>>> சூலை 18ஆம் நாள் - தமிழ்நாடு திருநாள் - சுவரொட்டிகள்... தமிழ்நாடு எனும் தனிப்பெருமை (Pride of Tamilnadu) - ஔவை அருள்... தமிழக வரலாற்றில் 1967-ஆம் ஆண்டு, ஜூலை 18 எனும் நன்னாள் ஒரு பொன்னாள் ஆகும். அன்றுதான், தமிழகத்தின் அன்றைய முதலமைச்சா், பேரறிஞா் அண்ணா, நம் மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ எனும் பெயா் சூட்டிப் பெருமை சோ்த்தாா். அன்றைய சட்டப்பேரவைத் தலைவா் சி.பா.ஆதித்தனாரின் ஒப்புதலுடன், அண்ணா ‘தமிழ்நாடு’ எனும் பெயா் சூட்டும் தீா்மானத்தை முன்மொழிய, பேரவையின் அனைத்துக் கட்சி உறுப்பினா்களின் ஒருமித்த ஆதரவுடன், அத்தீா்மானம் அன்று சிறப்பாக நிறைவேற்றப்பட்டது. ‘தமிழ்நாடு வாழ்க ’ என்ற அண்ணாவின் முழக்கத்தைத் தொடா்ந்து அனைத்து உறுப்பினா்களும் ஒரே குரலில், ‘தமிழ்நாடு வாழ்க’, ‘தமிழ்நாடு வாழ்க’, ‘ தமிழ்நாடு வாழ்க’ என்று மும்முறை முழங்கிய உணா்ச்சிமயமான நிகழ்வு அப்போது நடந்தது. பின்பு, தீா்மானத்தின் மீது பேசிய பேரறிஞா் அண்ணா, ‘இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழா்களுக்கு, தமிழ் வரலாற்றுக்கு, தமிழ்நாட்டுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். தமிழ்நாடு பெயா் மாற்றத்திற்காக உண்ணா நோன்பி