கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Gas Cylinder லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Gas Cylinder லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எரிவாயு சிலிண்டர்கள் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு

 


எரிவாயு சிலிண்டர்கள் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு அறிவிப்பு


Restrictions on the use of Gas cylinders


ஆண்டுக்கு இனி 15 சிலிண்டர்கள் மட்டுமே


வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள், ஆண்டுக்கு 15 (14.20kg) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என இந்திய எண்ணெய் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.


இந்தியாவிலுள்ள வீடுகளில் ஆண்டுக்கு 15 சமையல் கேஸ் சிலிண்டர் வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கேற்ப, அனுமதிக்கப்பட்ட அளவை கடந்தால், 'அன்புள்ள வாடிக்கையாளரே, ஆண்டு ஒதுக்கீடான 213 கிலோவை பயன்படுத்தி விட்டீர்கள். மேலும் பதிவு செய்ய முடியாது' என்ற SMS தகவல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.



ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் மட்டுமே முன்பதிவு


ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் (14.20KG) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 


15 சிலிண்டர்கள் பெற்றவர்கள் அதற்குமேல் தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்தபின் சிலிண்டர்களை பெறலாம்.


வீடுகளில் ஒரே இணைப்பு அல்லது இரட்டை இணைப்பு வழியாக கேஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இரட்டை இணைப்பு வைத்திருப்பவர்கள், முன்பதிவு செய்து சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரே இணைப்பு கொண்டவர்கள், சிலிண்டர் காலியான பிறகே புதியதை பெற முடியும். மத்திய அரசு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கும் நிலையில், இதற்கு மேல் சிலிண்டர் பெறுவோருக்கு மானியமின்றி வழங்கப்படும்.


இந்தியன் ஆயில் தரப்பில் இருந்து கூறப்பட்டது :

"ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 15 சிலிண்டர் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 12 சிலிண்டர்களுக்கு மானியம் கிடைக்கும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் சிலிண்டர் தேவைப்படுவோருக்கு, அவர்கள் ஏஜென்சியில் முறையான காரணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகே கூடுதல் சிலிண்டர் வழங்கப்படும்" எனத் தெரிவித்தனர்.



எனவே, 15 சிலிண்டர் பயன்படுத்தியவர்கள், அதற்கு மேல் பெற வேண்டும் என்றால், ஏஜென்சியில் காரணத்துடன் கடிதம் வழங்கி அனுமதி பெற வேண்டும். இது முறைகேடுகளை தடுக்கும் ஒரு நடவடிக்கையாகவும் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.


ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுங்க - வீடு தேடி வரும் சிலிண்டர் - இண்டேன் அறிவிப்பு...


மிஸ்டு கால் கொடுத்தால் போதும் வீடு தேடி சமையல் எரிவாயு சிலிண்டர் (Gas Cylinder) பதிவு செய்யும் வசதியை இண்டேன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


சமையல் எரிவாயு சிலிண்டருக்கு குறிப்பிட்ட நம்பருக்கு கால் செய்து, பின்னர் ரெக்கார்ட் வாய்ஸ் மூலம் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி சிலிண்டர் பதிவு செய்ய வேண்டும்.


தற்போது குறிப்பிட்ட எண்ணில் இருந்து மிஸ்டு கால் கொடுத்தால் போதும் சமையல் எரிவாயு சிலிண்டர் தானாக பதிவு செய்யும் வசதியை பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகப்படுத்தியுள்ளார்.


84859 55555 என்ற எண்ணுக்கு அழைத்தால் அதன் மூலம் எரிவாயு சிலிண்டரை பதிவு செய்யலாம், மேலும் புதிய இணைப்பு பெறுவதற்கும் மிஸ்டு கால் வசதியை பயன்படுத்தலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இந்த சேவையை அறிமுகப்படுத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மக்கள் எளிய முறையில் இனி சிலிண்டர் எரிவாயுவை பெறலாம் என்றும், இந்த மிஸ்டு கால் வசதி உதவும் என தெரிவித்துள்ளார்.

🍁🍁🍁 நவம்பர் 1,2020 முதல் LPG சிலிண்டர் விநியோக முறையில் புதிய மாற்றம்...

 


1. DAC (Delivery Authentication Code) என்ற நான்கு இலக்க OTP எண்ணை சிலிண்டர் வினியோகம் செய்யும் நபரிடம் தெரிவித்த பின்னரே வாடிக்கையாளருக்கு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். இல்லை எனில் சிலிண்டர் விநியோகம் செய்யப்படமாட்டாது.
  
2. LPG INDANE BOOKING இன்டேன் வாடிக்கையாளர்கள் 77189 55555 என்ற புதிய  எண்ணை அழைப்பதன் மூலமாகவும் 75888 88824 என்ற  எண்ணில் WhatsApp மூலமும் எரிவாயு முன்பதிவு செய்துகொள்ளலாம்.  

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி பயில முன் அனுமதி பெறவில்லை என்றோ, தொலைதூரக் கல்வி / பகுதி நேரப் படிப்பு மூலம் பட்டம் பெற்றதாலோ ஊக்க ஊதிய உயர்வை நிராகரிக்க முடியாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

   உயர்கல்வி பயில்வதற்கு முன் அனுமதி பெறவில்லை என்றோ, தொலைதூரக் கல்வி / பகுதி நேரப் படிப்பு மூலம் பட்டம் பெற்றதாலோ ஊக்க ஊதிய உயர்வை நிராகரிக...