கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Today's Thought லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Today's Thought லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நம்பிக்கைதான் வாழ்க்கை - இன்று ஒரு சிறு கதை



நம்பிக்கைதான் வாழ்க்கை - இன்று ஒரு சிறு கதை Today's Thought 


Hope is life - a short story today


💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠


💠அமெரிக்காவைக் கண்டு பிடித்தவர் கொலம்பஸ். ஆனால், இவர் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டு பிடிக்கவே திட்டமிட்டார். எதிர்பாராதவிதமாக அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.


💠அட்லாண்டிக் பெருங்கடலில் நெடும்பயணம் மேற்கொண்டால் இந்தியாவை அடைந்து விடலாம் என்று நம்பிக்கை இவருக்கு ஏற்பட்டது. 


💠ஸ்பெயின் மன்னரின் உதவியோடு சிலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு கப்பலில் பயணத்தைத் தொடங்கினார்.


💠பயணம் பல மாதங்கள் நீடித்தன. கொலம்பஸ் உடன் வந்தவர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். 


💠அவர்களுக்கு தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டது.


💠அவர்கள் கொலம்பஸிடம் வந்த வழியாகத் திரும்பிச் சென்று விடலாம் என்று வற்புறுத்தினார்கள். 


💠ஆனால் கொலம்பஸ் அவர்களின் சொற்களைக் காதில் வாங்கவே மறுத்து விட்டார். 


💠திரும்பிச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.உடன் வந்தவர்கள் ஒன்று கூடி சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள்.


💠அதன்படி கொலம்பஸை கடலில் தள்ளிக் கொன்று விட்டு தாங்கள் அனைவரும் நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார்கள்.


💠ஒருநாள் கொலம்பஸ் கப்பலின் மேற்பரப்பில் நம்பிக்கையுடன் ஏதாவது நிலப்பகுதி தெரிகிறதா என்று பார்த்தவாறே நின்று கொண்டிருந்தார்.


💠உடன் வந்தவர்களில் சிலர் அவருக்குப் பின்புறமாக மெல்ல வந்தார்கள். இன்னும் சற்று நேரத்தில் அவரைப் பிடித்துத் தள்ளப் போகிறார்கள்.


💠அச்சமயத்தில் கொலம்பஸ் ஆனந்தத்தில் கத்த ஆரம்பித்தார். காரணம் கடலின் மேற்பரப்பில் இலைகளும் சிறுசிறு கிளைகளும் மிதந்து கொண்டிருந்தன. 


💠அருகில் நிலப்பகுதி இருக்கிறது என்பது இதன் மூலம் புரிந்தது. தொடர்ந்து பயணித்து சில தினங்களில் ஒரு நிலப்பரப்பினை அடைந்தார்கள். கொலம்பஸ் எதிர்பார்த்தது போல அது இந்தியா அல்ல. அமெரிக்கா.


💠கொலம்பஸின் மனதில் இருந்த ஆழ்ந்த நம்பிக்கையே அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. கொலம்பஸின் அசைக்க முடியாத நம்பிக்கையே அவரின் பெயரை சரித்திரத்தில் பதிவாகக் காரணமானது.


*💠ஆம்,💠*


*💠மறுநாள் காலை நிச்சயம் எழுந்து விடுவோம் என்று நமக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் ஒவ்வொரு இரவும் நிம்மதியாய் தூங்கச் செல்லுகிறோம்.*


*💠வீட்டிற்கு நிச்சயமாய் திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் தினம் தினம் வீட்டை விட்டுப் புறப்படுகிறோம்.*


*💠ஆக நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்றால் அது மிகையாகாது..*


*💠நம் மனம் ஆற்றல் மிக்கது. என்னால் எதையும் செய்ய முடியும் என்று நீங்கள் உங்களுக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள்.*


*💠எந்த ஒரு செயலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.*

*உறுதியாய் நம்புங்கள்..உங்கள் கனவெல்லாம்* *பலிக்கும்., வாழ்க்கையும் தேனாய் இனிக்கும்.....*


*💠 நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்*



முயற்சி திருவினை ஆக்கும் - இன்றைய சிந்தனை




முயற்சி திருவினை ஆக்கும் - இன்றைய சிந்தனை - Today's Thought 


ஓரிரு முறை தோல்வியை சந்தித்து விட்டால் பின் சிலர் துவண்டு போய் விடுகிறார்கள்.! தோல்வி நிரந்தரம் அல்ல, 


தோல்வியுற்றால் அதில் உள்ள தவறை ஒத்துக் கொண்டு அதில் இருந்து மீண்டு முன்னேற வழியைப் பார்க்க வேண்டும்...!  . 


இன்னும் ஒருமுறை முயற்சி செய்து பார்ப்போமே எனும் எண்ணம் தான் வெற்றிக்கு நிச்சயமானவை".


தோல்விகள் கதவை மூடும் போது தொடர்ந்து விடாமுயற்சியுடன் கதவுகளைத் தட்டித் திறப்பது தான் வெற்றிக்கான சாவி.. 


இதனை மறவாமல் இருந்தாலே வெற்றி நம் காலடியில் சரணம் அடையும். எந்தச் செயலுமே ஆரம்பிக்கும் போது மலைப்பாகத் தான் தோன்றும். 


குழந்தைகள் கூட நடக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் விழுந்து எழுந்து தான் நடை பயிலுகின்றன. கீழே விழுகிறோமே என்று அவர்கள் முயற்சிக்காமல் விடுவதில்லை. 


விடாமுயற்சி மட்டும் இல்லாவிட்டால் பலர் தங்களின் சாதனைகளை நிகழ்த்தியிருக்க மாட்டார்கள்.."ஒரு தோல்வி ஏற்பட்டால் மேலே முயற்சி செய்யாமல் இருப்பது நமது பலவீனமே..


வெற்றிக்கான பாதையாக எடிசன் கூறுவது : "தேவையானது ஒரு சதவிகிதம் ஊக்கம் - 99 சதவிகிதம் விடாமுயற்சி"..


முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கூலிடிஸ் சொல்கிறார்,


"இந்த உலகில் முயற்சியை விட வேறொன்றும் சிறந்த இடத்தைப் பெற்று விட முடியாது. திறமை, மேதைத்தனம், கல்வி இவ்வளவு இருந்தாலும் அதனுடன் விடாமுயற்சியும், எதை அடைய வேண்டும் என்ற தெளிவான முடிவும் மட்டுமே வெற்றிக்கு வழி காட்டும் சர்வ வல்லமை படைத்தது" என்று.


பெர்னாட்ஷாவின் வாழ்க்கை கொடுமையான வறுமை நிறைந்த வாழ்க்கை. அவரது அறிவோடு தினம் ஐந்து பக்கம் எழுதும் விடாமுயற்சியை அவரை உலக அறிஞராக்கியது. 


விடாமுயற்சிக்கு உதாரணங்களாக, மேடம் கியூரி – மார்க்கபோலோ என்று அடுக்கிக் கொண்டே போகலாம். 


உலகில் சாதனையாளர்கள் 

எல்லாரிடத்திலும் அவரவர் துறைசார் அறிவோடு விடாமுயற்சியும் இருந்து வருகிறது. அதனாலே அவர்கள் வெற்றி பெற்றார்கள்; சாதனை படைத்தார்கள்; தொடர்ந்தும் வருகிறார்கள்..


அய்யன் வள்ளுவரும் இதைத்தானே சொல்கிறார், "முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்" என்று!


*ஆம்.,நண்பர்களே.*


நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கு என்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. 

உள்ளத்தில் உறுதியும், தெளிவான திட்டமும், அதோடு

விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுடன் செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும். 


சிகரங்கள் காத்து இருக்கின்றன..

சிகரங்களை எட்ட நீங்கள் தயாராகுங்கள்...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Off-road jeep safariயின் பொழுது நூலிழையில் யானைகளிடமிருந்து உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்

  ஆஃப் ரோடு ஜீப் சஃபாரியின் பொழுது நூலிழையில் யானைகளிடமிருந்து உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள் Tourists narrowly escape from elephants durin...