகையில் எழும் புதிய தேவைகளுக்கு ஏற்ப கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், பல்வேறு ஆய்வுகள் நடத்தி அறிக்கை தயாரிப்பதிலும் தனது பங்களிப்பை மாநில திட்ட குழு நல்கி வருகிறது.

இந்த நிலையில், மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் , மாநில திட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு வரைவு கொள்கை ஆவணங்கள் மற்றும் ஐந்து ஆய்வறிக்கைகள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், மற்றும் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.


1. தமிழ்நாட்டுக்கான நிலையான நிலப் பயன்பாட்டு கொள்கை:-

தமிழ்நாட்டின் நிலையான நிலப் பயன்பாட்டுக் கொள்கையானது, நகரமயமாதல், கால நிலையில் ஏற்படும் மாற்றங்கள், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு நீண்டகால நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதையே நோக்கமாக கொண்டுள்ளது.

இக்கொள்கையானது தமிழ்நாட்டின் நிலப்பரப்பினை நகர்ப்புற வளர்ச்சிக்கான பகுதி, பாதுகாக்கப்பட வேண்டிய சுற்றுச்சூழலுக்கான பகுதி, வேளாண் நடவடிக்கைகளுக்கான விளைநிலப்பகுதி என வகைப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வேளாண் நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கவும், விரைவாக நகரமயமாக்கும் பகுதிகளை வளர்க்கவும் அறிவுறுத்துகிறது. நிலையான வளர்ச்சி இலக்குகளை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் வளங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளை மேம்பட்ட நிலையான நடைமுறைகள் மூலம் எய்திடும் நோக்கில் சீரமைக்க இக்கொள்கை வலியுறுத்துகிறது.

துறை சார் வல்லுநர்களின் அறிவுரைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட கால இடைவெளியில் நடத்தப்படும் சீராய்வு கூட்டங்கள் வாயிலாக பொறுப்புணர்வு மிக்க வளங்குன்றா நிலப்பயன்பாட்டினை ஊக்குவித்து மாநிலத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கிய பாதையில் இக்கொள்கையானது எடுத்துச் செல்லும்.


2.தமிழ்நாடு வேலைவாய்ப்பு கொள்கை 2023:-

இந்த கொள்கை ஆவணம், தற்போதைய தொழிலாளர் சந்தையின் பல முக்கியமான சிக்கல்களுக்கான தீர்வுகளை முன் வைக்கிறது. இவற்றில், படித்த இளைஞர்களிடையே அதிக வேலையின்மை விகிதம், கல்வி, திறன் மேம்பாடு, உழைப்பிற்கான உத்வேகம் மற்றும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள குறிப்பிடத்தக்க பொருத்தமற்ற தன்மை ஆகியன முக்கியமானவைகள் ஆகும்.

மேலும், பொருத்தமான தீர்வுகளை வகுப்பதற்கான முக்கிய வழிமுறைகளை இந்த கொள்கை ஆவணம் முன் நிறுத்துகிறது. சராசரி வருவாயை உயர்த்துவதற்கும் மற்றும் பொருளாதாரத்தின் துரிதமான வளர்ச்சிக்கும், உற்பத்தி திறன் சார்ந்த வேலைகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இலக்காகக் கொண்ட 10 ஆண்டு செயல் திட்டத்தின் அவசியத்தை இந்த கொள்கை ஆவணம் முன் நிறுத்துகிறது.


3.தமிழ்நாடு மாநில நீர்வளக் கொள்கை:-

மாநில நீர் மேலாண்மையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பல்நோக்கு அணுகுமுறையுடன் தமிழ்நாடு நீர்வளக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் சுத்தமான நீர் கிடைப்பதை உறுதி செய்யவும், நீர்வளங்களை பாதுகாத்து மேம்படுத்தவும், ஆக்கபூர்வமான நீர் பயன்பாட்டிற்காகவும் சிறப்பான உத்திகளை இக்கொள்கை எடுத்துரைக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் நீர்வளத்தினை மேம்படுத்திட, நீர்வள ஆதார ஆணையம், நீர் கொள்கை ஆராய்ச்சி மையம், ஒருங்கிணைந்த நீர்இருப்பு தகவல் அமைப்பு போன்ற பல முன்னெடுப்புகளை இக்கொள்கை பரிந்துரைக்கிறது.


4.சமூக (தெரு) நாய் மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறைக்கான வரைவுக் கொள்கை

சமூக நாய்களை நிர்வகிப்பதற்கான ஒரு முழுமையான அணுகுமுறையினை இக்கொள்கை கொண்டுள்ளது. மனிதாபிமான கருத்தடை முறைகள், ஒழுங்கமைக்கப்பட்ட தடுப்பூசி திட்டங்கள், கைவிடப்பட்ட நாய்களுக்கான பிரத்யேக தங்குமிடங்கள் நிறுவுதல் போன்ற நிலையான செயல்திட்டங்களை பரிந்துரைக்கிறது.

மேலும், வளர்ப்பு நாய்களை பதிவிற்கான விதிகள், நாய்கடிகளை அறிக்கையிடுதல் மற்றும் வணிகரீதியலான நாய் இனப்பெருக்க நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் ஆகிய பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன. பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையில் இணக்கமான சூழலை உருவாக்கும் நோக்குடன் இக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.


முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்: 

இத்திட்டத்தினால் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் தாக்கம்

இந்த ஆய்வின் இரண்டாம் கட்ட இடைநிலை அறிக்கையானது, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவர்களின் கல்வி மற்றும் உடல்செயல்பாடுகளில் ஏற்பட்ட தாக்கம் குறித்து, இவ்வாண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட மதிப்பீட்டையும், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட அடிப்படைஆய்வு மதிப்பீட்டையும் ஒப்பீட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நடப்பு கல்வியாண்டில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் மதிப்பீட்டையும் உள்ளடக்கியுள்ளது.


புதுமைப்பெண்திட்டமதிப்பீடு:-

இந்த ஆய்வு, இத்திட்டத்தின் செயல்பாடு, சவால்கள், மாணவிகளின் விழிப்புணர்வு நிலை, திட்ட உதவியின் பயன்பாட்டு முறைகள், கல்லூரி மாணவியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இடையே புதுமைப்பெண் திட்டம் ஏற்படுத்திய சமூக பொருளாதார தாக்கங்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதாகும். இத்திட்டம் சமூக பொருளாதார வகையில் விளிம்பு நிலையிலுள்ள சமூகத்தைச் சார்ந்த மாணவிகளுக்கு உயர்கல்வி பெற பெரிதும் உதவிபுரிந்துள்ளது.


எண்ணும் எழுத்தும் திட்டம் செயலாக்கத்தின் மீதான மதிப்பீட்டு ஆய்வு:-

இந்த மதிப்பீட்டு ஆய்வில், துவக்கக்கல்வியின் தரத்தினை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் "எண்ணும் எழுத்தும்" திட்டத்தின் நடைமுறை செயல்பாடுகள் ஆழ்ந்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பான தரவுகளைப் பெற்றும், ஆசிரியர் பயிற்றுநர்களுடன் நேர்காணல்கள்

மேற்கொண்டும், இத்திட்டத்தின் விளைவு இந்த ஆய்வில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டு ஆய்வு, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் செயலாக்கத்தை செம்மைப்படுத்துவதையும் மற்றும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியின் பயனை அதிகப்படுத்துவதையும் குறிக்கோள்களாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய விரிவான மறு ஆய்விற்கான அடித்தளத்தை வழங்குகிறது.


நகர்ப்புற வெப்பத்தீவு தமிழ்நாட்டின் வெப்பப்பகுதிகளின் பகுப்பாய்வு மற்றும் தணிப்பு உத்திகள்:-

இந்த அறிக்கையானது, நகர்புற வெப்பதீவு விளைவுகளை மதிப்பீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை தெரிவிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள வெப்பமண்டலங்களை கண்டறிந்து வெப்பப்பகுதிகளை அடையாளம் காணவும், நகரமயமாதலால் மற்றும் காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கத்தை புரிந்து கொள்ளவும் உதவுகிறது. நகர்ப்புற வெப்ப தாக்கங்கள், தமிழ்நாட்டிற்கென வடிவமைக்கப்பட்ட செயல்படுத்தப்கூடிய தணிப்பு உத்திகள் மற்றும் நிலையான நகர்ப்புற திட்டமிடலை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.


தமிழ்நாடு வெப்பதணிப்பு அறிக்கை:-

தமிழ்நாட்டில் கோடைகாலமான மார்ச் முதல் ஆகஸ்ட் மாதங்களில் வெப்ப அலை வீச்சின் காரணமாக அதிகப்படியான வெயிலின் தாக்கத்தினை சந்தித்து வருகின்றது. மனிதர்களின் வாழ்விடங்களிலும், பணிபுரியும் அலுவலகம் தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களிலும் உடல் மற்றும் உள நலனுக்கு ஊறு விளைவிக்காத வகையில் வெப்பத்தணிப்பு செய்யப்பட வேண்டியது அவசியமானதாகும். இந்த அறிக்கையானது, குளிர்விக்கும் தொழில் நுட்பம் வழங்க்கும் முதலீட்டாளர்கள் மற்றும் நிதி சேவையில் உள்ள நிறுவனங்களுக்கு உதவும் வகையில் அளிக்கும் வகையில் வணிக ரீதியான மற்றும் நிதி சார் மாதிரிகளையும் கொண்டுள்ளது.

மாநில திட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையானது, வெப்ப தணிப்பு முறைகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறை படுத்துதல் உள்ளிட்ட முன்னெடுப்புகளை முன்மொழிகிறது. தமிழ்நாடு வெப்பதணிப்பு அறிக்கை (DCS) முன்னெடுப்புக்கென மாநில திட்ட அறிக்கை குறுகிய, நடுத்தர நீண்டகால உத்திகளுடன், அரசு துறைகளில் பொறுப்புகள் மற்றும் பங்களிப்பு விவரங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Thiruvalluvar Statue Silver Jubilee Year - Thirukkural Quiz Competitions for Government Servants and Teachers - Rs.4.5 Lakh Prizes



குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் - ரூ.4.5 இலட்சம் பரிசுகள் - சிறந்த மூன்று குழுக்களுக்கு தலா ரூ.25000 பரிசு - தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறை அறிவிப்பு


Kumarimunai Ayyan Thiruvalluvar Idol Silver Jubilee Year - Thirukkural Quiz Competitions for Government Servants and Teachers - Rs.4.5 Lakh Prizes - Tamil Nadu Government Tamil Development Department Announcement Notification



வினாடி வினா - போட்டிக்கான பாடத்திட்டம்...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

  



தமிழ்நாடு அரசு - தமிழ் வளர்ச்சித் துறை


குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா - போட்டிக்கான பாடத்திட்டம்...



அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி - வினா போட்டி - தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை & மாவட்ட ஆட்சியரின் கடிதம்


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு (TRUST Exam) தேர்வு தள்ளிவைப்பு


தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு (TRUST Exam) தேர்வு தள்ளிவைப்பு


 தமிழ்நாட்டில் தற்போது பரவலாகப் பெய்துவரும் கனமழையின் காரணமாக, 14.12.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு(TRUST) மாணாக்கர்களின் நலன் கருதி தள்ளி வைக்கப்படுகிறது.


தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் & செய்திக் குறிப்பு



>>> அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் & செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




Annual family income ceiling for Post-Matric and Pre-Matric Scholarship Scheme for SC / ST and OBC students should be fixed from 2.50 lakh rupees to 8 lakh rupees - Letter from Hon'ble Chief Minister of Tamil Nadu Mr. M.K.Stalin to Hon'ble Prime Minister of India Mr. Narendra Modi



ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான Post-Matric மற்றும் Pre-Matric கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை 2.50 இலட்சம் ரூபாயிலிருந்து 8 இலட்சம் ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்


Letter from Hon'ble Chief Minister of Tamil Nadu Mr. M. K. Stalin to Hon'ble Prime Minister of India Mr. Narendra Modi to Insist that the Annual family income ceiling for the amount of assistance provided under the Post-Matric and Pre-Matric Scholarship Scheme for Adi Dravidian, Tribal and OBC students  should be fixed from 2.50 lakh rupees to 8 lakh rupees



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Text of the D.O. Letter dated 10-12-2024 of Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru M.K. Stalin, addressed to the Hon'ble Prime Minister of India Thiru. Narendra Modi requesting to increase the annual family income ceiling for Post-Matric and Pre-Matric scholarships for SC, ST, and OBC students from Rs.2.5 lakhs to Rs.8 lakhs

I wish to draw your attention to the urgent need to enhance the annual family

income limit set for the grant of Post-Matric and Pre-Matric Scholarships for SC, ST and OBC students by the Government of lndia.

At present, the income ceiling for eligibility for the scholarship for SC / ST I

OBC students is fixed at Rs.2.5 lakhs. It is pertinent to mention that the Government of India have revised the income ceiling for the Economically Weaker Section (EWS) to Rs.8 Lakhs and has also raised the income ceiling for schemes such as National Overseas Scholarship and Top-Class Education Scheme to Rs.8 Lakhs for SC / ST students. The refixing of income ceiling has benefitted many students from disadvantaged backgrounds.

According to the All India Survey on Higher Education (AISHE) Report, the

Gross Enrolment Ratio (GER) of Scheduled Caste / Scheduled Tribe students and certain Backward Communities remains significantly lower than other students. There is a stark difference in the GER of Scheduled Caste and Scheduled Tribe students, as compared to the general population. Therefore, it is imperative to facilitate their enrolment in larger numbers in higher education institutions. Providing Post and Pre-Matric Scholarships will go a long way in increasing their enrolment in higher education. In our view, increasing the annual income ceiling for Post-Matric and Pre-Matric from Rs.2.5 lakhs to Rs.8 lakhs on par with that of the economically weaker sections is not only essential but also fully justified and warranted.

Therefore, I request your favourable intervention in this matter to consider and

increase the annual family income ceiling for Post and Pre-Matric scholarships for SC /ST/OBC students from Rs.2.5 lakhs to Rs.8 lakhs at the earliest.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Senthamil Nattu Thamizhachi naan - Jaikka pirantha Thamizhachi naan - TN Govt Women's Day Song

 செந்தமிழ் நாட்டுத் தமிழச்சி நான்... ஜெயிக்கப் பிறந்த தமிழச்சி நான் - தமிழ்நாடு அரசின் மகளிர் தின பாடல் Senthamil Nattu Thamizhachi naan - J...