கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Press Release லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Press Release லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிவில் பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஒத்திகை - தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் - செய்தி வெளியீடு

 


சிவில் பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஒத்திகை - தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் - செய்தி வெளியீடு


Civil Defence Exercise and Rehersal - Tamil Nadu Disaster Management Authority - Press Release




மே 8இல் +2 தேர்வு முடிவுகள் - அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியீடு

 


மே 8இல் +2 தேர்வு முடிவுகள் - அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியீடு


+2 Exam Results on May 8 - Directorate of Government Examinations Press Release


மே 9க்குப் பதில், மே 8இல் தேர்வு முடிவுகள்


பிளஸ் டூ தேர்வு முடிவுகள் ஒருநாள் முன்னதாக நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

 

+2 RESULTS


12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே 08ம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!


மே 09ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்கூட்டியே வெளியாகிறது.




அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை விதி 110-ன்கீழ் வெளியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை...




Speech by Hon'ble Chief Minister of Tamil Nadu, Shri. M.K. Stalin in the Tamil Nadu Legislative Assembly, issuing various notifications under Rule 110 for the welfare of Government Employees, Teachers and Pensioners - Press Release


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை விதி 110-ன்கீழ் வெளியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை - செய்தி வெளியீடு


 அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் தேவை அடிப்படையில் திருமண முன் பணம் தொகை 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்


பொங்கல் போனஸ் சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியம் ஆயிரமாக உயர்வு


மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்


பழைய ஓய்வூதியம் திட்டம் தொடர்பாக ஆராயும் குழு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கும்


அரசு ஊழியர்கள் குழந்தைகள் உயர்கல்விக்கு தொழில்நுட்பக் கல்லூரிக்கு ரூ. 1 லட்சம்


 - முதல்வர் ஸ்டாலின்


DIPR - TNLA No - 38 - Hon'ble CM Speech - 110 Statement - Govt Servants welfare - Date 28.04.2025


செய்தி வெளியீடு


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை விதி 110-ன்கீழ் வெளியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை


*முதல் அறிவிப்பு; கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலே, அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை, 01.04.2026 முதல், 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இருந்தாலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த அறிவிப்பை, இந்த ஆண்டே செயல்படுத்திட கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய கோரிக்கையைப் பரிசீலித்து, ஈட்டிய விடுப்பு நாட்களில், 15 நாட்கள் வரை 1.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம் என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த அறிவிப்பின்படி, சுமார் 8 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 3 ஆயிரத்து 561 கோடி ரூபாய் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.


இரண்டாவது அறிவிப்பு: 01-01-2025 முதல் 2 விழுக்காடு அகவிலைப்படியினை


ஒன்றிய அரசு அலுவலர்களுக்கு உயர்த்தி வழங்கிட அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வினை நடைமுறைப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 1252 கோடி ரூபாய் கூடுதல் நிதி செலவிடப்படும்.


மூன்றாவது அறிவிப்பு: அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுடைய


குடும்பத்தினருடன் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில், ஏற்கெனவே இதுவரை வழங்கப்பட்டு வரும் பத்தாயிரம் ரூபாய் பண்டிகை கால முன்பணம் தற்போது இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 இலட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.


நான்காவது அறிவிப்பு; அரசுப் பணியாளர்களுடைய குழந்தைகள் உயர்கல்வி


பயில்வதில் இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இந்த அடிப்படையில், அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து தொழிற்கல்வி பயில ஒரு இலட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இந்தக் கல்வி முன்பணம் உயர்வால் தங்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில விரும்பும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.



ஐந்தாவது அறிவிப்பு: அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமது


பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஆண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை பலமடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


ஆறாவது அறிவிப்பு: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம


பணியமைப்பு உட்பட C மற்றும் D பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை ஐந்நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த உயர்வால் சுமார் நான்கு இலட்சத்து எழுபத்து ஓராயிரம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசிற்கு ஏற்படும் கூடுதல் செலவினம் சுமார் 24 கோடி ரூபாயாக இருக்கும்.


ஏழாவது அறிவிப்பு: ஓய்வூதியதாரர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பண்டிகையைச்


சிறப்பாக கொண்டாடிட, தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், நான்காயிரம் ரூபாயிலிருந்து ஆறாயிரமாக உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த உயர்வால், சுமார் 52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால் பத்து கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.


எட்டாவது அறிவிப்பு: அண்மையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு


ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்து, அந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. பல்வேறு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், இந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


ஒன்பதாவது அறிவிப்பு; திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாத காலமாக இருந்த விடுப்பை 01.07.2021 முதல் ஓராண்டு காலமாக உயர்த்தப்பட்டு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது உள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு (Probation period) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக அரசு பணிகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால். தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது. மகளிர் முன்னேற்றத்திற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் இந்த அரசு, அரசுப் பணிகளில் பணியாற்றிவரும் மகளிரின் பணி உரிமைகளை பாதுகாக்கும் வகையில், இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தினை அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளது.



>>> முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்



தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்


செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு, செந்தில்பாலாஜியின் துறைகளில் மின்சாரத் துறை கூடுதலாக ஒதுக்கீடு


வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு, செந்தில்பாலாஜி கவனித்து வந்த மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை கூடுதலாக ஒதுக்கீடு


பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்


அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு. பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு


இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.




1 முதல் 5ஆம் வகுப்பு திருத்தப்பட்ட மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியீடு

 

1 முதல் 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு  - திருத்தப்பட்ட மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை -  தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியீடு


1 - 5th Std Revised Annual Exam Time Table - DEE Press Release 


திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பத்திரிக்கை செய்தி 

நாள் : 30-03-2025 


தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09-04-2025 முதல் 21-04-2025 வரை மூன்றாம் பருவத்தேர்வு / ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படியும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற 07-04-2025 முதல் 17-04-2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


 

SDATன் கீழ் செயல்பட்டு வரும் 6 சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் - மாணவர் சேர்க்கை - செய்தி வெளியீடு



கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வரும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள்  - மாணவர் சேர்க்கை - செய்தி வெளியீடு எண்: 639, நாள் : 22-03-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Police warn of loan app scams



கடன் செயலிகள் மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை


Police warn of loan app scams


கடன்செயலிகள் மோசடி குறித்த இணையவழி குற்ற தடுப்பு பிரிவு, தலைமையகம், தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை பதிவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ARV vaccination for rabies - Press release from the Directorate of Public Health



ரேபீஸ் நோய்க்கு ARV Anti-Rabies Vaccine தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் - பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குநரகத்தின் பத்திரிகை செய்தி, நாள் : 16-03-2025


ARV vaccination for rabies - Press release from the Directorate of Public Health and Preventive Medicine, Date: 16-03-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



ரேபீஸ் ஒரு கொடிய வைரஸ் நோய்

@@@@@@@@@@@@@@


கடந்த சில நாட்களுக்கு முன், இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு நபர் நாய் கடித்து 3 மாதம் ஆகியும் ரேபீஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதால் இறந்துவிட்டார் என விசாரணையில் தெரிய வந்தது. 


எனவே மக்கள் அனைவரும் நாய் கடித்தவுடன் ARV (Anti-Rabies Vaccine) எனப்படும் தடுப்பூசியை செலுத்திக கொள்வது அவசியமாகிறது.


ரேபீஸ் ஒரு கொடிய வைரஸ் நோய் இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய், மனிதனை கடிப்பதால் மனிதன் பாதிப்புக்கு உள்ளாகின்றான்.


நாய்கள் கடிப்பதால் மட்டும் ரேபீஸ் வருவதில்லை. வீட்டில் வளர்க்கப்படும். நாய், பூணை ஆடு, மாடு மற்றும் வீட்டு விலங்குகள் கடிப்பதால் பரவுவதற்கு வாய்ப்புள்ளது.


நாய்கள் கடிப்பதால் மட்டும் இல்லாமல், நாய் புரண்டினால் உடலில் உள்ள சிறுகாயங்களில் உமிழ்நீர் பட்டாலும் ரேபீஸ் பரவும்.


நாய் கடித்தவுடன் காயத்தை குறைந்தது 15 நிமிடங்களுக்கு சோப்பு தண்ணீரால் கழுவ வேண்டும்.


ரேபீஸ் நோய்க்கு ARV (Anti-Rabies Vaccine) ப்படும் தடுப்பூசிகள் உள் நாய் கடித்தவுடன் 4 ஊசிகள் போட்டு கொள்வதன் மூலம் ரேபீஸ் நோயை 100% வரவிடாமல் தடுத்து விடலாம். நாய்கடித்தவுடன் இந்த தடுப்பூசி போடப்பட வேண்டும்.


1) முதல் நாள் - முதல் தவணை


2) 3வது நாள் - இரண்டாவது தவணை


3) 7 வது நாள் - மூன்றாவது தவணை


4) 28 வது நாள் - நான்காவது தவணை


இந்த தடுப்பூசி கைகளில் (Intra Dermal) தோலுக்கு கீழேப் போடப்படுகிறது.


மேலும், நாயின் ஆழமான கடிகளுக்கு ஏற்ப இம்யூனோகுளோபுளின் மருந்தும் அளிக்கப்படுகிறது. 


இந்த ARV மற்றும் இம்யூலோகுளோபுளின் தடுப்பூசிகள் அனைத்து அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் (24X7) இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.


எனவே பொது மக்கள் வெறிநாய்கடியின் அவசியத்தை அறிந்து உரிய நேரத்தில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று ரேபீஸ் எனப்படும் வெறிநாய்கடியிலிருந்து தற்காத்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


Nurse Posts in Saudi Arabian Hospitals - Tamil Nadu Government Press Release, Date: 13-03-2025


சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பெண் செவிலியர் பணியிடங்கள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு, நாள் : 13-03-2025


Job Notification - Female Nurse Posts in Saudi Arabian Hospitals - Tamil Nadu Government Press Release, Date: 13-03-2025


சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு - விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Monthly salary of ₹2 lakh - Nurse (Male / Female) job in Germany - Free German language training - TN Govt Press Release



மாதச் சம்பளமாக ₹2 இலட்சம் - ஜெர்மனி நாட்டில் செவிலியர் (ஆண் / பெண்) பணி - இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவிக்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


Monthly salary of ₹2 lakh - Nurse (Male / Female) job in Germany - Free German language training will be provided - Tamil Nadu Government Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



ஜெர்மனியில் செவிலியர் பணிக்கு 2 லட்சம் ஊதியம் : தமிழ்நாடு அரசு


ஜெர்மனி நாட்டில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது


இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:


ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்க்கு ஆறு மாதம் பணி அனுபவம் பெற்ற 35 வயதிற்க்குள்பட்ட, டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.


இவர்களுக்கு B1 , B2 நிலையில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாத சம்பளமாக சுமார் 2 லட்சம் வழங்கப்படும்.


எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.03.2025க்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in மற்றும் 044- 22505886/ 63791 79200 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


12th Standard Public Exams Start Tomorrow - Cell Phone Banned - Punishment for disorderly Activities

 

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம் - அலைபேசிக்கு தடை - ஒழுங்கீனச் செயல்பாடுகளுக்குத் தண்டனை - செய்தி வெளியீடு எண்: 476, நாள் : 01-03-2025


 Class 12 Public Exams Start Tomorrow - Cell Phone Banned - Punishment for Misbehave Activities - Press Release No: 476, Dated : 01-03-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை (03.03.2025) தொடங்கி மார்ச் 25 வரை நடைபெற உள்ளது.


நடப்பாண்டு + 2 பொதுத்தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுத உள்ளனர்.


3,316 தேர்வுகள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


94983 83075, 94983 83076 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு மாணவர்கள், பெற்றோர்கள் சந்தேகங்களை கேட்கலாம் - பள்ளிக்கல்வித்துறை.


+2 பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்  3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை



CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them


பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து ஆணை - செய்தி வெளியீடு எண். 425, நாள் : 23-02-2025



In order to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them, the Chief Minister constituted a committee consisting of his ministers and ordered



Press Release No. 425, Dated : 23-02-2025


* பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து ஆணையிட்டுள்ளார்.


* இந்தக் குழுவில் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. எ வ வேலு , மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு ,  மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மாண்புமிகு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


* அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நாளை தலைமை செயலகத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


We are also studying the changes brought by the central government in the pension scheme - Hon'ble Tamil Nadu CM


 மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களையும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்


            மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.


We are also studying the changes brought by the central government in the pension scheme which may have a major impact on the financial condition of the state governments - Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M. K. Stalin.


மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களை ஆய்வு செய்து வருவதாக முதலமைச்சர் உரை - பக்கம் 4, பத்தி 2ல்





We have fulfilled 90% of our promises - Chief Minister Mr. M.K.Stalin


 90% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் - முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்


We have fulfilled 90% of our promises - Chief Minister Mr. M.K.Stalin


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது,  அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். நிச்சயம் அனைத்து வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம். அதேபோல், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்களைப் போன்று, தேர்தல் நேரத்தில் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம்.


- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





Actions to be taken by Educational Institutions to prevent sexual abuse against children - TN Govt Press Release



குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க தனியார் / அரசுப் பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


Actions to be taken by Private / Government Schools and Higher Education Institutions to prevent sexual abuse against children - Tamil Nadu Government Press Release


 The Chief Secretary to Government chaired a meeting on prevention of sexual abuse of school children


 Press Release No:358, Dated : 17-02-2025


செய்தி வெளியீடு எண்: 358, நாள்: 17.02.2025 


தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இப்பொருள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தனியார் / அரசுப் பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.







Competitions in 6 categories under the theme LoveTN to know about the merits and benefits of various programs implemented in 38 months



கடந்த 38 மாதங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களின் சிறப்பு மற்றும் பயன் குறித்து அறியும் விதமாகச் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் லவ் டிஎன் (LoveTN) என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. அதன்படி ரீல்ஸ் (Reels), புகைப்படப்போட்டி (Photography), வினாடி-வினாப் போட்டி (Quiz), ஓவியப்போட்டி (Painting/Drawing), செய்தி நறுக்குதல் போட்டி (Newpaper/Artical cutting), ஹாஷ் டாக் போட்டி (#hashtag) என்று 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தவுள்ளது.


In order to know about the merits and benefits of the various programs implemented in the last 38 months, a competition titled LoveTN will be held on behalf of the News Public Relations Department. Accordingly, competitions will be held in 6 categories namely Reels, Photography, Quiz, Painting/Drawing, Newspaper/Article cutting and Hashtag



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


A committee formed to make recommendations regarding the appropriate pension scheme - TN Govt Press Release No: 271, Dated: 04-02-2025


உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட  அதிகாரிகள் அடங்கிய குழு அமைப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 271, நாள் : 04-02-2025


A committee consisting of officials to make recommendations to the government regarding the appropriate pension scheme - Tamil Nadu Government Press Release No: 271, Dated: 04-02-2025


மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட  அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது


DIPR-P.R No.-271- TN Govt Press Release - Pension Scheme, Date - 04.02.2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 தமிழக அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய குழு


பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட மூன்று வகையான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய தமிழக அரசு குழு அமைந்துள்ளது.


ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங்பேடி உள்ளிட்ட 3 போ் கொண்ட குழு 9 மாதங்களுக்குள் அரசுக்கு பரிந்துரை அறிக்கை அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மாநில அரசுப் பணியாளா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே தருணத்தில் மத்திய அரசுப் பணியாளா்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளா்களுக்கு தொடா்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.


மாநில அரசுப் பணியாளா்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தைச் செயல்படுத்த தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதனிடையே மத்திய அரசுப் பணியாளா்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. 


குழு அமைப்பு: இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய ஒரு குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் நிதிநிலையையும், பணியாளா்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில்கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையை அரசுக்கு அளிக்க 3 அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் முன்னாள் இயக்குநா் கே.ஆா்.சண்முகம், நிதித் துறை துணைச் செயலா் (பட்ஜெட்) பிரத்திக் தாயள் ஆகியோா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.


இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Public should not panic - Tamil Nadu Government press release regarding HMPV virus outbreak



 பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - HMPV வைரஸ் பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு 


Public should not panic - Tamil Nadu Government press release regarding HMPV virus outbreak


HMP வைரஸ் புதியதல்ல; 2001இல் கண்டறியப்பட்ட வைரஸ்தான்


நீண்ட ஆண்டுகளாகவே இந்த வைரஸ் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை


HMP வைரஸ் சென்னையில் ஒருவருக்கும் சேலத்தில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது; இருவரின் உடல் நிலை சீராக உள்ளது


HMPV தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை ஆலோசனை நடத்தி உள்ளது


மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவும்


- தமிழ்நாடு சுகாதாரத் துறை


செய்தி வெளியீடு எண்: 48 நாள்: 06.01.2025 

மனித மெட்டாப்நியூமோவைரஸ்-தமிழ்நாடு 

ஹ்யூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) ஒரு புதிய வைரஸ் அல்ல, இது 2001 இல் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஏற்கனவே புழக்கத்தில் உள்ள வைரஸ் ஆகும். 

HMPV நோய்த்தொற்றுகள் சுய-கட்டுப்பாட்டு மற்றும் போதுமான நீரேற்றம் மற்றும் ஓய்வு உட்பட அறிகுறி கவனிப்புடன் தீர்க்கப்படுகின்றன. 

HMPV க்கான சிகிச்சையானது அறிகுறி மற்றும் ஆதரவாக உள்ளது. 

தற்போது. சென்னையில் ஒருவரும் சேலத்தில் ஒருவரும் மனித மெட்டாப்நியூமோவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிலையாக உள்ளனர் மற்றும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட பொதுவான சுவாச வைரஸ் நோய்க்கிருமிகளில் குறிப்பிடத்தக்க எழுச்சி எதுவும் இல்லை, ஜனவரி 6, 2025 அன்று, இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய சுகாதார செயலாளர் தலைமையில் அனைத்து மாநில சுகாதார அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் நடத்தியது. கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

 HMPV வைரஸ் நிலையானது மற்றும் பீதிக்கு ஒரு காரணம் அல்ல என்று இந்திய அரசு தெளிவுபடுத்தியது. தும்மல்/இருமல் போது வாய் மற்றும் மூக்கை மூடுதல், கைகளை கழுவுதல், நெரிசலான இடங்களில் முகமூடி அணிதல் மற்றும் தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பது போன்ற பிற சுவாச நோய்த்தொற்றுகளுக்கு போன்று HMPV தடுப்பு உள்ளது. HMPV பொதுவாக சுய-கட்டுப்படுத்தக்கூடியது மற்றும் நிர்வகிக்கக்கூடியது என்று பொதுமக்கள் உறுதியளிக்கிறார்கள். பீதி அடையத் தேவையில்லை. தமிழ்நாடு அரசு உறுதியுடன் உள்ளது மற்றும் தொடர்ந்து காய்ச்சல் போன்ற நோய்கள் (ஐஎல்ஐ) மற்றும் கடுமையான கடுமையான சுவாச நோய் (SARI) ஆகியவற்றை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. 


சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர்



Press Release No: 48

Date: 06.01.2025

Human Metapneumovirus-Tamll Nadu

Human Metapneumovirus (HMPV) is not a new virus and it is an already circulating virus that was first identified in 2001. HMPV infections are self- limiting and resolve with symptomatic care, including adequate hydration and rest. The treatment for HMPV is symptomatic and supportive. Presently. 2 cases of Human Metapneumovirus has been reported, one in Chennai and one in Salem. They are stable and are being monitored.

There is no significant surge in common respiratory viral pathogens that has been detected in Tamil Nadu On January 6, 2025, the Ministry of Health and Family Welfare,Government of India, conducted a video conference with all State Health officials chaired by Union Health Secretary. The senior health officials from Tamil Nadu also participated in this meeting led by Additional Chief Secretary. Health. The Government of India clarified that the HMPV virus remains stable and is not a cause for concern to panic.

The prevention of HMPV is similar to any other respiratory infection such as, covering your mouth and nose while sneezing/coughing, washing hands, wearing masks in crowded places and reporting to the health facility, if need arises. The public is reassured that HMPV is typically self-limiting and manageable. There is no need to panic. The Government of Tamil Nadu remains committed and is continuously monitoring the influenza Like llnesses (ILI) and Severe Acute Respiratory lliness (SARI) closely.

ADDITIONAL CHIEF SECRETARY OF HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT 



Anna University Student Case Investigation - Tamil Nadu Police Report



அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு விசாரணை - தமிழ்நாடு காவல்துறை அறிக்கை


Anna University Student Case Investigation - Tamil Nadu Police Press Release 


அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை, எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவை.


விசாரணை தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிட வேண்டாம். இவ்வாறான தவறான தகவல்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துவதுடன், புலன்விசாரணையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக் கூடும்”


- தமிழ்நாடு காவல்துறை அறிக்கை


January 04 ,2025    


An all women Special Investigation Team (SIT) has been constituted to investigate the cases in connection with sexual assault of a girl student at Anna University Chennai - Tamil Version


 Press Release No:33 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பணம் பெற்ற வழக்கு - அரசு மருத்துவரை டிஸ்மிஸ் செய்யவும், ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு ஆணையம் உத்தரவு

 சிகிச்சைக்கு வந்த நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பணம் பெற்ற வழக்கு - அரசு மருத்துவரை டிஸ்மிஸ் செய்யவும், ரூ.50 லட்சம் இழப்பீடாக வழ...