சிகிச்சைக்கு வந்த நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பணம் பெற்ற வழக்கு - அரசு மருத்துவரை டிஸ்மிஸ் செய்யவும், ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
Human Rights Commission orders Tamil Nadu government to dismiss government doctor and pay Rs. 50 lakh as compensation for transferring patient to private hospital
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி ஆதாயம் பெற்ற வழக்கில், மருத்துவர் பிரபாகரனை பணி நீக்கம் செய்து, அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு.
உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த ஜெயா என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு ஆணையம் உத்தரவு.
இதில் ரூ.40 லட்சத்தை மருத்துவர் பிரபாகர் வழங்கவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைக்கு வந்த நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பணம் பெற்ற வழக்கில் கோவில்பட்டி அரசு மருத்துவரை டிஸ்மிஸ் செய்யவும், உயிரிழந்த நோயாளிக்கு ரூ.40 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டு மனித உரிமை ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை தனது தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்த அரசு மருத்துவர் பிரபாகரன் மீது மனித உரிமைகள் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி. இவரது மனைவி ஜெயா 2018ஆம் ஆண்டு தீக்காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பணியாற்றிய அரசு டாக்டர் பிரபாகரன், ஜெயாவை தனது தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். பல நாட்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ஜெயா உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது கணவர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து இராணுவ வீரர் எஸ். கருப்பசாமி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது மனைவியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததற்காக மருத்துவர் பிரபாகரன் ரூ.2 லட்சம் கேட்டதாகவும், தான் ரூ.20 ஆயிரம் கொடுத்ததாகவும், மீதி பணம் கொடுக்காததால் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றும், தனது மனைவியை பார்க்கவும் அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், தனது மனைவிக்கு ஆரம்பத்தில் 30% தீக்காயம் இருந்த நிலையில், மருத்துவரின் தவறான சிகிச்சையால்தான் 60% ஆகி உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.இந்த புகாரின் மீது மனித உரிமை ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், மருத்துவர் பிரபாகரன் அரசு மருத்துவமனை விதிமுறைகளை மீறி செயல்பட்டது உறுதியானது. குறிப்பாக, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணை தனது சொந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தது மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரானது என ஆணையம் கண்டறிந்தது.
இதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட ஆணையம், இன்று (மே 19) வெளியிட்ட உத்தரவில், பின்வரும் தீர்ப்பை அறிவித்துள்ளது:
ராணுவ வீரர் கருப்பசாமிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையில், டாக்டர் பிரபாகரன் ரூ.40 லட்சமும், டாக்டர் வெங்கடேஸ்வரன் ரூ.2 லட்சமும், ஊழியர்கள் குமரேஸ்வரி மற்றும் குரு லட்சுமி தலா ரூ.1 லட்சமும், தமிழக அரசு ரூ.6 லட்சமும் வழங்க வேண்டும்.
டாக்டர் பிரபாகரனை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்; அவரை மீண்டும் அரசு பணியில் நியமிக்கக் கூடாது. அவர்மீது குற்றவழக்கு பதிவு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவதை கண்காணிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புகார் பெட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என இந்த தீர்ப்பின் மூலம், அரசு மருத்துவர்களின் பொறுப்புணர்வையும், பொதுமக்கள் பாதுகாப்பையும் வலியுறுத்தியுள்ளது மனித உரிமை ஆணையம்.