கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கையூட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கையூட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பணியில் சேர்ந்த 4 மாதங்களில், ₹6,000 கையூட்டு பெற்று கைதான VAO

 பணியில் சேர்ந்த 4 மாதங்களில்,  ₹6,000 கையூட்டு பெற்று கைதான VAO 


TNPSC Group IV மூலம் பணியில் சேர்ந்த 4 மாதங்களில், பட்டாவில் பெயர் மாற்றம் தொடர்பான சேவையை பெற ₹6,000 கையூட்டு பெற்ற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் (இருக்கையில் அமர்ந்திருப்பவர்) கைது.


பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.6,000 லஞ்சம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வாக்கூர் கிராமத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.


வாக்கூர் மேலத்தெருவை சேர்ந்த தேர்விஜயன், தரசூர் கிராமத்தில் உள்ள தனது அண்ணன் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்திருந்தார். அதற்கு வாக்கூர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரும், உதவியாளர் ரமேஷும் 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், அதிர்ச்சியடைந்த தேர்விஜயன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தேர் விஜயன் (வயது 50). இவருக்கும், இவரது அண்ணன் அருள்பிரகாசத்திற்கும், மற்றொரு அண்ணன் வேல்முருகன் என்பவர் தானமாக தரசூர் கிராமத்தில் உள்ள நிலத்தை வழங்கினார். அந்த நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய தேர் விஜயன், விண்ணப்பித்திருந்தார். மேலும் அவர் பட்டா மாற்றம் தொடர்பாக வாக்கூர் கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் (28), பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் கேட்ட பணத்தை கொடுத்து விடுமாறு, அங்கிருந்த கிராம உதவியாளர் ரமேஷ் (49), தேர்விஜயனிடம் கூறினார்.


ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத தேர் விஜயன், கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்தை சதிஷ்குமாரிடம் கொடுப்பதற்காக தேர் விஜயன் நேற்று வாக்கூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்த சதிஷ்குமார், லஞ்ச பணம் ரூ.6 ஆயிரத்தை கிராம உதவியாளர் ரமேஷ் மூலமாக வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையிலான போலீசார், அவர்கள் 2 பேரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், பணியில் சேர்ந்து 4 மாதங்கள் மட்டுமே ஆவது குறிப்பிடத்தக்கது.


லஞ்சம் வாங்கிய சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கைது



 லஞ்சம் வாங்கிய சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கைது


திருவாரூர்: திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ஜோதி கைது.


எழுத்தர் சசிகுமாரின் பழைய சம்பள பாக்கியை தர ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றபோது டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயிலில் ஜோதியை கையும் களவுமாக கைது செய்தனர்.


DEO arrested for getting Rs 2 lakh bribe from teacher



ரூ.2 லட்சம் லஞ்சம் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கைது


District Education Officer arrested for getting Rs 2 lakh bribe from teacher


ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம் வாங்கிய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கைது


* அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சப்பணம் வாங்கிய நீலகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.


* அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் சிபு மானிக் வயது (40). இவர் 2018-ம் ஆண்டு முதல் குன்னூர் பார்க்சைட் சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளி நிர்வாகம் இவரை பணி நிரந்தரம் செய்ய கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை இவரை பணி நிரந்தரம் செய்ய மறுப்பு தெரிவித்தது.


* இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிரந்தர பணி நிரந்தரத்திற்கான ஆணையை பெற்றார். இவ்வளவு காலம் பணியாற்றியதற்கான நிலுவை தொகையை  ரூ.25 லட்சம் இவருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் இவருக்கு பணி நிரந்தர உத்தரவு மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.


* இதைத்தொடர்ந்து மீண்டும் இந்த உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான் சிபு மானிக் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு நிலுவைத் தொகை வழங்கி பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் ஜான் சிபு மானிக்கை நிரந்தர ஆசிரியராக பணி அமா்த்த 2024 ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பணி ஆணை மற்றும் நிலுவைத் தொகை பெறுவதற்கான உத்தரவை வழங்க வலியுறுத்தி ஜான் சிபு மானிக் நீலகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷை அணுகினார்.


நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த ஜான் சிபு மானிக்கை இரண்டு மாதங்கள் அலைக்கழித்த தொடக்க கல்வி அலுவலா் சந்தோஷ், ரூ. 5 லட்சம் லஞ்சம் தந்தால் 2018 முதல் உள்ள பணிகாலத்தை போட்டு உத்தரவு தருவதாகவும், இல்லையென்றால் குறைத்து வழங்கினால் பல லட்சங்கள் இழக்க நேரிடும் என்று கூறியுள்ளாா்.


* இவருக்கு பணி ஆணை மற்றும் நிலுவை பணத்தை கொடுப்பதற்கு லஞ்சமாக ரூ.5 லட்சம் பணத்தை நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் கேட்ட நிலையில் பிப்ரவரி 18-ஆம் தேதி திரும்பவும் ஆசிரியா் ஜான் சிபு மானிக்கை அழைத்த தொடக்கக் கல்வி அலுவலா் சந்தோஷ், முன்பணமாக ரூ.2 லட்சம் தரும்படி கூறியுள்ளாா்.


 மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கு லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை ஜான் சிபு மானிக் அணுகினார்.


* இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 லட்சத்தை ஊட்டி பிங்கர்போஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ் வீட்டில் வைத்து அவரிடம் கொடுக்கிறார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப் இன்ஸ்பெக்டர்கள் சாதனப் பிரியா, சக்தி, ரங்கநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


DEO Enquiry - Federation Complaint against BEO Office Assistant for asking bribe - Proceedings, Date : 23-10-2024...

 



தேர்வு நிலை நிலுவை ஊதியம் வழங்கிட கையூட்டு கேட்டதாக ஆனைமலை வட்டாரக் கல்வி அலுவலக உதவியாளர் மீதான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் புகார் - பத்திரிக்கை செய்தி வெளியீடு - நேரடி விசாரணை மேற்கொள்ளல் - பொள்ளாச்சி மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள், நாள் : 23-10-2024...



Tamil Nadu Teachers' Fedaration Complaint against BEO Office Assistant for asking bribe to Selection Grade arrears - Press release - Conduct of direct inquiry - Proceedings of District Education Officer (Elementary Education), Dated : 23-10-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கல்வி அலுவலகத்தில் எழுத்தர்கள் லஞ்சம் கேட்கின்றனர் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டமைப்பு பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர். 


கோவை: பொள்ளாச்சி ஆனைமலை தொகுதியில் உள்ள பிளாக் கல்வி அலுவலகத்தில், தேர்வு நிலை ஊதியம் பெற, ஆசிரியர்களிடம் லஞ்சம் கேட்பதாக, தமிழ்நாடு  ஆசிரியர் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து, நடவடிக்கை எடுக்கக் கோரி, பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலரிடம் (டி.இ.ஓ.,) கூட்டமைப்பு மனு அளித்தது. 

இதுகுறித்து கூட்டமைப்பின் கோயம்புத்தூர் பிரிவைச் சேர்ந்த ஏ.தங்கபாசு கூறியதாவது: வட்டாரக் கல்வி அலுவலகத்தில் எழுத்தர் ஊழியர்கள் சம்பளப் பலன்களைப் பெற ஆசிரியர்களிடம் லஞ்சம் கேட்கும் வழக்கம் தொடர்கிறது. "உதாரணமாக, அதே அலுவலகத்தைச் சேர்ந்த எழுத்தர் பணியாளர், அதே பிளாக்கில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை  ஆசிரியரிடம், மூன்று மாத தேர்வு நிலைக்கான நிலுவைத் தொகையை, கருவூல அலுவலகத்தில் இருந்து வழங்க, 3,000 ரூபாய் கேட்டார். ஆசிரியர் கடிதத்தை கருவூல அலுவலகத்திற்கு அனுப்ப, எழுத்தர் பணியாளர்கள் காலதாமதம் செய்ததால், ஆசிரியர், கடந்த வாரம், ஊழியர்களின் கணக்கில், 3,000 ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. .

இது தொடர்பான ஆடியோ ஒன்று கசிந்து பல்வேறு ஆசிரியர்களின் வாட்ஸ்அப் குழுக்களில் பரவியது. இதேபோல், மற்றொரு ஆசிரியர் அதே அலுவலகத்தில் தேர்வு ஊதிய செயல்முறைக்கு ரூ.15,000 கொடுத்தார். தகவல் கசிவு ஏற்பட்டதையடுத்து, எழுத்தர் ஊழியர் ஆசிரியரிடம் ரூ.3,000 திருப்பிச் செலுத்தினர். 


பொள்ளாச்சி டிஇஓ (பொறுப்பு) கே.சாந்தகுமாரிடம் விசாரித்தபோது, ​​எழுத்தர் ஊழியர்களுக்குக் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.



Tamil Nadu Teachers’ association says clerks in educational office demand bribe


The Tamil Nadu Primary School Teachers’ Federation filed a petition with the Pollachi District Educational Officer (DEO) seeking action.


COIMBATORE: The Tamil Nadu Primary School Teachers’ Federation (TNPSTF) alleged that the clerical staff of the Block Education Office at Anaimalai block of Pollachi demands bribes from teachers to get increment benefits for the selection grade. Regarding this, the federation filed a petition with the Pollachi District Educational Officer (DEO) seeking action.


A functionary A Thangabasu from the federation’s Coimbatore wing told that the practice of asking for bribes from teachers to get their salary benefits by clerical staff continues at the Block Education Office.


“For instance, a clerical staff from the same office asked Rs 3,000 from a secondary grade teacher working at the Panchayat Union Middle School in the same block to disburse three months’ arrears for selection grade, from the treasury office.


As clerical staff delayed sending the teacher’s letter to the treasury office, the teacher was forced to transfer Rs 3,000 to the staff’s account last week. An audio about this leaked and spread across various teachers’ Whatsapp groups. Similarly, another teacher gave Rs 15,000 to the same office for the selection grade process.”


Sources said, after the leak, the clerical staff repaid Rs 3,000 to the teacher. When enquired, Pollachi DEO for primary (in charge) K Shanthakumari told that she issued a show-cause notice to the clerical staff and further inquiry is on.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்